செவ்வாய், டிசம்பர் 17, 2013

மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு

ஓரை
நேரம்ஞாயிறுதிங்கள்செவ்வாய்புதன்வியாழன்வெள்ளிசனி
பகல்
6-7

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்

குரு

சுக்கிரன்

சனி
7-8சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
8-9புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
9-10சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்
10-11சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்
11-12குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்
12-1செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்
1-2சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
2-3சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
3-4புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
4-5சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்
5-6சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்
இரவு
6-7

குரு

சுக்கிரன்

சனி

சூரியன்

சந்திரன்

செவ்வாய்

புதன்
7-8செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்
8-9சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
9-10சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
10-11புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
11-12சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்
12-1சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்
1-2குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்
2-3செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்
3-4சூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குருசுக்கிரன்சனி
4-5சுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்புதன்குரு
5-6புதன்குருசுக்கிரன்சனிசூரியன்சந்திரன்செவ்வாய்
இந்த ஒரைகளில் சந்திரன், புதன், குரு, சுக்கிர ஓரைகள் சுபமானவை. நல்லது செய்ய உகந்தவை. சூரியன், செவ்வாய், சனி ஓரைகள் நல்லவை அல்ல.
சூரிய ஓரை  :         இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழு,பெரியோர்களைஸ் சந்திக்க நல்லது.
சந்திர ஓரை  :       இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.
செவ்வாய் ஓரை  :  எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.
புதன் ஓரை          கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.
குரு ஓரை  :  எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னலே போதுத் உடனே கிடைதிதுவிடும்.
சுக்கிர ஓரை  :        சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும்  நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.
சனி ஓரை  :  எந்தவித சுபகாரிய்ங்களும் செய்யக்கூடாது. புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது. இருப்பினும் நிலபுலங்கள் பற்றி பேசவோ சட்டபூர்வமான விஷயங்களைப்பற்றி முடிவெடுக்கவோ நல்லது.இந்த ஓரையில் காணாமல் போன பொருள் கிடைக்காது.ஒருவேளை இரண்டு மூன்று வருடம் கழித்து எதிர்பாராத விதமாகக் கிடைக்கலாம்.
"பட்சி தெரிந்தவனை பகைகாதே என்பது பொதுமொழி"
பட்சியின் மூல மந்திரமும்,மூலிகைகளும் கிடைக்கும்
ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது
பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.
சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.
சூரியனுக்கு அருகிலேயே சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் உள்ளன. இவற்றில் சூரியனுக்கு மிக அருகில் புதன் இருப்பதாலும், அது காற்று (வாயு) கிரகம் என்பதாலும் (ஓரை வரிசையில்) அதற்கு 2வது இடம் வழங்கினர். இதையடுத்து 3வது இடம் சுக்கிரனுக்கு, 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர். இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது.
வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.
இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இதில் சனி ஓரை ஒரு சில விடயங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.
சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும்.
செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். (Starting a war) வளைகுடா போர் கூட செவ்வாய் ஓரையில்தான் துவங்கப்பட்டது. செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும், அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய் என்பதாலும், வளைகுடாப் போர் நீண்ட காலம் நீடித்தது. இதன் காரணமாக பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் செவ்வாய்தான் காரணம்.
மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.

கோயிலில் வழிபடும் முறை;


----------------------------------------
கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை வழிமுறைகள்..,

*தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

*கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும்.ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம்.

*பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும்.
இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம்.

*விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும்.
தடையின்றி வழிபாடு இனிதே அமைய பிரார்த்திக்க வேண்டும்.

*சிவாலயத்தில் நந்திதேவரையும், பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரையும் தரிசித்து அவர்களிடம் மானசீகமாக அனுமதி பெற்ற பின்னர் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்.

+தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தீபம் ஆகியவற்றில் ஏதோ சிலவற்றைக் கொடுத்து வணங்க வேண்டும்.

+தீபாராதனை காட்டும் போது தீபஜோதியின் நடுவே காட்சிதரும் மூலவர் மீது கண்ணையும், கருத்தையும் செலுத்தி பக்தியோடு ஒன்ற வேண்டும்.

*அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வேண்டும்.

*முருகன்,நடராஜர்,தட்சிணாமூர்த்தி,துர்க்கை,சண்டிகேஸ்வரர்
மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தையும்,
நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.

*கொடிமரத்தின் முன் வடக்கு நோக்கி விழுந்து (தலை வடக்கிருக்கும் படியாக) நமஸ்காரம் செய்ய வேண்டும்.

*வழிபாடு முடிந்ததும் சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்வது மிகுந்த நலமாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

தானங்களால் ஏற்படும் பலன்கள்;


---------------------------------------------
தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு.அதாவது தர்மம் என்பது தனக்கு தெரிந்த விசயங்களை அடுத்தவருக்கு கூறி நல்வழிக்காட்டி அவரை வாழ்வில் உயர்த்துவது தர்மம் ஆகும்.தானம் என்பது தனக்கு தேவைக்கு மீறிய செல்வங்களை இலவசமாக கொடுப்பது.

1.ஆடைகள் தானம்:
ஆயுள் விருத்தியாகும்.புத்திர தோசம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.

2.தேன் தானம்:
புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

3.நெய்தானம்:
பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.

4.தீப தானம்:
இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை,எளியவர்களுக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

5.அரிசிதானம்:
பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது வாழ்வில் நலிந்தவர்களுக்குஅரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உணடாகும்.

6.கம்பளி-பருத்தி தானம்:
வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

புதன், நவம்பர் 20, 2013

நிமித்தம் என்பது என்ன?

நிமித்தம் என்பது என்ன?
---------------------------------
நிமித்தம் என்பது வாழ்வில் பின்நிகழவிருக்கும் நன்மை தீமைகளைச் சில நிகழ்ச்சியின் வாயிலாக உணர்த்துவதாகும்.நிமித்தங்கள் எதிர்கால நிகழ்ச்சிகளை முன் கூட்டியே அறிவிக்கும் அறிகுறியாக மக்களால் தொன்றுதெட்டு இன்றுவரை நம்பப்பட்டு வருகின்றன.

நிமித்தம் என்பதை இயற்கையின் மொழி என்றும் கூறலாம. மனிதன்தான் செய்ய நினைக்கும் செயலின் பால் எதிர்பார்க்கும் முடிவுகளுக்கும் இயற்கையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் ஒருவித தொடர்பு உண்டு.

உலகத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விசயம் ஒன்றும் இல்லை. நடக்கும் காரியங்களும் அப்படியே. சரியான கணக்குத் தெரிந்தால் எல்லாம் தெரிந்து கொள்ளலாம். உலகத்தில் நடப்பவை எல்லாம் ஒரே கணக்காக நடக்கின்றன. அதனால் ஒரு காரியத்தைக் கொண்டு மற்ற எல்லாவற்றையும் கண்டு பிடிக்கலாம். கை ரேகை, ஆரூடம், கிரகநிலை முதலிய எல்லாம் ஒன்றுக்கொன்று சம்பந்தம் உடையனவாகவே இருக்கின்றன. எல்லாம் நிஜம்தான். இவற்றில் ஒன்றே நிமித்தம். அதில் ஒரு அங்கமே சகுனம் ஆகும்.

பொதுவாகவே நிமித்தங்கள் பலனை உருவாக்குவதில்லை.நடக்கபோகும் காரியங்களை மறைமுகமாக உணர்த்துவது ஆகும்.இந்த பூமிபந்தின் அமைப்புபடி நம்முடைய செயல்கள்,எண்ணங்கள்படியே காரியங்களும் நடக்கின்றன.நல்ல நேர்மறை சிந்தனைகளுடன்,எந்த வித தீயநோக்கமும் இல்லாமல் உயன்ர்ந்த எண்ணத்துடன் வாழ்ந்தாலே போதும் நமக்கும் நடக்கும் காரியங்கள் யாவும் இனிதாகவே அமையும் என்பது உண்மையாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.க்கம்

இலங்கை வானொலி தென்றல்

ஒருத்தன் கஸ்ட்டமர் கேர் நம்பருக்கு போனை போட்டான்..ஒரு பொண்ணு தான் போனை எடுத்திச்சு ..
.
.
"ஹலோ..!! வணக்கம் !! என்ன விஷயம் சொல்லுங்க சார்...மே ஐ ஹெல்ப் யூ !!
.
"நன்றி..! உங்களுக்கு கல்யாணம் ஆய்டிச்சா.. ?
.
"வாட் ..!! அத பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லையே ..! எதுக்கு போன் எடுதிங்க்களோ அத பத்தி மட்டும் கேளுங்க..!"
.
"கோவ படாதிங்க மேடம்...! கல்யாணம் ஆய்டிச்சா ?"
.
"இல்லை..!! அதுக்கு என்ன இப்போ?"
.
"இல்லை..!! நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாமா?.."
.
".சாரி..! எனக்கு விருப்பம் இல்லை ..! "
.
"நான் ஒரு ஆப்பர் தரேன் ..என்ன லவ் மேரேஜ் பண்ணா...ஹனிமூனுக்கு சுட்சர்லாந்து போலாம்...அரேஞ்சுடு மேரேஜ் ன்னா பாரிஸ் போலாம்!!
.
"சார்..!! நன் தன இஷ்ட்டமில்லை ன்னு சொல்லிட்டேன்ல ..என்ன ஏன் தொந்தரவு பண்ணுறீங்க..?
.
இப்ப புரிதா !!.. நான் இஷ்ட்டம் இல்லன்னா கூட அந்த ஆப்பர் இருக்கு இந்த ஆப்பர் இருக்கு ன்னு கொடச்சலை குடுப்பீங்கல்ல !!.. அப்ப இப்பிடித்தான் மத்தவங்களுக்கும் இருக்கும்..!

வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு

வானொலி உலகில் விளம்பரத்தின் இருப்பு
"பூக்கடைக்கும் விளம்பரம் தேவை தானே" என்பவர்கள் சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் "ஜோதி ஸ்டோர்ஸ்" புஷ்பக்கடை விளம்பரத்தைக் கைகாட்டுவார்கள். இன்று நேற்றல்ல வானொலி ஊடகம் ஆரம்பித்த காலம் தொட்டே விளம்பரதாரர்கள் இந்த ஒலி ஊடகத்தைப் பயன்படுத்திக் கொண்டார்கள். இன்றைக்குப் பெரும்பாலான வானொலிகளில் முக்கியமான பாடல் நிகழ்ச்சிகளில் கூட விளம்பரத்தின் ஆக்கிரமிப்பில் பாடல்கள் துண்டாடப்படும்.

அகில இந்திய வானொலி நிலையத்தை விட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் விளம்பரத்தின் செல்வாக்கு மிகையாக இருந்ததற்கு முக்கிய காரணியாக இந்த இலங்கை வானொலியில் உருவாக்கப்பட்ட வர்த்தக சேவை எனலாம். பாடல், களியாட்ட நிகழ்ச்சிகளுக்கு பெரும் விளம்பரதாரர்களின் விளம்பரங்களே முதுகெலும்பாய் அமைந்தன. நாடகங்களுக்கும் (குறிப்பாக
தணியாத தாகம்), பாட்டுக்குப் பாட்டுப் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் அனுசரணையாக அமைந்த விளம்பரங்கள் குறித்த நிகழ்ச்சிகள் ரசிகர்களிடையே பெற்ற அபிமானத்துக்கு நிகரான புகழைப் பெற்றன. இவை மூலம் குறித்த வர்த்தக ஸ்தாபனங்களுக்குக் கிடைத்த நன்மதிப்பு பலமடங்காயிற்று என்றால் மிகையாகாது. குறிப்பாக லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு சிறந்ததோர் உதாரணம்.

இந்திய வானொலியில் எஸ்.வி.ரமணன் குரல், இசையமைப்பாளர் கங்கை அமரனின் மனைவியின் சகோதரி (பெயர் நினைவிலில்லை) ஆகியவை எவ்வளவு தூரம் விளம்பரங்களுக்கு எடுப்பாக அமைந்து விட்டன என்பதற்கு நிஜாம் பாக்கு, கோபால் பற்பொடி விளம்பரங்களைச் சுட்டமுடியும். அதே போன்று இந்திய வானொலியில் இரவு நேர விவசாய நிகழ்ச்சி ஒன்றில் இருபது வருஷங்களுக்கு முன்னர் பயன்பட்ட ஒரு பாடல்
"என் அத்தானின் வயல் தனிலே அருவி போல் தண்ணீரு பாயுதே" (பெண் குரல்)
"பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமிது" (ஆண் குரல்)
மேற்குறித்த விளம்பரப் பாடல் இன்று வரை சினிமாப்பாடல்களுக்கு நிகராக என் நினைவில் தங்கியிருப்பதற்கும் குறித்த விளம்பரத்தைத் தயாரித்தவர்களையே சாரும்.

இலங்கை வானொலியை எடுத்துக் கொண்டால் பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசனின் வானொலிப் பங்கில் விளம்பரத்தின் அவர் கையாண்ட புதுமை பதியப்பட வேண்டியது. ஈரடி வெண்பா பாணியில் விளம்பரங்களை உருவாக்கி அதைப் பொருத்தமான ஆண் பெண் குரலில் பாடவைத்துக் குறித்த விளம்பரங்களைப் பாடல்களாய் முணுமுணுக்க வைத்ததற்கு ஓர் உதாரணம் இலங்கை வானொலிச் சரித்திரத்தில் மிகப்பெரும் புகழ் பெற்ற நாடகமான "தணியாத தாகம்" நாடகத்தில் வரும்
"அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே" என்ற பாடல். சில்லையூர் செல்வராசன், எஸ்.கே.பரராஜசிங்கம் போன்ற ஆளுமைகள் தம் செழுமையான இலக்கிய அறிவை வானொலி ஊடகத்துக்குத் தகுந்தாற் போல இவ்வகையை மெல்லிசை விளம்பரப்பாடல்களாக ஆக்கியளித்தார்கள் என்றால் மறுபுறம் அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.ராஜா ஆகியோரின் திறன் சினிமாப்பாடல்களை வைத்து விளம்பர வல்லமை படைத்தது. அதாவது ஏதாவது சினிமாப்பாடலின் முதல் அடியை எடுத்து அதைச் சுவை கலந்த உரையாடலோடு நுட்பமான வகையில் செதுக்கி விளம்பரப்படுத்தி விடுவார்கள். உதாரணமாக என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் பாடிய "தங்கமே தங்கமே" என்ற காதல் பாடல் நகைக்கடை விளம்பரமாகியது. கே.எஸ்.ராஜாவின் தனித்துவமான குரலில் மிளிர்ந்த "திரைவிருந்து"என்ற நிகழ்ச்சி ஒரு விளம்பர நிகழ்ச்சி என்பதையே மறக்கடிக்கச் செய்து சுவாரஸ்யமான வர்த்தக நிகழ்ச்சியானதற்கும் இந்தக் கலைஞனின் திறமையே குறிப்பிடத்தக்கதாகும். முன்பெல்லாம் தியேட்டர்களுக்குச் சென்று படத்தைத் திரையிட்டு முன்வரிசையில் இருந்தவாறே ரேப் ரெக்கோடரில் அதைப் பதிவு செய்து பின்னர் வானொலிக் கலையகத்தில் வந்து முன்னர் பதிவு செய்யப்பட்ட குறித்த திரைப்படத்தின் வசனங்களைத் திரைப்படத்திற்கான விளம்பரத்தோடு இணைத்தார்களாம். முன் சொன்ன அறிவிப்பாளர்களோடு வானொலி விளம்பரத்துறையின் பங்காளிகளாக மயில்வாகனம் சர்வானந்தா, நடராஜசிவம், கமலினி செல்வராஜன் என்று ஒரு பெரும் பட்டியல் நீளும். இலங்கை வானொலியின் விளம்பரங்களின் தோற்றம், அவற்றின் பரிணாணம் இவையெல்லாம் பற்றிப் பேசவேண்டுமென்றால் ஒரு ஆய்வுக்கு ஒப்பானது. இந்தப் பணியை இலங்கை வானொலியின் பொற்காலமாக இருந்து விட்ட எழுபதுகளில் இருந்து எண்பதுகளின் முற்பகுதி வரை பணியாற்றியோர் மட்டுமே ஆழ அகலமாகச் செய்ய முடியும். என் வானொலி கேட்டல் அனுபவங்கள், அவதானிப்புக்கள், வானொலியாளர்களோடு பழகியபோது அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களையே முன் சொன்ன பத்திகளில் நான் குறிப்பிட்டிருக்கின்றேன்.

தமிழ் வானொலிகளின் எண்ணிக்கை பரவலாக உலகெங்கும் வியாபித்த போது விளம்பரங்களின் தேவையும் பன்மடங்காக வளர்ந்துள்ளமை இந்தத் துறையோடு நேரடி அனுபவம் மிக்கவர்களுக்கு மிக நெருக்கமான உண்மை. 1996 ஆம் ஆண்டில் முதல் 24 மணி நேர தமிழ் வானொலியாக கனேடியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆரம்பிக்கின்றது. அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் ஒன்று இரண்டாக வானொலிகள் முளைக்கின்றன. இதற்கு முன்பெல்லாம் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் அல்லது அரைமணி நேரம் மட்டுமே வானொலிச் சேவை புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்திருக்கின்றது. சிங்கப்பூர், மலேசியா விதிவிலக்காக சற்று அதிகப்படியான நேரங்களோடு நாளாந்த சேவையில் ஈடுபட்டிருக்கின்றன. புலம்பெயர்ந்த சூழலில் சிங்கப்பூர், மலேசிய வானொலிகள், பிபிசி தமிழ்சேவை தவிர்ந்த மற்றைய வானொலிகள் ஈழத்தமிழ் சமூகத்தால் உருவாக்கி நடாத்தப்பட்டு வந்தன, வருகின்றன. சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியும் மலேசிய தமிழ் வானொலியும் மெல்ல 24 மணி நேரத்திற்குத் தம் சேவையை விரிவுபடுத்துகின்றன. இலங்கையிலும் தனியார் வானொலிகள் புதிதாக முளைக்கின்றன. சக்தி, சூரியன், சுவர்ணஒலி (இப்போது இல்லை), வெற்றி என்று அவை 24 மணி நேர வானொலிகளாக மாறும் போது அங்கேயும் முதுகெலும்பாய் இருப்பது விளம்பரதாரர்களது சேவை என்பது தவிர்க்கமுடியாதது. வானொலிகளின் வருகையைப் பற்றிய அறிமுகத்தை இங்கே நான் குறிப்பிட்டதற்குப் பின்னால் வர இருக்கும் பத்திகளுக்கான தேவையாக அமைந்திருக்கின்றது. மற்றப்படி தமிழ் வானொலிகளின் தோற்றம் குறித்தும் இன்னொரு விரிவான பதிவு தேவையாக அமைகின்றது.

சிங்கப்பூர் வானொலி போன்ற ஊடகங்களில் அந்த நாட்டில் இருக்கும் பல நூறு தமிழ்வர்த்தக ஸ்தாபனங்களோடு ஒப்பிடும் போது விளம்பரங்கள் என்று பார்த்தால் ஒரு சில நிறுவனங்களே பயன்பட்டால் இருக்கின்றன. அதற்கு வானொலியின் சில கட்டுப்பாடுகள். விளம்பர விதிமுறைகள், கட்டணங்கள் காரணியாக இருக்கலாம். இதற்கு நேர்மாறாக மலேசியாவின் THR ராகா என்ற தனியார் வானொலியில் மணிக்கொரு தடவை 15 நிமிடத்துக்கு மேலாக குறித்த சில வர்த்தக ஸ்தாபனக்களின் சிறப்பு விளம்பரதார் நேரம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த THR ராகா வானொலியில் வரும் விளம்பரங்களில் ஆனந்தாவும் சங்கராவும் இணைந்து நடத்தும் ஶ்ரீ மீனாட்சி நிறுவனத்தின் ஊறுகாய், மசாலாப்பொடி விளம்பர நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்த்து இன்று வரை நான் கேட்டு ரசிக்கின்றேன். அதில் அவர்கள் இருவரும் கற்பனைத் திறனோடு நகைச்சுவை கலந்து உருவாகிய இந்த விளம்பரப்படைப்பின் வெற்றி விளம்பரம் செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் உற்பத்திகள் மலேசியாவில் இருந்து சிட்னிக் கடைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட போது கடல் கடந்த நாட்டில் வாழும் என்னைப் போன்ற நுகர்வோனையும் எட்டியிருக்கின்றது.

அந்த ஒலிப்பதிவுகளை இங்கே தருகின்றேன்

தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட விளம்பரம் பின்னர் வானொலியிலும் ஒலிவடிவில் பயன்படுத்தப்படும் கூத்தும் இருக்கின்றது. குறிப்பாக சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய் என்ற பழைய விளம்பரம் இந்திய வானொலியில் இருந்து உதாரணம் காட்டும் அதே வேளை இன்று சிங்கப்பூர் ஒலி 96.8 வானொலியின் காலை நிகழ்ச்சியான ஆனந்தம் ஆரம்பம் நிகழ்ச்சிக்குப் பயன்படும் "ப்ரூ காபி" விளம்பரமும் இத்தகையதே".

வானொலி ஊடகத்தில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக என் பங்களிப்பும் இருக்கின்ற காரணத்தினால் உள் வீட்டு விவகாரங்கள் சிலவற்றையும் இங்கே சொல்லி வைக்க வேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல்லின வானொலிச் சேவைகள் ஒருபக்கம் (பிபிசி தமிழ் சேவை) இருக்க முழுமையான தனியார் தமிழ் வானொலிகள் என்று அமையும் பட்சத்திலே அங்கே ஒரு சிலரின் முதலீடும் விளம்பரங்களின் அனுசரணையுமே பெரும் தேவையாக அமைகின்றது. அரச அனுசரணையோடு இயங்கும் வானொலிகளில் வர்த்தக விளம்பரங்களுக்கே ஏகப்பட்ட கட்டுப்பாடும் விதிமுறைகளும் உண்டு. குறிப்பாக சில நொடிகள் மட்டுமே இருத்தல் வேண்டும், ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தலாகாது ஆகியவை சில உதாரணங்கள்.
தனியார் வானொலிகளின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் விளம்பரதாரர்களின் தேவையும் அவசியமும் கணிசமான அளவு பங்கை வகிக்கக் காரணம் வானொலி இயங்குவதற்கான உரிமம், இயங்கு கருவிகள், தொழில் நுட்ப மேம்படுத்தல்கள், தொலைபேசிக் கட்டணங்கள் (குறிப்பாக இன்னொரு நாட்டுக்கு அழைத்துப் பேட்டி, செய்திச் சேவையைப் பெறுவதற்காக) இவையெல்லாம் தவிர தமிழில் எந்தெந்தப் படங்கள் நேற்றிலிருந்து இன்று வரை வெளியாகியிருக்கின்றனவோ அவற்றின் பாடல் இசைத்தட்டுக்களை வாங்கி வைத்திருக்கின்ற தேவையும் இருக்கின்றது. நொள்ளை சொள்ளை நல்லது கெட்டது என்றில்லாமல் எல்லாப் படங்களது பாடல் இசைத்தட்டுக்களையும் வாங்கி வைத்திருக்கும் தேவை ஏற்படுகின்றது. என் சிற்றறிவுக்கு எட்டியவரை அவுஸ்திரேலியாவில் இயங்கும் வானொலிகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமே ஊதியமற்ற சேவையை வழங்குகின்றார்கள். மற்றைய எல்லா நாடுகளில் இருக்கும் வானொலிச் சேவையாளர்களுக்கு சேவை நேரத்தைப் பொறுத்து ஊதியமும் வழங்கப்படுகின்றது. இங்கேயும் விளம்பரவருவாயே இதைத் தீர்மானிக்கின்றது.

விளம்பரம் என்று எடுக்கும் போது கூட வானொலியில் அவற்றைப் பல்வேறு வகையினதாகக் கையாளுவார்கள். சமூக அறிவித்தல்கள் என்ற பிரிவின் கீழ் தொண்டு ஸ்தாபனங்கள், பல்வேறு நல அமைப்புக்களின் அறிவித்தல்கள் அடக்கப்பட்டு அவை பிரதான செய்திகளுக்குப் பின் இலவசமாக வாசிக்கப்படும். இவற்றுக்குக் கட்டணம் அறவிடப்படுவதில்லை. மரண அறிவித்தல் போன்றவற்றுக்கு ஒவ்வொரு சொற்களுக்கும் இத்தனை பைசா என்று அறவிடப்படும். (நான் பணியுரியும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மரண அறிவித்தல்களுக்குப் பணம் அறவிடப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கின்றது).

அடுத்தது வர்த்தக விளம்பரங்கள் இவற்றில் குறுகிய கால நோக்கினதான விளம்பரங்களும் , நீண்டகால ஒப்பந்த அடிப்படையிலான விளம்பரங்களும் அடங்கும். குறுகிய கால விளம்பரங்களுக்குச் சிறந்த உதாரணமாக தென்னிந்தியக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள், திரைப்படக் காட்சிகள் அடங்கும். நீண்டகால நோக்கிலான விளம்பரங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆறு மாதம், ஒரு வருஷம் என அமையும். இங்கே சில விபரீதமான செயற்பாடுகளையும் சொல்லி வைக்க வேண்டும். வானொலிகளுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டிகள் காரணமாக ஒரு வானொலி இன்னொரு வானொலியில் விளம்பரம் செய்வதைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தும் மீறினால் இரட்டிப்பான கட்டணம் தரவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படும். குறித்த வானொலி சமூகத்தில் தான் செல்வாக்கானதொரு வானொலியாக ஏற்படுத்தும் பிரமையில் மயங்கிப் பின்னால் போய்விடும் வர்த்தகர்களும் உண்டு. இது ஒருபுறம் இருக்க இன்னொரு வகையான விபரீதம் என்னவென்றால் விளம்பரம் செய்யும் வர்த்தகர்கள் செய்யும் ஏய்ப்பு. புலம்பெயர்ந்த சமூகத்தில் வானொலியைத் தேடி விளம்பரம் செய்ய வேண்டும் என்று வரும் வர்த்தக ஸ்தாபனங்கள் மிகச் சொற்பமே. வானொலிகளே வர்த்தகர்களைத் தேடிப் போய் விளம்பரங்களைப் பெறவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்ற காரணத்தினால் வர்த்தகர்களின் நிபந்தனைகளுக்குள் கட்டுப்படவேண்டிய நிலை உருவாகின்றது. உதாரணமாக விளம்பரத்துக்காக முற்கூட்டியே பணம் தரப்படமாட்டாது, விளம்பரம் செய்தும் எனக்கு வியாபாரம் இல்லையென்றால் பணம் தரமாட்டேன் இப்படியான நிபந்தனைகள் ஒருபுறம் என்றால் இன்னொரு புறம் குறித்த கடை விளம்பரம் ஒரு வருடம் ஓடிக்கொண்டிருக்கின்றதால் 12 வது மாதம் கடையையும் காணோம், கடைக்காரரையும் காணோம் என்ற நிலை பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றது.

புலம்பெயர்ந்த சமூகத்தில் வானொலிகளின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு, அவை சார்ந்த வர்த்தக நிறுவனங்கள் இலங்கை இந்திய தமிழ் வர்த்தக நிறுவனங்கள் என்ற மட்டுப்படுத்தப்பட்ட எல்லையில் இருப்பதால் கடை கடையாகத் தேடிப் போய் எட்டிப் பிடிக்கும் விளம்பரங்களைத் தயாரிப்பதில் எவ்வளவு தூரம் கரிசனை காட்டப்படுகின்றது என்பதற்கு இணையமூலம் வரும் வானொலிகளை நீங்கள் கேட்டாலே நல்ல உதாரணக்களைப் பிடிக்க முடியும். இந்த விஷயத்தில் 24 மணி நேர வானொலிகளின் முன்னோடியான கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்யும் விளம்பரங்களில் ஈழத்தவரின் குணாதிசியங்களை எள்ளல் பாணியில் காட்டிச் செய்யும் நகைச்சுவை கலந்த வர்த்தக விளம்பரங்களின் உருவாக்கம் அலாதியானது. கனேடியத் தமிழ் வானொலியில் இளம் அறிவிப்பாளர்கள் தயாரித்து ஒலிபரப்பாகும் விளம்பரங்களும் சளைத்தவை அல்ல. ஐரோப்பிய வானொலிகளில் ஐபிசி வானொலி போன்ற குறிப்பிட்ட சில ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்களைத் தயாரிப்பதில் முனைப்பு இருக்கின்றது. சிங்கப்பூர் வானொலியில் ஏற்கனவே இந்திய ஊடகங்களில் இடம்பெறும் விளம்பரங்கள் சில மீளப் பெறப்பட்டு ஒலிபரப்பாகக் காரணம் இறக்குமதிச் சந்தை நோக்கிய விளம்பரங்களாக அவை அமைந்து காணப்படுகின்றன. இலங்கையில் தனியார் வானொலிகள் ஒவ்வொன்றுமே போட்டி போட்டுக் கொண்டு அவரவர் பாணியில் தனித்துவமாக விளம்பரங்களைச் செய்கின்றார்கள். புலம்பெயர்ந்த வானொலி ஊடகங்களில் பரவலாக ஒப்பு நோக்கினால் வானொலி விளம்பரங்களைச் செய்ய எடுக்கும் முனைப்பும், கற்பனைத் திறனும் மிகவும் சொற்பமாக அமைந்து அவை அற்பமாக மாறி விடுகின்றன. ஏனோ தானோ என்று ஏண்டா எடுப்பாகச் செய்யப்படும் சில வானொலி விளம்பரங்களைக் கேட்கும் போது வானொலியின் காதைத் திருகத் தோன்றும். விளம்பரம் என்பதே கலை அதுவும் வானொலி விளம்பரம் என்னும் போது அதற்கான ஈர்ப்பு இன்னும் ஒரு படி மேல். எனவே பொருத்தமான வானொலிக் கலைஞர்கள், படைப்பாளிகளை வைத்து இவற்றை உருவாக்கி மெருகேற்றுவது இருக்கும் விளம்பரதாரரை தக்கவைக்கும் என்பது மட்டுமல்ல இனி வரப்போகும் விளம்பரதாரர்களுக்கும் இவற்றினை உதாரணங் காட்டி இழுக்க முடியும் என்பதே உண்மை.

ஒருமுறை இணையமூலம் குறித்த வானொலி ஒன்றைக் கேட்ட போது எனக்குப் பெரும் அதிர்ச்சி. அந்த வானொலி விளம்பரம் இப்படிப் போகின்றது. "போகாதே போகாதே" என்று ஒரு பெண் கூக்குரல் இடுவார். பின்னால் ".....அந்த உணவகத்தைத் தவிர வேறு உணவகம் போகாதே" என்று விளம்பரம் போகும். இங்கே சொல்லப்படும் செய்தி என்னவென்றால் குறித்த இந்திய உணவகம் தவிர வேறு இந்திய உணவகம் போகாதே என்பதே. இப்படியொரு விளம்பரம் செய்து விட்டு அதே வானொலி இன்னொரு இந்திய உணவகத்தைப் பற்றி விளம்பரம் செய்தால் எப்படியானதொரு கேலிக்கூத்தாக அமையும் என்பதை உங்களிடமே விட்டு விடுகின்றேன். குறித்த சில நாட்களுக்குப் பின் அந்த வானொலி விளம்பரம் தூக்கப்பட்டு விட்டது நிச்சயமாக இதே போன்ற ஒரு கண்டனத்தை அவர்கள் பெற்றதன் வெளிப்பாடாகத் தான் சொல்ல வேண்டும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். வானொலி உலகின் காவலனாக இருக்கும் விளம்பரத்தின் தேவையை விளம்பரதாரர்கள் உணர்ந்து ஆதரவுக்கரம் கொடுக்கின்ற அதேவேளை இந்த விளம்பரத்தைச் செம்மையாக்கி ஒரு கலைப்பண்டமாகக் கொடுக்கும் தேவை வானொலிப் படைப்பாளிகளுக்கு உண்டு என்பதை மறத்தலாகாது.

இந்தப் பதிவு முடியும் தறுவாயில் ஒரு விஷயத்தைச் சொல்லி வைக்கின்றேன். ஈழத்தின் படைப்பாளி, பிரபல வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் காவலூர் ராசதுரை அவர்களின் "விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்" என்ற நூல் குறித்த ஒரு பகிர்வை வழங்குவதற்கான அறிமுகமாகத் தான் இந்தப் பதிவின் ஆரம்பப் பகிர்வுகளை வழங்க ஆரம்பித்தேன். ஆனால் மேலே சில விஷயங்களை விலக்காமல் தொடரவேண்டிய தேவை ஏற்பட்டதால் பதிவின் திசை மாறி விட்டது. இருப்பினும் காவலூர் ராசதுரை அவர்களின் "விளம்பரத்துறை - தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம்" என்ற நூல் குறித்த என் பகிர்வை அடுத்த பதிவில் தருகின்றேன்.

ஆகாசவாணி எங்கள் வீட்டு மகாலட்சுமி

ஆகாசவாணி எங்கள் வீட்டு மகாலட்சுமி
(தமிழர்கள் இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகளில் லயித்திருக்க தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக வானொலிகளைத் தேடியது வியப்புதான்.கானா பிரபா வின் எழுத்துகளில்)

கடந்த மே மாசம் யாழ்ப்பாணத்துக்குப் போயிருந்த போதும் இதே கூத்து தான். காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு வீட்டில் இருக்கும் சுவாமி அறைக்குப் போனால், ஏற்கனவே விடிகாலையில் எழுந்து காலைக்கடன்களை எல்லாம் முடித்து விட்டு யோகர் சுவாமிகளின் நற்சிந்தனைப் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு ராகம் சேர்த்து பாடுகின்றார் அப்பா. என்னைக் கண்டதும் வாயில் பாடலை முணுமுணுத்துக் கொண்டே கையால் சைகை செய்து தன்னருகில் வரவழைத்துவிட்டு திருநீற்றுச் சட்டியில் தன் ஐந்து விரல்களையும் அழுத்தி ஒற்றிவிட்டு என் நெற்றியில் ஒரு இழுப்பு இழுத்து விட்டு முதுகைத் தடவிப் போகச் சொல்கிறார் மீண்டும் சைகை மூலம். காலை ஆறரை மணிப் பூசைக்கு மடத்துவாசல் பிள்ளையார் கோயிலுக்குப் போய் விட்டு என் ஆஸ்தான வாகனம் லுமாலா சைக்கிளில் திரும்புகிறேன். வீட்டு முகப்பை அண்மித்ததுமே ஏழு கட்டை தாண்டி ஒலிக்குமாற்போல எங்கள் வீட்டில் இருந்து வெளிக்கிளம்புகிறது வானொலி வழியாகப் பாய்ந்து வரும் ஆகாச வாணி. என் நினைவு தெரிந்த நாள் முதல் எங்கள் வீட்டில் பெண் பிள்ளை இல்லாத குறைக்கு நிறைவாக ஆகாச வாணி காலையில் தொடங்கி விடுவாள் தன் கச்சேரியை வைக்க.

எங்கள் வீட்டில் மட்டுமல்ல அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான குடும்பத்தலைவர்களின் விருப்பத் தேர்வாக இருந்தது ஆகாசவாணி தான். "திருச்சீல விடு திருச்சீல விடு எண்டோண்ணை அவன் றேடியோவுக்குள்ளை திரிச்சீலையை (விளக்கு எரிக்கப்பயன்படும் துணி) விட்டுட்டான்" என்று அந்தக்கால அங்கதம் ஒன்று புழங்கியிருக்கிறது. "இந்தியா என்ன சொல்லுது" என்றவாறே திருச்சி வானொலி, திருநெல்வேலி வானொலி நிலையம் சென்னை வானொலி நிலையமெனத் தாவுவார்கள். என்னைப் பொறுத்தவரை தமிழகத்துக்கும் தமிழீழத்துக்குமான உறவுப்பாலங்களில் இலக்கியத்தைக் கடந்து அடிமட்டம் வரை பாய்ந்ததென்றால் வானொலி ஊடகம் தான். தமிழகத்தவருக்கு எவ்வளவு தூரம் றேடியோ சிலோனின் ஆக்கிரமிப்பு இருந்ததோ அவ்வளவுக்கு அவ்வளவு நம் கிராமப்புறங்களில் ஆகாசவாணியின் படையெடுப்பு இருந்தது. நம்முடைய வானொலி அனுபவம் என்பது எண்பத்து மூன்றுக்குப் பின்னால் தான் பிள்ளையார் சுழி போட்டது என்பதால், இலங்கை வானொலியும் அதன் சாயத்தை இழந்து இரண்டும் கெட்டான் அரச ஊதுகுழலாகவும் மாறியதும் மிக முக்கிய காரணங்களில் ஒன்று. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மெல்ல மெல்ல தனியார் பண்பலை வரிசை (FM 99 உள்ளிட்டவை) ஆரம்பிக்க முன்னரேயே இலங்கை வானொலி தன்னை அது நாள் வரை நேசித்தவர்களிடமிருந்து விலகிப் போக ஆரம்பித்து விட்டது.

என் அப்பாவைப் பொறுத்தவரை அவரின் செல்ல மகள் ஆகாசவாணி தான். செய்தி நேரத்தைக் கடந்தும் வானொலி ஒன்றைக் கேட்கிறார் என்றால் கண்ணை மூடிக்கொண்டே அது எந்த வானொலி என்று சொல்லுமளவுக்கு நேசம் கொண்டிருக்கிறார். அது அப்படியே நிலைய வாத்திய இசையோடு தற்காலிக ஓய்வெடுத்துக் கொள்ளும். மதியம் சக்தி எஃப் எம் செய்திகள், சூரியன் எஃ.ப் எம் செய்திகள், என்று மெல்லத் தொட்டுப் பார்த்து விட்டு மீண்டும் ஆகாசவாணிக்கு வந்து விடுவார்.

சென்னை வானொலியில் இரவு ஏழுமணிக்கு வரும் விவசாய நிகழ்ச்சியில் கூட எனக்கு அப்போது ஈர்ப்பிருந்தது. பாமர ஜனங்களுக்குப் புரியும் வகையில் மொட்டைக்கருப்பன் உள்ளிட்ட அரிசி ஜாதிகளையும், பூச்சி கொல்லி மருந்துகளைப் பாவிக்கும் விதத்தையும் குறு நாடங்களாகவும் ஓரங்க வானொலி நாடகங்களாகவும் படைப்பார்கள். எனக்கு எவ்வளவு தூரம் இது உபயோகமாக இருந்தது என்பது ஒருபுறம் இருந்தாலும் தமிழ்நாட்டின் மூலாதாரமான விவசாயப் பெருமக்களுக்கு இந்த நிகழ்ச்சி பெருஞ்சேவை செய்திருக்கும் என்பதை அதன் படைப்பாற்றலை இப்போது அசை போடும்போதும் உணர்கின்றேன்.

"என் அத்தானின் வயலினிலே அருவி போல் தண்ணீரு பாயுதே, பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமே இது".
முதல் அடிகளைப் பெண்குரலும் இரண்டாவது அடியை ஆண்குரலுமாகப் பாடும் சென்னை வானொலியின் விவசாய நிகழ்ச்சியின் விளம்பரப்பாடல் தான் அது. 18 வருடங்கள் கழிந்தும் என் ஞாபகமூலையின் ஓரமாய் ரீங்காரமிடும் பாடலாக இன்றும் இருக்கின்றந்து. இன்றைய கணக்கில் பினலெக்ஸ் பைப்புக்கள் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கின்றதோ என்னவோ தெரியவில்லை, ஆனால் ஆண்டாண்டு கடந்தும் இந்த வர்த்தக விளம்பரம் மட்டும் என் மனசில் பசையாக ஒட்டிக்கொண்டு விட்டது.
என் பள்ளிகூட நாட்களில் காலை பள்ளிக்குப் போக முன் 7.33 இற்கு வரும் தென்கச்சி சுவாமிநாதனின் "இன்று ஒரு தகவல்" கேட்பதற்காக விறுவிறெனக் குளித்து முடித்துச் சீருடை அணிந்து காலை ஆகாரமும் உண்டு காத்திருப்பேன்.சுவாமிநாதனும் வழக்கம் போல் ஒரு அறிவுரை சார்ந்த கதையையும் , நடைமுறை யதார்த்தத்தில் வரும் நகைச்சுவைத் துணுக்கையும் பொருத்தமாக இணைத்துப் படக்கென தன் ஸ்டைலில் நிறுத்தும் போது வானொலியின் வாயை என் கைகள் மூட, கால்கள் ஏஷியா சைக்கில் மேல் தாவிப்போகும்.

சனி, ஞாயிற்றுக்கிழமை என்றால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி வரும் ஏனென்றால் பகலிலும் விசேடமாகப் பாடல் கேட்கலாமே என்பது தான். காலை 9 மணிக்கு புதுச்சேரி வானொலி நிலையத்திற்கு அலைவரிசை பிடித்தால் போதும் திரை கானம் என்ற பெயரில் முத்தான திரையிசைப்பாடல்கள் வந்து விழும். வானொலிப் பெட்டி என் படிப்பு மேசையில் இருக்கும். அதற்கு அருகில் எவ்வளவுக்கெவ்வளவு நெருக்கமாக என் தலையைச் சாய்த்துவைத்திருக்கமுடியுமோ அவ்வளவுக்கு நெருக்கமாக மேசையில் என் தலை கவிழ்ந்திருக்கப் பாடல் கேட்பது என் வழக்கம்.

"உவன் ஒரு இடமும் உலாத்தாமல் வீட்டில இருக்கிறதே போதும்” என்ற நிம்மதியில் குசினிக்குள் (சமையலறை) என் அம்மா.
“புதுச்சேரி வானொலி நிலையம் , திரையிசைப்பாடல்களில் அடுத்துவருவது, ஈரமான ரோஜாவே படத்திலிருந்து இசைஞானி இளையராஜா இசையில் மனோ பாட்டியது" …..என் காதை இன்னும் உன்னிப்பாய்த் தீட்டிக்கொண்டு பாடலைக் கேட்க ஆயத்தமாவேன். மனோ " அதோ மேக ஊர்வலம் " பாடலைப் பாடிக்கொண்டிருக்கச் சரணத்தில் "ஆ" என்ற ஹம்மிங்கை சுனந்தா ஆலாபனை செய்ய, குசினிக்குள் ஈரவிறகோடு போராடும் அம்மா எட்டிவந்து " சோக்கான பாட்டு" என்று சொல்லிவிட்டு மறைவார்.

ஞாயிற்றுக்கிழமை கோயிலடிப்பக்கம் இருந்தாலென்ன, சுதா வீட்டுப்பக்கம் யார்ட் விளையாட்டு விளையாடினால் என்ன அந்த இடத்தை விட்டு என்னை நகர்த்தி என் வீட்டு வானொலிப் பக்கம் வரவைப்பது மாலை 4 மணிக்கு வரும் சென்னை வானொலி நிலைய நேயர் விருப்பம். இந்த நேயர்விருப்பம் நிகழ்ச்சிக்கு அடிக்கடி பாடல் கேட்கும் நேயர் பட்டியல் எனக்கும் பாடமாய் ஆகும் அளவிற்கு வந்த நாட்கள் அவை. எமக்கும் பிடித்த பாடல்களை ஒலிப்பதிவு செய்யவும், திரையில் பார்க்கவும் முடியாத அன்றைய யுத்தகாலத்தில் , இந்த நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையின் கடைகோடியில் இருக்கும் சகோதரனோ, சகோதரியோ நான் விரும்பிக்கேட்க விரும்பிய பாடலைத் தாமும் கேட்க அது ஒலிபரப்பாக, அந்த எதிர்ப்பாராத இன்ப அதிர்ச்சிச் தருணங்கள் வார்த்தைகளால் வடிக்கமுடியாதவை. அடிக்கடி அன்று பாடல் கேட்கும் சென்னை நேயர்கள்
லல்லு, சத்யா, ரேவதி, நீங்கள் இப்போது எங்கிருக்கிறீர்கள்? இன்னும் சென்னையிலா? இன்னும் அந்த உங்கள் விருப்பம் இன்னும் வருகின்றதா? அதில் இன்னும் பாடல் கேட்கின்றீர்களா என்று கேட்க எனக்கு அல்ப ஆசை.

இன்று வரை என்னை இளையராஜாவின் இசைமோகத்திலிருந்து விலகிவிடாமல் பார்த்துக்கொண்டதில் சென்னை வானொலிக்கும் முக்கிய பங்கு பெற்றிருக்கிறது. தேன் கிண்ணம், நேயர்விருப்பம், திரை இசை, திரை கானம் என்று எத்தனையோ த்லைப்பிட்டுப் பாடல் நிகழ்ச்சிகள் வந்தாலும் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர, சில சமயம் அதுவுமில்லாமல் எல்லாமே ராசாவின் ராக ராஜ்ஜியம் தான். மனோஜ் கியானின் இசையில் இணைந்த கைகளில் வரும் " அந்தி நேரத் தென்றல் காற்று, சந்திர போஸின் இசையில் பெண் புத்தி முன் புத்தி படத்தில் வரும் " கொலுசே கொலுசே" பாடல், தேவாவின் இசையில் வைகாசி பொறந்தாச்சு படத்திலிருந்து "சின்னப்பொண்ணுதான்"
போன்ற விதிவிலக்குகள் தவிர, பச்ச மலப்பூவு (கிழக்கு வாசல்), இரண்டும் ஒன்றோடு ( பணக்காரன்), ஈரமான ரோஜாவே படத்தின் அனைத்துப்பாடல்களும், தானா வந்த சந்தனமே (ஊரு விட்டு ஊர் வந்து) என்று ஒவ்வொரு நேயர்விருப்பத்திலும் ராஜா தான் ஹீரோ.

நான் வீட்டில் வானொலி கேட்ட காலத்தை வீதிக்குக் கொண்டுவந்தது திண்டுக்கல் வானொலி நிலையம். 92 ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் யதேச்சையாக வானொலியின் அலைவரிசை முள்ளு விலகியபோது கேட்டது அந்த திண்டுக்கல் வானொலி நிலையப் பண்பலை வரிசையின் பரீட்சார்த்த ஒலிபரப்பு. என் அண்ணன் கொழும்பிலிருந்து கொண்டுவந்து பெட்டிக்குள் வைத்திருந்த வாக்மென்னுக்குள் (Walkemen) என்னிடம் அடைக்கலம் புகுந்த மற்றைய பென்ரோச் வகை பற்றறிகளைப் பொருத்திச் சைக்கிளில் போகும் போதும், சிவலிங்க மாமா வீட்டுத் திண்ணையில் இருந்த மாலைப் பொழுதுகளும் திண்டுக்கல் வானொலி நிலையத்தின் துல்லியமான பரீட்சார்த்த ஒலிபரப்பின் பாடல்களே கதியென்று இருந்தேன். எங்களூரில் வாக்மென்னின் வாசனை பிடிபடாத காலமது. என் பாட்டுக்குப் பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சுப்பையா குஞ்சியப்பு
" உவனுக்கென்ன காதில குறைபாடோ ?" (செவிட்டு மெஷின்?) என்று எட்டிப் பார்த்துப் போவார்.
தேவாவின் இசையில் "சோலையம்மா" படப்பாடல்கள் முழுவதையும் மூச்சுக்கு முன்னூறு தரம் ஒலிபரப்பி என் சாபத்தை வாங்கினாலும், ராஜாவின் இசையில் பாண்டி நாட்டுத் தங்கத்தில் வரும் " உன் மனசில பாட்டுத்தான் இருக்குது" போட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டார்கள் திண்டுக்கல்லுக்காரர்கள்.

இடைக்கிடை வந்து போக்குக் காட்டியும், சீன மற்றும் மற்றைய மொழி அலைவரிசை வகையறாக்குள் சிக்கிப் பாடல் பாதி இரைச்சல் பாதியாக வந்து போன தூத்துக்குடி வானொலி நிகழ்ச்சிகளையும் கேட்டு வளர்ந்த காலம் அது. பாடசாலைகளும் ஒழுங்காக இயங்காமல் , நிலைமை சீர்கெட்ட காலத்தில் வந்த “எங்கிருந்தோ வந்தான்”……. “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேனோ” என்று மனதுக்குள் நன்றி போட வைத்த நண்பர்கள் இந்த வானொலிகள்.

“நிர்மா... நிர்மா வாஷிங் பெளடர் நிர்மா”, “சொட்டு நீலம் டோய்.... ரீகல் சொட்டு நீலம் டோய்”, “அஞ்சால் அலுப்பு மருந்து” இத்தியாதி விளம்பரங்களுக்க்குள் வந்து போகும் வானொலி நிகழ்ச்சிகள். “ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது” என்றவாறே சரோஜ் நாராயணஸ்வாமி வந்து போவார்.

விறுவிறுவெனப் படித்து முடித்து சாப்பாட்டு இடைவேளைக்காக நான் தேர்ந்தெடுப்பது இரவு 8 மணியை. அப்போது தான் ஹிந்தி நிகழ்ச்சிகள் முடிந்து தேன் கிண்ணத்தோடு வரும் "விவித் பாரதியின் வர்த்தக சேவை". புத்தம் புதுப் படங்களின் விளம்பரங்களை அரை நிமிடத்துக்குள்ளோ ஒரு நிமிடத்துக்குள்ளோ இலாவகமாக அடக்கிச் செய்யும் அந்த அறிவிப்பாளர்களின் திறமை வெகுசிறப்பானது. வைகாசி பொறந்தாச்சு பட வெற்றி பல புதிய அறிமுகங்களைத் தமிழ்த்திரைக்குக் கொண்டுவந்ததை விவித் பாரதியைக் கேட்டதன் மூலம் ஊகித்துக்கொண்டேன். ஆத்தா உன் கோவிலிலே, தாயம்மா, வசந்த காலப்பறவை, மதுமதி போன்ற விவித்பாரதியின் பட விளம்பரங்கள் நீளும். அப்போது வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைப் படம் வாரியாக ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைத்தேன் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த பொழுது போக்கு இருந்தது. அன்றைய காலகட்டத்துப் படங்களின் இசையமைப்பாளர்களையும் பாடல்களையும், கூகுள் போன்ற உலாவிகள் துணையின்றி என் ஞாபக ப்ளொப்பியில் இருந்து அவ்வப்போது எடுக்க விவித் பாரதிதான் கைகொடுத்தது. விவித் பாரதியின் வர்த்தகசேவை இன்னும் இருக்கிறதா தெரியவில்லை.

சிறு புல்லாங்குழல் ஓசை நெருடலோடு இலேசான சிரிப்புடன் எஸ்.பி.பி பாடும் “மண்ணில் இந்தக் காதல் இன்றி” என்ற பாதி வரியோடு வசந்த் இன் "கேளடி கண்மணி" பட விளம்பரம் வரும் போது இந்தப் பாடலை நான் முழுமையாகக் கேட்கும் காலம் எப்போது என்று மனசுக்குள் ஏக்கம் வரும்.
அதையும் மீறி, குலவை ஒலியைப் பெண்கள் இசைக்க,
“குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே " என்று சொர்ணலதா பாடவும், ரெட்சன் ஆர்ட் கிரியேஷன்ஸ் இன்
" என் ராசாவின் மனசிலே" என்று சன்னமான குரலில் ஒரு பெண் அறிவிப்பு வந்து இந்தப் பாடலின் மேல் வெறி கொள்ளவைத்தது.

அந்தத் தொண்ணூறாம் ஆண்டு காலப்பகுதியில் வந்த பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் பால்யப் பருவத்தின் காதலியை நினைக்குமாற்போல உள்ளுக்குள் ஒரு புத்துணர்வு வந்து போகும். அந்த நேரம் கடும் யுத்த காலம் ஆரம்பமாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் தேங்காய் எண்ணெய் விளக்கே கதி என்று கிடந்தாலும் வானொலிக்கு மட்டும் பற்றறிகளை வாங்கி வைத்துக் கேட்போம், அதுதான் அப்போது எமக்குக் கிடைத்த ஒரே பொழுது போக்கு அல்லது அதையும் கடந்து எங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய கணங்கள்.

சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் யாராவது சென்னை வானொலி நிலையம் கேட்கிறார்களா என்று கேட்க ஆசை வரும் ஆனால் மனதுக்குள் அடக்கிக் கொள்வேன். இணையத்திலும் அவ்வப்போது நேரடி ஒலிபரப்பு வருகிறதா என்று தட்டிப்பார்ப்பேன்.
இன்றைக்கு சென்னை வானொலி தன் எழுபத்தைந்தாவது ஆண்டை நிறைவு செய்து பவளவிழாக் காணும் போதும் எங்கள் வீட்டில் தொடர்ந்து ஒலிக்கும் அவளின் குரல் இடைவிடாது ஒலிக்க வைக்கும் போது, என் தாயகத்தின் பசுமையான நினைவுகளை வழங்கியதன் நன்றிக்கடனாக உள்ளூர எண்ணி மகிழ்கின்றேன்.

1938-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதி சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் சென்னை வானொலி தொடங்கப்பட்டது. அன்றைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி ஒலிபரப்பு சேவையை தொடங்கி வைத்து உரையாற்றினார்.அதன்பிறகு தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பல்வேறு பல மாற்றங்களைக் கண்டுள்ளது. எழும்பூரில் செயல்பட்ட சென்னை வானொலி 1954-ல் தற்போதைய காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கத்துக்கு எதிரே மாற்றப்பட்டது. 1957 விவிதபாரதி சேவையும், 1968-ல் வர்த்தக ஒலிபரப்பும் தொடங்கப்பட்டது. (செய்தி மேற்கோள்: தினமணி ஜூன் 13, 2013)

அவலாஞ்சி..லக்கடிகேட்


















ஸ்ரீ சாம்ராஜ்ய கௌரி

மதுரை மீனாட்சி அம்மனின் மற்றொறு பெயர் ஸ்ரீ சாம்ராஜ்ய கௌரி ஆகும்.

பதவி இழந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய தலம் இது.

ஒருவர் ஜாதகத்தில் 6வது வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் அவர்களும் சென்று வழிபடலாம்.
வராத்திரி பூஜையின் இரண்டாவது நாள் வீட்டில் விளக்கேற்றி வினாயகரை வழிபட்டு புளியோதரையை நிவேதனமாக வைத்து வழிபட்டால் செய்வினைக் கோளாறுகள் விலகும்.

(பதவி போகவேண்டும் என்று விரும்பினால் தஞ்சைப் பிரகதீஷ்வரர் கோவில் சென்று வாருங்கள்?????)
Photo: மதுரை மீனாட்சி அம்மனின் மற்றொறு பெயர் ஸ்ரீ சாம்ராஜ்ய கௌரி ஆகும்.

              பதவி இழந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய தலம் இது.

             ஒருவர் ஜாதகத்தில் 6வது வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் அவர்களும் சென்று வழிபடலாம்.
             நவராத்திரி பூஜையின் இரண்டாவது நாள் வீட்டில் விளக்கேற்றி வினாயகரை வழிபட்டு புளியோதரையை நிவேதனமாக வைத்து வழிபட்டால் செய்வினைக் கோளாறுகள் விலகும்.

(பதவி போகவேண்டும் என்று விரும்பினால் தஞ்சைப் பிரகதீஷ்வரர் கோவில் சென்று வாருங்கள்?????)

நகைசுவைக்காக மட்டும்

நகைசுவைக்காக மட்டும்

கடவுளை மனிதன் கேட்டான்

"பொண்ணுங்க
எல்லாம் நல்லா இருக்காங்க. ஆனா
பெண்டாட்டிகள் மட்டும் ஏன் இப்படி கொடுமைப்
படுத்துறாங்க?"

கடவுள் சொன்னார், 

"நான்
பொண்ணுங்களை மட்டுதான் படைத்தேன். அவங்களைக்
கட்டிக்கிட்டுப்
பெண்டாட்டியா ஆக்கிக்கிட்டது ஆம்பளைகளான
நீங்கதான்.

இன்னிக்கு குழந்தைகள் தினமாம்!!!!

நேருவுக்கு குழந்தைகளை பிடிக்குமாம்- அதுனால இன்னிக்கு குழந்தைகள் தினமாம்!!!!
வரலாற்றை தப்பாவே இன்னிக்கு வரைக்கும் சொல்லிக்கொடுக்கிறாங்க !!!
எப்படி எல்லாம் ஏமாத்தி இருக்கானுவ!!!!
 
Photo

எனக்கு காதலிக்கத் தெரியவில்லை

சுப்பிரமணி பழனிச்சாமியிடம் சோகமாய் சொன்னான்! வாழ்க்கை கசந்து விட்டது நண்பா! மனைவியை கூட எனக்கு காதலிக்கத் தெரியவில்லை என்றான்.
கடைவீதி போய் பூங்கொத்து வாங்கிக் கொண்டு வீடு போ நண்பா! போனதும் இன்று பகல் முழுதும் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன் சகி! என்று கூறு! வாழ்க்கை இனிக்கும், என்றான் பழனிச்சாமி.
சுப்பிரமணி அப்படியே செய்தான். கதவைத் தட்டினான். மனைவி வெளியே வந்ததும் மண்டி போட்டு நீட்டி வசனம் சொன்னான்.
-அடக்கருமமே! காத்தால இருந்து எனக்கு நேரமே செரியில்லை போல. கண்ணாடி பாத்திரத்தை மதியம் உடைத்து விட்டேன். குழந்தைக்கு வயிற்றுப்போக்கு! துவைக்க ருக்கா வரலை! எங்கம்மாக்கு ஒடம்புக்கு முடியலியாம்! நீ என்னடான்னா குடிச்சுட்டு வந்திருக்கே?!

வட்டப்பாறை அம்மன்

வட்டப்பாறை அம்மன்

சில வருடங்களுக்கு முன் முதன் முறையாக நான் திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு என் மனைவி மக்களுடன் சென்றிருந்தேன். ஆலய தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும்பொழுது பதினொரு மணி இருக்கும். அன்று நன்றாக வெயிலடித்துக்கொண்டிருந்தது.நல்ல தாகமாய் இருந்தது. பக்கத்துக்கடையில் குடிநீர் குப்பி ஒன்றை வாங்கி அதன் மூடியை திறந்து குடிப்பதற்காக எத்தனித்தேன்.பின்னாலிருந்து ஒரு குரல் " எப்பா தம்பி கொஞ்சம் தண்ணீர் கொடப்பா" என்றது.ஒரு வயதான மூதாட்டி பிரசாதம் சாப்பிட்ட கையை கழுவுவதற்க்காக என் கையில் உள்ள தாண்ணீரை கேட்டார்.15 ரூபாய் கொடுத்து வாங்கிய தண்ணீரை கை கழுவ கேட்கிறாரே என்று எனக்குள் கொஞ்சம் தயக்கம். என் மனைவியோ கொடுங்கள் என வற்புறுத்தினாள். நானும் அவரிடம் கொடுத்துவிட்டு திரும்பிப்பார்த்தால் பக்கத்திலே தண்ணீர் தொட்டி இருந்தது. இவர் ஏன் தண்ணீர் தொட்டியை பயன்படுத்தாமல் என்னிடம் தண்ணீர் கேட்டார் என்று புரியவில்லை. அந்த மூதாட்டி நான் கொடுத்த தண்ணீரில் கை கழுவிய பின். முக்கால் வாசி நீரை குடித்துமுடித்து, மிச்சத்தை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்,இந்த செய்கை கொஞ்சம் வினோதமாகப்பட்டது.வீட்டிற்கு வந்த பின் விசயத்தை பக்கத்து வீட்டினருடன் பகிந்துகொண்டபோது,அவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்குள் அமைந்துள்ள வட்டப்பாறை அம்மன் பற்றிய கதையை கூறி வட்டாப்பாறை அம்மன் தான் உங்களிடம் தண்ணீர் கேட்டிருக்கிறாள் என்று கூறினார்கள்.ஆலய தரிசனத்தின்போது வட்டப்பாறை அம்மனை மட்டும் நாங்கள் நின்று வணங்காமல் வந்துவிட்டோம்.மறுமுறை நான் அங்கு சென்றபோது வட்டப்பாறை அம்மனுக்கு பூஜை செய்பவர் எங்களை பிரத்யேகமாக கவனித்தார். தாகம் தேராமல் வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டவளை கிணற்றிற்குள் இறங்கி தண்ணீர் குடிக்குமாறு கூறிவிட்டு அவள் கீழே இறங்கியவுடன் பெரிய பாரங்கல்லை வைத்து கிணறை மூவிட்டதாக அந்த அம்மன் பற்றி ஒரு கதை சொல்லபடுகிறது. அது உண்மையாக இருக்குமோ என தோன்றுகிறது. அந்த ஆலயத்திற்கு சென்று வந்த பின் தான் இந்த கதை எனக்கு சொல்லப்பட்டது.

கண்ணதாசன் கவிதை



கண்ணதாசன் கவிதைகளில் இதுவும் ஒன்று . இந்த மரபுக்கவிதைகளில் நுண் அர்த்தங்களும் ஆழ்பிரதிகளும் இல்லை. நேரடியானவை. இந்தக்கவிதையில் நம் செட்டிநாட்டு மண்ணின் அடையாளம் உள்ளது. கவிஞரின் அபாரமான நகைச்சுவை உணர்ச்சி உள்ளது. அந்த மாமியாரின் மாய்மாலமெல்லாம் சொற்களிலேயே வெளிப்படுகிறது.
கவிமணியின் நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழி மான்மியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு நம் செட்டிநாட்டுக் கவிஞர் கண்ணதாசன் இயற்றியுள்ளார்
மாமியார் மான்மியக் கவிதை இதோ உங்களுக்குகாக . இதில் நம் பழக்க வழக்கம் ,திருமண நடைமுறை ,இயல்பு வாழ்க்கை குறித்தும் காணமுடிகிறது .


நல்லாத்தான் சொன்னாரு...
நாராயணச் செட்டி!

பொல்லாத பெண்ணாக
பொறுக்கி வந்து வச்சாரு

வல்லூறைக் கொண்டு வந்து
வாசலிலே விட்டாரு

கல்லாப் பொறந்ததையும்
கரும்பாம்புக் குட்டியையும்

செல்லாப் பணத்தையும்
செல்ல வைச்சு போனாரு

ஊரெல்லாம் பெண்ணிருக்கு
உட்கார வச்சிருந்தா

தேரெல்லாம் ஓடிவந்து
திருவிழாக் கோலமிடும்.

எட்டுக் கண் விட்டெரிக்க
எந்தம்பி மகளிருக்க

குத்துக் கல்போலே ஒண்ணெ
கூட்டிவந்தோம் வீடுவரை!

ஆறாயிரம் வரைக்கும்
அள்ளி வச்ச சீதனமும்

ஆறு வண்டி சாமானும்
அடுக்கி வைக்க பாத்திரமும்

சொக்க வெள்ளிப் பால்குடமும்
சோதி மின்னும் ரத்தினமும்

பச்சரிசி மூட்டையுடன்
பருப்பு வகை அத்தனையும்

எட்டுக்கல் மூக்குத்தியும்
ஏழு பவன் சங்கிலியும்

கண்டசரம் தோடு
காப்பு வைர மோதிரமும்

கண்டாங்கிப் பட்டுவகை
காசியிலே நெய்த பட்டு

மெத்தையுமே பத்துவகை
விரிச்சு வைக்க கம்பளமும்

தேக்கு மரம் கடைஞ்சு
செஞ்சு வச்ச பீரோவும்

தந்திருப்பான் எங்க தம்பி
தன் மகளை தந்திருந்தா

வந்தாளே காலியம்மா
வாய்க்கரிசி இல்லாமல்

அப்பன் கொடுத்தா சொத்து
ஆறுநாள் தாங்காது

கப்பலிலே வருகுதூணு
கதையா கதைபடிச்சான்

கண்ணா வளத்த பிள்ளை
காலேசிலே படிக்க வைச்சு

மண்ணாளும் ராசாபோல்
வளர்ந்ததடி என்வீட்டில்

பெண்ணா இவ சனியன்
புத்தி கெட்டு போனேனே

தம்பிமக சமைச்சா
சபையெல்லாம் வாசம் வரும்

அள்ளி இலையிலிட்டா
அடுக்கடுக்கா வெள்ளிவரும்

உண்ணவொரு கையெடுத்தா
உள்நாக்கில் நீர்வடியும்

கத்தரிக்காக் கூட்டுவச்சா
கடவுளுக்கே பசியெடுக்கும்

வெண்டைக்கா பச்சடியும்
வெள்ளரிக்கா தக்காளி

கிண்டி விட்ட கீரைக்கும்
கீழிறங்கும் தெய்வமெல்லாம்!

அப்படி சமைப்பாளே
அள்ளியள்ளி வைப்பாளே

அடுப்படிக்கு நான்போக
அவசியமே இல்லாமே

உட்கார்ந்த பாய்வரைக்கும்
ஓடிவந்து வைப்பாளே

இவளும் சமைச்சாளே
எல்லாந் தலையெழுத்து

முருங்கையிலே கீரை
முளையாய் முளைச்சதடி

விடிஞ்சா எந்திரிச்சா
வேறுகாய் இல்லையடி

குப்பையிலே கீரை
கொத்தாய் கிடைச்சதடி

அப்பா இவ எடுத்து
அகப்பையிலே கிண்டி விட்டு

சப்பாத்திக் கள்ளியை போல்
தையல் இலை போட்டு

வச்சாளே! சாமி இந்த
வலுசாரத் தந்தானே

வந்த நாள் தொட்டு
என் மகனைப் பிரிச்சு வைச்சா

எந்த நாள் பாவமோ
இப்ப வந்து சுத்துதடி

தலைக்காணி மந்திரத்தால்
தாயை மறக்க வச்சா

கொலைக்காரி வந்து எங்க
குடும்பம் பிரிச்சுவைச்சா

மலையரசி காளி எங்க
மாரியம்மா கேக்கோணும்

பலகாரம் தின்பதற்கும்
பசியே எடுக்கலைடி

ராசாக் கிளி போலே
நல்ல பிள்ளை பெத்தெடுத்தேன்

பேசாக் கிளியாச்சு
பெண்டாட்டி நினைவாச்சு

ஊசப் பணியாரம்
உளுந்த வடைக்கு ஊசலடி

பாருடாண்ணு சொன்னா
பாக்காம போறாண்டி

கேளுடாண்ணு சொன்னா
கேக்க மனம் இல்லியடி

எப்பவோ நானும்
இது வரைக்கும் வாழ்ந்தாச்சு

கொப்பாக எங்களைய்யா
கொடுத்தத நான் வச்சிருந்தா

இப்பாவி கையாலே
இழிசோறு திங்கணுமா

ஆத்தா கொடுத்தாளே
ஆறு தலைமுறைக்கு

ஐயா கொடுத்தாரே
ஐநூறு பொன் வரைக்கும்

பூமி கொடுத்தாரே
போட்டாக்க பொன் விளைய

சாமி கொடுத்ததுபோல்
தாய் தகப்பன் தந்ததெல்லாம்

பாவி மகன் வாழ
பகுந்து கொடுத்தேனே

நீட்டி படுக்கும்வரை
நிம்மதியா வாழ்ந்தேனா

ஊட்டி வளத்த பிள்ளை
ஒரு வார்த்தை கேட்டானா

எல்லாம் முடிஞ்சதடி
எமன் வந்தால் போதுமடி

பல்லாக்கு தூக்கி
பரிவாரம் தூக்கி வந்து

பச்சை மரம் வெட்டி
பட்ட விறகடுக்கி

வச்ச பின்னே மீண்டும்
வாழ வரப் போறேனா

கொள்ளி வச்சு தலமாட்டில்
குடமுடைக்க வந்த பிள்ளை

பள்ளி வரை என்னை
பாத்து வச்சு காத்தானா

தேவி விசாலாட்சி
தென்மதுரை மீனாட்சி

காவலுக்கு நீதான்
கடைசி வரை வேணுமடி

ஒரு மகளைப் பெத்தேனா
உதவிக்கு வேணுமின்னு

மருமகளை நம்பி நின்னேன்
மகராசி பேயானா

நல்லாத்தான் சொன்னாரே
நாராயணன் செட்டி!

-கவியரசு கண்ணதாசன்
 — with Santharam Sambandhamoorthy.

மருத்துவகுணங்கள் நிறைந்த மல்லிகை

மருத்துவ செய்தி


மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.
மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதில் ஒரு சில அடிப்படை விடயங்களை உங்களுக்குக் கூறுகிறோம். வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும்.

வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும்.

இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.

இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும்.

ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.

மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.

எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.

மல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.

சனி, செப்டம்பர் 14, 2013

ரத்தினாயகாவின் வருகை


நன்றி: இனிய உதயம் இந்த மாத இதழில் 01/09/2013 வெளிவந்துள்ள சிறுகதை ..





          யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்லும் குறுக்குப் பாதையில் தனிமையான சிறுகுன்றின்மீது நானிருந்தேன். எனக்கென்று தோழர்கள் சுருட்டிக் கொள்ளும் கூடாரம் ஒன்றினையும், ஒரு மிஷின்கன்னையும், உணவு சமைக்க இரண்டு மூன்று பாத்திரங்களையும் விட்டுப் போயிருந்தார்கள். இயக்கத்தில் தீவிரமாய் இருந்தபோது சிவந்த நிறத்தில் நான் அணிந்திருந்த சீருடைகள் இரண்டையும் தீயிட்டுக் கொளுத்தி ஆறுமாதம் போலாகிவிட்டது.

கூடாரத்தினுள் தங்கி வாழும் வாழ்க்கை எனக்கு இன்று நேற்றல்ல... ஆறு ஏழு வருடங்களாகவே பழகிப் போயிருந்தது! இப்போது போன்ற தனிமை இதற்குமுன் எனக்குஇருந்ததேயில்லை. வருடக்கணக்காய் கேட்டுக் கொண்டிருந்த வெடிச்சப்தங்களும், அலறல் சப்தங்களும் என் காதுகளை மந்தமடையச் செய்திருந்தன. யாரும் உரக்கப் பேசினால்தான் எனக்கு விளங்கும். ஒருமுறை திடீரென விழுந்த ஒரு "ஷெல்'லில் களத்தில் முப்பது பேர் இறந்துபோனார்கள். ஒரு ஷெல் துண்டு என் தொடையை சிராய்த்துக்கொண்டு பறந்ததில் வலது தொடையில் பெரிய தழும்பு இருக்கிறது. தவிர எனது இடதுகை கோணல்கை! பூஸா தடுப்பு முகாமில் ஆறுமாத காலம் கிடந்தபொழுது சிங்கள அதிகாரி துவக்குச் சோங்காலே அடிச்சு முறித்தான். 

ஆறு வருடங்களுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தை ஆர்மி பிடித்துக்கொண்டு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளைப் போட்டிருந்தது. மாலையில் ஆறு மணிக்குமேல் வீட்டைவிட்டு வீடுகூட செல்லக்கூடாது! ஆர்மிக்காரர்கள் எந்த நேரமும் கையில் தூக்கிப்பிடித்த துவக்குகளோடு வீதியில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் எனக்கு சோலிசுறட்டு ஏதுமில்லை என்றிருந்ததால் எதிர்வீட்டு காஞ்சனாவை லவ் அட்டாக் செய்துகொண்டு சலூன் கடையே கதியாய் கிடந்தேன். யாழ்ப்பாணத்தை ஆர்மி பிடிக்கும் முன்பாகவே என் அண்ணன் காஞ்சனாவை கல்யாணம் செய்து பிரான்சுக்கு கோப்பை கழுவப் போய்விட்டான். காஞ்சனா எனக்கு அண்ணியாகிப் போனாள்.

அண்ணன் எப்படியும் என்னையும் பிரான்சுக்கு கூப்பிட்டுக் கொள்வான் என்று அம்மாநம்பினாள். என்னையும் ஒரு கல்யாணம் செய்துகொள்ளும்படி அம்மா நச்சிக் கொண்டிருந்தாள். அவளுக்கு தூக்கிக்கொஞ்ச பேரனும், பேத்தியும் அட்டன்டைமில் வேணுமாம். இதை கட்டன் ரைட்டாய் சொல்லிப்போட்டாள். நான் இயக்கத்திற்கு ஆள் சேர்த்துக்கொண்டிருந்த தமிழ்மணியோடு ஒட்டிக்கொண்டு கிளம்பி விட்டேன். காஞ்சனாவைத் தவிர யாரையும் என் மனது நேசிக்க மறுத்துவிட்டது! அவள் ஏமாற்றிப் போட்டு போனதால் சிலகாலம் சோகப்பாடல்களைக்கூட பாடிக்கொண்டிருந்தேன். ஆறுமாதம் கழித்து அம்மாவை விசாரித்து ஒரு கடிதம் அனுப்பியிருந்தாள் காஞ்சனா. அதில், இயக்கம் கியக்கமெல்லாம் தலைமுடி பிடுங்கும் வேலை... இயக்கத்திற்கு நீ சீட்டு குடுத்துட்டுவா... உங்க அண்ணன் இங்கொரு வேலை ஏற்பாடு செய்து தருவார், என்று எனக்கும் குறிப்பெழுதி இருந்தாள்.

இயக்கப் பணியில் தீவிரமாய் இருக்கையில் நான் என் குடும்பத்தையே மறந்துபோனேன். 

விடுதலைப் போராட்டத்திற்கு முழுதாக ஒப்புக்கொடுத்து விட்டேன் என்றுதான் சொல்லவேணும். ரத்தம் எந்த நேரமும் அது என் கண்முன் ஆறாய் ஓடிக்கொண்டேதான் இருந்தது! ஆறுமாதம் முன்பாக அப்படி ஒரு காட்சியை பார்ப்பேன் என்று நான் நினைக்கவேயில்லை. புத்த விகாரைக்கு பக்கத்தில் நடந்த கண்ணிவெடி தாக்குதலுக்கு பிற்பாடு ஆர்மிக்காரர்கள் துப்பாக்கி இலக்கு என்றேதுமில்லாமல் சுட்டுத்தள்ளினர். அதை வெறியாட்டம் என்றுதான் சொல்லவேணும். கடை கண்ணிகளை தீயிட்டுவிட்டு சென்றனர். ராணுவத்தினர் ஊரையே தீக்காடாக்கி விட்டுச் சென்றபிறகு நாங்கள் நுழைந்தோம். தெருவில் காயம்பட்டுக் கிடந்த சனங்களை மருத்துவமனைக்குத் தூக்கி ஓடினோம். 

அப்போதுதான் வயிற்றில் துளைக்கப்பட்டு குடல்சரிந்து கிடந்த பெண்ணின் அருகில் ""அம்மா''என்று முகத்தைத் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்த மிலனா பாப்பாவை தூக்கிக் கொண்டேன். அங்கு நிற்கப் பிடிக்காமல் ஆறுவயதுக் குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு ஓடைக் கரைக்கு வந்தேன். ஓடையில் அவள் உடையை துவைத்து, குளிப்பாட்டிய நேரம் நான் சுத்தமாய் மாறிப்போனேன். இயக்கத்தலைவர் என் மன மாற்றத்திற்கு காரணம் எதுவும் கேட்கவில்லை. சிலகாலம் உன் விருப்பப்படி இருந்துகொள் என்று அனுமதி தந்துவிட்டார்.

முயல், அணில், எலி என்று கண்ணுக்கு எதிரே தென்படுவனவற்றை வேட்டையாடினேன். பகுதி நேரத்தில் மிலனாவிற்கு தமிழும் ஆங்கிலமும் கற்றுக்கொடுத்தேன். மிலனா என்னை "டாடி' என்று அழைத்தபோதுதான் இந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வந்துவிட்டதாக உணர்ந்தேன்.

தூரத்தில் புள்ளியாய் மூன்றுபேர் வந்துகொண்டிருப்பதை நான் குன்றிலிருந்து பார்த்தேன். பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சற்று குள்ளமான உருவத்துடன் இருந்தவன் ஒற்றையடிப் பாதையில் முன்னேவர, அவன் பின்னால் சிவப்புச் சீருடை அணிந்த இருவர் வந்து கொண்டிருந்தார்கள். நான் என் இருப்பிடத்திற்குள் நுழைந்து மேல் அங்கியை எடுத்து அணிந்துகொண்டேன். மிலனா எப்போதும் மாலை நேரத்தில் உறங்குவது வழக்கமாகையால் அவள் தூங்கிக் கொண்டுதான் இருந்தாள். இருந்தாலும் இது அவள் எழும் நேரம்தான். ஏற்கெனவே பழக்கமான பாதையில் வருவதுபோன்றே சீக்கிரமே அவர்கள் வந்து விட்டார்கள்.

""எப்படி சவுக்கியம் குணசீலன்?'' கேட்டபடி வந்தவன் பிரபு. ஏழு வருடகாலமாக இயக்கத்தில் இருப்பவன். அவன் கூடவே வந்த இருவரையும் எனக்கு யாரெனத் தெரியவில்லை. பின்புறம் கைகள் கட்டப்பட்டிருந்தவன் தாடையில் ரத்தக்கறை படிந்திருந்தது! மற்றொருவன் இயக்கத்தில் புதிதாய்ச் சேர்ந்த பொடியன் போலும்... பூனை ரோமங்கள் அவன் மூக்கிற்கும் கீழ் எட்டிப் பார்த்திருந்தன. 

""தோழர் பிரபு... உங்கள் வரவு நல்வரவாகுக!'' என்றேன். ஏற்றுக்கொண்டவன்போல் பசும் புற்கள் நிறைந்த தரையில் அமர்ந்தான் பிரபு. கூடவே புதிய இயக்கப் பொடியனும் அமர்ந்து கொண்டான். கூன் விழுந்து மாநிறத்தில் இருந்தவன் என்னையும், அவர்களையும் பார்த்துவிட்டு, நிலம் பார்த்து நின்றுகொண்டான். அவனுக்கு வயது முப்பதிற்கும் மேலே இருக்கும் போலிருந்தது.

""இப்படியான வாழ்வு உங்களுக்கு மகிழ்வளிக்கிறதா தோழர்?'' ஆம் என்று பதில் சொன்னபோது மிலனா ""டாடி'' என்று அழைத்தபடி கண்களைக் கசக்கிக்கொண்டு வந்தாள். அவளை சிறிது நேரம் அமைதியாய் இருக்கும்படி சொன்னேன். இருப்பிடத்திற்குள் சென்றவள் தட்டில் பழங்கள் சில வைத்துக்கொண்டு வந்து அமர்ந்திருந்தவர்கள் முன்பாக வைத்தாள். பிரபு அதற்காக அவளை பாராட்டினான். கூன் விழுந்தவனின் கைக்கட்டுகளை அவிழ்க்கச் செய்தேன் நான். அவனையும் இரண்டு பழங்கள் சாப்பிடச் சொன்னேன். மிலனா அவனுக்கு எடுத்து நீட்ட, எங்காவது கால்முளைத்து பழம் ஓடிவிடுமோ என்ற அவசரத்தில் பிடுங்கி தோலுடனேயே சாப்பிட்டான்.

""யார் இவன்?'' என்று தோழரிடம் விசாரித்தேன்.

""பாசிச அரசு ஏற்படுத்திய கஜபா ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த ராணுவக் கூலிப்படைக்காரன் இவன். எத்தனை அடிபோட்டாலும் ஒரு வார்த்தை பேசவே மாட்டேன் என்கிறான். ஓலம் மட்டுமே பெரிதாய்ப் போடுகிறான்?''

""இவனை எதற்காக இங்கே கொண்டுவந்தீர்கள்?''

""தோழர் ழ இடம் ஒப்படைக்குமாறு கேப்டன் அனுப்பியிருக்கிறார்''

""பின் ஒப்படைக்க வேண்டியதுதானே!''

""எங்களுக்கு இடப்பட்ட வேலை உங்களுடன் முடிகிறது தோழர். அவரிடம் இவனைச் சேர்ப்பது உங்கள் பணி. நீங்கள் மறுத்தாலும் எங்களுடன் இவனை நாங்கள் கூட்டிப் போகப்போவதில்லை. அடுத்த உத்தரவு வரும்வரை இவன் இங்கேயே இருக்கட்டும். கொஞ்சம் ஆபத்தானவன்போல் தோன்றுகிறது. தோழர் கவனமாய் இருங்கள்'' என்று சொல்லி விடைபெற்று அவர்கள் இருவரும் சரிவில் இறங்கிப் போனார்கள். கூனன் நிலத்தின்மீது வைத்த கண் வாங்காமல் குனிந்து நின்றிருந்தான். அவனை அமரும்படி சைகையால் சொன்னேன். கட்டுப்பட்டவன்போல அமர்ந்தவனிடம், ""சாப்பிடுகிறாயா? முயல்கறி'' என்றேன். வேண்டாமெனத் தலையாட்டினான்.

அவர்கள் சொல்லிப்போனதுபோல் ஆபத்தானவன்தானா? என்ற கேள்வி என்னுள் இருந்தது. ""நீ கூலிப்படைக்காரன் தானா?'' என்றேன். "இல்லை' என்று தலையை இருபுறமும் ஆட்டினான்.

""இயக்க ஆட்கள் யாரையாவது கொல்ல முயற்சி செய்தாயா?'' என்றதற்கும் தலையை ஆட்டினான்.

""நீ என்னிடம் பேசவேணும். நான் உன்னைத் துன்புறுத்த மாட்டேன். உன் பெயரைச் சொல்லலாம் நீ!'' என்றேன். என்மீது நம்பிக்கை கொண்டு தொண்டையை கனைத்துக்கொண்டு பேசினான். பெயர் ரத்தினாயகாவாம். கூலிக்கு பனை தறிக்கப் போவதுதான் வேலை என்றான். தமிழ் அரைகுறையாய்ப் பேசினான்.

சூரியன் மறைந்து இருள் கவியத்துவங்கிற்று! மிலனா கூடாரத்தினுள் விளக்கு ஏற்றியிருந்தாள். ரத்தினாயகாவை கூடாரத்தினுள் அழைத்துச் சென்றேன். நாங்கள் உணவு எடுத்துக்கொள்கையில் கூடவே அமர்ந்து சாப்பிட்டான். அவன் சாப்பாட்டு அளவு மிலனாவின்சாப்பாட்டு அளவையே ஒத்திருந்தது. சாப்பிட்ட இலையை அவனாக வெளியே எடுத்துப் போனான். இரவு அவன் உறங்க படுத்துக்கொண்டதும், ""தப்பிப் போகும் எண்ணம் இருந்தால் காலையில் போய்விடு... இரவில் போகாதே'' என்று சொல்லிவிட்டு படுக்கையில் விழுந்தேன்.

நான் தூங்கி விழித்த சமயம் சூரியன் கிளம்பி யிருந்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு இருப்பிடத்தை நோட்டமிட்டேன். மிலனாவும், ரத்தினாயகாவும் இல்லை. மிலனா என்று சப்தமிட்டேன். ""டாடி... ஐ.ஆம் இன் ஹியர்'' வெளியிலிருந்து அவள் குரல் வந்தது. நான் எழுந்து வெளிவந்து பார்க்கையில் கூனன் முதுகில் ஏறி சவாரி செய்து கொண்டிருந்தாள். ""ரத்தினாயகா... மூட்டையை வீட்டுல இறக்கு'' என்றாள். நான் என் உடைகளை அணிந்துகொண்டு, மிலனாவிடம் சீக்கிரம் வந்துவிடுவதாய்க் கூறிவிட்டு அவனைக் கூட்டிக்கொண்டு சரிவில் இறங்கினேன். அவன் மௌனமாகவே வந்தான். அவனிடம் தெரிந்துகொள்ள எனக்கு எதுவுமில்லை.

அரைமணிநேர நடையில் நாங்கள் பிரதான சாலை ஒன்றை அடைந்தோம்.  நான் யோசித்திருந்தபடி அவனிடம் விடைபெறுவதற்கான இடம் இதுதான். ழ ன் இருப்பிடத்திற்குச் செல்லும் பாதையையும், அவரிடம் இவன் நடந்துகொள்ளவேண்டிய முறைகளையும் சொல்லிவிட்டு நான் வந்த வழியில் திரும்பினேன். குறிப்பிட்ட தூரம் வந்து திரும்பிப் பார்த்தபோது அவன் அதே இடத்தில்தான் நின்றுகொண்டிருந்தான்.

மிலனா என்னிடம் ரத்தினாயகா எங்கே? என்று கேட்டு அழத்துவங்கினாள். ""அவன் நம்கூடவா இருக்க வந்தான்? அவனை காணோம்னு அவன் அம்மா தேடுவாங்கதான!'' என்றேன். சிறிது நேரம் அழுதால் சரியாகி விடுவாள் என்று நினைத்து காலை உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். மிலனாவின் அழுகை தொடர்ந்தபடிதான் இருந்தது! விளையாட்டுக் காட்டிய பொம்மை காணாமல் போய்விட்டதுபோல தேம்பி அழுதாள். அழுகை ஓயாதுபோல தோன்றிய சமயத்தில் சட்டென அழுகைக் குரல் நின்று போயிற்று.

""டாடி... ரத்தினாயகா வந்துட்டான்... என்னை விட்டுட்டு எங்க போனே நீ? உப்பு மூட்டை தூக்கு'' என்றாள். நான் முகம் திருப்பி வெளியே பார்த்தேன். ""எனக்கு அங்க போகணும்னு இஷ்டம் இல்ல சார்'' நிலத்தை வெறித்தபடி நின்றிருந்தான் ரத்தினாயகா!

வியாழன், ஏப்ரல் 25, 2013

யார் கலாசார தீவிரவாதி?


20130425_132743.jpg

நமது கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை தடை கோரிய தமிழ்நாட்டு முஸ்ஸீம் அமைப்புகளை பார்த்து"இவர்கள் கலாசார தீவிரவாதிகள்" என்று கூறினார்.ஆனால் இன்று தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் பார்க்கக்கூடிய விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் தொகுப்பாளரான நடிகர் பிரகாஷ்ராஜ் கமலை பார்த்து உங்களுக்கும் கௌதமிக்கும் உள்ள உறவு என்ன என்று கேட்டதற்க்கு நமது உலக நாயகன் அளித்த பதில் ' இவர் எனக்கு மனைவி அல்ல,பார்ட்னர்,அதில் உடலுறவு போன்ற விசயங்களும் உண்டு'என்று கூறியுள்ளார்.
இப்போழுது கூறுங்கள்.இவர் கலாசார தீவிரவாதியா,இல்லை அவர்களா?
மேலும் சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியின் போது ஒரு பத்திரிக்கை நிருபர் அவருடனான பெண்கள் உறவு பற்றி கேட்டதற்க்கு இவர் முகம் சிவந்து அளித்த பதில்"எனது வீட்டு பாத்ரூமை எட்டிப்பார்க்காதீர்கள்,அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை" என்று கூறிய கமலஹாசன் இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இவருக்கு மகள் போல் உள்ள ஒரு பெண் கொடுத்த முத்தத்தை அளவு கடந்த மகிழ்ச்சியில் ஏற்றுக் கொண்டார்,அந்த பெண் இவருக்கு முத்தம் கொடுக்கும்போது அவரது கணவரை வெளியே அனுப்பிவிட்டதாகவும் பீற்றிக்கொண்டனர்.
இப்படிப்பட்ட கலாசார கதாநாயகன் தான் தனது பட பிரச்சினையில் கடனாளியாகிவிடுவோமா என்று பயந்து மற்றவர்களை கலாசார தீவிரவாதி என்றார்.

இந்த மாதிரியான சம்பவங்கள் நமது தமிழ்ப்பெண்கள் மனதில் ஒரு இழிவான இச்சையை ஏற்படுத்திவிடும்.அதனால் கமல் சார்! உங்க வீட்டு பாத்ரூமை எட்டிப்பார்க்காதே என்று சொல்லிவிட்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த வீட்டின் பாத்ரூமையும் எட்டிப்பார்த்து விட்டீர்கள்.

தமிழக மக்களே சிந்தியுங்கள்..அட்லீஸ்ட் நிகழ்ச்சியில் வெளியேறிய முத்தமிட்ட பெண்ணின் கணவனே நீயாவது சிந்தி! ஒருவேளை கமல் போனமாதம் சொன்னதுபோல் வெளிநாட்டில் குடியேறியிருக்கலாமோ?

எங்களைப்போன்றோர்களைப் பொறுத்தவரையில் கமல் ஓர் உலக நாயகன் அல்ல..அவர் ஓர்.........நாயகன்.