tag:blogger.com,1999:blog-172847648446999922.post662011148801532561..comments2023-06-26T17:08:15.634+05:30Comments on வாய்ப்பாடி குமார்: மூன்று மணி நேரம் கரண்ட் கட்Anonymoushttp://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-172847648446999922.post-25160087787981425082010-03-29T21:38:55.746+05:302010-03-29T21:38:55.746+05:30குமார்,விவசாயத்தின் இன்றைய நிலைமை தெரியாமல் பேசதீர...குமார்,<br>விவசாயத்தின் இன்றைய நிலைமை தெரியாமல் பேசதீர்கள்.நாட்டின் உணவு உற்பத்தியை புரிந்து கொண்டு பிறகு பதிவு இடுங்கள்.நாம் சந்திக்கும் சவால்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?மெனபொருள் சோரு போடாது.pradeephttp://www.blogger.com/profile/01281148166407065080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172847648446999922.post-46650174054883214952010-03-30T09:58:52.833+05:302010-03-30T09:58:52.833+05:30நன்றீ நண்பரே , நான் சொல்ல வருவது விவசாயம் இந்த அளவ...நன்றீ நண்பரே , நான் சொல்ல வருவது விவசாயம் இந்த அளவு கூறு கெடக் காரணமே இந்த இலவச கரண்ட் , கடன் தள்ளுபடி போன்றவைகள் தான்.<br><br>இலவசக் கரண்ட் இல்லையென்றால் விடிய விடிய தண்ணி இல்லாத கம்பரசர் ஓடுமா, 3 நிமிடத்துக்கு ஒரு முறை தண்ணிர் வரும் போர்தான் ஓடுமா ? அதிக போர்கள் இல்லையென்றால் என்ன நடக்கும் , கிணற்றுக்கு தண்ணீர் வருமா , வராதா ? ஏன் கிணறுகள் காய்ந்தன , சிந்தியுங்கள் , ஆழமாக யோசியுங்கள்,<br><br>காரணம் போர்வெல்கள்தான்.போர்வெல் தொடர்ந்து ஓட என்ன காரணம் , இலவசக் கரண்ட். <br><br>எங்கள் கிணற்றில் இன்ஜின் வைத்து ஓட்டிக் கொண்டு இருந்தோம். பக்கத்து தோட்டத்தில் போட்ட போர்வெல் காரணமாக,எங்கள் கிணற்றின் தண்ணீர் ஊற்று வற்றிப்போனதால் தென்னை மரங்கள் 50 பட்டுப்போனது , காரணம் என்ன இலவசக் கரண்ட். போர் போட்ட தோட்டம் எங்கள் கிணற்றுக்கு அரை கிமீ முன்னால் . ஆனால் அங்கும் தண்ணீர் ஆறு மாதத்திற்க்கு பின்னால் வரவில்லை. (அதற்க்கு முன்னால் அவர்களும் இலவசக் கரண்ட் வைத்து இருந்தார்கள் , ஆனால் கிணற்றின் மோட்டார் மட்டும் ஓடியது ,போர் போட்ட பிறகு போருக்கும் அதே கரண்டை இணைத்து ஓட்டினார்கள்.)இது எதனால் ? <br><br>நீங்களும் போர் போடலாம் என்பீர்கள். <br><br>கிணறு பங்குக்கிணறு, அதுவில்லாமல் கரண்ட் கனெக்சன் பெற ஒரு கிமீ லைன் இழுக்க வேண்டும். <br><br>இன்னும் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் ! எங்கள் கிணற்றீன் தண்ணீர் ஊற்று , அதாவது ஜலம் என்பார்கள் அது நான்கு இடங்களில் வந்து கொண்டு இருந்தது.<br>அந்த ஜலத்தில் ஊற்றும் இடத்தில் எப்போது பார்த்தாலும் சிறு கூழாங்கற்களூம், கிளிஞ்சல்களும் தென்படும். இந்த கூழாங்கற்களையும், கிளிஞ்சல்களையும் நான் பவானி காவிரி ஆற்றின் கரையில் மட்டும்தான் கண்டுள்ளேன். கிணற்றை தூர்வாரியவர்களூம் இதைத்தான் சொன்னார்கள்.<br><br>அதுவில்லாமல் அந்த தண்ணீர் சுவை அந்த ஒரு ஊற்றில் மட்டும் மிகவும் சுவையாக இருக்கும்.<br><br>இதனால்தான் உண்மையை சொன்னேன் , உண்மை சற்று உரைக்கத்தான் செய்யும்.<br><br>கிணத்து மோட்டரை மேலே எடுக்க சிரமப்பட்டு அல்லது சோம்பல்பட்டு தண்ணிரை விடிய விடிய காட்டின் அருகே உள்ள பள்ளத்தில் விடும் நடத்தை ஏன் வருகிறது?<br><br>இலவசக் கரண்ட்தானே?<br><br>இல்லையன்றால் சும்மா மோட்டரை ஓட விடுவீர்களா ?<br><br>கசப்பு மருந்து வேண்டும், காய்ச்சல் தானாக ஆறும். விவசாயம் போகும் போக்கு சீராக வேண்டுமெனில் மான்சான்டோக்களை துரத்தவும் , அதே சமயம் கசப்பு மருத்துகளை பழக்கப்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.<br><br>நன்றி பிரதீப் அவர்களே.வாய்ப்பாடி குமார்http://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172847648446999922.post-20392643543182307002010-03-30T10:53:30.085+05:302010-03-30T10:53:30.085+05:30குமார்,குறைந்து வரும் விவசாயிகள்!பணம் விவசாயத்தில்...குமார்,<br>குறைந்து வரும் விவசாயிகள்!பணம் விவசாயத்தில் முக்கியமானது.குறைந்து வரும் நீர் ஆதாரம்... இது தான் தற்போதைய நிலை.கரும்புக்கு எல்லோரும் ஏன் மாறினார்கள் என்று பயிரிட்டவரிடம் கேட்டுப்பாருங்கள்.உண்மை சுடும்!!பிரதீப்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172847648446999922.post-6317162499604932562010-03-30T10:55:06.906+05:302010-03-30T10:55:06.906+05:30விவாயி இன்று social enterprises ஆகி விட்டது.விவாயி இன்று social enterprises ஆகி விட்டது.பிரதீப்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172847648446999922.post-36802364406338934282010-03-30T11:41:17.431+05:302010-03-30T11:41:17.431+05:30கருத்துக்கள் பலவிதமாக இருந்தாலும் நான் என் அனுபவம்...கருத்துக்கள் பலவிதமாக இருந்தாலும் நான் என் அனுபவம் , எங்கள் வேளாண்மை இவற்றை மையப்படுத்தி எழுதியுள்ளேன். இது சற்று ஆழமாக சிந்திக்கவேண்டிய ஒன்று. பவானி சாகருக்கும் , அவினாசிக்கும் எவ்வளவு தொலைவு , ஆனால் ஒரு வாய்க்கால் திட்டம் அவினாசி அத்திக்கடவு இன்றுவரை கனவாகவே உள்ளது.<br><br> இதே பவானிசாகர் வாய்க்கால் எவ்வளவு தொலைவு தாண்டிப் பாய்கிறது தெரியுமா? பழையகோட்டை, மற்றும் சென்னிமலையின் பிற்பகுதி, அரச்சலூர், முத்தூர் .பெருந்துறை, காஞ்சிக்கோயில்.<br><br>ஆனால் 30 கிமீட்டருக்குள் உள்ள அவினாசி,புளியம்பட்டி , அன்னூர், ஊத்துக்குளி , வாய்ப்பாடி , செங்கப்பள்ளி ,குன்னத்தூர் பாவம் செய்த ஊர்களா?<br><br>இதுபோல தமிழ் நாட்டின் பல திட்டங்கள் உள்ளது. இதில் அக்கறை காட்ட வேண்டும், நீர் நிலைகளை பெருக்க வேண்டும், காசுக்கு என்ன செய்ய , இலவசங்களை குறைக்க வேண்டும். யூனிட்டுக்கு 50 பைசாவாவது போட வேண்டும். அப்பொழுதுதான் பொதுப்பணித்துறையின் திட்டங்களை நிறைவேற்ற நிதி ஆதாரங்கள் கிடைக்கும்.வாய்ப்பாடி குமார்http://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-172847648446999922.post-17266051686644790692010-03-30T11:45:14.594+05:302010-03-30T11:45:14.594+05:30வாய்க்கால்கள் , நீர் நிலைகள் பெருகும் போது கண்டிப்...வாய்க்கால்கள் , நீர் நிலைகள் பெருகும் போது கண்டிப்பாக எந்த ஒரு விவசாயும் சும்மா இருக்க மாட்டான். விவசாயம் பெருகும். விலைவாசியும் குறையும், தக்காளி சீசனில் தக்காளி கிலோ ரூ 1 , 2 கிலோ ரூ 1 எனக் கிடைப்பதுவே இதற்க்கு உதாரணம். <br><br>அமல்படுத்திய ஓரிரு ஆண்டுகளுக்கு வேண்டுமானால் சிரமம் தெரியலாம், ஆனால் அதற்கு பிறகு அனைத்தும் சுபமாகவே நடக்கும்.வாய்ப்பாடி குமார்http://www.blogger.com/profile/04477078673084039715noreply@blogger.com