திங்கள், டிசம்பர் 12, 2016

ம.நடராசனின் மறுபக்கம்...

இருவருக்கு பின்.....
ம.நடராசனின் மறுபக்கம்... -- By Soma Sundara Prabhu M
சசிகலாவின் கணவன் ம.நடராசனின் வாழ்க்கை வரலாறு நமக்கு தேவையற்றது எனும் போதிலும், அரசியலில் எந்தெந்த வகையில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிந்து கொள்வது அவசியம். ஏற்றிவிட்ட ஏணிகளான கலைஞர், ஜெயலலிதா, சந்திரலேகா மற்றும் பொதுமக்கள் என்று அனைவருக்கும் துரோகத்தையும், வஞ்சத்தையும் பரிசாக தந்த உத்தமன் இந்த நடராசன் என்பதை விளக்கவே இந்த தொகுப்பு.
1967இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவராய் இருந்த காலத்தில் பங்கெடுத்திருக்கிறார் தஞ்சையில் (மாணவர் தலைவராய் தலைமை தாங்கியதாக கூட கதைகள் உண்டு), இதற்கு பிற்பாடு சில ஆண்டுகளுக்கு பின் ஆர்.டி.ஓ. வேலைக்கு தேர்வெழுதி தோல்வியுறுகிறார், (பின்னாளில், அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, "மகளிர் மேம்பாட்டில் இதழ்களின் பங்கு" என்னும் தலைப்பில் முனைவர் பட்டம் பெறுகிறார்😝). இதனிடையே, ஆர்.டி.ஓ. வேலை கேட்டு எஸ்.டி.சோமசுந்தரம் மூலமாக முயற்சி செய்கிறார், முடியாமல் போகவே எல்.கணேசன் மூலமாக முயற்சி செய்கிறார், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர் என்பதால், ஆட்சியர் அலுவலகத்தில் பி.ஆர்.ஓ.என்ற பதவியை முதல் முறையாக உருவாக்கி, ஆர்.டி.ஓ. 90பேருடன், பி.ஆர்.ஓ. என்ற பொறுப்பில் நடராசன் உட்பட்ட 11பேரை கலைஞர் மு.கருணாநிதி எழுபதுகளின் தொடக்கத்தில் நியமிக்கிறார். இடஒதுக்கீடு முறையில் புழக்கத்தில் இருந்து வந்த தவறான கொள்கையையும் களைகிறார்.(தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களையும், இடஒதுக்கீடு சதவிகிதத்திற்குள் கொண்டு வந்து விடுவர், ஆரிய அதிகாரிகள்)
பின்னர் நடராசனுக்கும் சசிகலாவுக்கும் கலைஞரே தலைமை தாங்கி திருமணம் முடித்து வைத்தார். கடலூர் மாவட்டத்தில் அப்பொழுது ஆட்சித்தலைவர் சந்திரலேகா அவர்கள், எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருகிறார் 77ல் வந்ததும் முதல் கையெழுத்து நடராசன் உள்ளிட்ட 11பேரின் பி.ஆர்.ஓ.பதவி நீக்க கோப்பில் தான். இதனால் சந்திரலேகா நடராசன் குடும்பத்தின் மேல் அனுதாபப்படுகிறார்.
பிழைப்புக்கு வழி தெரியாமல், வீடியோ கேசட்டுகளை சென்னையின் முக்கிய பணக்கார தெருக்களில் வீடு வீடாக மாலையில் கொடுத்து காலையில் வாங்கி பிழைப்பு நடத்த துவங்குகிறார் சசிகலா. நடராசனோ நீக்கப்பட்ட மீதமுள்ள 10பேரிடமும் பணம் வாங்கிக் கொண்டு, ஸ்டேட் ட்ரிப்யூனலில் வழக்கு தொடுக்கிறார். வழக்கில் ஆஜராகும் வக்கீலின் வீட்டு அவுட் ஹவுஸில் தங்கி, அவருக்கு குமாஸ்தாவாக காலம் கழிக்கிறார். இதுவே இந்த தம்பதியினர் சென்னை வந்ததற்கான காரணம்.
1981ல் சந்திரலேகாவை சந்தித்து உதவி கேட்கிறார்கள், அரசு விழாக்களின் வீடியோ உரிமையை பெற்றுத் தரக் கோரி. தனக்குக் கீழ் பணி செய்து வேலையிழந்தவர் என்ற அனுதாபம் இருக்கவே, எம்.ஜி.ஆரிடம் இன்னாரின் மனைவி என்று சொல்லாமல் விசயத்தை சொல்கிறார். எம்.ஜி.ஆரோ, "இது கொ.ப.செ. ஜெ. முடிவெடுக்க வேண்டிய ஒன்று" என்று கூறி ஜெ.விடம் அனுப்பி வைக்கிறார். இப்படியாக ஜெ.யிடம் செல்ல, ஜெ. வீட்டுக்கும் தான் வீடியோ கேசட்டை செக்யூரிட்டியிடம் கொடுக்கும் விவரத்தை தெரிவிக்கிறார் சசிகலா. பரிதாபப்பட்டு வீட்டுக்குள்ளேயே வந்து கொடுக்க அனுமதித்து, தினமும் பேச்சுத் துணையாக சசிகலாவை வைத்து திரும்ப அனுப்பியவர், வீட்டிலேயே சேர்த்தும் கொண்டார்.
இவர்களின் ஓதுதல் கேட்டே எம்.ஜி.ஆருக்கு எதிராக சில வேலைகளை செய்தார், கட்சியிலிருந்து ஒதுக்கியும் வைக்கப்பட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதா கொடுத்த குடைச்சலாலும், எம்.ஜி.ஆரின் உடல்நிலை மோசமானதாலும், திமுகவோடு கட்சியை இணைத்து விடும் முயற்சியை எம்.ஜி.ஆர் எடுத்ததாகவும், அதை ஆர்.எம்.வீ., சோலை உள்ளிட்டவர்கள் தடுத்ததாகவும், அவர்களே நக்கீரன் தொடரில் சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு சூழல் வருமென்று தெரிந்திருந்ததால் தான், அன்றே அதிமுகவை தோற்றுவித்த எம்.ஜி.ஆரே கலைத்துவிடவும் முடிவெடுத்தார். தடுத்தவர்கள் பின்னாட்களில் வருந்த வேண்டி வந்தது...
எம்.ஜி.ஆரின் இறப்புக்கு பின், ஏற்பட்ட வெற்றிடத்தை பயன்படுத்தி மீண்டும் இழந்த செல்வாக்கை பெறலாம் என்று ராஜீவ் காந்திக்கு இங்குள்ள சிலர் தூபம் போட, ஜானகி தலைமையிலான ஆட்சி கலைக்கப்படுகிறது (அன்று ஆட்சிக் கலைப்பு சாதாரணமான நிகழ்வு, கலைஞர் ஆட்சி இரு முறையும், எம்.ஜி.ஆர். ஜானகி ஆட்சி தலாஒரு முறையும் கலைக்கப்பட்டிருக்கிறது).
1989 தேர்தலில் திமுக கூட்டணி 165 தொகுதிகளில் வென்றது, ஜா.அணியுடன் கூட்டணி சேர்ந்த காங்கிரசின் திட்டம் பலிக்கவில்லை வெறும் 35தொகுதிகளையே வென்றது. இந்த வேளையில் ஜானகி அரசியலை விட்டு விலகி, ஜெ.வுக்கு கட்சிக்குள் ஓரளவு செல்வாக்கு பெருகி, இரட்டை இலைச் சின்னமும் கிடைத்தது. வரவு செலவு கணக்குகளை பார்த்த ஜெயலலிதா உறைந்து போய், கோவத்தின் உச்சிக்கே சென்றார். பாதிக்கும் மேற்பட்ட பணம் கையாடப்பட்டிருந்தது நடராசனால். இதனால் கோவமுற்று, அரசியலை விட்டு விலகிப் போகப் போவதாக தெரிவித்து நடராசனையும் கார்டனை விட்டு விரட்டியடித்தார், எனினும் சசிகலா தொடர்ந்து அவருடனேயே இருந்தார்.
மிக மிக முக்கியமான காலகட்டம் இது தான், இந்த காலகட்டத்தில் தான் இலங்கை சென்ற அமைதிப்படை சென்னை வந்திறங்கி, டெல்லி சென்றது. மரபுப்படி, கலைஞர் அமைதிப்படையை வரவேற்க வேண்டும், இலங்கையில் அவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரவேற்க செல்லவில்லை கலைஞர். இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள எண்ணிய நடராசன், இதைச் சொல்லியே ஜெ. மனதை கரைத்தார்.
இதற்காக லாபி செய்ய டெல்லி புறப்பட்ட நடராசனுக்கு, அங்கே ராஜிவ் கொலைக்கான அசைன்மெண்ட் குறித்து தெரியவருகின்றது. 😡😡😡 ஆனால் இதனை செய்து முடிக்கும் திறன் படைத்தவர்கள், இடம், சூழல் குறித்தெல்லாம் சரியான யோசனை கிடைக்காமல் குழம்பி இருந்தனர் திட்டமிட்டவர்கள். நடராசனுக்கு யோசனை உதித்தது, ஏற்கனவே கோவத்தில் உள்ள விடுதலைப் புலிகளை வைத்து செய்தால் என்ன என்று. இது வெறும் அனுமானமல்ல, சந்திரலேகா மூலமாக சு.சாமியிடமும்(ப்ராஜெக்ட் ப்ரோக்கர்), நெடுமாறன் மூலமாக விடுதலைப் புலிகளுடனும், ஜெ.வை ஆட்சிக்கு வர வைத்து, நேரடியாக ஆதாயம் பெறப் போகும் ஆள் தான் தான் என்ற முறையிலும், மூவருடனும் தொடர்புடைய ஒரே ஆள் நடராசன் மட்டுமே.
இதற்கான பிரதி உபகாரமாக தமிழகத்தில் ஆட்சிக் கலைப்பு செய்ய வேண்டும் என்ற உடன்படிக்கையுடன் துவங்கியது ப்ராஜெக்ட். ஆட்சி கலைப்பு, விடுதலை புலிகளுக்கு(திமுகவின் நிதியை வாங்க மறுத்தவர்கள் விடுதலைப் புலிகள் என்பது குறிப்பிடத்தக்கது) இரகசியங்களை தாரை வார்க்கின்றது திமுக தலைமையிலான அரசு என்ற சப்பையான காரணத்தை வைத்து நடத்தப்பட்டது. மீதி திட்டங்களை எல்லாம் வகுத்து, விடுதலைப் புலிகளை அணுகி கொலைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு, ராஜீவையும் தமிழகம் வரவைத்தாயிற்று. திட்டம் குறித்து நாட்டில் பலருக்கும் இரகசியம் கசிந்திருந்த பொழுதும், யார் எதற்காக செய்யப் போகின்றார்கள் என்று அறியாததால், வதந்தி என்றே எண்ணியிருந்தனர்.
ராஜீவின் வருகையை அன்றைய தமிழக ஆளுனர் பீஷ்ம நாராயண் சிங் தடுத்துப் பார்த்தார், உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி. பின்னாளில், பாதுகாப்பு சரியாக இருந்ததாகவும், அதனை காங்கிரசாரே உடைத்தாகவும் தெரிவித்தார் அன்றைய ஆளுனர். மேடையில், முக்கிய புள்ளிகள் எவருமில்லை, எல்லோருக்குமே ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதாக தெரிந்திருந்தது, என்ன, எப்படி என்று மட்டும் தெரிந்திருக்கவில்லை. இதன் தீவிரத்தையும் அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.
அந்த கருப்பு தினமும் வந்தது, கொலைக்கு முன்னதாகவே அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரையும் தொடர்பு கொண்ட நடராசன், "இன்று இரவு திமுகவினர் அனைவருடைய இல்லங்களையும் (குறிப்பாக திமுக வேட்பாளர்களின் இல்லங்களை) இரவோடு இரவாக முற்றுகையிட வேண்டும்" என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருந்தார். இல்லையெனில், விடிவதற்குள்ளாகவே ராஜீவை கொலை செய்த பழி திமுக மீது எப்படி விழுந்திருக்கும்????
😭கொலையாளிகள் தேன்மொழி ராஜரத்தினம் என்கின்ற காயத்ரி மற்றும் தாணு இணைந்து மேடையேறி குண்டை வெடிக்கச் செய்தனர். அய்யகோ, நாட்டின் முன்னாள் பிரதமர் மற்றும் 14அப்பாவிகள் கருகிச் சிதறினர். நோக்கம் ராஜீவ் காந்தியை மட்டும் கொல்வதாக இருந்திருக்குமேயானால் துப்பாக்கியால் சுட்டிருப்பார்கள். அவர்களது நோக்கம் பெருங்கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதாகவும் இருந்ததாலேயே தான் குண்டு வைத்துக் கொன்றனர். திட்டமிட்ட படி, திமுகவினரின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன, திமுகவினர் தத்தமது குடும்பத்தினர், குழந்தைகள் உயிரை காப்பாற்ற ஓலமிட்டனர், கெஞ்சினர், கசியுமா வஞ்சகர்களின் மனது??? பெருங்கலவரம் மூண்டது. இத்தகைய கொடிய மனம் கொண்டவர் தான் நடராசன். இந்த கொலையில் தொடர்புடைய ம.நடராசன், சுப்பிரமணிய சாமி, சந்திராசாமி எல்லாம் விசாரணை வளையத்திற்குள் சிக்காதது, பெரும் விந்தை தான். நடராசன் பெயர் இதில் அடிபடக் கூட இல்லை.
நாடெங்கிலும் ராஜீவின் உடல் சிதறிய மற்றும் ஜெ.வின் தலைவிரி கோலமும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன, செய்யாத குற்றத்திற்காக தண்டனையும் பெற்றது திமுக. மக்கள் யோசிக்க தவறி விட்டார்கள், தேர்தல் வேளையில் எளிதில் ஆட்சியமைக்க இருக்கும் ஒரு கட்சி எப்படி இப்படி ஒரு காரியத்தைச் செய்யும் என்று. நடராசன் போட்டு வைத்திருந்த திட்டத்தின்படி அதிமுக வென்றது, ஹிட்லராட்சி துவங்கியது. நாமெல்லாம் எண்ணியிருக்கிறோம், நம்புகிறோம், ஜெ. தான் ஒரு சர்வாதிகாரி போல நடந்து கொண்டிருந்தார் என்றும், சிலவற்றுக்கு காரணம் சசிகலா என்றும், அது தான் இல்லை. எல்லாமே கொலையரசன் நடராசனின் சதிச்செயல்.
1991 அதிமுக ஆட்சி அமைந்து ஆடிய ஆட்டம் மக்கள் அனைவருக்கும் தெரியும், எனினும், எப்படி எப்படியெல்லாம் அராஜகமாக நடந்து கொண்டார்கள் என்று விவரித்தால் தான் புரியும், நினைவுக்கு வரும். ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் சொந்த பலத்தில் வென்றதாகவும், ராஜீவ் கொலை செய்யப்பட்ட அனுதாபத்தால் அல்ல என்றார் ஜெயலலிதா. இது ஜெ.வின் குரல் அல்ல, நடராசனின் குரலை ஜெ. ஒலித்தார். பிரதமர் நரசிம்மராவ் தான் கொள்ளையர்களை அனுப்பி தமிழக அரசின் நற்பெயரை கெடுக்கிறார் என்றார்.
கொலைகொலையா முந்திரிக்கா.... அதிமுக அரசு குறித்து விமர்சித்த தராசு பத்திரிகை ஊழியர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். திருச்சி விமான நிலையத்தில் ப.சிதம்பரத்தின் வாகனத்தை 400பேர் தாக்கினர் திருச்சியை சேர்ந்த இளவரசன் என்ற அதிமுக பிரமுகர் தலைமையில். எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க ஒரு பட்டியல் தயார் செய்து கொடுத்தார் நடராசன், அதன்படி ஒட்டுக்கேட்கப் பட்டது. இவ்விரு நிகழ்வையும் தோலுரித்து எழுதிய நக்கீரன் அலுவலகத்தில் ரைடு நடத்தி மிரட்டியது நடராசன் உத்தரவின் பேரில். வாட்டர் கேட் ஊழல் என்று தலையங்கமிட்டு எழுதிய நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட நக்கீரன் ஊழியர்கள் மூவரை கைது செய்தது ~ஜெ~நடராசன் போலீஸ். இது போல பல வழிகளில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டனர்.
இப்படி நடராசனால் செய்யப்பட்ட ஹிட்லர் ரூலிங், ஜெ.வின் ஸ்டைலாகவே மாறிப் போனது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆனந்தகிருஷ்ணனை வீடு புகுந்து தாக்கியது, திருத்துறைப்பூண்டி இ.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. பழனிச்சாமியை தாக்கியது, அன்றைய பா.ம.க. எம்.எல்.ஏ. பண்ருட்டி ராமச்சந்திரனை தாமரைக்கனியை விட்டு தாக்கியது, என்று பட்டியல் நீள்கிறது.
மன்னார்குடி மாஃபியா லிஸ்ட்--------- 1)சசிகலாவின் மூத்த அண்ணன் சுந்தரவதனம், மனைவி சந்தானலட்சுமி, பிள்ளைகள் அனுராதா(தினகரனின் மனைவி), டாக்டர் வெங்கடேஷ். 2) சகோதரி வனிதாமணி, கணவர் விவேகானந்தன், பிள்ளைகள் தினகரன், சுதாகரன்(ஜெ.வின் வளர்ப்புப் பிள்ளை), பாஸ்கரன். 3)அண்ணன் வினோதகன், மகன் மகாதேவன். 4)அண்ணன் ஜெயராமன், மனைவி இளவரசி, மகன் விவேக். 5)சசிகலா, கணவன் நடராசன், நடராசனின் தம்பி ராமச்சந்திரன். 6)தம்பி திவாகரன். ஆத்தாடி, மேம்போக்கா சொன்னதே எத்தா பெருசு!!!!!!
இந்த கும்பல் வைத்தது தான் சட்டம், தாக்குதல் பட்டியலை தொடர்வோம். ஜெ.அரசின் நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் அவர்களின் மருமகன் மீது கஞ்சா வழக்கு. திமுகவினர் மீது தடா சட்டம், டி.என். சேஷன் மீது விமான நிலையத்திலும், தாஜ் ஹோட்டலிலும் தாக்குதல் நடத்தினர் ரவுடிகள்.
நன்றிகெட்ட தனத்தின் உச்சமாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கீழ் இயங்கும் ஸ்பிக் நிறுவனத்தின் 26% பங்குகளை குறைந்த விலைக்கு, அதன் நிறுவனர்களான ஏ.சி.முத்தையா செட்டியார் மற்றும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் இருவருக்கும் கொடுப்பதை தட்டிக் கேட்ட, டிட்கோ தலைவர் சந்திரலேகா ஐ.ஏ.எஸ். மீது ஆசிட் வீச்சு (அழகுச் சண்டை வேறு காரணமாம்) இந்த முறைகேட்டால், அன்றே 40கோடி இழப்பு, அரசுக்கு. ஆசிட் வீசியது ரவுடி சுடலை என்கின்ற சுருளா, ஏவியது நத்தம் விஸ்வநாதன், நத்தத்தை ஏவியது திண்டுக்கல் சீனிவாசன், சீனிவாசனை ஏவியது மதுசூதனன், மதுசூதனனை ஏவியது சாட்சாத் நடராசனே தான். பின்னாளில் இந்த சுருளா, தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள, நீதிபதையையே தாக்கி, சிறைக்குள்ளேயே இருக்க முடிவு செய்கிறார்.
ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங்கை(காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர்) கைக்குள் போட்டுக் கொண்டு, அவர் தேவைகளை நிறைவு செய்ய, தேவாரத்தின் கீழ் பணிபுரிந்த பெண் காவலர் லால் என்பவரை நியமித்ருந்தனர். அதைக் காட்டி மிரட்டி வைத்திருந்தனர் 30/05/1993 வரை. 31/05/1993 அன்று சென்னாரெட்டி ஆளுநர் பொறுப்பை ஏற்றார், இவர்களுக்கு பெரும் குடைச்சலாக இருந்தார். ஊழல் வழக்கு தொடுக்கும் சு.சாமியின் மனுவுக்கு அனுமதி கொடுத்தார் சென்னாரெட்டி. சட்டசபையிலேயே ஆளுநர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று சொல்ல வைத்தனர்.
டான்சி வழக்கில் தங்களையும் பிரதிவாதியாக இணைத்துக் கொள்ள நீதிபதியிடம் திமுக கேட்க, அனுமதி வழங்கி விட்டார் நீதிபதி. இதற்காக இம்ப்ளீட் பெட்டிசன் தயார் செய்கின்றனர் அன்றைய மாநிலங்களவை உறுப்பினர் வக்கீல் சண்முகசுந்தரமும், இன்றைய மாநிலங்களவை உறுப்பினர் அய்யா ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி அவர்களும் தயார் செய்து முடித்துவிட்டு, பாரதி அய்யா வீடு திரும்பி விடுகிறார். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆசைத்தம்பி என்கின்ற ரவடி தலைமையில் வந்த ரவுடி கும்பல் வக்கீல் சண்முகசுந்தரம் அவர்களை சரமாரியாக வெட்டிவிட்டு தப்புகிறது. பின்னர் அதிமுக ஆட்சியிலேயே, அந்த ரவுடி ஆசைத்தம்பி என்கவுண்டர் செய்யப்பட்டார்(விசயம் வெளியே தெரியக் கூடாதுல).
2012ம் ஆண்டு துவக்கத்தில் தமிழர் திருநாள் பண்டிகை கொண்டாடிய நடராசனின் பேச்சை இன்றைய அரசியல் நிகழ்வுடன் பொருத்திப் பார்த்தால், அதிமுகவினருக்கு கூட இவர் மேல் உள்ள சந்தேகம் வலுக்கும். அந்த பேச்சு: இந்த விழாவுக்கு, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மைத்துனர் கிருஷ்ணமோகன்ஜி வந்துள்ளார். இது போல், இந்தியா முழுவதும் உள்ள என் நண்பர்களை அழைத்தால் தாங்க மாட்டார்கள்; இனிமேல் அனைவரையும் அழைப்பேன். இனி, நான் யாருக்கும் கட்டுப்பட மாட்டேன். ஒன்று பழ.நெடுமாறனுக்கு கட்டுப்படுவேன்; இரண்டாவது என் மனைவிக்கு கட்டுப்படுவேன். நீங்கள், “முடிவெடு" என்கிறீர்கள். நான் முடிவெடுத்ததால் தான் ஆட்சி மாறியது. அதை மாற்றியது மக்கள். மக்கள் சக்தியை திரட்டினால் மாற்றம் வரும். வரும் எம்.பி., தேர்தலிலும் அது எதிரொலிக்கும். முடிவு எடுத்துவிடலாம். அதனால், தமிழகத்தின் பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது(என்ன ஒரு பொதுநலம்). என் மனைவி மீது வழக்கு உள்ளது;(இது தான் உங்கள் பொதுநலமா???) அதனால், பொறுமையாக இருக்கிறேன். தற்போதுள்ள இடர்பாடுகளை பார்த்து, யாரும் அச்சப்பட வேண்டாம். மற்றவர்களை போல் பொறுப்பற்ற முறையில் அவசரப்பட என்னால் முடியாது. “என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே… இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே!" இவ்வாறு நடராசன் பேசினார். இனி, சொந்த காரை பயன்படுத்தாமல், பொது காரை பயன்படுத்துவதாகவும், தூக்கு தண்டனையை, இந்தியாவில் ரத்து செய்ய வலியுறுத்தி, குமரி முதல் சென்னை வரை நடை பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார் (இதுவரை, இந்த நான்கரை ஆண்டுகளில், அப்படி எதுவும் நமக்கு தெரிந்து நடக்கவேயில்லையே). தஞ்சை அருகே, விளார்(நடராசனின் சொந்த ஊர்) ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, தனது கைக்கடிகாரம், பழைய கார்கள் உள்ளிட்ட உடைமைகளை, மேடையில், 45 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணத்தை பழ.நெடுமாறனிடம் வழங்கினார். (ஏலம் விட்டதும் எடுத்ததும் நடராசனின் ஆட்களே....). முற்றம் தொடர்பான சிற்ப வேலைகள் செய்ய பணித்த திரைப்பட நடிகர் சைனி ஹீசைனியையும் கொன்று விடுவதாக மிரட்டினார், காவல்துறையில் புகார் கொடுத்து வைத்ததால் தப்பித்திருக்கிறார்.
ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டிய பொழுது, குடும்ப மாநாடு நடத்தி, ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற முயற்சித்த துரோகி, தீயசக்தி தான் இந்த நடராசன்.
இன்றும் தஞ்சை உள்ளிட்ட நகரங்களில், "அதிமுக எனும் இராணுவ கட்டமைப்பு கொண்ட கட்சியை வழிநடத்த, தேவை இன்னொரு அம்மா, அது தான் எங்கள் சின்னம்மா" எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது போஸ்டர்களில். இதில் காசவளநாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இது 18கிராமங்களை உள்ளடக்கியது, இதில் தான் நடராசனின் சொந்த ஊரான விளார் கிராமமும் வருகின்றது. இப்போ சொல்லுங்க இது யாருடைய வேலை????
அன்று முதல் இன்று வரை பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், நீதித் துறையினர்(ஆச்சார்யா உட்பட), பொதுமக்கள் என்று அனைவரும், சொந்த நாட்டில் அடிமைகளாக கருத்து சுதந்திரம் இல்லாமல் வாழக் காரணம், இந்த நடராசன் வகுத்துத் தந்த பாதை தான். வேலை கொடுத்து திருமணம் செய்து வைத்த கலைஞருக்கும், இரக்கப்பட்டு ஜெ.விடம் அறிமுகப் படுத்திய சந்திரலேகாவிற்கும், ஆதரவளித்த ஜெ.விற்கும், இந்த பகட்டு வாழ்க்கை கிடைக்க காரணமான பொதுமக்களுக்கும், நடரசன் துரோகம் ஒன்றையே பரிசாக தந்திருக்கிறார்.
இந்த துரோகங்களுக்கு கிடைத்த தண்டனைகளாக, நடராசன் சிறைக் கம்பிகளை எண்ணியிருந்தாலும், இன்றளவும் ஈழ வியாபாரிகள், நெடுமாறன், வைகோ, சீமான், வேல்முருகன் போன்றவர்களை, அதிமுக சார்பு நிலைப்பாடு எடுக்க வைத்து, ஓரணியில் நிறுத்தியிருக்கிறார். இது மாபெரும் நாச வேலைக்கான, இனவாத அரசியலுக்கான அறிகுறி.
இப்படிப்பட்ட தீய சக்தி நடராசன் தான் கலைஞரை தீயசக்தி என்றும், ஜெயலலிதாவை சேடிஸ்ட் என்றும், மக்களை முட்டாள்கள் என்றும் கூறி வருகிறார்.
இப்போ சொல்லுங்க, இந்த நடராசன்(சசிகலா) கையில் அதிகாரம் செல்லலாமா???, இனவாத, மதவாத அரசியல் செய்ய நினைக்கும் தீயசக்திகள் நடராசனுக்கும், மோடிக்கும் தமிழகத்தில் எந்த அதிகாரமும் கிடைத்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.
ம.சோமசுந்தர பிரபு....

வெள்ளி, செப்டம்பர் 09, 2016

பச்சமுத்து கரன்சி தந்தையான கதை-விகடன்


கணக்கு ஆசிரியர், கல்லூரி அதிபர், ஊடக முதலாளி, படத் தயாரிப்பாளர், அரசியல் கட்சியின் தலைவர் என தனக்குத்தானே பல அரிதாரங்களைப் பூசி, ‘சக்சஸ்’ மனிதராக வலம்வந்தவர் `பாரிவேந்தர்’ என்று அழைக்கப்படும் பச்சமுத்து. அவருடைய புதிய அவதாரம், புழல் சிறைக் கைதி!
எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க, 72 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் பச்சமுத்து. ஒவ்வோர் ஆண்டும் பணம் வாங்கிக்கொண்டு ஸீட் கொடுப்பது நடைமுறையில் இருக்க, இந்த ஆண்டு திடீரென மத்திய அரசு நீட் தேர்வு முறையைக் கொண்டுவந்ததுதான் பச்சமுத்துவுக்கு விழுந்த பெரிய அடி.
பச்சமுத்து சார்பில் பணம் வாங்கும் ஏஜென்ட்டான மதன், மாணவர்களிடம் வாங்கிய பணத்தை வேந்தர் மூவீஸ் உள்ளிட்ட வேறு தொழில்களில் முதலீடு செய்வது வழக்கம். ஆனால், இந்த முறை நீட் தேர்வால் பணம் கொடுத்தவர்களில் சிலர் பணத்தைக் திருப்பிக் கேட்க, மதனோ `கங்கையில் கரைகிறேன்’ எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கடந்த மே மாத இறுதியில் எஸ்கேப் ஆனார். அவரைக் கண்டுபிடித்துத் தரும்படி அவரது தாயார் தொடர்ந்த வழக்கு போலீஸாரால் இழுத்தடிக்கப்பட, உயர் நீதிமன்றத்தின் நெருக்கடியால் இப்போது பச்சமுத்து கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சொத்து மதிப்பு 15,000 கோடிக்கும் மேல். ஊடகம், டிரான்ஸ்போர்ட், மருத்துவமனை, ஹோட்டல் என 100-க்கும் அதிகமான தொழில்களில் ஈடுபட்டுவருகிறது பச்சமுத்து தலைமையிலான எஸ்.ஆர்.எம் குழுமம்.
யார் இந்தப் பச்சமுத்து?
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் இருக்கிறது தாண்டவராயபுரம். இதுதான் பச்சமுத்து பிறந்த ஊர். தாயார் வள்ளியம்மை; தந்தை ராமசாமி. சிறு வயதிலேயே தந்தை ராமசாமி, காலமானதால் தாயின் அரவணைப்பும் வறுமையும் பச்சமுத்துவை எப்போதும் சூழ்ந்திருந்தன. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, திருச்சியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றுவிட்டு, சென்னைப் பல்கலைக் கழகத்தில், முதுகலைக் கணிதம் முடித்து, ஏ.எம்.ஐ.இ படிப்பையும் முடித்தார்.
மாலை நேரக் கல்லூரியில் படித்ததால், பகல் பொழுது வீணாகக் கழிவதை விரும்பவில்லை பச்சமுத்து. டுட்டோரியல் கல்லூரிகளில் கணிதம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வேலையில் சேர்ந்தார். சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அப்போது கணித ஆசிரியர்களுக்கு கடும் தட்டுப்பாடு. சென்னை மாநகராட்சி, கணித ஆசிரியர்களை வேலைக்கு அழைக்கிறது. அங்கும் விண்ணப்பித்து, வேலைக்குச் சேர்கிறார். காலையில் 6 மணி முதல் 10 மணி வரை டுட்டோரியல் கல்லூரிகளில் கணக்கு வாத்தியார் வேலை. 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மாநகராட்சிப் பள்ளியில் கணித ஆசிரியர் வேலை. அதன் பிறகு கல்லூரி மாணவர் என சக்சஸ்ஃபுல் இளைஞனாக மாற ஆரம்பித்தார்.
கல்லூரிப் படிப்புகள் அனைத்தும் முடிந்ததும் சொந்தமாக ‘தமிழ்நாடு டுட்டோரியல் மற்றும் டியூஷன் சென்டர்’ ஆரம்பிக்கிறார்.
திருப்புமுனை தந்த எம்.ஜி.ஆர்
டுட்டோரியல் ஆரம்பித்த பிறகுதான் முறையாக ஆங்கிலக் கல்வி கற்றுத்தர ஒருசில கிறிஸ்துவப் பள்ளிகளைத் தவிர வேறு பள்ளிகள் இல்லை என்பதை உணர்கிறார் பச்சமுத்து. போட்டி இல்லாத சந்தை. அதில் இறங்கி வியாபாரம் செய்தால், நிச்சயம் லாபத்துக்கு மேல் லாபம் பார்க்கலாம் என்பதை உணர்ந்த பச்சமுத்து, சென்னை மேற்கு மாம்பலத்தில், நைட்டிங்கேல் நர்சரி பள்ளியை ஆரம்பித்தார். 25 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளிக்கூடம், மெள்ள மெள்ள வளர ஆரம்பித்தது. 12 வருடங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களுடன், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது.
அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சி. முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு, தமிழகத்தில் நிறையக் கல்லூரிகள், தொழிற்கல்விக் கல்லூரிகள் (ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக்) தொடங்க வேண்டும் என ஆசை. ஆனால், அதைச் செய்ய அரசாங்க கஜானாவில் நிதி இல்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. தனியாரை இந்தக் கல்விச் சேவையில் இறக்கலாம் என நினைத்த அவர், ஏற்கெனவே, சிறிய அளவில் பள்ளிக்கூடங்களை நடத்துபவர்களை அழைத்துப் பேசினார். அங்குதான் பச்சமுத்துவின் வாழ்க்கை திசை மாறியது. பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளைத் திறக்க அனுமதிபெற்றார். இவரோடு சேர்ந்து வளர்ந்தவர்கள்தான், வேலூர் வி.ஐ.டி விஸ்வநாதன், சத்யபாமா கல்லூரி அதிபர் ஜேப்பியார்.
அதன் பிறகு, பச்சமுத்துவின் வளர்ச்சி அசுரத்தனமாக இருந்தது. தொழிலில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டார். அரசு இயந்திரத்துக்கு எங்கே எண்ணெய் ஊற்றினால், அது தொய்வின்றி நமக்காக வேலைபார்க்கும் என்பதைப் புரிந்துகொண்டார். 90-களின் தொடக்கம், பச்சமுத்துவை கோடீஸ்வரர் பாரிவேந்தர் ஆக்கியது. தன் தந்தை ராமசாமியின் பெயரில், ஸ்ரீராமசாமி நினைவு என்பதன் சுருக்கமாக எஸ்.ஆர்.எம் குழுமம் உருவானது.
பொத்தேரி ஆக்கிரமிப்பு
ஏரிகள் சூழ்ந்த பகுதிதான் பொத்தேரி. இங்குதான் முதல்முறையாக அவரது தாயார் பெயரில் வள்ளியம்மை பாலிடெக்னிக்கைத் தொடங்குகிறார் பச்சமுத்து. அப்போது அந்தக் கல்லூரியின் மொத்த நிலப்பரப்பு 8 ஏக்கர் மட்டுமே. கல்லூரிக்குள் நுழைய, பாதையே கிடையாது. ஏரிக்கரையைத்தான் கல்லூரிக்கான பாதையாகப் பயன்படுத்துகிறார்கள். அதன் பிறகு ஏரிக்கரை ஆக்கிரமிக்கப்பட்டு, கல்லூரிக்கான நுழைவுச் சாலையானது. அதே வளாகத்தில் எஸ்.ஆர்.எம் இன்ஜினீயரிங் கல்லூரியாக உருவெடுத்த பிறகு, அருகில் ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தைக் கைப்பற்றுகிறது எஸ்.ஆர்.எம் நிர்வாகம். `37 ஏக்கர் பஞ்சமி நிலத்தை, பச்சமுத்து ஆக்கிரமிப்பு செய்துவிட்டார்’ என, 2015-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சதீஷ் என்பவர் மனு செய்தார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில் எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாகத்தில் பச்சமுத்து ஆக்கிரமித்துவைத்துள்ள 37 ஏக்கர் நிலம் பஞ்சமி நிலம் என்பது உறுதியானதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 371 கோடி ரூபாய்.
வருடத்துக்கு ஒரு கல்லூரி
90-களுக்குப் பிறகு, வருடத்துக்கு ஒரு கல்லூரி, ஒரு பாலிடெக்னிக் என்பதை லட்சியமாக வைத்துச் செயல்பட்டார் பச்சமுத்து. ஒவ்வோர் ஆண்டும் அவருடைய குழுமத்தில் புதிது புதிதாக கல்லூரிகள் இணைந்தன. ஒரே வருடத்தில் மூன்று கல்லூரிகளைத் தொடங்கி, மற்ற கல்வி அதிபர்களை மிரளவைத்தார். விளைநிலங்களை விலைக்கு வாங்கி, அதில் தனது நிறுவனங்களை உருவாக்கி, அதைக் காட்டியே அந்த இடத்துக்கு அனைத்து வசதிகளையும் கொண்டுவருவது பச்சமுத்து ஸ்டைல். இந்த டெக்னிக்கை தமிழகத்தில் முதலில் அறிமுகம் செய்தவர்களில் பச்சமுத்து முக்கியமானவர்.
குடும்பம்
பச்சமுத்துவின் மனைவி ஈஸ்வரியம்மாள். மூத்த மகன் ரவி பச்சமுத்து. இளைய மகன் சத்தியநாராயணன். மகள் கீதா. இதுதான் பச்சமுத்துவின் குடும்பம். மூத்த மகன் ரவி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கிறார். அத்துடன் கட்டுமானம், டிரான்ஸ்போர்ட், ஹோட்டல்கள் ஆகியவற்றை நிர்வகித்துவருகிறார். சத்தியநாராயணன், `புதிய தலைமுறை தொலைக்காட்சி’ என ஊடகப் பிரிவை கவனித்துவருகிறார். மகள் கீதா மற்றும் அவரது கணவர் சிவக்குமாரிடமோ, திருச்சி டி.ஆர்.பி இன்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மற்றும் ராமாபுரம் ஈஸ்வரி இன்ஜினீயரிங் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பொறுப்பு.
கட்சி தொடங்கியது எதற்காக?
பச்சமுத்து கோடீஸ்வரர் ஆனதும், அவருக்கு பல திசைகளில் சில சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. 2006-ம் ஆண்டு காலகட்டத்தில் அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் மூலம் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பச்சமுத்துவின் கல்லூரிகளைக் குறிவைத்து சிலர் அடிமாட்டு விலைக்குக் கேட்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில்தான் ‘புதிய தலைமுறை’ என்ற வார இதழைத் தொடங்கினார். ஜாதி அஸ்திரத்தையும் கையில் எடுத்தார் பச்சமுத்து. பார்க்கவ குல மாநாடுகள் கூட்டப்பட்டன. அதையே ஒன்றிணைத்து இந்திய ஜனநாயகக் கட்சியைத் தொடங்கினார். 2011-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்தக் கட்சி, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து, ஒரு நாடாளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்துவிட்டது.
ஒரு ஸீட் 60 லட்சம்!
கல்லூரிகளை நிர்வகிப்பதில் தனி பாணியைப் பின்பற்றுகிறார் பச்சமுத்து. கல்லூரிக்குள் ஆடைக் கட்டுப்பாடு இருக்காது. தேவையற்ற விதிமுறைகள் எதுவும் கிடையாது. மாணவர்கள் கட்டும் கட்டணங்களுக்கும் முறையான ரசீதுகள் இருக்காது. ஆவணங்கள் இருக்காது. ஐந்து லட்சத்தில் ஆரம்பித்து அறுபது லட்சம் வரை கட்டணம் வாங்குவார்கள். அதற்கு ஒரு துண்டுச்சீட்டுதான் கொடுப்பார்கள். அதில் எந்த விவரமும் இருக்காது. அதைக் கொடுத்தால், கல்லூரியில் ஸீட் உறுதி. அவ்வளவுதான். இந்த வேலையை வெளியில் இருந்து செய்வதற்கு வந்தவர்தான் மதன். அவருடைய வருகை பச்சமுத்துவின் வாழ்க்கையை வேறு திசைக்குக் கொண்டுசென்றது.
ஏஜென்ட் மதன்
குமரி மாவட்டம் சுசீந்திரத்தைச் சேர்ந்தவர் மதன். கல்லூரிக் காலத்தில் மோட்டார் பைக் திருட்டு வழக்கு ஒன்றில் மதன் பெயர் சேர்க்கப் பட்டது. அதில் இருந்து தப்பிக்க மும்பைக்கு ஓடிப்போய் தலைமறைவானார். அதன் பிறகு சென்னை வந்தார். தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் ‘ஸீட்’ வாங்கிக் கொடுக்கும் புரோக்கருடன் நட்பானார். அதன் பிறகு
எஸ்.ஆர்.எம் பச்சமுத்துவுடன் ஏற்பட்ட பழக்கம், விசுவாசம் எல்லாம், அந்தக் கல்லூரியின் ஒட்டுமொத்த மருத்துவ ஸீட்களையும் மதன் மூலமே விற்கும் அளவுக்குப் போனது.
மாணவர்களே புரோக்கர்ஸ்!
கல்லூரிக்கு ஸீட் வாங்கிக் கொடுப்பதில் மதனுக்கு கோடிகள் கொட்டின. மதன் உள்ளூர் மாணவர்களைக் குறிவைத்ததைக் காட்டிலும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேச மாணவர்களைக் குறிவைத்தார். அதற்காக, இங்கு படிக்கும் அந்த மாநில மாணவர்களைத் தன்னுடைய புரோக்கர்களாக்கினார். அவர்கள் அந்தந்த மாநிலங்களில் கேன்வாஸ் செய்து, அங்கு இருந்து ஆள்பிடித்துக் கொடுப்பார்கள். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு, 12-ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு நடக்கும்போதே புக்கிங் தொடங்கிவிடும். அப்போது ஸீட் வாங்கினால், 10 லட்சம் குறைவு என மதன் அறிவிப்பார். அப்படி வசூலிக்கும் தொகையை வேறு தொழிலில் முதலீடு செய்வார்.
வேந்தர் மூவீஸின் எழுச்சி
மருத்துவ ஸீட் பேரங்களின்வழி கிடைத்த பணத்தைக்கொண்டு மதன், வேந்தர் மூவீஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். ரஜினி நடித்த ‘லிங்கா’, விஜய் நடித்த ‘தலைவா’ உள்பட 20-க்கும் மேற்பட்ட படங்களை வாங்கி, விற்பனை செய்தார். சொந்தமாகவும் படம் தயாரித்தார். ஆனால், தயாரித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தின. சினிமா தயாரிப்புகளுக்கு செலவழித்த பணம் எல்லாம், மாணவர்களிடம் ஸீட் வாங்கி தருவதாகச் சொல்லி வாங்கிய பணம். இப்போது மாணவர்களுக்கு கல்லூரியில் ஸீட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயம். பச்சமுத்துவுக்கும் மதனுக்கும் இடையில் கடந்த ஆறு மாதங்களாக விரிசல் விழுந்தது. தொழிலில் நஷ்டம் ஏற்படத் தொடங்கியதை பச்சமுத்துவின் மகன்கள் ரவியும் சத்தியநாராயணனும் விரும்பவில்லை. அவர்கள் மதனைக் கண்டித்ததுடன், தொடர்பைத் துண்டித்துக் கொள்ளவும் வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், கடிதம் எழுதி வைத்துவிட்டு மதன் தலைமறைவானார்.
ஜம்பாலா டைரிக் குறிப்பு
சென்னை விமான நிலைய ஓய்வு சுங்கத்துறை அதிகாரி ஜம்பாலாவின் வீட்டில், சி.பி.ஐ கடந்த ஆண்டு சோதனை நடத்தியது. அப்போது சிக்கிய வரவு-செலவு டைரியில் தன் மகள் மானஷாவை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக 40 லட்ச ரூபாயை நன்கொடையாகக் கொடுத்ததாக ஜம்பாலா குறிப்பிட்டிருந்தார். அந்த டைரி ஆதார அடிப்படையில் பச்சமுத்துவிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியது சி.பி.ஐ. அந்த வழக்கு கிடப்பில் இருக்கிறது.
முடிவு என்ன?
பல ஆயிரம் கோடி சொத்துக்கள் இருந்தாலும் வெறும் 72 கோடி ரூபாய் மோசடி பச்சமுத்துவின் இமேஜை வீழ்த்தியிருக்கிறது. `மாயமான மதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால், பச்சமுத்துவுக்கு மேலும் சிக்கல்’ என்கிறது போலீஸ். இதனால் மதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் களம் இறக்கப்பட்டுள்ளனர் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார். மதன் திரும்பி வந்தால் இன்னும் பல ஊழல் பூதங்கள் வெளிவரலாம்.
ஆண்டுதோறும் கோடிகளில் வியாபாரமான மருத்துவக் கல்வியின் உண்மை நிலவரம் இந்த வழக்கின் மூலம் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது. மருத்துவ கவுன்சில் உடனடியாகத் தலையிட்டு, குதிரை பேரம்போல நடந்த மெடிக்கல் ஸீட் வியாபாரம் குறித்து விசாரணை நடத்தி, இந்த இடைத்தரகர்களின் கல்வி பிசினஸை முடக்க வேண்டும். அப்போதுதான் வியாபாரிகளின் கைகளில் சிக்கிக்கிடக்கும் மருத்துவக் கல்வி முற்றிலுமாக விடுவிக்கப்படும்!

திங்கள், ஜூலை 04, 2016

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் என்ன ஆனார்கள்?

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் என்ன ஆனார்கள்?


மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்திற்கு திரும்பினார்கள். பின் சில ஆண்டு காலங்கள் (கிட்டத்தட்ட 35 ஆண்டுகள்) தங்கள் ராஜ்யத்தை ஆண்ட பிறகு, தங்கள் பிறப்பிற்கான நோக்கத்தை பூர்த்தி செய்ததால், இவ்வுலகை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றனர்.
மகாபாரதத்தின் மாசாலா பர்வாவும், மகாப்ரஸ்தானிக்கா பர்வாவும் இதனை பற்றி விரிவாக கூறுகிறது. அதிலிருந்து சில முக்கிய நிகழ்வுகள் கீழ் வருமாறு:
காந்தாரியின் சாபத்தை ஏற்ற கிருஷ்ணர்
மகாபாரத போர் முடிந்தவுடன், தன் மகன்கள் இறந்த சோகத்தால், யாதவர்களும் இதேப்போன்ற சாவை சந்திப்பார்கள் என காந்தாரி ஸ்ரீ கிருஷ்ணரை சபித்தாள். இந்த சாபத்தை ஸ்ரீ கிருஷ்ணரும் ஏற்றுக் கொண்டார்.
குறும்பு செய்த கிருஷ்ணரின் மகன்கள்
35 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணரின் மகன்கள் சில ரிஷிகளிடம் குறும்பு செய்து விளையாடியதால் சாபத்தை பெற்றனர். கர்ப்பிணி பெண்ணை போல் வேடமணிந்து கொண்ட சம்பா பிற யாதவர்களுடன் சேர்ந்து கொண்டு அங்கிருந்த சில ரிஷிகளிடம் சென்று, தன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என கூறும்படி கேட்டனர். அதில் கோபமடைந்த ஒரு ரிஷி, அவள் ஒரு இரும்பு துண்டை பெற்றெடுப்பாள் என்றும், அது அவனின் வம்சத்தையே அழித்து விடும் என்றும் சாபமளித்தார்.
பிரபாசாவிற்கு புனித பயணம்
தீய சக்திகளும், பாவ நடவடிக்கைகளும் துவாரகையில் அதிகரித்தது. மற்றவர்களை பிரபாசாவிற்கு புனித பயணம் மேற்கொள்ள ஸ்ரீ கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.
ஒருவருக்கொருவர் கொன்று இறந்த யாதவர்கள்
பிரபாசாவில் யாதவர்கள் மது அருந்தி போதையில் மதி மயங்கினார்கள். அவர்களுக்குள் மூண்ட சண்டையில் யாதவர்கள் ஒருவருக்கொருவர் கொன்று இறந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர், தரூகா, வப்ரூ மற்றும் பலராமன் மட்டுமே உயிருடன் இருந்தனர். ஆனால் பின்னர் வப்ரூவும், பலராமனும் கூட இந்த உலகை விட்டு பிரிந்தனர்.
அவதாரத்தை முடித்த அர்ஜுனன்
அர்ஜுனனிடம் தகவலை கூறி உதவி கேட்க தரூகாவை அனுப்பி வைத்தார் ஸ்ரீ கிருஷ்ணர். இந்த சமயத்தில், ஒரு வேடன் செலுத்திய அம்பு ஸ்ரீ கிருஷ்ணரின் பாதத்தில் தவறுதலாக பாய்ந்தது. இதனால் அவர் காயமடைந்தார். வேடனை தேற்றிய ஸ்ரீ கிருஷ்ணர் விஷ்ணு பகவானின் ஓவியத்தோடு ஒன்றிப்போனார். அதோடு இந்த அவதாரத்தை முடித்துக் கொண்டு உலகத்தை விட்டும் பிரிந்து சென்றார்.
கிருஷ்ணரின் மனைவிகளை காக்க முடியாமல் தோற்ற அர்ஜுனன்
அதன் பின் அங்கே வந்து சேர்ந்தான் அர்ஜுனன். ஸ்ரீ கிருஷ்ணரின் விதவை ராணிகளை காக்க முயற்சி செய்தான். ஆனால் காட்டுமிராண்டிகளை எதிர்த்து போட்ட சண்டையில் தோல்வி அடைந்தான். பாண்டவர்களின் வாழ்க்கைக்கான நோக்கம் முடிந்து விட்டது என வேதவியாசர் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினார்.
இமயமலை பயணத்தை மேற்கொண்ட பாண்டவர்கள்
பரிக்ஷித்திற்கு யுதிஷ்டர் முடிசூட்டிய பின்பு 5 பாண்டவர்களும் திரௌபதியுடன் இமயமலை நோக்கி தங்கள் பயணத்தை மேற்கொண்டனர். மலையின் மீது செல்லும் போது ஒரு நாய் அவர்களை பின்பற்றி சென்றது.
கீழே விழுந்த பாண்டவர்கள் மற்றும் த்ரௌபதி
மலையை ஏறும் வழியில் திரௌபதி, சகாதேவன், நகுலன், அர்ஜுனன் மற்றும் பீமன், அதே வரிசையில் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து இறந்தனர்.
யுதிஷ்டரை வரவேற்ற இந்திரன்
யுதிஷ்டர் மட்டுமே உயிருடன் இருந்தார். அவரை வரவேற்க சொர்க்கத்திற்கு தன் ரதத்தில் வந்து சேர்ந்தான் இந்திரன். அந்த நாயை அப்படியே விட்டு விட்டு, அந்த ரதத்தில் ஏறி சொர்க்கத்திற்கு செல்லுமாறு யுதிஷ்டரிடம் இந்திரன் கூறினார்.
சோதனையில் வென்ற யுதிஷ்டர்
அந்த நாய் தனக்கு நண்பனாகி விட்டதால், தன்னுடன் நாய் வராத வரை தான் சொர்க்கத்திற்குள் நுழைய மாட்டேன் என மறுத்தார் யுதிஷ்டர். உடனே அந்த நாய் எமனாக உரு மாறியது. தன் சோதனையில் தேர்ச்சி பெற்று விட்டதாக யுதிஷ்டரிடம் எமன் கூறினார். அதன் பின் யுதிஷ்டர் சொர்க்கத்திற்குள் நுழைந்தார்.
பாற்கடலுக்குள் மூழ்கிய துவாரகை
இப்படி பல விதமான நிகழ்வுகளுக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ணரும் பாண்டவர்களும் இந்த உலகை விட்டு சென்றனர். துவாரகை நகரம் பாற்கடலுக்குள் மூழ்கியது. மெதுவாக தற்போதுள்ள கலியுகமும் தொடங்கியது.

திங்கள், மார்ச் 28, 2016

ஆண்டாள் கோவில்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது எனக்கு விளையாட்டு மைதானம் போன்றது…
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்பதை விட நேரத்தை ஏற்படுத்தி ஆண்டாள் கோவில் செல்வதை இன்றளவும் வழக்கமாக வைத்திருக்கின்றேன்… ஒவ்வொரு முறை செல்லும்போதும் எத்தனையோ விஷயங்களை அந்த கோவிலில் இருந்து கற்று கொண்டு இருந்தாலும் சில நெருடல்களும் அவ்வப்போது அனுபவமாக கிடைத்து கொண்டு தான் இருக்கின்றது.
நெருடல் 1:-
கர்ப்ப கிரகத்திற்குள் பூஜை செய்பவர்கள் மட்டும் தான் போக வேண்டும் என்பது விதி… ஆனால் பணம் கிடைக்கின்றதே என்பதற்காக பெரும் செல்வந்தர்களையும், பெரும் புள்ளிகளையும் கர்ப்ப கிரகத்தினுள் அனுமதிப்பது எந்த ஊர் நியாயம் என்று தெரியவில்லை…
நெருடல் 2:-
சமீபத்தில் தமிழ் நாட்டின் மிக முக்கியமான பெண் அமைச்சர் ஒருவருடன் ஆண்டாள் கோவில் போயிருந்தேன். 15 வருடமாக எனக்கு தெரிந்த அர்ச்சகர்கள் எங்களை நன்கு கவனித்தார்கள். முடிவில் நான் எதிர்பாராத தருணத்தில் வடபத்ரசாயி சன்னதியின் மூலஸ்தானத்தை திறந்து அம்மா, பெருமாளை நன்கு தொட்டு சேவித்து கொள்ளுங்கள், பெருமாளின் காலையும், கையையும் தொட்டு தடவி அமுக்கி விடுங்கள் என்று சொல்லி செய்தும் காண்பித்தார்.
அதன் பின் அவர் சொன்னது:-
ஆண்டாள் சார் நீங்களும், அமைச்சரும், அமைச்சரின் கணவரும் பயங்கர புண்ணியம் செய்து இருக்க வேண்டும் காரணம் மூலஸ்தான பெருமாளை தொடுவது என்பது சாமானியனுக்கு கிடைக்கும் வாய்ப்பில்லை… கும்பாபிஷேகம் நடக்க இருப்பதற்கு சில நாள் முன் வரை பெருமாளை தொட்டு சேவிக்காலாம் அதன் பிறகு முடியாது. இன்று நீங்கள் தொட்டு சேவித்ததால் பெரும் பாக்கியசாலிகள் என்று சொல்லிவிட்டு நாங்கள் தொட்டு சேவித்த பிறகு நடையை சாத்தி விட்டு எங்களை வழி அனுப்பி வைத்தார்கள்…
ஆடி Car – ல் பயணம் என்றாலும் ஆடி தான் போய் விட்டேன்…
என்ன அயோக்கிய தனம்…. 15 வருடம் தெரிந்த அர்ச்சகரே மந்திரியுடன் வந்து இருக்கின்றேன் என்ற உடன் எப்படி உருமாறி, எவ்வளவு தரம் தாழ்ந்து இப்படி ஒவ்வாத விஷயத்தை செய்கிறார் என்று என்னை நானே நொந்து கொண்டேன்…
தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் அந்தந்த கோவில்களின் அர்ச்சகர்களை தவிர வேறு யாரும் கர்ப்பகிரகத்திற்குள் போக கூடாது (அல்லது) எல்லோரும் எல்லா இடத்திற்கும் போகலாம். இரண்டில் ஒன்று குறித்து சரியான நேரத்தில் சரியான வகையில் முடிவெடுக்கப்படும்; அந்த முடிவிற்கு காரணமாக நான் இருப்பேன் என்பதை உறுதியாக கூறி கொள்கின்றேன்.
அதிக பணம், பெரும் தலைவர் என்றால் ஒரு வகையான அதிகப்படி சலுகை ஒருவனுக்கு கிடைக்கும் என்றால் இது சமூக அநீதி… பணம் படைத்தவனுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தான் கோவில் என்றால் இல்லாதவனுக்கு எதுவும் இல்லையா என்ற இரண்டாம் கேள்விக்கு பதிலாக இரண்டு முடிவெடுத்தேன்.
  1. சாமானியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சமுதாயத்தால் வர்ணிக்கப்படுகிறவர்கள், கஷ்டப்படுகிறவர்கள் (உடலாலும் / மனதாலும் / பணத்தாலும்) என 100 பேரை திரட்டி மூலவர் வடபத்ரசாயியை ஒரு அமைச்சர் எப்படி தரிசனம் செய்தாரோ அதுபோல் தரிசனம் செய்ய வைப்பது என்றும்
  2. அரசியல் அதிகாரம் நம் வசம் வரும்போது கட்டணம் இன்றி, எந்த பிரிவும், பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சம தரிசனம் என்ற நிலைப்பாட்டை உருவாக்குவது என்றும் முடிவெடுத்தேன்.
முதல் முடிவின் படி ஏறத்தாழ சாமானியர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சமுதாயத்தால் வர்ணிக்கப்படுகிறவர்கள், கஷ்டப்படுகிறவர்கள் (உடலாலும் / மனதாலும் / பணத்தாலும்) என 100 பேரை திரட்டி மூலவர் வடபத்ரசாயியை தொட்டு தரிசனம் செய்ய வைத்து விட்டேன்.
இரண்டாம் முடிவும் நிறைவேற ரொம்ப நாள் ஆகாது என்பதையும் கூறிக் கொள்கின்றேன்…
ஆக பிரச்சினையும், தீர்வும் சொல்லியாகிவிட்டது விஷயம் முடிந்ததா என்றால் கண்டிப்பாக முடியாது; முடிவடையாது. மூலம் தெரியாமல் – புரியாமல்.
மூலம் என்ன:-
ஆண்டாள் சன்னதியில் வேலை செய்ய கொடுத்து வைத்து இருக்க வேண்டும். அதை மறந்து பணம் சம்பாதிப்பதே வாழ்க்கையின் இலக்கு என்று என்னும் மாக்கள் திருந்தாவிட்டால் இது போன்று புது, புது விஷயங்களை பணத்திற்காக உண்டு பண்ணி கொண்டு தான் இருப்பார்கள்.
செத்து போன மீனுக்கு கூட குறிக்கோள் இருக்கின்றது – செத்தபிறகு கரை ஒதுங்க வேண்டும் என்று….
ஆனால் இது போன்ற மாக்களுக்கு தான் பிறப்பு முதல் இறப்பு வரை குறிக்கோள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் நிலை….
இதை ஒட்டுமொத்தமாக சரி செய்ய வேண்டும் என்றால் நம் அனைவருக்கும் குறிக்கோள் இருக்க வேண்டும்
-    “தவறு / தப்பு நடக்கும்போது தட்டி கேட்க வேண்டும்” என்பது தான் அந்த குறிக்கோள்.
நீங்கள் கோவிலுக்கு போவது மன அமைதிக்காக என்று கோவிலில் நடக்கும் அநீதிகளை பார்த்தும், பார்க்காமல் வந்தால் அதைவிட சமூக அநீதி வேறு எதுவும் கிடையாது.
கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர்…
கோவில் எல்லோருக்கும் பொதுவானது….
கோவிலில் எல்லோருக்கும் சம உரிமை உண்டு….
என்பதை நினைவில் நிறுத்தி கொண்டு
இறந்த மீன் போன்று குறிக்கோளுடன் வாழப் போகிறீர்களா? (அல்லது)
உயிருள்ள மாக்களாக வாழப் போகிறீர்களா என்பதை உங்கள் முடிவிற்கே விட்டு விடுகின்றேன்.

வாழ்க வளமுடன்
என்றென்றும் அன்புடன்
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

காதல்

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!
நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!
வாழ்க வளமுடன்
அனைவருக்கும் வணக்கம்…
இல்லாத வெற்றிடத்தை நிரப்ப இறைவனால் நேரடியாக படைக்கப்பட்டு பூமிக்கு வந்தவர்கள் – என்பது போல் ஒரு வாழ்க்கை ஒவ்வொரு காதலர்களுக்கும்….
உடல் ரீதியாக, மனரீதியாக என காதலர்களை இரண்டு வகையாக வகைப்படுத்தலாம்…
முதல் காரணம் பற்றி பேச தேவையேயில்லை….
மனரீதியாக ஒன்றி நான் என் துணையை காதல் மூலம் பெற்றெடுத்தேன் என்று சொல்பவர்களை பகுத்தாய்ந்து பார்த்தோமேயானால்
  1. பாசம் அதிகம் கிடைக்கப் பெற்றவர்களும்
  2. பாசத்தை துளி கூட கிடைக்கப் பெறாதவர்களும்
  3. ஒற்றை குழந்தையாக பிறந்தவர்களும்
  4. தனிமை விரும்பிகளும்          – என
நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம். இதில் காதலர்கள் எந்தப் பிரிவை சார்ந்தவர்கள் என்றாலும் பாதிக்கப்படுவது பெற்றோர்கள் மட்டுமே….
பெற்றோர்கள் தன் சொந்த குழந்தையை எத்தனை சிறப்பாக வளர்த்து இருந்தாலும்; உலகில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் கொடுத்து வளர்த்து இருந்தாலும்; தங்கள் தகுதிகேற்ப, சில இடங்களில் தங்கள் சுய தகுதியையும் மீறி படிக்க வைத்து சீராட்டி, பாராட்டி தூக்கி கொண்டாடி அக மகிழ்ந்து இருந்தாலும் தங்கள் குழந்தை காதல் வயப்பட்டு இருக்கின்றது என்கின்ற விஷயம் தெரிய வரும்போதே அவர்கள் 10 முறை சுடுகாட்டில் பிணமாக எரிக்கப்பட்ட உணர்வை அடைந்து விடுகிறார்கள். சில இடங்களில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறியும், பல இடங்களில் பெற்றோர்களின் அனுமதியுடனும் காதல் திருமணங்கள் நடைபெற்றாலும் இரண்டு தரப்பு பெற்றோர்களும் 100 முறை மரித்து, மறைந்து போய் இருந்தும் இல்லாத வாழ்க்கையை தலையில்லாத முண்டம் வாழ்வது போல் வாழ்ந்து கடைசியாக உடல் ரீதியாக மறைகிறார்கள் என்பது தான் எதார்த்த உண்மை….
ஒரே ஜாதியாக இருந்தாலும், வெவ்வேறு ஜாதியாக இருந்தாலும், வெவ்வேறு இனம், மதம் சார்ந்தவர்களாக இருந்தாலும் பெற்றோர்கள் நமக்காக படப்போகும் கஷ்டத்தை காதலை துவங்குவதற்கு முன் ஒவ்வொரு காதலர்களும் நினைத்து பார்க்க வேண்டும்…
என்னை பொறுத்தவரை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒரு நிமிடமாவது
காதலிக்கப்படாத பெண்களும் இல்லை…..
காதலிக்கப்படாத ஆண்களும் இல்லை…..
யாரும் எந்தக் காலத்திலும் இந்த விதிக்கு விதிவிலக்காக இருந்து இருக்க முடியவே முடியாது. பெரும்பாலோனர் வாழ்க்கையில் அது சில முறை அல்லது பல முறை வந்து போய் இருக்கலாம். என் வாழ்க்கையிலும் சில பெண்கள் திருமணத்திற்கு முன்பும், பின்பும் வந்ததுண்டு…. அந்த வகையில் என் சொந்த அனுபவத்தில் சில கருத்துக்கள் உங்கள் எல்லோர் பார்வைக்கும்:-
  1. பெற்றோர் பார்த்து வைக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் தள்ளுதலும், கொள்ளுதலும் தான் வாழ்க்கை என்பதை தான். இவ்வகை திருமணங்கள் நடைபெறும் போது பெற்றோர்கள் மனரீதியாக சந்தோஷமாக இருப்பார்கள் என்பதால் அந்த சந்தோஷமே இளம் கணவன், மனைவி – க்கு அடுத்த கட்டத்தை காண்பிக்கும். இருந்தாலும்  இதுபோன்ற திருமணங்களில் கணவர் சரியில்லாததால் தான் மாமியார் – மருமகள் சண்டை, ஸ்டவ் வெடிப்பு, விவாகரத்து, துர்மரணம், தனித்து வாழ்வு, மனகஷ்டம் என்பவை ஏற்படுகின்றது எனபது முக்கியமாக கவனத்தில் நிறுத்த வேண்டிய விஷயமாகும். ஒரு கணவனின் எதிர்பார்ப்பு உடல் ரீதியாக, மனரீதியாக பூர்த்தியாகாமல் போகின்ற போதும், அதிகமான அல்லது குறைவான எதிர்பார்ப்பும் தான் பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில் பல தோல்வி அடைவதற்கு காரணமாகும்.
பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் :–
பெற்றோர்களால் ஜாதகம், சாதி, மதம் பார்த்து நடத்தக் கூடிய திருமணங்கள் நிறைய விவகாரம் ஆகி விவகாரத்தில் முடிவடைகின்றதே என என்னிடம் கேட்டால் கடுமையான யுத்த பூமியில் யுத்தங்களுக்கு நடுவே யுத்தத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்கள் மடிவது எப்படி இயற்கையோ அதுபோல் பெரிய விஷயத்தை பற்றி பேசும்போது சிறிய சங்கடங்களை ஊதி பெரிது பண்ணாமல் தவிர்ப்போம்.
  1. பெற்றோர்கள் பார்த்து சொல்பவரை திருமணம் செய்யாமல் தங்கள் துணையை தாங்களே தேர்ந்தெடுக்க கூடிய காதலர்களுக்கு நான் சொல்ல விரும்புவது:-
உங்கள் முடிவு 100% சரியானதாக இருக்கலாம். உங்களுக்கு 200% மகழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கலாம். உங்களுக்கு அருமையான பிள்ளைகள்  பிறக்கலாம். ஊர் மெச்சக் கூடிய அளவிற்கு பணமும், புகழும் கிடைக்கலாம். இராமபிரான் போன்ற கணவனோ, சீதா பிராட்டியார் போன்ற மனைவியோ கிடைக்கலாம். இது போன்ற இணை இவ்வுலகில் பார்க்க முடியாது – “Made for each other” Wills cigarette விளம்பரம் போல ஜோடி என ஒட்டுமொத்த உலகமே பாராட்டலாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்.
உங்கள் சந்தோஷமானது உங்கள் பெற்றோர்களை உயிருடன் மண்ணில் புதைத்த சமாதி மேல் தான் தொடங்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும். காதல் திருமணம் செய்தவர்கள் காதலித்தவர்களை விட தத்தமது பெற்றோர்களை எப்போதும் நன்கு பார்த்து கொள்ளுவது அவசியம். பெற்றோர்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேளுங்கள். அடிவயிற்றில் இருந்து கேட்கக் கூடிய மன்னிப்பாக அது இருக்க வேண்டும்.
உங்கள் ஜோடிக்கு எத்தனையோ பாராட்டுகள் கிடைத்தாலும், உங்கள் பெற்றோர்களே அதை கண்டு புளகாங்கிதப்பட்டாலும் ஓரத்தில் – நெஞ்சு ஓரத்தில், ஒரு இம்மியளவிற்கு ஒரு துளி கஷ்டமிருக்கும் அவர்களுக்கு கண்டிப்பாக….
அவர்களின் அந்த ஒரு துளி கஷ்டம் அதுபோல் ஓராயிரம் மடங்கு கஷ்டத்தை நமக்கு நிகழ்காலத்திலும், பிற்காலத்திலும் ஏதோ ஒரு வகையில் கொடுக்கவல்லது – அவர்கள் அதற்கு பிரியப்படாவிட்டாலும் கூட…..
நம் வாழ்க்கை முறையில் பெற்றோர், உற்றார், உறவினர்கள் இல்லாத யார் வேண்டுமானாலும் காதல் திருமணம் செய்து கொள்ளலாம். யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் எல்லா சொந்தங்களும் அமையப் பெற்றவர்களின் காதல் திருமணங்கள் நல்ல முடிவாக இருக்கவும் முடியாது. நல்ல செயலாக கருதவும் முடியாது.
இந்த இடத்தில் பெற்ற தாயை கொன்றால் கூட பிராயசித்தம் உண்டு… செய்நன்றி கொன்றவர்களுக்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் மன்னிப்பும் கிடையாது; பிராயசித்தமும் கிடையாது என்று இராமர் சொல்லியதாக நான் படித்த விஷயத்தை பெற்றோரிடம் நன்றி மறந்த ஒவ்வொரு காதலர்களுக்கும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
அதேபோல் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தங்கள் திருமணத்திற்கு பிறகு ஒரே ஒரு முறை தங்கள் மனைவியை அடித்து இருந்தால் கூட அந்தத் திருமணம் தோல்வி திருமணம் தான் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொண்டு காதல் மனைவியை நன்கு பார்த்துக் கொள்ளவும்.
  1. என்னை போன்று காதல் செய்து அப்பா / அம்மாவிற்கு என பரிதாபப்பட்டு, குடும்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி பெற்றோர் பார்த்த வரனை திருமணம் செய்பவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது:-
பெற்றோரை ஏமாற்றுவதை விட கொடிய பாவம் காதலித்தவர்களை ஏமாற்றுவது தான்….
இதற்கு என்ன தண்டனை என்பது தீர்மானிக்கவே முடியாத ஒன்று. உலகில் உள்ள அத்தனை கஷ்டங்களையும் ஒரே சமயத்தில், ஒருங்கே அனுபவித்தால் கூட ஒருவர் மற்றொருவருக்கு செய்த நம்பிக்கை துரோகித்திற்கு சரியான தண்டனையாக இருக்க முடியாது என்பதே என் கருத்து.
இந்த இடத்தில் பெற்றோரை ஏமாற்றும் காதலர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதையும் காதலர்கள் காதலுக்கு பின் ஒருவரை ஒருவர் ஏமாற்றி விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் போது அந்த ஏமாற்றிய நபரின் குற்றத்திற்கு தண்டனையே இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதையும் காதல் திருமணம் செய்தபிறகு மனைவியை துன்புறுத்துபவருக்கு, மனைவியை நிர்கதியாக ஆக்குபவருக்கு, தன்னை நம்பி வந்த பெண்ணை நிர்மூலமாக்குபவனுக்கு உலகம் இருக்கும்வரை திரும்ப, திரும்ப மனிதனாக பிறந்து துன்பப்பட வேண்டியது இருக்கும் என்பதையும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
காதல் தோல்வியும் வேண்டாம்
காதல் வெற்றியும் வேண்டாம்
மொத்தத்தில் காதலே வேண்டாம் என்பது என் கருத்து.
  1. என்னை போன்று உண்மையான காதலியை ஏமாற்றியவர்களுக்கு:-
உண்மையான காதலை தோற்கடித்து ஏமாற்றியவர்கள் தயவு செய்து  நீங்கள் எவ்வளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்தாலும் ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களால் ஏமாற்றப்பட்டவர் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனையாவது செய்யுங்கள் அல்லது ஒரு நாளில் ஒரு முறையாவது உங்களால் ஏமாற்றப்பட்டவரை நினைவுக்கு எடுத்து வர பழகுங்கள்.
என் காதலியை நான் பார்த்த போது என் காதலி அணிந்திருந்த உடையின் நிறமானது எனக்கு பிடித்த, எனக்கு பிடிக்கும் என்று அவளுக்கு மட்டும் தெரிந்த, எனக்கு பிடித்ததால் அவளுக்கும் ரொம்ப, ரொம்ப பிடித்து போன இராமர் நீலத்தில் தான்.
அந்த ஞாபகத்தில் என்னுடைய எல்லா நல்ல தருணங்களிலும், நீல நிற வண்ண சட்டை அணிந்து சந்தோஷப்பட்டு கொள்வேன்…. அப்பாவை காப்பாற்றினோம் என்ற சந்தோஷத்துடன்…..

வாழ்க வளமுடன்
என்றும் கண்ணீருடன்….
ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

வியாழன், பிப்ரவரி 25, 2016

யார் இந்த நீர் மனிதர்கள்?

நம்பர் 1 - ராஜேந்திர சிங்

நம்பர் 1 - மதுர்பாய் சவானிமுகில்
மிழ்நாட்டில் பொழியும் ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் வீணாக்காமல், நமக்கு எப்போதும் பயன்படும்படி சேமித்துவைக்க முடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்? நினைத்துப்பார்க்கவே குளுகுளுவென இருக்கிறதுதானே!
அது  மட்டும் நிகழ்ந்துவிட்டால் காலம்தோறும் கர்நாடகாவின் கருணையையும், ஆந்திராவின் அன்பையும், கேரளாவின் அனுசரணையையும் எதிர்பார்த்துக்கிடக்க வேண்டாம். `என் தண்ணீர் என் உரிமை' என தலை நிமிரலாம். சொல்வதற்குச் சரி. இதெல்லாம் சாத்தியமா? ‘சத்தியமாகச் சாத்தியமே’ என நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள் இருவர். ஒருவர், ராஜேந்திர சிங் - இன்னொருவர், மதுர்பாய். இவர்கள் வெறும் வாயால் குளம் வெட்டவில்லை. தங்களது செயற்கரிய செயல்களால் ராஜஸ்தானையும் குஜராத்தையும் ‘தண்ணி’றைவு பெற்ற பசுமை மாநிலங்களாக மாற்றிக்காட்டியிருக்கிறார்கள்.
யார் இந்த நீர் மனிதர்கள்?
மதுர்பாயின் கதையில் இருந்து தொடங்கலாம்.
1963-ம் ஆண்டில் குஜராத்தின் பவ்நகர் மாவட்டத்தின் கோபலா (Khopala) கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மதுர்பாய் சவானி. குடும்பத்துக்குச் சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருந்தது. மானாவாரி விவசாயத்தை நம்பியே வாழ்க்கை. மழை பொய்த்துப்போனால் அந்த ஆண்டின் வருமானமே காலி. வறுமைசூழ் வாழ்க்கை. சௌராஷ்டிராவின் படேல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள், பிழைப்பு இல்லாத மாதங்களில் சூரத் நகரத்துக்குச் செல்வார்கள். அந்த நகரம் இந்தியாவின் வைரத் தொழில் மையம். அங்கே வைரம் பட்டை தீட்டும் பட்டறைகளில் வேலைக்குச் சேர்வார்கள். சம்பளம் மிக மிகக் குறைவு. இருந்தாலும், அவர்களுக்கு வேறு வழி இல்லை.
ஐந்தாம் வகுப்பு வரைதான் மதுர்பாயால் படிக்க முடிந்தது. பிறகு, வயல் வேலை. பஞ்சம் அடிக்கடி பழிப்பு காட்ட, தன் பதின்வயதில் சூரத்தில் தஞ்சம் அடைந்தார். வைரப் பட்டறையில் வேலை. கடும் உழைப்பைக் கொட்டினாலும் கைக்கு வரும் காசு கம்மி. சாலையோரக் கடைகளில் கிடைக்கும் மலிவு உணவை உண்டுவிட்டு, பிளாட்பாரத்திலேயே படுத்துத் தூங்கும் வாழ்க்கை. வைரத் தொழிலின் நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொண்டு தனியாக வைரப் பட்டறை ஒன்றை ஆரம்பித்தார். துணைக்கு சகோதரர்களைச் சேர்த்துக்கொண்டார். சவானி பிரதர்ஸ் வாழ்க்கை ஜொலிஜொலிக்கத் தொடங்கியது. மதுர்பாய், தனது 40 வயதுக்குள்ளாகவே சூரத்தின் கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தார். இன்றைக்கு இந்தியாவின் முன்னணி வைர வியாபாரிகளில் மதுர்பாயும் ஒருவர். இருக்கட்டும். விஷயம் அது அல்ல.
வைரத்தில் சம்பாதித்தோமா, வளமுடன் வாழ்ந்தோமா என மதுர்பாய் ஒதுங்கிவிடவில்லை. அடிக்கடி தனது கோபலா கிராமத்துக்குச் சென்றுவந்தார். தன் கிராமத்துக்கு தன்னாலான சிறு உதவிகளையும் செய்துவந்தார். 90-களின் மத்தியில் ஊர் மக்களின் தீராத துன்பமாக தண்ணீர்த் தட்டுப்பாடு விஸ்வரூபம் எடுத்தது. கோபலாவில் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சௌராஷ்ட்ராவும் வறண்டு வாடிப்போயிருந்தது. பல ஊர்கள், தண்ணீரைச் சுமந்துவரும் ரயில்களை மட்டுமே நீர் ஆதாரமாக நம்பியிருந்தன. விவசாயம் விக்கித்து நின்றது. ஒரு குடம் நீருக்காக, கோபலா கிராமத்து மக்கள் பல மைல்கள் அலைய வேண்டிய அவலம்.
இது மதுர்பாயின் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. இதற்குத் தீர்வு காண வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆனால், எங்கிருந்து எப்படித் தொடங்குவது என்பது புரியவில்லை. அப்போதுதான் மதுர்பாய்க்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. சௌராஷ்ட்ரா கிராமங்களில் ஒன்றான ராஜ்கோட்டின் ராஜ்சம்தியாலா (Rajsamdhiyala) என்ற ஊரும் தண்ணீர்த்  தட்டுப்பாட்டுடன்தான் இருந்தது. அந்த ஊர் மக்களின் முயற்சியால் நீர் ஆதாரங்கள் பெருகி, இப்போது ஊர் பசுமையாக மாறிவிட்டது என்பதை அறிந்தார். கோபலா மக்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு ராஜ்சம்தியாலாவுக்குச் சென்றார். அங்கே மதுர்பாய் உணர்ந்துகொண்ட பாடம் இதுதான். இந்தியாவில் குறைந்த மழைப்பொழிவுகொண்ட பிரதேசங்களில் சௌராஷ்ட்ராவும் ஒன்று. ஆனால், மழைநீரில் சுமார் 90 சதவிகிதம் கடலில்தான் கலக்கிறது. ராஜ்சம்தியாலா மக்கள், தங்கள் பகுதியில் பொழியும் மழைநீரைச் சேமிக்கும் வழிகளை முறைப்படி ஏற்படுத்தி, பசுமையை மீட்டெடுத்திருக்கிறார்கள்.
உத்வேகத்துடன் கோபலா கிராமத்துக்குத் திரும்பினார் மதுர்பாய். ஊர் மக்களைக் கூட்டினார். ‘தண்ணீர்ப் பிரச்னையை அரசாங்கம்தான் தீர்க்கணும்னு உட்கார்ந்திருந்தா, காலம் முழுக்க இப்படியே தவிச்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். நம்ம பிரச்னையை நாமதான் தீர்த்தாகணும். அதுக்கு என்கிட்ட வழி இருக்கு’ - மதுர்பாய் தம் மக்கள் மத்தியில் புரியும்படி எடுத்துச் சொன்னார். எதைச் செய்தால் தண்ணீர் கிடைக்கும் என்ற தாகத்தில் இருந்த மக்களும் மதுர்பாயின் குரலுக்குச் செவிசாய்த்தனர். ‘மழைநீரைச் சேகரிக்கிறதுக்கு ஏற்ற மாதிரி நம்ம ஊர்ல பல தடுப்பணைகளைக் கட்டணும். அதுக்காக அரசாங்கத்துக்கிட்ட பணம் எதிர்பார்த்துக் காத்திருக்க முடியாது. நமக்கு நாமே பணம் போட்டு தடுப்பணைகளைக் கட்டுவோம்’ என்ற மதுர்பாய், அதற்கான தெளிவான திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தார். 
கோபலா கிராமத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பு 16,000 பிக்ஹா. (Bigha என்பது ஒரு நில அளவை முறை.) ஒரு பிக்ஹாவுக்கு 200 ரூபாய் என்ற அளவில் 32 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. மதுர்பாயும் குறிப்பிட்ட அளவு பணம் போட்டார். மதுர்பாய் போலவே சூரத், மும்பை, பரோடா என்று பல்வேறு நகரங்களில் வளமுடன் வாழ்ந்த கோபலா வியாபாரிகள் பலரும் பணம் போட்டனர். மொத்தமாக சுமார் 2 கோடி நிதி திரட்டப்பட்டது.
மாதக்கணக்கில் ஆராய்ந்து தெளிவாகத் திட்டமிடப்பட்டது. 1998-ம் ஆண்டின் இறுதியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஊர் மக்களே வேலைகளில் ஈடுபட வேண்டும்; யாருக்கும் கூலி கிடையாது; குடும்பத்துக்கு ஒருவர் வேலைக்கு வரவேண்டும்; வரத் தவறினால் 50 ரூபாய் அபராதம்... என விதிமுறைகள் வகுக்கப்பட்டன; கடைப்பிடிக்கப் பட்டன. சுமார் ஆறு மாதங்கள் கோபலா கிராமமே சேர்ந்து உழைத்தது. மதுர்பாயும் களத்தில் இறங்கி உழைத்தார். ஒவ்வொருவரையும் அர்ப்பணிப்புடன் உழைக்க ஊக்குவித்தார். 1999-ம் ஆண்டு கோடையின் இறுதியில் ஊரில் பல இடங்களில் 200 தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தன. சிறியதும் பெரியதுமாக 10 குளங்கள் வெட்டப்பட்டிருந்தன. இந்த நீர்நிலைகளை எல்லாம் இணைக்கும்விதத்தில் சுமார் 58 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால்களும் வெட்டப்பட்டிருந்தன. வியர்வை சிந்திய மக்கள் ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஒருவழியாக அந்தப் பருவத்துக்கான மழை ஆரம்பித்தது. சாரலும் தூறலும் பெருமழையுமாக ஒரு வாரம் பெய்தது. வழக்கத்தைவிடக் குறைவான அளவுதான். ஆனால், அதற்குள்ளாகவே புதிய தடுப்பணைகளில் நீர் ததும்ப ஆரம்பித்தது. குளங்கள் நிறைமாதக் கர்ப்பிணியாகப் பொலிவுபெற்றன. வாய்க்கால்களில் சலசல நீரோட்டம். செத்துப்போன கிணறுகளில் 50 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. ஆழ்துளைக் கிணறுகளும் மறுபிறவி எடுத்தன. கோபலா கிராமத்து மக்கள் தங்கள் ஆனந்தக் கண்ணீரை மழைக்குப் பரிசாகக் கொடுத்தனர். மதுர்பாய், கோபலா விவசாயிகளிடம் தங்கள் வயல்களில் சொட்டுநீர்ப்பாசனத்துக்கான வசதிகளை ஏற்படுத்தச் சொன்னார். அந்த வருடத்தில் குறைவான மழையால் சௌராஷ்ட்ராவின் பெரும்பாலான பகுதிகளில் விவசாயம் பொய்த்துப்போனது. கோபலா விவசாயிகள் மட்டும் பெருவிளைச்சல் கண்டனர். சுமார் ஐந்தரைக் கோடி அளவுக்கு விளைபொருட்களை விற்று நிமிர்ந்தனர்.
மதுர்பாயின் மனதில் குதூகலம். தம் மண்ணுக்கு மீண்டும் உயிர் கொடுத்த திருப்தி. `ஆனால், சௌராஷ்ட்ரா முழுவதுமே நீர் வளமின்றி நிர்கதியாகத்தான் இருக்கிறது. அதற்கு என்ன செய்யலாம்?’ என்ற கவலை அவரை அரிக்க ஆரம்பித்தது. அந்தச் சமயத்தில்தான் மதுர்பாய், ‘தருண் பாரத் சங் (TBS)’ பற்றி கேள்விப்பட்டார். அதன் நிறுவனரும், இந்தியாவின் ‘ஜல் புருஷ்’ (தண்ணீர் மனிதன்) என அழைக்கப்படும் ராஜேந்திர சிங் பற்றியும் தெரிந்துகொண்டார். இங்கே நாமும் தெரிந்துகொள்வோம்.
உ.பி-யைச் சேர்ந்த ராஜேந்திர சிங், ஜமீன் குடும்பத்தில் பிறந்தவர் (1959). ஆயுர்வேதத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ராஜஸ்தானில் பணியாற்றியவர். ஒரு கட்டத்தில் அரசின் நிர்வாகச் சீர்கேடுகளில் மனம் வெறுத்த ராஜேந்திர சிங், `தருண் பாரத் சங்' என்ற அமைப்பில் இணைந்து சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். 1985-ம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அல்வார் மாவட்டத்தின் கோபால்புரா என்ற கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவச் சேவையுடன், கல்வி கற்பிக்கும் வேலையையும் தொடங்கினார். அந்த ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் உச்சத்தில் இருந்தது. ‘இந்த ஊருக்கு இப்போதைய அவசியத் தேவை கல்வி அல்ல; தண்ணீர். நீ நிஜமாகவே ஏதாவது நல்லது செய்ய நினைத்தால் ஊர்க் குளத்தைத் தூர்வாரிக் கொடு’ என்றார் முதியவர் ஒருவர். ராஜேந்திர சிங்கை அந்த வார்த்தைகள் மிகவும் பாதித்தன. `குளத்தைத் தூர்வாரப்போகிறேன். உதவிக்கு வாருங்கள்' என ஊர் மக்களை அழைத்தார். `யாருடா நீ?' என்பதுபோல விநோதமாகப் பார்த்தார்கள். உடன் வந்த நண்பர்களும் விலகிப்போனார்கள்.
ராஜேந்திர சிங், மனம் தளரவில்லை. தனி ஒருவராக மண்வெட்டி, கடப்பாரையுடன் வறண்ட குளத்தில் இறங்கினார். தினமும் குறைந்தது 10 மணி நேரமாவது உழைத்தார். ‘பாவம், பைத்தியம்...’ என ஊர்க்கண்கள் பரிதாபமாகப் பார்த்தன. வாரக்கணக்கில், மாதக்கணக்கில், வருடக்கணக்கில் ராஜேந்திர சிங் சிந்திய வியர்வையால், குளத்தின் பரப்பளவு நீளமும் ஆழமுமாக விரிந்தது. பின்னர் பெய்த மழையில் குளத்தில் நீர் தங்கியது. அருகில் இருந்த கிணறுகளும் உயிர்த்தன. சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. கோபால்புரா மக்களின் மனதில் ராஜேந்திர சிங்கும் உயர்ந்தார். அப்போது வயதானவர்களும் பெண்களும் நோஞ்சான் குழந்தைகளுமே கோபால்புராவில் மிஞ்சியிருந்தனர். பிழைப்புக்காக வெளியூர் சென்றிருந்த ஆண்கள் பலரும், குளம் புத்துயிர் பெற்றதை அறிந்து மீண்டும் ஊருக்குத் திரும்பி வரத் தொடங்கினர். மக்களும் ராஜேந்திர சிங்குடன் கைகோத்தனர்.
கோபால்புராவில் நிகழ்ந்த மாற்றம் அக்கம் பக்கத்துக் கிராமங்களுக்கும் ஜிலுஜிலுவெனப் பரவியது. அவர்களும் வறட்சியை நீக்குவதற்கான புரட்சிக்குத் தயாராக இருந்தார்கள். ராஜேந்திர சிங், அந்த மக்களுக்கு வழிகாட்டினார். அடுத்த ஒரே ஆண்டில் 36 கிராமங்களில் குளங்கள் வெட்டப்பட்டன / தூர் வாரப்பட்டன. அல்வாரில் கொஞ்சம் கொஞ்சமாக பசுமைப் புரட்சி வேரூன்றத் தொடங்கியது. அங்கு இருந்து ராஜஸ்தானின் பிற மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. கிராமம் கிராமமாக பாதயாத்திரை சென்ற ராஜேந்திர சிங், மக்களிடையே மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புஉணர்வைக் கொண்டுவந்தார். அடுத்த கட்டமாக, மக்களின் துணையுடன் பல ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துபோன அர்வாரி நதியை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினார். ஆற்றுப்படுகைகளில் தடுப்பணைகளைக் கட்டுதல், ஆரவல்லி மலையில் சற்றே பெரிய அணை ஒன்றை எழுப்புதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்... என ராஜேந்திர சிங் மக்களுடன் உழைத்தார். அந்த மழைக்காலத்தில், அணையும் தடுப்பணைகளும் தண்ணீரால் தளும்பின. அர்வாரி பழைய பொலிவுடன் மீண்டும் சலசலத்து ஓட ஆரம்பித்தது. அர்வாரியைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? அந்த நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருக்கும் 70 கிராமங்களில் இருந்து, ஊருக்கு 2 பேர் வீதம் தேர்ந்தெடுத்து, 140 பேரைக் கொண்ட அர்வாரி நாடாளுமன்றத்தை அமைத்தார். (இது அங்கீகாரமற்ற அமைப்பு என்றாலும் நதி ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், அதிக நீர் உறிஞ்சுதலை, மரம் வெட்டுதலைத் தடுத்தல் என இன்று வரை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது).
சரிஷ்கா தேசியப் பூங்கா பகுதியில் அமைந்திருந்த ஏராளமான சுரங்கங்கள் அந்தப் பகுதியில் நீர் வளத்துக்குப் பெரும் இடையூறாக இருப்பதை அறிந்தார் ராஜேந்திர சிங். அகிம்சை வழியிலான போராட்டங்கள் மூலமாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலமாகவும், மாஃபியாக்களின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் சுரங்கங்களை மூடவைத்தார். அதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவரவர் கிராமங்களில் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழிவகை செய்தார். ராஜேந்திர சிங்கின் அயராத முயற்சியால் சர்ஷா, பஹானி, ரூபரேல், ஜஹாஜ்வாலி உள்ளிட்ட வறண்டுபோன ராஜஸ்தானின் பல நதிகளும் புத்துயிர் பெற்றன.
ராஜேந்திர சிங், ராஜஸ்தானின் 11 மாவட்டங்களில் சுமார் 4,500 தடுப்பணைகளைக் கட்டியிருக்கிறார். 1,200 கிராமங்களை தண்ணீர்ப் பிரச்னையற்ற பகுதிகளாக மாற்றியிருக்கிறார். இதனால் நிலத்தடி நீரின்றி கறுப்பு மண்டலங் களாக அறிவிக்கப்பட்ட மாநிலத்தின் பல பகுதிகள், நிலத்தடி நீர் மிகுந்த வெள்ளை மண்டலங்களாக உருமாறியிருக்கின்றன. வனப்பகுதி விரிவடைந்திருக்கிறது. விளைச்சல் பல மடங்கு பெருகியிருக்கிறது. மானாவாரி விவசாயத்தை மட்டுமே நம்பிய ராஜஸ்தான் விவசாயிகள், நீர் அதிகம் தேவைப்படும் கரும்பு பயிரிடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றனர். இப்படியாக, சத்தமே இல்லாமல் ராஜஸ்தானில் மாபெரும் தண்ணீர்ப் புரட்சி ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ராஜேந்திர சிங்.
ராஜேந்திர சிங்கை, 1999-ம் ஆண்டில் தேடிச் சென்று சந்தித்தார் மதுர்பாய். அவரிடம் பெற்ற அனுபவத்துடன் குஜராத்துக்குத் திரும்பி `சௌராஷ்ட்ரா ஜல்தாரா டிரஸ்ட்’ (SJT) என்ற அமைப்பை ஆரம்பித்தார். 1999-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மதுர்பாயின் தலைமையில் பலரும் சௌராஷ்ட்ரா கிராமங்களுக்குப் பாதயாத்திரை (325 கி.மீ) மேற்கொண்டனர். ஒவ்வோர் இடத்திலும் கூட்டங்கள் கூட்டி, கிராம மக்களுடன் பேசினர். ‘நமக்கான நீர்த்தேவையை நாமே பூர்த்தி செய்துகொள்ள முடியும். எங்கள் அமைப்பு அதற்கான அத்தனை உதவிகளையும் செய்யும். தேவை உங்கள் ஆதரவும் உழைப்பும் மட்டும்தான்.’ கோபலாவில் சாதித்துக்காட்டிய மதுர்பாய்க்குத் தோள்கொடுக்க ஒவ்வொரு கிராமமுமே தயாராக இருந்தது. கிராம சபை மூலமாக இதற்கான குழு அமைக்கப்பட்டது. மக்கள் கொஞ்சம் பணமும் அதிக உழைப்பும் போட வேண்டும். கட்டுமானத்துக்கான சிமென்ட், பிற பொருள்கள் வழங்குவதை மதுர்பாயின் டிரஸ்ட் பார்த்துக்கொள்ளும். பணிகள் நிறைவேறின. பருவமழையும் பொழிந்தது. அந்தந்தக் கிராமங்களின் குடிநீர்ப் பிரச்னை தீர ஆரம்பித்தது.
1997-ம் ஆண்டிலேயே குஜராத்தின் பல பகுதிகளில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை, மாநில அரசும் கையில் எடுத்திருந்தது. அது முழுமையாகச் செயல் வடிவம் பெறவில்லை. கட்டப்பட்ட தடுப்பணைகள் பலவும் தரமற்றதாக இருந்தன. பலன் இல்லை. அதே சமயத்தில் சௌராஷ்ட்ரா ஜல்தாரா டிரஸ்ட்டின் சீரிய செயல்கள் மாநில அரசின் கவனம் ஈர்த்தன. அப்போதைய குஜராத் முதலமைச்சர் கேசுபாய் படேல், `Sardar Patel Participatory Water Conservation Programme’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதாவது அரசும் மதுர்பாயின் டிரஸ்ட்டும் இணைந்து செயல்படும் திட்டம்.
அதில் மதுர்பாய்க்குப் பல சங்கடங்கள் இருந்தன. காரணம், அரசு கட்டுமானப் பணிக்கு என டெண்டர்களை வரவேற்கும். அமைச்சர், எம்.எல்.ஏ முதல் கடைநிலை ப்யூன் வரை பலருக்கும் லஞ்சம் தந்து யாரோ ஓர் ஒப்பந்ததாரர், பணியைக் கையில் எடுப்பார். அவருக்கு லாபம் வரவேண்டும் எனில், கட்டுமானத்தில் கை வைப்பார். தரமற்ற தடுப்பணைகள் தண்ணீரைத் தடுக்க முடியாமல், பின்னர் கண்ணீரையே வரவழைக்கும். ஒட்டுமொத்தத் திட்டமும் பாழாகும். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படித்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதில் மதுர்பாய் உறுதியாக நின்றார். அரசிடம் அழுத்தமாகப் பேசினார். `டெண்டர், கான்ட்ராக்ட் உள்ளிட்ட நடைமுறைகள் எதுவும் கூடாது. அரசு இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கியிருக்கும் தன் பங்கு பணத்தை கிராம நிர்வாகத்திடம் அளித்துவிட வேண்டும். ஜல்தாரா டிரஸ்ட்டும், ஊர் மக்களும் மீதித் தொகையைப் போட்டு, தங்கள் உழைப்பால், திட்டமிடலால், தங்களுக்குத் தேவையான தரமான கட்டுமானங்களை உருவாக்கிக் கொள்வார்கள்.’
மாநில அரசு அதற்கு ஒப்புக்கொண்டது.
2001-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழ்ந்து மோடி முதலமைச்சரான பின்னரும், மதுர்பாய்க்கும் அவரது செயல்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தார். அடுத்த 10 ஆண்டுகளில் ஜல்தாரா டிரஸ்ட்டின், மக்களின் அர்ப்பணிப்புடன்கூடிய அயராத உழைப்பில் சௌராஷ்ட்ராவின் பெரும்பாலான கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான தடுப்பணைகள், குறைந்த செலவில், நிறைந்த தரத்தில் உருவாக்கப்பட்டன. நீர் சுமந்துவந்த ரயில்கள் ஓய்வெடுக்க ஆரம்பித்தன. விவசாயத்தை விட்டு விலகிய பலரும் மீண்டும் டிராக்டரில் ஏறினர். கோடைகாலத்திலும் நிறைகுடங்கள் சிரித்தன. அடிபம்புகள், எப்போதும் நீர் சுரக்கும் காமதேனுக்களாக மாறின. ஆனால், இவற்றைச் செயல்படுத்துவதில் சங்கடமான சவால்களுக்கும் குறைவில்லை.
சாதிச் சண்டைகளும் பரம்பரைப் பகைகளும் பழிவாங்கும் தீரா வெறியும் கிராமங்களில் அதிகம். அத்தனையையும் தாண்டி, மக்களை ஊரின் நலனுக்காக ஒன்றுகூட்டி ஒரு காரியத்தில் ஈடுபட வைப்பது சவால். தன் பேச்சின் மூலமும், சாதுர்யமான நடவடிக்கைகள் மூலமும் அதனைச் சாத்தியப்படுத்தினார் மதுர்பாய். தேஷரா என்ற கிராமத்துக்குள் நுழைந்து பேச படேல்கள் தயங்கினர். காரணம் அவர்களுக்கும் அந்த ஊரின் தர்பார் ராஜ்புத்களுக்கும் இடையே பல காலப் பகை. அந்தச் சமயத்தில் ராஜேந்திர சிங்கை தர்பார் ராஜ்புத்களிடம் பேச அனுப்பினார் மதுர்பாய். விருந்தினரை உபசரிப்பதில், அவர்களது தேவையை நிறைவேற்றுவதில் அந்த ராஜ்புத்கள் அதிக அக்கறைகாட்டுவர். ஆக, ராஜேந்திர சிங் சென்று கேட்கவும், ஊரின் நலனுக்காக இறங்கிவந்தார்கள். பகையை மறந்து படேல்களுடன் கைகோத்தார்கள். கொலை வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டன. தேஷரா கிராமத்தின் நீர்வளம் பேஷாகப் பெருகியது.
பெண்கள் நகையைக் கழற்றிக்கொடுப்பது, அடிமட்ட மனிதர்கள் தங்கள் வசம் இருக்கும் நூறு, இருநூறைத் தயக்கத்துடன் கொடுப்பது, வயதானவர்களும் ஊருக்காகக் களமிறங்கி உழைப்பது என பல நெகிழ்வூட்டும் சம்பவங்கள். `ஊரின் நீர்வளத்தைப் பெருக்குவது மட்டுமே நம் குறிக்கோள்’ என மதுர்பாய் உருவாக்கிய மனமாற்றம், பிற சண்டை, சச்சரவுகள், ஏற்றத்
தாழ்வுகளை எல்லாம் ஏறக்கட்டி ஏற்றத்தைக் கொடுத்தது.
தற்போது சௌராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் சுமார் 5,600 கிராமங்கள் நீர்வளத்தில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றன. 70-க்கும் மேற்பட்ட நதிகள் பெருகி ஓடுகின்றன. `2000-09-ம் ஆண்டுகள் காலகட்டத்தில் குஜராத்தின் விவசாயப் பரப்பளவு 15 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. விவசாய வருமானம், 18,000 கோடி ரூபாயில் இருந்து 49,000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இன்றைக்கு நிலத்தடி நீர்மட்டம் அதிகமாக உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. குஜராத் மக்கள் மதுர்பாயை தங்களது ‘நீர்க்கடவுள்’போலத்தான் போற்றுகிறார்கள்.

தமிழ்நாட்டின் கவனத்துக்கு!
‘கடவுள் தமிழ்நாட்டுக்கு அதிக நீரைக் கொடுத்துக் கெடுத்துவைத்திருக்கிறார். ஆண்டுக்கு சராசரியாக 1,000 மி.மீ மழை பொழியும் தமிழ்நாடு, குடிநீர்ப் பஞ்சத்தில் சிக்குவது வாடிக்கை. அதில் பாதி அளவே மழை பெறும் பாலைவன ராஜஸ்தானில் தண்ணீர்ப்  பிரச்னை இல்லை. ஏன்? சிந்தியுங்கள்! தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. மழைநீர் சேகரிப்பு அடியோடு இல்லை. மழைநீர் சேகரிப்பு என்ற பெயரில் இங்குள்ள திட்டங்கள் பெயர் அளவுக்கே செயல்படுத்தப்படுகின்றன. அண்டை மாநிலங்களுடன் உள்ள நீர் சிக்கல்களை சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் தீர்த்துக்கொள்வது ஒரு பக்கம். அதற்கு முன்பாக முதலில் உங்கள் மாநிலத்துக்குள்ளேயே கிடைக்கும் தண்ணீர் வளத்தை முறையாக, முழுமையாகச் சேகரிக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள். அதில் மக்களை ஈடுபடுத்துங்கள். அது பெரிய வெற்றியைத் தரும் என்பது ராஜஸ்தான் அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை’  என்பதே ராஜேந்திர சிங் தமிழ்நாட்டுக்கு வழங்கும் அறிவுரை.

தேவை, பெண் குழந்தைகள்!
குஜராத்தில் பெண் குழந்தைகள் விகிதாசாரம் குறைந்துகொண்டே செல்வதை உணர்ந்த மதுர்பாய், அதுகுறித்த விழிப்புஉணர்வுப் பிரசாரத்தையும் மேற்கொள்ள ஆரம்பித்தார். பெண் குழந்தைகள் பிறப்பிலேயே கொல்லப்படுவதைத் தடுப்பது முதல், பெண் குழந்தைகளை நேசித்து வளர்த்தெடுப்பது வரை ஊர் ஊராகச் சென்று பலவிதமான பிரசாரங்களை மேற்கொண்டார். இந்த முயற்சிகளின் காரணமாக குஜராத்தில் 1,000 ஆணுக்கு 770 பெண் என்று இருந்த பாலின விகிதம், தற்போது 870 ஆக உயர்ந்திருக்கிறது!

நீருக்கான நோபல்
ராஜேந்திர சிங்குக்கு 2001-ம் ஆண்டில் ராமன் மகசேசே விருதும், 2005-ம் ஆண்டில் ஜம்னா லால் பஜாஜ் விருதும் வழங்கப்பட்டிருக்கின்றன. 2015-ம் ஆண்டில், `நீர் மேலாண்மைக்கான நோபல் பரிசு’ என அழைக்கப்படும் Stockholm Water Prize-ஐ ஸ்வீடன் அரசு வழங்கியது.
குஜராத் அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள மதுர்பாய்க்கு, 2014-ம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது!