வியாழன், ஏப்ரல் 25, 2013

யார் கலாசார தீவிரவாதி?


20130425_132743.jpg

நமது கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை தடை கோரிய தமிழ்நாட்டு முஸ்ஸீம் அமைப்புகளை பார்த்து"இவர்கள் கலாசார தீவிரவாதிகள்" என்று கூறினார்.ஆனால் இன்று தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் பார்க்கக்கூடிய விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் தொகுப்பாளரான நடிகர் பிரகாஷ்ராஜ் கமலை பார்த்து உங்களுக்கும் கௌதமிக்கும் உள்ள உறவு என்ன என்று கேட்டதற்க்கு நமது உலக நாயகன் அளித்த பதில் ' இவர் எனக்கு மனைவி அல்ல,பார்ட்னர்,அதில் உடலுறவு போன்ற விசயங்களும் உண்டு'என்று கூறியுள்ளார்.
இப்போழுது கூறுங்கள்.இவர் கலாசார தீவிரவாதியா,இல்லை அவர்களா?
மேலும் சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியின் போது ஒரு பத்திரிக்கை நிருபர் அவருடனான பெண்கள் உறவு பற்றி கேட்டதற்க்கு இவர் முகம் சிவந்து அளித்த பதில்"எனது வீட்டு பாத்ரூமை எட்டிப்பார்க்காதீர்கள்,அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை" என்று கூறிய கமலஹாசன் இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இவருக்கு மகள் போல் உள்ள ஒரு பெண் கொடுத்த முத்தத்தை அளவு கடந்த மகிழ்ச்சியில் ஏற்றுக் கொண்டார்,அந்த பெண் இவருக்கு முத்தம் கொடுக்கும்போது அவரது கணவரை வெளியே அனுப்பிவிட்டதாகவும் பீற்றிக்கொண்டனர்.
இப்படிப்பட்ட கலாசார கதாநாயகன் தான் தனது பட பிரச்சினையில் கடனாளியாகிவிடுவோமா என்று பயந்து மற்றவர்களை கலாசார தீவிரவாதி என்றார்.

இந்த மாதிரியான சம்பவங்கள் நமது தமிழ்ப்பெண்கள் மனதில் ஒரு இழிவான இச்சையை ஏற்படுத்திவிடும்.அதனால் கமல் சார்! உங்க வீட்டு பாத்ரூமை எட்டிப்பார்க்காதே என்று சொல்லிவிட்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த வீட்டின் பாத்ரூமையும் எட்டிப்பார்த்து விட்டீர்கள்.

தமிழக மக்களே சிந்தியுங்கள்..அட்லீஸ்ட் நிகழ்ச்சியில் வெளியேறிய முத்தமிட்ட பெண்ணின் கணவனே நீயாவது சிந்தி! ஒருவேளை கமல் போனமாதம் சொன்னதுபோல் வெளிநாட்டில் குடியேறியிருக்கலாமோ?

எங்களைப்போன்றோர்களைப் பொறுத்தவரையில் கமல் ஓர் உலக நாயகன் அல்ல..அவர் ஓர்.........நாயகன்.










புதன், ஏப்ரல் 03, 2013

சிம்மம்



(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)

            சிம்ம ராசி அன்பர்களே!

இதுவரை ராசிக்கு 10-ல் இருந்த குரு இப்போது 11-ஆம் இடமான மிதுனத்திற்கு வந்திருக்கிறார்.

பொதுவாகவே குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆகிய இடங்கள்தான் முழு யோகம் தரக்கூடிய சுப ஸ்தானங்கள்.

குருப்பெயர்ச்சியினால் ராஜயோகத்தையும் செல்வாக்கையும் அடையப் போகும் அதிர்ஷ்டசாலிகள் ரிஷப ராசி, சிம்ம ராசி, துலா ராசி, தனுசு ராசி, கும்ப ராசி ஆகிய ஐந்து ராசிக்காரர்கள்தான். அந்த அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவர்.

அது மட்டுமல்ல; 3-ல் ராகுவும் சனியும் நிற்பதும் ஒரு பலம். 3, 6, 11-ஆம் இடங்கள் பாவ கிரகங்களுக்கு யோகம் தரும் இடமாகும். ராகுவையும் சனியையும் குரு பார்ப்பதால்- குருவுக்கும் ராகு, சனிக்கும் சம்பந்தம் ஏற்படுகிறது.

செல்வாக்கு படைத்த கட்சிகள் இரண்டும் தேர்தல் கூட்டணி அமைத்து ஜெயிப்பது மாதிரி.

11-ஆம் இடம் வெற்றி ஸ்தானம்; லாப ஸ்தானம். அங்கு குரு நிற்கிறார். அவருக்கு திரிகோண ஸ்தானத்தில் சனியும் ராகுவும் நின்று குருவின் பார்வையைப் பெறுகிறார்கள். சிம்ம ராசிக்கு 3-ல் தைரிய ஸ்தானத்தில் சனியும் ராகுவும் இருப்பது- உங்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் தரும். 11-ஆம் இடத்தில் உள்ள குரு, சனி- ராகுவைப் பார்ப்பதால், 11-ஆம் இடத்திற்கு ராகு, சனி சம்பந்தம் ஏற்படுவதாக அர்த்தம். அதனால் எங்கும் வெற்றி எதிலும் வெற்றிதான். இந்த வெற்றி- தோல்வி இருக்கிறதே... திறமையை வைத்தோ சாமர்த்தியத்தை வைத்தோ வருவதில்லை. நேரம் காலத்தை வைத்துதான் வெற்றி- தோல்வி ஏற்படும். இன்றைய நாகரிக அரசியல் உலகில் காசு பணம் நிறைய இருப்பவர்களுக்கும் வெற்றி வந்து சேரும். கடந்த எம்.பி தேர்தலில் ஒரு வேட்பாளர் உண்மையில் தோற்றுப் போனாலும், முடிவில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு மந்திரியாகவும் ஆகிவிட்டார். பலகோடி புரண்டதாகப் பேசிக் கொண்டார்கள். இப்படி பல உதாரணங்கள் உண்டு. அதுமட்டுமல்ல; யோகக்காரர் களுக்கு ஆண்டவன் காவல்காரன் என்பது மறுக்கமுடியாத உண்மை. யோகக்காரரோடு சேர்ந்தால் யோகமில்லாதவனுக்கும் யோகம் உண்டாகிவிடும். அதற்கு உதாரணம்- கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆளும் கட்சியையும் எதிர்கட்சியையும் அடிக்கடி விமர்சித்த ஒரு நடிகர் தலைவரே எதிர்கட்சியோடு சேர்ந்து வெற்றிபெற்று, எதிர் கட்சியாய் இருந்தவர்கள் ஆளும் கட்சியாய் மாறவும், நடிகரும் எதிர் கட்சி அந்தஸ்து பெற்றவராகவும் மாறிவிட்டார். பிறகு ஆளும் கட்சிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஊராட்சி தேர்தலில் ஒதுக்கப்பட்டார். ஆக, தெற்கே வீசுகிற காற்று வடக்கேயும் மாறி வீசத்தான் செய்யும். நேரம் காலத்தை மிஞ்சி எதுவுமே இல்லை. அந்த யோகம் யாருக்கும் எப்போதும் சாஸ்வதம் இல்லை.

மிதுன ராசியில் நிற்கும் குரு 5-ஆம் பார்வையாக 3-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 5-ஆம் இடத்தையும்; 9-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 

3-ஆம் இடம் சகோதர- சகாய- தைர்ய- வீர்ய ஸ்தானம்!

சகோதர வகையில் நன்மையும் அனுகூலமும் அடையலாம். "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்' என்று சொன்னமாதிரி, பொது எதிரியைப் போராடி ஜெயிக்க சிலருக்கு பங்காளி துணையும் ஆதரவாக அமையும். உங்களுக்கு தைரியமும் வீரமும் உண்டாகும். இந்தக் காலத்தில் ஒன்று பணபலம் இருக்க வேண்டும். அல்லது படைபலம் இருக்கவேண்டும். கஞ்சி ஊற்ற ஆள் இல்லாவிட்டாலும் கச்சை கட்ட ஆள் இருந்தால் எதிரியோடு மோதி ஜெயிக்க முடியும். இந்த பாலிஸிப்படிதான்- கடந்த தேர்தலில் தொண்டர்கள் இல்லாத வெறும் லட்டர்பேடு கட்சிகள் எல்லாம், வலுவான கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பதவிகளைப் பெற முடிந்தது.

தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் உடன் பிறந்தவர்களினால் தொல்லைகளும் உருவாகும். உடன்பிறப்புகளுக்கு தந்தை ஸ்தானத்தில் நின்று கல்யாணம், காட்சி, தொழில், வேலைவாய்ப்பு வசதிகள் எல்லாம் சொந்தச் செலவு செய்து நிறைவேற்றுவீர்கள். அவர்கள் எல்லா சௌகர்யங்களையும் அடைந்த பிறகு "டாட்டா' காட்டிவிட்டுப் போய் விடுவார்கள். அவர்களுக்கு மனதில் கொஞ்சம் நஞ்சம் பாசம் பயம் இருந்தாலும், அவர்களுக்கு வாழ்க்கைத் துணையாக வந்து வாய்த்த வர்கள் அதைக் கெடுத்து வாய்ப்பூட்டு போட்டு விடுவார்கள்.

நீண்டகாலமாக தடைப்பட்ட திருமணம், புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு யோகம் போன்ற காரியங்கள் யாவும் இனிமேல் கைகூடும். மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை எல்லாம் திருப்தியாக நிறைவேற்ற முடியும். அரசு உத்தியோகத்தில் பெரும்பதவிகள் வகித்து மிகவும் "ஹானஸ்ட்டாக' செயல்பட்டு, குடியிருக்க ஒன்றரை சென்ட் இடம்கூட வாங்க முடியாமல் ஏங்கி கவலைப்படுகிறவர்களுக்கு, இந்த குருப்பெயர்ச்சியில் எப்படியோ ஒருவகையில் அதிர்ஷ்டவசமாக சொந்த வீடு, இடம், பிளாட் அமையும்.

குரு 7-ஆம் பார்வையாக தன் ராசியான தனுசு ராசியைப் பார்க்கிறார். "பாவகாதிபதி பாவகத்தைப் பார்க்க பாவ புஷ்டி' என்பது பலதீபிகை யின் கருத்து. இதுவரை தடைப்பட்ட திருமணம் இனி செயல்படும். மணமானவர்களுக்கு மனைவியால் யோகமும் வருமானமும் வரும். ஏற்கெனவே மனைவி கொண்டுவந்த சீர் சீதனம், நகைகளையெல்லாம் விற்று செலவு செய்தவர்கள், இக்காலம் குருபார்வை பலத்தால் இழந்த பொருள்களை அதிர்ஷ்டவசமாகத் திரும்ப அடைந்து மனைவியையும் மாமனார் வீட்டாரையும் சந்தோஷப்படுத்தலாம். இதுவரை மனைவியின் ஆரோக்கியத்துக்காக ஆயிரக்கணக்கில் செலவுசெய்து நைந்து நொந்து போனவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல்- மனைவிக்கு முழு ஆரோக்கியம் உண்டாகும்.

தசாபுக்திகளை அனுசரித்து ஒருசிலர் வாரிசுக்காக மறுமணம் செய்து கொள்ளும் யோகம் உண்டு. தாரம் இழந்து ஏற்படவும் விதியுண்டு. ஆந்திராவிலும் தமிழகத்திலும் இரண்டு பெரும் அரசியல் வாதிகள், வயதான காலத்தில் யோகத்திற்காக திருமணம் செய்துகொண்டார்கள். அதை பரிகார திருமணம் என்று சொல்லிக் கொண்டார்கள். 

9-ஆம் இடத்தை குரு பார்ப்பதால், பூர்வ புண்ணிய பாக்கியம் நன்மையளிக்கும், உங்களுடைய தெய்வபக்தியும் பிரார்த்தனையும் நீங்கள் செய்த யாகமும் பூஜா பலனும் இதுபோன்ற நல்ல நேரத்தில் பலன்தரும். எதிரிகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றும். பொய் வழக்குகளைப் பொடிப் பொடியாக்கும்.

தர்மமிகு வாழ்வுதனை சூது கவ்வும்; ஆனாலும் முடிவில் தர்மமே வெல்லும்!

28-5-2013 முதல் 26-6-2013 வரை மிருகசீரிடத்தில் குரு சஞ்சாரம்.

மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். சிம்ம ராசிக்கு செவ்வாய் ராஜயோகாதிபதி; 4, 9-க்குடையவர். இக்காலம் உங்களுக்கு ஆரோக்கியம் சிறப்பாக அமையும். பூமி, வீடு, வாகனம் முதலியவற்றில் நன்மைகள் நடக்கும். தாயார், தன்சுகம், கல்வி முதலிய 4-ஆம் பாவம் சம்பந்தப்பட்ட பலன்கள் யாவும் நன்மையாக நடக்கும். 9-ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம். அங்கு கேது நிற்க ராகு பார்ப்பதால், ஆலய வழிபாடு, குலதெய்வ வழிபாடு, தெய்வ ஸ்தல ஆன்மிக யாத்திரைகள் எல்லாம் கைகூடும். தகப்பனார் வகையில் உதவி, பிதுரார்ஜித சொத்துகளினால் நன்மை உண்டாகும்.

26-6-2013 முதல் 28-8-2013 வரை திருவாதிரையில் குரு சஞ்சாரம்.

திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். ராகு 3-ல் நிற்கிறார். குருவின் பார்வையைப் பெறுகிறார். இது உங்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தரும். துணிவோடு செயலாற்றி சாதனைகள் படைப்பீர்கள். திருவாதிரையில் குரு சஞ்சாரம் இரண்டு கட்டமாக ஏற்படும். முதற்கட்டம்: 2013 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை; பிறகு வக்ரகதியாக 26-1-2014 முதல் 13-4-2014 வரை சஞ்சரிப்பார். இக்காலம் வக்ரத்தில் உக்ர பலம் என்பதால் நன்மைகளே நடக்கும். யோகங்களும் சிறப்பாக இருக்கும். கும்பகோணமருகில் திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமாகும். அங்கு சென்று ராகுகால பூஜையில் கலந்து கொள்ளலாம்.  

28-8-2013 முதல் 26-1-2014 வரை (முதல் கட்டம்), அடுத்து 13-4-2014 முதல் 13-6-2014 வரை (இரண்டாம் கட்டம்) புனர்பூசம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம்.

புனர்பூசம் குருவின் நட்சத்திரம். குரு சிம்ம ராசிக்கு 5, 8-க்குடையவர்; 11-ல் இருக்கிறார். 8-ஆம் இடம் 2, 9, 11-க்குடையவரோடு சம்பந்தப்படும்போது அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறும். ஆகவே இக்காலம் உங்களுக்கு எதிர்பாராத லாபங்களும் நன்மைகளும் அதிர்ஷ்டங்களும் வந்துசேரும். குருவருளும் திருவருளும் பரிபூரண மாகக் கிடைக்கும். மேற்படி யோகமும் அதிர்ஷ்டமும் ஏமாற்ற மில்லாமல் வந்தடைய திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோவில் சென்று (அறந்தாங்கி வழி) வழிபட வேண்டும். அங்கு சுவாமிக்கு லிங்கத் திருமேனி இல்லை. வெறும் பீடமாகத்தான் இருக்கும். நால்வரில் மாணிக்க வாசகருக்கு அந்த எல்லையில்தான் சிவபெருமானால் குருந்தமரத்தடியில் குரு உபதேசம் கிடைக்கப் பெற்றது. மூல ஸ்தான ஆத்மநாதர் அருவ நிலையில் உள்ளார். 

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

இக்காலம் ஜாதகரீதியாக யோகமான தசாபுக்திகள் நடந்தால், குருவின் அஸ்தமனம் சில சலனங்களையும் சஞ்சலங்களையும் ஏற்படுத்தலாம். நூலிழையில் வெற்றி வாய்ப்புகள் கை தவறிப் போகலாம். லாட்டரி டிக்கெட்டில் பம்பர் பரிசில் ஒரு நம்பர் வித்தியாசத்தில் ஏமாற்றமடைவதுபோல சில சம்பவங்கள் நடக்கலாம். ஆகவே நிதானமாக- தைரியமாகச் செயல்படவும். குரு தசையோ குரு புக்தியோ நடக்குமானால் சோதனைகளும் வேதனைகளும் அதிகமாக நடக்கும். மயிலாடுதுறையருகில் வள்ளலார் கோவில் என்னும் பகுதியில் உள்ள சிவாலயத்தில் மேதா தட்சிணாமூர்த்தி சந்நிதி இருக்கிறது. நந்திவாகனத்தின்மேல் தட்சிணாமூர்த்தி அமர்ந்திருக்கிறார். வியாழக்கிழமை அங்கு சென்று வழிபடவும்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

இக்காலம் 11-ஆம் இடத்து குரு எல்லா வகையிலும் உங்களுக்கு வெற்றியையும் லாபத்தையும் மேன்மையையும் தருவார். அதனால் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற மாதிரி பெரிய திட்டங்களை எண்ணி செயல்படுத்துங்கள்.

மக நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி குருவருளும் திருவருளும் பரிபூரணமாகத் தரும். மக நட்சத்திரத்தின் அதிதேவதை விநாயகர். (மகம்- கேதுவின் நட்சத்திரம்). கும்பகோணம் மாசி மகக் குளத்தில் நீராடி ஈஸ்வரனையும், சுவாமிமலை போகும் பாதையில் உள்ள திருவலஞ்சுழியில் வெள்ளை வாரணப் பிள்ளையாரையும் வணங்கவும்.

பூர நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி தொழில் வளம், புதிய தொழில் முயற்சி, தனலாபம், கணவன்- மனைவிக்குள் இணக்கம் ஆகிய நன்மைகளைத் தரும். ஆண்களுக்குப் பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் அனுகூலம் உண்டாகும். திருச்சி அருகே ஸ்ரீரங்கம் சென்று வழிபடவும்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி பதவி, பாராட்டு, செல்வாக்கு ஆகிய யோகங்களைத் தரும். சூரியனார் கோவில் சென்று வழிபடவும். (கும்பகோணமருகில் உள்ளது.)

கடகம்



(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

            டக ராசி அன்பர்களே!

இதுவரை கடக ராசிக்கு 11-ல் இருந்த குரு இப்போது 12-ஆம் இடத்துக்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த 11-ஆம் இடம் மிக நல்ல இடம்தான். அதனோடு ஒப்பிடும்போது இப்போது மாறியுள்ள 12-ஆம் இடம் மோசமான இடம்தான். "வன்மையற்றிட இராவணன்முடி பன்னிரண்டினில் வீழ்ந்ததும்' என்பது பாடல். எனவே 12-ல் வந்துள்ள குரு உங்களுக்கு வீழ்ச்சியைத் தருமா? தோல்வியை ஏற்படுத்துமா? துன்பத்தைத் தருமா? துயரத்தைக் கொடுக்குமா? விரயத்தை உண்டாக்குமா என்றெல்லாம் யோசிக்கச் செய்யும். மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் 12-ஆம் இடத்து குரு நல்லது செய்யாது என்றுதான் தோன்றும். ஆனால் தீவிரமாக அலசி ஆராய்ச்சி செய்தால் அதன் ரகசியமும் உண்மையும் புலப்படும்.

குருவுக்கு எப்போதும் நின்ற இடத்துப் பலனைவிட அவர் பார்க்கும் இடத்துக்குத்தான் பலன் அதிகம். அதனால்தான் "குரு பார்க்க கோடி நன்மை' என்றார்கள். கடக ராசிக்கு குரு 6, 9-க்குடையவர். 6-க்குடையவர் 12-ல் மறைவது நன்மை. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் நன்மை. ஆனால் 9-க்குடையவர் 12-ல் மறைவது நல்லதல்ல!

9-க்குடையவர் 12-ல் மறைவதால் பிதுரார்ஜித சொத்துகள் விரயமாகலாம். வில்லங்கப்படலாம். அல்லது தகப்பனார் வகையில் விரயச் செலவுகள் ஏற்படலாம். தகப்பனாருக்கு இடமாற்றம் ஏற்படலாம். தகப்பனார் வகையில்- உடன்பிறந்தோர் வகையில் இழப்புகள், விரயங்கள் ஏற்படலாம். ஒரு அன்பர் தன் முன்னோர்கள் சொத்தை நல்ல லாபத்துக்கு விற்று அதற்கு பதில் வேறு ஒரு சொத்தை வாங்கினார். அப்படி வாங்கிய சொத்து மைனர் சொத்து என்றும்; வாங்கியதும் விற்றதும் செல்லாது என்றும் ஒருவர் கேஸ் போட்டார். பல வருடங்கள் கேஸ் நடந்தது. இதனூடே மைனர் மேஜராகிவிட்டார். அவருக்கு மேலும் கொஞ்சம் தொகையைக்  கொடுத்து அவரிடமும் கிரயப் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டார். சிக்கல் தீர்ந்துவிட்டது. அதுமட்டுமல்ல; அன்று வாங்கிய சொத்தின் மதிப்பும் இரட்டிப்பு மடங்கு விலை ஏறிவிட்டது. இதுதான் 9-க்குடையவர் 12-ல் மறைந்த பலன்.

அதேநேரம் 6-க்குடைய குரு 6-ஆம் இடத்தையே பார்ப்பதால், 6-ஆம் இடம் வலுப்பெற்றது என்று அர்த்தம். மேலும் பாவாதிபதி பாவத்தை பார்ப்பதால் பாவபுஷ்டி என்றும் எடுத்துக்கொள்ளலாம். அதாவது எதிரி, போட்டி, கடன், விவகாரம் எல்லாம் வந்தது என்று அர்த்தம். ஆனால் முடிவில் ஜாதகருக்கு அனுகூலமாகிவிடும்.

இதையும் ஒரு உதாரணத்தோடு சொல்லலாம். ஒரு அன்பருக்கு பிதுரார்ஜித சொத்தில் பங்கு கிடைத்தது. அவர் மைத்துனர் தனது நிதி நிறுவனத்தில் அதை முதலீடு செய்யச் சொன்னார். அதிக வட்டி வருமென்று கூறியதால் அவருடைய பைனான்ஸ் கம்பெனியில் பணத்தை முதலீடு செய்தார். சில காலம் ஒழுங்காக வட்டி வந்தது. ஒரு நிலையில் நிதி நிறுவனத்தில் பிரச்சினை ஏற்பட்டு வட்டியும் வசூலாகவில்லை; அசலும் கிடைக்கவில்லை. தகப்பனார் வகை சொத்தில் கிடைத்த பங்கு மைத்துனர் பைனான்ஸ் கம்பெனியில் இழந்துவிட்டது. 6, 9-க்குடையவர் 12-ல் மறைந்து, 6-க்குடையவர் 6-ஆம் இடத்தையே பார்த்த பலன் இதுதான்!

ஆனால் குரு நின்ற இடத்தைவிட அவர் பார்வைக்குத்தான் பலம் அதிகம் அல்லவா?

அந்த விதிப்படி மிதுன குரு 5-ஆம் பார்வையாக கடக ராசிக்கு 4-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 6-ஆம் இடத்தையும், 9-ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தையும் பார்க்கிறார். இப்படி குரு பார்க்கும் இடங்களில் 4-ஆம் இடத்துப் பார்வை மட்டும் நல்லதாகக் கணக்கிட முடியும். ஆனால் 6, 8-ஆம் இடத்தைப் பார்ப்பது நல்லதல்ல என்றாலும், முதலில் சொன்ன உதாரணப்படி 6-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் ஏற்படும்; வைத்தியச் செலவு வரும்; போட்டி, பொறாமை, எதிர்ப்புகள் உருவாகும். அதனால் ஏற்படும் கவலைகளும் சஞ்சலங்களும் உங்களை டென்ஷன் ஆக்கலாம். 8-ஆம் இடம் என்பது கவலை, சஞ்சலம், ஏமாற்றம் ஆகிய பலனைக் குறிக்கும் இடம்.
விரய ஸ்தானத்தில் நின்று 4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் பூமி, வீடு,  வாகனம் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதற்காக வெளியில் அல்லது வங்கியில் கடன் வாங்கலாம். சிலர் மேற்படிப்பு படிக்கலாம். சுகம் உண்டாகும். தாயின் ஆரோக்கியம் தெளிவடையும். தாய்க்கு பிணி, பீடை நிவர்த்தியாகும். தாயாதி வகையில் நிலவிய பகை வருத்தம் விலகி, உடன்பாடும் ஒற்றுமையும் உண்டாகும். சிலர் எப்போதோ வாங்கிப்போட்ட இடத்தில் இப்போது வீடு கட்டும் முயற்சியில் இறங்கலாம். ஒருசிலர் வாகனப் பரிவர்த்தனை செய்வார்கள். அதாவது பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டு புதிய வாகனம் வாங்கலாம்.

குரு 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் அனுகூலமும் உண்டு; பிரிதிகூலமும் உண்டு. சிலருடைய அனுபவம்- உங்களால் ஆதாயமும் நன்மையும் அடைந்தவர்களே உங்களுக்குப் போட்டியாக மாறி எதிரியாகச் செயல்பட்டு உங்களை வீழ்த்த சூழ்ச்சி பண்ணலாம். ஒரு அன்பர் நண்பர்களையெல்லாம் சேர்த்து ஒரு  டிரஸ்ட் ஏற்படுத்தப் போவதாகச் சொல்லி எல்லாரின் பணத்தை வைத்து ஒரு இடத்தை வாங்கி கோவில் கட்டினார். திருமண மண்டபம் கட்டினார். பற்றாக்குறை பணத்துக்கு- கடன் வாங்கினார். கடைசியில் இடத்தையும் கோவிலையும், திருமண மண்டபத்தையும் தன் பேரிலும் குடும்பத்தில் உள்ளவர்களின் பேரிலும் ரகசியமாக மாற்றிக்கொண்டார். நண்பர்களையெல்லாம் கழற்றி விட்டுவிட்டார். அவர்கள் எல்லாம் பகையாகிவிட்டனர். இப்படி சிலர் தனது சௌகர்யங்களை வளர்த்துக் கொண்டு மற்றவர்கள் பகை, வருத்தத்தை சம்பாதித்துக் கொள்ளலாம். அவர்களால் (எதிரிகளால்) வேதனை, பழிச்சொல், அபகீர்த்திகளைச் சந்திப்பதால் 8-ஆம் இடத்துப்பலனும் நடக்கும்.

ராமபிரான் கடக லக்னம், கடக ராசி. ஏகபத்தினி விரதன். மக்களுக்காகவே தியாகவாழ்வு வாழ்ந்தவர். கட்டிய மனைவியையும் பிரிந்தவர். பெற்ற குழந்தையையும் பிரிந்தவர். அவருக்கும் சோதனை களும் வேதனைகளும் வந்து சூழ்ந்தன. அதைவிட வாலியினாலும், சீதையாலும் பழிச்சொல் சுமந்தார். அது பழிச்சொல்லா? பாவச் செயலா என்றால் இரண்டுமில்லை. கொலைக்குற்றவாளிக்கு மரணதண்டனை தீர்ப்பு சொல்லும் நீதிபதியின் செயல் பாவச் செயலா? அல்லது அந்த மரணதண்டனையை நிறைவேற்றும் தூக்குமேடை ஊழியர் செய்வது பாவச் செயலா? அதுமாதிரி கடக ராசியில் பிறந்தவர்கள் அல்லது கடக லக்னத்தில் பிறந்தவர்களில் இருசாரார்களும் உண்டு. சுயநலம் உள்ளவர்களும் உண்டு; தியாகிகளும் உண்டு. பெரும்பாலும் இந்தத் தன்மை கடகம், சிம்மம் இரண்டு ராசிக்கும் பொருந்தும். ஏனென்றால் இந்த இரண்டு ராசிகளுக்கும்தான் சனி நல்லவராகவும் இருக்கிறார். கெட்டவராகவும் இருக்கிறார். கடகத்துக்கு சனி 7, 8-க்குடையவர். சிம்மத்துக்கு சனி 6, 7-க்குடையவர். அதற்காக சனி கெட்டவர் இல்லை. தர்மவான். கர்மாவின் பலனை அனுபவிக்கச் செய்கிறார். கடகம் என்பது நண்டு எனப்படும். நண்டுக்கு தன் உடம்பைச் சுற்றி கால்கள் உண்டு. மற்ற ஜீவராசிகள் எல்லாம் உடலைத் திருப்பித்தான் நடக்க வேண்டும். நண்டுக்கு மட்டும் நின்ற இடத்தில் இருந்தபடியே நாலு திசையிலும் பயணம் போகும் தன்மை உண்டு. அதனால் சாமர்த்தியமும் உண்டு; ராஜதந்திரமும் உண்டு.

கடக ராசிக்கு 4-ல் உள்ள சனி உச்சம் பெற்று கடக ராசியைப் பார்க்கிறார். சனி 10-க்கு 10-க்குடையவர். அதாவது தொழில் ஸ்தானத்துக்கு தொழில் ஸ்தானாதிபதி. இதை பலதீபிகையில் "பாவாத் பாவகம்' என்று சொல்லப்படும். அதாவது 7-ஆம் இடத்தைப் பார்க்கும் போது அதற்கு 7-ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும். 2-ஆம் இடத்தைப் பார்க்கும்போது அதற்கு 2-ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும். அதுபோல 10-ஆம் இடம் தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆய்வு செய்யும்போது, 10-க்கு 10-ஆம் இடம் ராசிக்கு 7-க்குடையவரையும் பார்க்க வேண்டும். 7-க்குடையவர் கடக ராசிக்கு 4-ல் உச்சம் பெற்று 10-ஆம் இடத்தையும் ஜென்ம ராசியையும் பார்ப்பதால், தொழில், வேலை, உத்தியோகம் சம்பந்தமான முன் னேற்றங்களும் நன்மைகளும் உண்டாகும்.

10-க்கு 12-க்குடைய குரு ராசிக்கு  12-ல் நின்று 10-க்கு 10-க்குடைய சனியைப் பார்ப்பதால், வெளிநாட்டு வேலை, உத்தியோகம் உண்டாகும். சிலருக்கு குடியிருப்பு மாற்றம் உண்டாகும். அதாவது வாடகை வீட்டிலிருப்போர் ஒத்தி வீட்டுக்கும், ஒத்தி வீட்டிலிருப்போர் சொந்த வீட்டுக்கும் போகலாம். சிலர் புதிய வீடு அல்லது மனை அல்லது வாகனம் வாங்கலாம். டூவீலர் வைத்திருப்பவர்கள் நான்கு சக்கர வாகனம் (கார்) வாங்கலாம். ஏற்கெனவே கார் வைத்திருப்பவர்கள் பழைய காரைக் கொடுத்துவிட்டு புதிய கார் வாங்கலாம். குரு 6-க்கும் அதிபதி என்பதால் அதற்காக பேங்க் லோன் கிடைக்கும்.

10-ஆம் இடம் செவ்வாயின் வீடு. 10-ஆம் இடத்தை சனி, ராகு பார்க்க 10-ல் கேது இருப்பதால், இக்காலம் கட்டடம், காண்ட்ராக்ட் தொழில், ரியல் எஸ்ட்டேட், கெமிக்கல், அக்னி சம்பந்தமான தொழில் ஆரம்பிக்கலாம். சிலர் ஏற்றுமதி- இறக்குமதி அல்லது பிளாஸ்டிக், ரப்பர், தோல் (லெதர்) சம்பந்தப்பட்ட தொழிலும் யந்திர சம்பந்தமான தொழிலும் செய்யலாம். தனகாரகன் குரு 12-ல் மறைவதால் சிட்பண்ட், பைனான்ஸ் தொழில் மட்டும் செய்யவேண்டாம். குரு புதன் வீட்டில் இருப்பதால் கமிஷன் தொழில், ஷேர் மார்க்கெட்டிங் போன்ற தொழில் வகையில் முதலீடு செய்யலாம்.

17-2-2013 முதல் 5-7-2013 வரை சனி வக்ரமாக இருக்கும் காலம்; அடுத்து 2-3-2014 முதல் 28-6-2014 முடிய இரண்டாவது முறையாக சனி வக்ரமடையும் காலம் கடக ராசிக்காரர்களுக்கு ராஜயோகமான காலமாக அமையும். எதிர்பாராத லாபம், முன்னேற்றம், ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய முயற்சிகள் கைகூடும்.

மிதுன குரு 4-ஆம் இடம் துலா ராசிக்கு 9-ல், 8-ஆம் இடம் கும்ப ராசிக்கு 5-ல் இருக்கிறார். ஒரு கிரகம் எந்தெந்த இடத்துக்கு திரிகோணத்தில் இருக்கிறாரோ அந்தந்த இடத்துக்கு சாதகமான பலனையும், எந்தெந்த இடத்துக்கு 6, 8, 12-ல் இருக்கிறாரோ அந்தந்த இடத்துக்கு பாதகமான பலன்களையும் செய்யும்.

அந்த விதிப்படி 4-ஆம் இடத்துக்கும் 8-ஆம் இடத்துக்கும் யோகம். தாயார், பூமி, வீடு, மனை, சுகம், கல்வி, வாகனம் சம்பந்தமான நன்மைகளை எதிர்பார்க்கலாம். 8-க்கு யோகம் என்றால் விபத்து, ஏமாற்றம், அவதூறு, கௌரவப் போராட்டங்களையும் உருவாக்கும். அந்த மாதிரி சந்தர்ப்பத்தில் குரு ப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை விசேஷமாக வழிபட வேண்டும். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை கொண்டைக்கடலை மாலை சாற்றலாம்; நெய்தீபம் ஏற்றலாம்; மஞ்சள் வஸ்திரம், மஞ்சள் பூ மாலை சாற்றலாம். அத்துடன் திருவாரூர் தெப்பக்குளம் பின்புறம் மடப்புரம் என்னும் பகுதியில் குருநாதர் தட்சிணாமூர்த்தி மகான் ஜீவசமாதி இருக்கிறது. அங்கு சென்று வியாழக்கிழமை தரிசனம் செய்யலாம்.

தட்சிணாமூர்த்தி மகான் ஒரு அவதூதர். மாபெரும் சித்தர். அவர் ஒரு சமயம் மடத்தில் சிஷ்யர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வெளியூரில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு சீடர் கைதவறி கீழே விழும்போது "குருநாதா' என்று அபயக்குரல் கொடுத்தார். அது தட்சிணாமூர்த்தியின் ஞான திருஷ்டியில் தெரிந்து, அப்படியே இருந்த இடத்தில் இருந்தே அந்த சீடரை தாங்கிப் பிடித்து தரையில் வைத்த மாதிரி பாவனையாகச் செய்ய, அந்த சீடருக்கு யாரோ ஒருவர் கைத் தாங்கலாக பிடித்து தரையில் கிடத்தி வைத்ததாக உணர்வு தெரிந்தது. குருநாதர் முன்பு இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. சில மணி நேரத்தில் தவறிவிழுந்த சீடர் குருநாதரைத் தேடிவந்து காலில் விழுந்து நன்றி செலுத்தி கண்ணீர் உகுத்தார். அப்போதுதான் எல்லாருக்கும் விவரம் தெரியவந்தது. இப்படி எத்தனையோ சித்துகள் செய்தவர். ஆவணி மாதம் 21-ஆம் தேதி 6-9-2013 வெள்ளிக்கிழமை குருநாதர் குருபூஜை நடக்கிறது. அன்று 100 மூட்டைக்கு மேல் அரிசியை சமைத்து காலை முதல் இரவு வரை அன்னதானம் நடக்கும்.

கடக ராசிக்கு 5-ஆம் இடத்துக்கு எட்டிலும், 7-ஆம் இடத்துக்கு ஆறிலும், ஜென்ம ராசிக்கு 12-ஆம் இடத்திலும் குரு இருப்பதால் பிள்ளைகள் வகையிலும் மனைவி வகையிலும் எதிர்பாராத செலவுகள் வந்துசேரும். ஜாதகரீதியாக சாதகமான தசாபுக்தி நடந்தால் யோகமான சுபசெலவுகளாகவும், பாதகமான தசாபுக்தி நடந்தால் அசுபசெலவு களாகவும் இருக்கும். கெடுபலனுக்குப் பரிகாரம் முன் குறிப்பிட்ட மடப்புரம் குரு தட்சணாமூர்த்தி வழிபாடே போதுமானது.

கடக ராசிக்கு 12-ல் உள்ள குரு விரயத்தை உண்டாக்கினாலும், பெரும்பாலும் சுபவிரயச் செலவுகள் ஆகவே அமையும். சிலர் வெளிநாட்டு வேலைக்குப் போகலாம். அல்லது வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம். ஏற்றுமதி- இறக்குமதி வியாபாரம் செய்யலாம். ராகுவை குரு பார்க்க, கேதுவும் குருவைப் பார்க்கிறார். ராகு- கேதுவுக்கு 7-ஆம் பார்வையுடன் 3, 11-ஆம் பார்வை யும் உண்டு. ராகு- கேது வலப்புறமாகப் பார்த்தாலும் இடப்புறமாகப் பார்த்தாலும் ஒன்றாகத்தான் கணக்கு வரும்.

ராகு தசையோ புக்தியோ நடந்தால் திருப்பதி அருகில் காளஹஸ்தி சென்று ருத்ரஹோம பூஜை செய்யலாம். அல்லது உத்தமபாளையத்தில் (தென் காளஹஸ்தி என்று பெயர்) ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.00 மணிக்குமேல் ராகு கால பூஜை அபிஷேகம் செய்யப்படுகிறது. 300 ரூபாய் செலுத்தி டோக்கன் வாங்கிக்கொண்டால் கோவில் குருக்களே எல்லா பூஜை சாமான்களும் வெள்ளி நாகர் உருவமும் கொடுத்து பரிகாரம் செய்துவிடுவார். ஜி. நீலகண்டன் சிவாச்சாரியார், செல்: 93629 93967-ல் தொடர்புகொள்ளவும்.

ஆகவே குருப்பெயர்ச்சி உங்களின் எண்ணங்களைப் பொறுத்து நல்லது செய்யும் அல்லது கெட்டது செய்யும். அதுதான் பூர்வ புண்ணியம். மனம் போல் வாழ்வு என்பதன் ரகசியமும் அதுதான். நல்லதே செய்தால் நல்லதே நடக்கும் என்பதன் தத்துவமும் அதுதான். வாரியார் சுவாமிகள் "வருவது- தானே வரும்; வருவதுதானே- வரும்' என்றார்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

குருவின் அஸ்தமனம் இந்த ராசியைப் பொறுத்தவரை நல்லதே செய்யும். 12-ல் உள்ள குரு அஸ்தமனம் ஆவதால் விரயமும் வேதனையும் அஸ்தமனமாகிவிடும் என்று அர்த்தம். 6-ஆம் இடத்தைப் பார்க்கும் குரு 6-க்குடையவர் என்பதால், அந்த 6-ஆம் இடத்துப் பலன் அஸ்தமனம் ஆகிவிடும். அதனால் எதிரி, கடன், வைத்தியச்செலவு, போட்டி, பொறாமை ஆகிய கெடுபலன்கள் எல்லாம் அஸ்தமனம் ஆகிவிடும் என்று அர்த்தம். பாலைவனச் சோலை மாதிரியும், கெட்டதிலும் நல்லது என்பது மாதிரியும் குருவின்அஸ்தமனம் ஒரு மாதம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். இதை விபரீத ராஜயோக காலம் எனலாம். குரு நல்ல பலனைச் செய்ய சிங்கம்புணரி முத்துவடுகச் சித்தரை (வாத்தியார் கோவில் சென்று) வழிபடலாம். மதுரை திருச்சி ரோட்டில் கொட்டாம்பட்டியிலிருந்து 5 கிலோமீட்டர். தூரத்தில் உள்ளது.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

குரு வக்ரமாக இருக்கும் இக்காலம் நல்லதும் நடக்கும்; ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் கெட்டதும் நடக்கும். கெட்டது பாதிக்காமல் இருக்க திண்டுக்கல் மலைக்குப் பின்புறம் ஓதசுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபட வேண்டும். அல்லது உங்கள் பகுதியிலுள்ள சித்தர்களின் ஜீவசமாதிக்குச் சென்றும் வழிபடலாம்.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

புனர்பூசம் குருவின் சொந்த நட்சத்திரம் என்பதால், தன்னைத்தானே அடித்துக்கொண்டால் வலி அதிகம் தெரியாது என்பதுபோல, குரு உங்களுக்கு கெடுதல் செய்தாலும் கெடுபலன் தெரியாது. உங்கள் திறமையும் பெருமையும் வெளிப்பட, சோதனைகளைச் சந்திப்பது போல குரு உங்களுக்குப் பரீட்சை வைப்பார். அதில் நீங்கள் வெற்றியடையலாம்.

பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

பூசம் சனியின் நட்சத்திரம். சனி 4-ல் நின்று உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதனால் பூமி, வீடு, லாபம், வாகன சுகம் போன்ற யோகத்தைத் தருவார்.

ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி யோகத்தையே செய்யும். புதன் 3, 12-க்குடைய ஆதிபத்தியம் பெற்றவர். புதன் வீட்டில் குரு இருப்பதால் சகோதர வகையிலும் நண்பர்கள் வகையிலும் குருப்பெயர்ச்சி அனுகூலமான பலனையும் ஆதாயத்தையும் செய்யும்.

மிதுனம்


மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை,
புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

           மிதுன ராசி அன்பர்களே!

இதுவரை மிதுன ராசிக்கு 12-ல் இருந்த குரு இப்போது ஜென்ம ராசிக்கு மாறியிருக்கிறார். ஏற்கெனவே குரு இருந்த இடமும் கெட்ட இடம்தான்; இப்போது மாறியுள்ள இடமும் கெட்ட இடம்தான். மிதுன ராசிக்கு 7, 10-க்குடைய குரு பாதகாதிபதி என்பது மட்டுமல்ல; சுப கிரகமாகிய குரு கேந்திராதிபத்தியம் பெற்று- கேந்திராதிபத்திய தோஷம் அடைந்து ஜென்ம ராசியில் நிற்பது நல்லதல்ல. "ஜென்ம ராமர் சீதையை வனத்திலே சிறைவைத்தது' என்பது பாடல்.

ஆனால் தோஷம் பெற்ற குரு தோஷமான இடத்திலே இருப்பதால், டபுள் மைனஸ் ஒரு பிளஸ் ஆவதுபோல- டபுள் நெகட்டிவ் ஒரு பாசிட்டிவ் ஆவதுபோல தோஷம் ஷ் தோஷம் = தோஷ நிவர்த்தியாகிறது. அதனால் ஜென்ம வியாழன் என்ற கெடுதல் விலகி விடுகிறது!

ஜென்ம ராசி- 1-ஆம் இடம் என்பது கௌரவம், புகழ், கீர்த்தி, செல்வாக்கு, ஆற்றல், திறமை, பெருமை, ஆயுள் இவற்றை குறிக்கும் இடம். அங்கு குரு இருப்பது பெருமைதான். அதேசமயம் 11-ல் உள்ள கேது குருவைப் பார்ப்பதோடு, 5-ல் சனியும் ராகுவும் நிற்க, அவர்களை குரு பார்ப்பதால்- குருவுக்கும் சனிக்கும் ராகுவுக்கும் சம்பந்தம் ஏற்படும். அதனால் குடத்துக்குள் வைத்த விளக்குபோல பிரகாசம் இல்லாமல் செயல்படும். ஒவ்வொரு காரியத்தையும் செயல்படுத்தும்போது குறுக்கீடுகளும் இடையூறுகளும் தடைகளும் அதிகமாக இருக்கும். போட்டியும் பொறாமைகளும் கண்திருஷ்டிகளும் அதிகமாகவே காணப்படும்.

உங்களிடம் வாங்கிச் சாப்பிட்டவர்களும்- உங்களால் உதவியும் நன்மைகளும் அடைந்தவர்களும்- உங்களால் உருவானர்களுமே உங்களை புறம்பேசித் திரிவார்கள். உங்களைப்பற்றி தவறாக விமர்சிப்பார்கள். தோளில் ஏற்றிவைத்தவர்களே காதைக் கடிப்பார்கள். அதனால் 5-ல் சனியும் ராகுவும் இருப்பதால் மனம் மிகவும் துடிக்கும். "என்ன உலகமடா இது நன்றி கெட்ட உலகம்' என்று எண்ணவைக்கும். "நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் நெஞ்சு பொறுக்குதில்லையே' என்று மகாகவி பாரதியார் பாடியதைத்தான் நினைக்கத் தோன்றும்.

கடந்த காலத்தில் மிதுன ராசிக்கு 4-ல் சனி நின்று உங்கள் ஜென்ம ராசியைப் பார்த்ததும் ஒருவகையில் கெடுதல்தான். அது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். அதனால் வாகன நஷ்டம், சுகக்குறைவு, தாய்வழி உறவினர்களுடன் மனவருத்தம், கல்வித் தடை- இப்படி 4-ஆம் பாவம் சம்பந்தப்பட்ட பலன்களில் எல்லாம் சங்கடம், சஞ்சலம் போன்றவற்றை சந்தித்தீர்கள். 8-க்குடைய சனி 4-ல் அமர்ந்த விளைவு கடன் உடன் வாங்கி சிலர் இடத்தில் முதலீடு செய்தார்கள். சிலர் ஈமு கோழிப் பண்ணையிலும், சிலர் மரம் வளர்ப்பு தொழில் முதலீடாகவும் செய்து எல்லாவற்றிலும் ஏமாற்றம், நஷ்டங்களைச் சந்தித்த நிலை. ஜாதக  தசாபுக்தி பாதகமாக இருந்தவர்கள் வாகன விபத்து- வாகன நஷ்டங் களையும் சந்தித்தார்கள். சிலர் கடனுக்கு பயந்து மானத்துக்கு அஞ்சி ஊர்விட்டு ஊர் தலைமறைவாகப் போனதுண்டு. 

மிதுன குரு இருக்கும் இடம் சரியில்லையென்றாலும், அவர் பார்க்கும் இடம் அற்புத இடங்கள். குரு நிற்கும் இடத்தைவிட பார்க்கும் இடத்துக்கே பவர் அதிகம். மிதுன குரு 5-ஆம் பார்வையாக ராசிக்கு 5-ஆம் இடத்தையும், 7-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தையும், 9-ஆம் இடத்தை 9-ஆம் பார்வையாகவும் பார்க்கிறார். குருவுக்கு 5, 7, 9-ஆம் பார்வை உண்டு.

5-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம்; பூர்வ புண்ய ஸ்தானம்; மாமன், திட்டம், மகிழ்ச்சி, இதயம், எண்ணம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அந்த 5-ஆம் இடமான துலா ராசிக்கு குரு 3, 6-க்குடைய ஆதிபத்தியம்பெற்று, 5-ஆம் இடத்துக்கு 9-ல் இருக்கிறார்; 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 5-ல் சனியும் ராகுவும் இருக்கிறார்கள். பொதுவாக 5-ல் சனியும் ராகுவும் இருப்பது புத்திர தோஷம் ஆகும். அதை குரு பார்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. குரு பார்க்க கோடி தோஷம் போகும் என்பது ஜோதிட விதியல்லவா!

புத்திர பாக்கியம் வேண்டி தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் அல்லது புத்திரயோகம் உண்டாகும். பிள்ளை களைப் பெற்றவர்களுக்கு தகப்பனார் ஸ்தானத்தில் இருந்து செய்ய வேண்டிய கடமைகளை இனிமேல்தான் செய்யமுடியும். அதாவது பிள்ளைகளின் படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம், அவர்களின் எதிர்கால இன்ப வாழ்வுக்குத் தேவையான வசதிகளைச் செய்துக் கொடுக்கலாம். தசாபுத்தி கோளாறுகளினால் பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு விலகி இருந்தால், இனி- இந்த குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஒன்றுசேரும் வாய்ப்பு உண்டாகும். சொந்த வாரிசு இல்லாதவர்களுக்கு சுவீகார புத்திரயோகம்- தத்துபுத்திர யோகம் ஏற்படும். 

வாரிசு யோகம் கிடைக்க கும்பகோணம் அருகில் குடவாசல் சென்று அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு அபிஷேகம் செய்யலாம். நேர்த்திக் கடன் நேர்ந்து கொள்ளலாம். மேனேஜிங் டிரஸ்டி நாக கிருஷ்ணன் மகன் என். சுப்பிரமணி, செல்: 94872 92481-ல் தொடர்பு கொள்ளலாம். 5-ல் உள்ள ராகு, சனி தோஷம் விலக ராமநாதபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தேவிபட்டினம் சென்று மொட்டையர் மகன் சக்தி சீனிவாச சாஸ்திரியை தொடர்பு கொண்டு நாகதோஷ நிவர்த்தி, சனி தோஷ நிவர்த்தி, சனி சாந்தி ஹோமம், வாஞ்சா கல்பகணபதி ஹோமத்தில் புத்திர ப்ராப்தி ஹோமம்- சந்தான பரமேசுவர ஹோமம், சந்தான கோபால கிருஷ்ணஹோமம் செய்யலாம். செல்: 99435 46667, தொலைபேசி 04567 264530-ல் தொடர்புகொண்டு போகலாம். அல்லது உங்களுக்கு அறிமுகமான இடமென்றாலும் போகலாம்.

7-ஆம் இடம் மனைவி ஸ்தானம், திருமண ஸ்தானம், கூட்டுத் தொழில், உபதொழில் ஸ்தானம். அதை குரு பார்க்கிறார். அந்த வீட்டுக் குடையவரே அவர்தான். அதனால் திருமண யோகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் கன்னியர்க்கும் காளையர்க்கும் கல்யாணம் கைகூடிவிடும். 7-ஆம் இடத்தை சனியும் ராகுவும் பார்ப்பதால், ஏற்கெனவே திருமணத் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டிருக்கலாம். இப்போது குரு பார்வையால் அவை விலகிவிடும். சனி, ராகு சம்பந்தத்தால் ஒருசிலர் கலப்புத் திருமணம் அல்லது காதல் திருமண ஆசையால் முறை தவறி நடக்கலாம். அவர்கள் ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்க்கையோ பார்வையோ இருந்தால் அதுதான் அவர்கள் தலைவிதி. அதைத் தடுக்கவேண்டாம். "பூக்களைப் பறிக்காதீர்கள்- காதலர்களைப் பிரிக்காதீர்கள்' என்ற வாசகப்படி பெற்றோர்கள் அதற்கு பச்சைக் கொடி காட்டிவிடலாம். குடும்ப கௌரவம், அது இது என்று ஏற்றுக்கொள்ள மனம் இல்லையென்றால்- காமோகர்ஷண ஹோமம் செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு கலச அபிஷேகம் செய்தால் மனம் மாறலாம். அப்படி அமையவேண்டுமானால் அவர்கள் ஜாதகத்தில் குருபார்வை இருந்தால்தான் செயல்படும். இல்லாவிட்டால் நீங்கள் என்னதான் பரிகாரம் செய்தாலும் அவர்கள் காதலைத் தடுக்க முடியாது.
எனக்குத் தெரிந்த குடும்ப நண்பரின் மகள் டாக்டருக்கு படிக்கும் போதே வேறு இனப்பையனை (அவனும் டாக்டர்) விரும்பி விட்டாள். பெண்ணின் குடும்பம் கூட்டுக்குடும்பம் என்பதால் கௌரவப் பிரச்சினை எழுந்தது. காமோகர்ஷண ஹோமம் ஏற்பாடு செய்தார்கள். பெண் சம்மதிக்கவில்லை. ஹோமத்துக்கு வரமாட்டேன் என்று சாதித்து விட்டது. வேறு காரணம் சொல்லி, அப்பா அம்மாவுக்கு நேரம் சரியில்லையென்று பொய் சொல்லி பெண்ணை சரிக்கட்டி அழைத்துப் போய் ஹோமம் செய்தார்கள். அப்படியும் அந்தப் பெண் அந்தப் பையனோடு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொண்டது. ஹோமம் செய்து பலன் இல்லையா என்று கேட்பீர்கள். ஒரு குழந்தை பிறந்தபிறகு அந்தக் கணவனைப் பிடிக்காமல் குழந்தையோடு தாய் வீட்டுக்கு வந்துவிட்டது. அதாவது குடிப்பவர் குடியை நிறுத்த வேண்டு மானால் அவராக மனம் திருந்தி குடிப்பதை நிறுத்தவேண்டும் என்பது போல் முறையற்று காதல் புரிகிறவர்கள் மனம் திருந்தி மாறவேண்டும். 

ஏற்கெனவே திருமணம் ஆனவர்களுக்கு நெருக்கமும் இணக்கமும் ஏற்பட குரு பார்வை வேலை செய்யும். கணவருக்கு மனைவியாலும் மனைவிக்கு கணவராலும் யோகம் உண்டாகும். மனைவிபெயரில் புதிய தொழில் ஆரம்பிக்கலாம். அல்லது மனைவிக்கு நல்ல வேலை அமையும். நோயின் தொல்லையால் வாடிவதங்கிய தம்பதிகளுக்கு இனிமேல் பூரண ஆரோக்கியம் உண்டாகும். கடந்த காலத்தில் அர்த்தாஷ்டமச் சனியால் ஏற்பட்ட நோய்க் கோளாறு, பேய்க் கோளாறு எல்லாம் இனி அடியோடு விலகிவிடும். ஜாதக தசாபுக்திகளை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்ளவும்.

9-ஆம் இடம் என்பது பாக்ய ஸ்தானம்; தந்தை, பூர்வீக ஸ்தானம். முன்னோர் ஆஸ்தி, குலதெய்வம் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். அந்த 9-க்குடையவர் சனி 5-ல் உச்சம் பெற்று குரு பார்வையைப் பெறுவதோடு, 9-ஆம் இடத்தை குருவும் பார்க்கிறார். குரு 7, 10-க்குடையவர். 10-க்குடையவர் 9-ஆம் இடத்தைப் பார்ப்பதும் 9-க்குடைய சனியைப் பார்ப்பதும் தர்மகர்மாதிபதி யோகம் ஆகும். அதனால் உங்களுக்கு குருவருளும் திருவருளும் பரிபூரணமாக அமையும். இழந்து விட்ட பூர்வீகச்சொத்துகள் கிடைக்கும். அப்பாவழி, அம்மாவழி, தாத்தா- பாட்டி வகையில் இருந்து உங்களுக்கு வரவேண்டியவை வந்து சேரும்.

பூர்வீக சொத்துகள் இல்லாதவர்களுக்கு தகப்பனார் ஆசியினால் சொத்து சுகங்களும் பாக்கியமும் உண்டாகும். 

நீண்டகாலமாக நிறைவேற்றாமல் இருந்த அல்லது தடைப்பட்ட தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். குலதெய்வமும் அதன் எல்லையும் தெரியாமல் ஏதோ மனதுக்குப் பிடித்த தெய்வத்துக்கும் கோவிலுக்கும்போய் சாமி கும்பிட்டு வந்தவர்களுக்கு குடும்ப குலதெய்வத்தை வழிபடாத குறையொன்று இருக்கிறது என்று குறி சொல்லியிருப்பார்கள்; ஜோதிடம் கூறியிருப்பார்கள். அதனால் குழம்பித் தவித்தவர்களுக்கு இப்போது குரு பார்வையால் எல்லையும் தெரியும்; தெய்வமும் தெரியும். அங்கு சென்று தனிப்பட்ட முறையிலோ அல்லது பங்காளிகளுடனோ வழிபட்டு வரலாம். நடைமுறையில் அது திருப்திகரமாக அமைந்துவிட்டால் வசூல் செய்து கோவில் கட்டலாம். திருப்பணி செய்யலாம். சிலர் காசி, ராமேஸ்வரம், கேதாரநாத், பத்ரிநாத் என்று புனிதப் பயணம் சென்று வரலாம்.

இப்படி ஜென்ம குருவாக இருந்தாலும் அவர் பார்வையின் பலத்தால் நன்மைகள் நடக்கும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

மேற்கண்ட ஒருமாதம் குரு ஜென்மராசியில் அஸ்தமானமாக இருப்பார். அஸ்தமன காலத்தில் எந்த நன்மைகளும் நடக்காது. எதிர் மறைப் பலன்களாக நடக்கும். அஸ்தமனம் என்றால் இருட்டு. இருட்டில் எதைத் தேடுவது? எதைப் பார்ப்பது? ஆகவே இக்காலம் உங்களுக்கு கௌரவப் பிரச்சினைகள் எழலாம். ஏற்கெனவே குரு மிதுன ராசிக்கு 7, 10-க்குடைய பாதகாதிபதியாவார். அந்த பாதகாதிபத்திய பலன் அஸ்தமன காலத்தில் கெடுதலாக இருக்கும். திருமணத் தடை, திருமண தாமதம், திருமண வாழ்க்கையில் குழப்பம், திருப்பம், நிம்மதிக் குறைவு, சஞ்சலம் ஆகிய பலனும்; தொழில் வகையிலும் தொய்வுகள், துயரங்கள், துன்பங்களும் உண்டாகும். சிலர் வெளிநாட்டு  வேலைக்கு பணம் கொடுத்து ஏமாறலாம். அல்லது வெளிநாடு போய் அங்கு உடல்நலம் குறைந்து தொடர்ந்து வெளிநாட்டில் வேலை செய்யாமல் திரும்பி வரலாம். இந்தக் கெடுதல்களைச் சமாளிக்க மாயாண்டிச் சித்தரை வழிபடவேண்டும். மேலூர் சிவகங்கை ரோட்டில், (மேலூரிலிருந்து 18 கிலோமீட்டர்- சிவகங்கையிலிருந்து 8 கிலோமீட்டர்) மாயாண்டிச் சித்தர் ஜீவசமாதி இருக்கிறது. அங்கு சென்று வழிபட்டால் குரு கிரகத்தின் தோஷம் விலகிவிடும்.
24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

அஸ்தமனம் கெடுதலைச் செய்யும். வக்ரம் நற்பலன்களை வேக மாகவும் துர்ப்பலன்களையும் துரிதமாகவும் செய்யும். பொதுவாக குரு வக்ரத்தில் கஷ்டப்படுத்தமாட்டார். 7, 10-க்குடையவர் என்பதால் திருமணம், மணவாழ்க்கை, தொழில், வேலை, உத்தியோகம் ஆகிய வற்றில் நல்ல திருப்பத்தையும் யோகத்தையும் எதிர்பார்க்கலாம். ஜாதக தசாபுக்திகள் சாதகமாக இருந்தால் யோகமான பலன்களாகவே நடக்கும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் கோட்சார பலன்கள் எதிர்மறைப் பலனாகி நடக்கும். பொதுவாக குருவின் அஸ்த மன தோஷத்துக்குத்தான் பரிகார பூஜை தேவைப்படும். குருவின் வக்ர கதிக்கு பரிகாரம் அவசியமில்லை. என்றாலும் நோய்க்கு மாத்திரை, மருந்து, ஊசி தேவைப்படும். வியாதி இல்லையென்றால் மருந்து, ஊசி தேவையில்லை. ஆனால் சத்துமாத்திரை, வைட்டமின் எடுத்துக் கொள்ளலாம். அல்லவா! அதுமாதிரி குருவின் வக்ரம் அனுகூலமாகத் திகழ தஞ்சை அருகில் தென்குடித் திட்டை சென்று குருவை வழிபடலாம். 

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:

குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். புதிய தொழில் முயற்சி கைகூடும். மனைவி அல்லது கணவன் பேரில் இடம், பூமி, மனை, வாகனம் வாங்கலாம். அது சம்பந்தமான கடன் வாங்கலாம். சிலர் தவணைக்கடன் வாங்கி பொருள்களைச் சேர்க்கலாம். கடன் அடைந்தவுடன் பொருள் சொந்தமாகிவிடும். சிலர் நகைகளை அடகு வைத்து சில பொருள்களை வாங்கலாம்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:

குருப்பெயர்ச்சி உங்கள் கனவுகளை நனவுகளாக்கும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் டென்ஷன் இருக்கும். விடாமுயற்சியும் நம்பிக்கையும் வைராக்கியமும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பாட்டனார் அல்லது விதவைப் பெண்களால் ஆதாயமும் அனுகூலமும் எதிர்பார்க்கலாம். சிலருக்கு தொழில் மாற்றம் ஏற்படலாம். குடியிருப்பு இடப்பெயர்ச்சிக்கும் இடமுண்டு.

புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:

குருவின் சொந்த நட்சத்திரம் புனர்பூசம். குரு 7, 10-க்குடையவர். பெருமை, திறமை, செல்வாக்கு முதலியவை இந்த குருப்பெயர்ச்சியால் ஏற்படும். மனைவியால் அல்லது மனைவி வர்க்கத்தால் நன்மைகளை எதிர்பார்க்கலாம். பெண்கள் ஜாதகமானால் கணவராலும் கணவன் வர்க்கத்தாலும் நன்மைகள் ஏற்படலாம். 

ரிஷபம்


ரிஷபம்(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி,
மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

           ரிஷபம் ராசி அன்பர்களே!

கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ஜென்ம ராசியான ரிஷபத்தில் இருக்கும் குரு இப்போது 2-ஆம் இடமான மிதுன ராசிக்கு மாறுகிறார். குருவுக்கு 2, 5, 7, 9, 11-ஆம் இடங்கள் யோகமான இடங்கள். இந்த குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் நன்மை களையும் அடையப்போகும் ராசிக்காரர்கள் ஐந்து பேர். ரிஷபம், சிம்மம், துலாம், தனுசு, கும்ப ராசிக்காரர்கள் ஆவார்கள். அவர்களுள் நீங்களும் ஒருவர்.

ரிஷப ராசிக்கு 8, 11-க்குடையவர் குரு. வாக்கு காரகன்; தன காரகன். அவர் 2-ஆம் இடமான தன ஸ்தானத்தில் அமர்ந்து பலன் தரவிருப்பதால், வாக்கு, நாணயம் காப்பாற்றப்படும். வித்தை மேன்மை யடையும். குடும்பத்தில் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு செயல் படலாம். தாராளமான பணப்புழக்கம் இருக்கும். அதனால் பணக் கஷ்டமும் பணநெருக்கடியும் விலகும். வரவேண்டிய பணமும் கைக்கு வந்துசேரும்; கொடுக்க வேண்டியதையும் கொடுத்து நல்ல பேர் எடுக்கலாம்.

8-ஆம் இடம் ஆயுளையும் குறிக்கும்; அதிர்ஷ்டத்தையும் குறிக்கும். அதை "நிரத ஸ்தானம்' என்பார்கள். நிரத ஸ்தானம் என்றால் அதிர்ஷ்ட ஸ்தானம் எனப்படும். (அ- திருஷ்டம்). திருஷ்டம் என்றால் கண்ணுக்குத் தெரிவது. அ- திருஷ்டம் என்றால் கண்ணுக்குத் தெரியாதது.. மரணம் கண்ணுக்குத் தெரியாது. யோகமும் கண்ணுக்குத் தெரியாது. (அதிர்ஷ்டம் கண்ணுக்குத் தெரியாமல் வருவது. அதிர்ஷ்டம்- அது இஷ்டமாக வரும்.)

8-க்குடையவர் 11-ஆம் இடம், 2-ஆம் இடம், 9-ஆம் இடத்தோடு சம்பந்தப்படும்போது 8-ஆம் இடம் அதிர்ஷ்டமாகச் செயல்படும். 8-க்குடையவர் 6, 12-ஆம் இடத்தோடு சம்பந்தப்படும்போது விபத்து, மரணம், இழப்பு ஆகிய பலனைச் செயல்படுத்தும்.

இங்கு 8, 11-க்குடைய குரு 2-ல் நிற்கிறார். ரிஷப ராசிக்கு 9, 10-க்குடைய ராஜயோகாதிபதியான சனியை 5-ஆம் பார்வை பார்க்கிறார். ஒரே கிரகம் இன்னொரு கிரகத்தைப் பார்க்கும்போது அந்த கிரகங்களுக்குள் சம்பந்தம் உண்டாகும். அதனால் எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். திடீர் தனப்ராப்தி அல்லது புதையல் யோகம் உண்டாகும். லாட்டரி பரிசு யோகம் உண்டாகும். தமிழ்நாட்டில் லாட்டரி தடை செய்யப்பட்டாலும் வேறு மாநில லாட்டரி யோகம் உண்டாகலாம். அல்லது இங்கிருந்தபடியே மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாட்டில், அங்குள்ள நண்பர்கள் மூலமாக லாட்டரி சீட்டு வாங்கலாம். அந்த நண்பர்கள் உண்மையானவர்களாகவும்- நல்லவர்களாகவும் இருந்தால் உங்கள் பங்குத் தொகையைத் தந்துவிடுவார்கள். உங்கள் ஜாதகத்திலும் 2, 9, 11-க்குடைய தசாபுக்திகள் சம்பந்தப்பட வேண்டும். அப்படியிருந்தால் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பது எப்படியும் கிடைத்துவிடும். அப்படியில்லாமல் 6, 8, 12-க்குடைய தசாபுக்திகள் சம்பந்தப்பட்டால் ஏமாற்றமும் இழப்பும் ஏற்படலாம். பரிசு விழுந்தாலும் சொல்லமாட்டார்கள். அதாவது கிடைக்காது என்று இருந்தால் கிடைக்காமல் போய்விடும்.

8, 11-க்குடையவர் 2, 9-க்கு சம்பந்தப்படும்போது யோகம்! அதிர்ஷ்டம்! 6, 12 சம்பந்தப்பட்டால் இழப்பு. ரிஷப ராசிக்கு ராசிநாதனே 6-க்குடையவராகவும் செவ்வாய் 7, 12-க்குடையவராகவும் வருகிறார்கள். ஒரு பெரிய கோடீஸ்வரர் லாட்டரி விற்பனையாளர். ஏராளமான சொத்துகள்- கருப்புப்பணமும் ஏராளம். ஆனால் அக்கவுண்டில் வெள்ளைப்பணம் இல்லை. அரசுக்கு செலுத்தவேண்டிய சேல்ஸ்டாக்ஸ் வரி கட்டாமல், சில அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழ்கோர்ட், மேல் கோர்ட் என்று சுப்ரீம் கோர்ட்டு வரை போனார். வரியைக் கட்டவில்லை. முடிவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அவருக்கு எதிராக முடிந்துவிட்டது. கோடிக்கணக்கான வரி பாக்கிக்காக அவருடைய பங்களாவில் உள்ள சொத்துகளையெல்லாம் ஜப்தி செய்துவிட்டார்கள். அந்த நேரம் அவருக்கு ஏழரைச் சனியும் சந்திர தசை சந்திப்பும் நடந்தது.

மிதுன ராசியில் நிற்கும் குரு ரிஷப ராசிக்கு 6-ஆம் இடம், 8-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்க்கிறார். 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் கடன் உருவாகும். போட்டி, பொறாமைகளும் எதிர்ப்பு, இடையூறுகளும் வளரும். ஜாதக தசாபுக்திகள் பாதகமாக இருந்தால் வைத்தியச் செலவுகளும் நோய் நொடிகளும் தொடரும். பாப கிரகம் ஒரு இடத்தைப் பார்த்தால் அந்த இடத்துப் பலன் கெட்டுப்போகும்; சுபகிரகம் ஒரு இடத்தைப் பார்த்தால் அதன் பலன் வளரும். குரு சுபகிரகம் என்பதால் 6-ஆம் இடம் பாப ஸ்தானத்தைப் பார்ப்பதால் கடன், எதிரி, நோய் அதிகரிக்கும். ஆனால் 6-ல் பாபகிரகம் சனியும் ராகுவும் நிற்பதால் 6-ஆம் இடத்துப் பலன் கெட்டுப்போகும். அதனால் பாப இடத்தின் பலன்கள் உங்களுக்கு இன்னொரு வகையில் நன்மையாக மாறும்.

போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவும், எதிர்கால வளர்ச்சிக்காகவும், ஏற்றத்துக் காகவும் அஸ்திவாரமாகிவிடும். கடன்கள், சுபக்கடன்களாகிவிடும். விரயமும் செலவும் மங்களச் செலவுகளாக மாறும். திருமணம், கிரகப்பிரவேசம், மகப்பேறு, புத்திர பாக்கியம், பூமி, வீடு, வாகன சுகபோகத்துக்காக கடன் வாங்கும் சூழ்நிலையாகும். அது சுபக் கடனாகும்.

வசிஷ்டரிடமிருந்து காமதேனு பசுவைப் பெற முடியவில்லையே என்ற தோல்வித் துயரத்தால்தான், கௌசிக மன்னன் அரசு பதவியைத் துறந்து தவம் செய்து பிரம்மரிஷி விசுவாமித்திரராகி சாதனை புரிந்தார். எனவே நம்முடைய வளர்ச்சிக்கு முன்னேற்றத்துக்கும் போட்டியும் எதிர்ப்பும் அவசியம். தோல்வியும் வெற்றிக்குப் படிக்கல்.

8-க்குடைய குரு 8-ஆமிடத்தையே பார்ப்பதால் ஆயுள்விருத்தி. விபத்துகள் விலகும். பாவகாதிபதி பாவகத்தைப் பார்ப்பது பாவக புஷ்டி என்பது பலதீபிகை விதி! அதுமட்டுமல்ல; ஆயுள்காரகன் சனியும் உச்சம் பெற்று 8-ஆம் இடத்தைப் பார்ப்பது சிறப்பு. 90 வயது, 100 வயது என்று ஆயுள் நீடிக்கும். அவருடன் ராகு- கேது சம்பந்தப் படுவதால் செயல் தன்மை பாதிக்கும். நோய் நொடி இருக்கும். கலைஞர் நீண்ட ஆயுளோடு திடகாத்திரமாக இருந்தாலும் நடக்க முடியாமல் வீல்சேரில் இருக்கிறார் அல்லவா! ஆபத்துகளும் விபத்துகளும் வைத்திய சிகிச்சை போன்றவையும் வந்தாலும் உயிர்ச்சேதம் வராது. வைத்தியச் செலவும் ராஜவைத்தியச் செலவு. அப்படிப்பட்டவர்கள் ஆரோக்கிய விருத்திக்கு தன்வந்திரி சம்புடித மிருத்யுஞ்சய ஆயுஷ் ஹோமம் செய்துகொள்ளலாம்.

சென்னை- வேலூர் பாதையில் உள்ள வாலாஜாபேட்டையிலிருந்து சோளிங்கர் போகும் பாதையில் தன்வந்திரி ஆரோக்கிய பீடம் உள்ளது. லட்சுமி பணத்துக்கு அதிபதி. சரசுவதி கல்விக்கு அதிபதி. பராசக்தி வீரத்துக்கு அதிபதி. ஆரோக்கியத்துக்கு அதிபதி தன்வந்திரி. ஆரோக்கியத்துக்குரிய கடவுள் தன்வந்திரிதான். அதற்கு தனிக்கோவில் தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தில், ரெங்கநாதர் கோவிலில் தாயார் சந்நிதி போகும் வழியில் தன்வந்திரி பகவானுக்கு தனிச்சந்நிதி உண்டு. திண்டுக்கல் அருகில் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலிலும் தன்வந்திரி பகவானுக்கு தனிச்சந்நிதி உள்ளது. கோவையில் தன்வந்திரி மருத்துவமனையிலும் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்து தன்வந்திரி ஹோமம், பூஜை, அர்ச்சனை செய்கிறார்கள். வசதியுள்ளவர்கள் மேற்கண்ட இடங்கள் சென்று ஹோமம் செய்யலாம். வசதியில்லாதவர்கள் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அமிருதகலச ஹஸ்தாய ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய ஆரோக்கிய லட்சுமி சமேத தன்வந்த்தரயே மஹா விஷ்ணவே நமஹா!' ஜெப பாராயணம் என்ற தன்வந்திரி மூல மந்திரத்தை தினசரி காலையும் மாலையும் செய்யலாம்.

கடன்கள் அதிகம் இருந்து அதனால் கஷ்டப்படுகிறவர்கள்- வட்டி கட்ட முடியாதவர்கள், கடன்காரர்களின் தொல்லையால் அவமானப் படுகிறவர்கள் திருச்சேறை சென்று சாரபரமேஸ்வரரை வழிபடலாம். கும்பகோணத்திலிருந்து திருவாரூர் போகும் பாதையில் குடவாசலுக்கு முன்பு திருச்சேறை இருக்கிறது. அவ்வூரில் சாரநாத பெருமாள் கோவிலும் அதற்கு கிழக்கே சாரபரமேஸ்வரர் கோவிலும் இருக்கிறது. சாரபரமேஸ்வரர் திருக்கோவிலில் 11 திங்கட்கிழமை வசிஷ்டர் இயற்றிய தாரித்ரிய துக்க தஹன சிவ ஸ்தோத்ரத்தை (11 பால்களை) சொல்லி, எல்லாவிதமான அபிஷேகம், அர்ச்சனை செய்யப்படுகிறது. சுந்தர மூர்த்தி குருக்களும் சுப்ரமணிய குருக்களும் (சகோதரர்கள்) முறையாக ஆன்மார்த்தமாக பூஜை செய்கிறார்கள். 11 திங்கட்கிழமை நேரிலும் போகலாம் அல்லது பணம் அனுப்பி பிரசாதத்தை தபாலில் பெற்றுக் கொள்ளலாம். அந்தப் பாடல்களை அச்சிட்டு அவர்களே அனை வருக்கும் கொடுக்கிறார்கள். அதையும் தினசரி படிக்கலாம். பாராயணம் செய்யலாம். உடனே கடன் முழுவதும் அடையா விட்டாலும் கடன்காரர்கள் நீங்கள் சொல்லும் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு சண்டை போடாமல் போய்விடுவார்கள். அனுபவப்பூர்வமான உண்மை. அலைபேசி: 94437 37759, 94426 37759. எஸ். சுந்தரமூர்த்தி குருக்கள், தெற்கு வீதி, திருச்சேறை- 612 605. (கும்பகோணம் தாலுகா).

6-ல் சனியோடு ராகு- கேது சம்பந்தப்படுவதால், திருச்சேறைக்கு முன்னால் நாச்சியார் கோவில் என்று ஒரு ஸ்தலம் இருக்கிறது. சீனிவாசப் பெருமாள் கோவில். அந்தப் பெருமாளுக்கு இரண்டு கைகள். (மற்ற ஆலயங்களில் நான்கு கைகள். சங்கு, சக்கரம் மற்ற ஆயுதங்களை ஏந்தியிருக்கும்). முனிவர் வளர்த்த மகளை (லட்சுமியை) திருமணம் செய்ய பெருமாள் வந்ததாக ஐதீகம். மூலஸ்தானம் அருகில் தனிச் சந்தியில் கல் கருடன் சந்நிதி உண்டு. சுமார் நான்கு அடி உயரத்தில் கருங்கல்லாலான விக்கிரகம். கோவில் அமைப்பு மூன்று நிலையாக உயரமான மண்டபமாக இருக்கும். வருடத்தில் ஒருநாள் பங்குனி மாதம் கல்கருடனை மூலஸ்தானத்திலிருந்து வெளியே எடுத்து வருவார்கள். நான்கு பேர் மட்டும் கல்கருடனை தூக்கி வருவார்கள். அடுத்த மண்டபத்துக்கு கொண்டு போகும்போது எட்டு பேர் தூக்குவார்கள். அதற்கு அடுத்த மண்டபத்துக்குக் கொண்டுவரும்போது பதினாறு பேர் தூக்கவேண்டும். அதற்கு கீழ் மண்டபம் வரும்போது 32 பேராகிவிடுவார்கள். ஒவ்வொரு மண்டபத்துக்கு வரும்போதும் கல்கருடனுக்கு எடை கூடிக்கொண்டே வரும். கீழ்த்தளம் வந்ததும் உற்சவமூர்த்தியை கல்கருடனில் வைத்து அலங்கரித்து சகடையில் வைத்து ஊரை வலம் வருவார்கள். அதேபோல கல்கருடனை கீழ் தளத்தில் இருந்து மூலஸ்தான சந்நிதிக்கு கொண்டு போகும்போது 32-16-8-4 என்று எண்ணிக்கையும் குறையும், எடையும் குறையும். சில வருடங்களுக்கு முன்பு அக்கோவிலில் இரண்டு கருடன்கள் வாழ்ந்தன. அதில் ஒரு பெண் கருடன் கோவிலில் வெளிப்பிராகாரத்தில் உயிரை விட்டுவிட்டது. பெண் கருடன் பிரிவைத் தாங்காமல்  ஆண் கருடனும் இறந்துவிட்டது. இரண்டு கருடன்களையும் கோவில் பிராகாரத்தில் சமாதி வைத்து மண்டபம் எழுப்பி பூஜை நடக்கிறது. கல்கருடன் விக்கிரகத்தில் ஒன்பது இடங்களில் நாகர் உருவம் இருக்கும். வெள்ளி அங்கி சாத்தியிருக்கும்போது நவநாகர்கள் நன்றாகத் தெரியும். ஏழு வியாழக்கிழமை கல்கருடனுக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் கொடுப்பார்கள். நேரில் போக முடியாதவர்கள் தேவஸ்தானத்தில் பணம் கட்டினால் வீட்டு விலாசத்துக்கு பிரசாதம் அனுப்பி விடுவார்கள். ராகு- கேது தோஷம் விலகும். புத்திர தோஷம் நீங்கும். திருமணத் தடை போகும். உங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும். ராகு தசை, ராகு புக்தி நடப்பவர்கள், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் அவசியம் போகவேண்டிய தலம். கும்பகோணத்திலிருந்து 7 கிலோ மீட்டர். குடவாசல்- திருச்சேறை போகும் பாதை.

திருச்சேறையிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் குடவாசல் உள்ளது. அங்குள்ள சிவன் கோவில் பழயையான பாடல் பெற்ற ஸ்தலம். கோவில் அமைப்பே வித்தியாசமாக இருக்கும். கீழே அம்பாள் சந்நிதி. மண்டபத்தின் மேல் சுவாமி வீற்றிருப்பார். படியேறிப் போய் தரிசிக்க வேண்டும். மேற்கு நோக்கிய சந்நிதி. கருடபகவான் இந்த சிவ பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற அற்புத ஸ்தலம். ராகு- கேது தோஷம் விலக இங்கும் சென்று வழிபட வேண்டும்.

குடவாசலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் சேங்காலிபுரம் என்று ஒரு சின்ன கிராமம். அங்கு தத்தாத்ரேயர் கோவில் இருக்கிறது. அவர் சந்நிதியில் கார்த்தவீர்யார்ஜுன யந்திரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அந்த சந்நிதியை பிரதிஷ்டை செய்த மகான் நேபாளில் ரெயில்வே ஸ்டேஷன் மாஸ்டராகப் பணியாற்றி, வேலையை ராஜினாமா செய்து விட்டு காசியில் குருநாதரிடம் உபதேசம் வாங்கி, சேங்காலிபுரம் வந்து தங்கி, தத்தாத்ரேயர் பஞ்சலோகமூர்த்தியையும் கார்த்தவீர்யார்ஜுன யந்திரத்தையும் ஸ்தாபிதம் செய்து பூஜை செய்து வந்தார். சந்நிதி எதிரில் அவர் ஜீவசமாதி விளங்குகிறது. அதன்மேல் துளசி மாடம் உள்ளது. கார்த்திகை மாதம் மிருகசீரிட நட்சத்திரன்று தத்தஜெயந்தி நடக்கும். (ஒரு வாரம்). கடைசி நாளில் தொட்டில் உற்சவம், பாலூட்டும் உற்சவம், நடக்கும். பத்துப்பதினைந்து வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத சுமங்கலிப் பெண்கள் மேற்கண்ட தொட்டில் உற்சவத்தில் கலந்து கொண்டால் வாரிசு கிடைக்கும் என்பது அனுபவபூர்வமான உண்மை. தை மாதம் குருநாதர் குரு பூஜை நடக்கும். மேனேஜிங் டிரஸ்டி நாக கிருஷ்ணன் மகன் சுப்பிரமணி, செல்: 94872 92481-ல் தொடர்புகொண்டு போகலாம்.

கல்கருடன், திருச்சேறை கடன் நிவர்த்தீஸ்வரர் கோவில், குடவாசல் சிவன் கோவில், சேங்காலிபுரம் தத்தாத்ரேயர் கோவில் எல்லாம் வரிசையாக அடுத்தடுத்து உள்ளன.

மிதுன குரு 9-ஆம் பார்வையாக 10-ஆம் இடம் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால்- 10-ஆம் இடம் கும்பத்துக்கு குரு 2, 11-க்குடையவர்; அவர் 10-ஆம் இடத்துக்கு 5-ல் திரிகோணத்தில் நிற்பதாலும், குரு ரிஷப ராசிக்கு 11-க்குடையவர் என்பதாலும் உங்களுடைய முயற்சியில் வெற்றியும் செய்தொழில் வகையில் லாபமும் உண்டாகும். சேமிப்பும் உண்டாகும்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

குருவின் அஸ்தமனம் ஒரு மாதம் உங்களுடைய செயல்களிலும் காரியங்களிலும் முயற்சிகளிலும் தடை, தாமதம், குறுக்கீடு முதலிய பலன்களைச் சந்திக்கக் கூடும். குரு 8, 11-க்குடையவர். மற்ற நேரங்களில் 11-ஆம் இடத்து நற்பலனும், 2-ல் நிற்கும் பலனும் அற்புதமாக இருக்கும். குருவின் வக்ரத்தில் 8-ஆம் இடத்துப் பலன் உக்ரமாக நடக்கும். சஞ்சலம், கவலை, ஏமாற்றம், நம்பிக்கைத் துரோகம் முதலிய பலன்களையும் சந்திக்க நேரலாம். இக்காலம் குருப் பிரீதியாக ராஜபாளையம்- தென்காசி பாதையில் வாசுதேவநல்லூரிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தாருகாபுரம் என்ற ஊரில் மத்தியஸ்த நாதர் சிவன் கோவிலும் அகிலாண்டேஸ்வரியம்மாள் சந்நிதியும் உள்ளது. மிகமிகப் பழமையான கோவில். சிவன் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி சந்நிதி உண்டு. தட்சிணாமூர்த்தி சிலையில் நவகிரகங் களும், சனகாதி முனிவர்களும் இருப்பார்கள். இவரை வழிபடுவதால் நவகிரகங்களும் அனுக்கிரகங்களாக விளங்குவர்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

இக்காலம் வக்ரத்தில் உக்ரபலம் என்பதால் குரு இருத்த இடத்துப் பலனும், குரு பார்த்த இடத்துப் பலனும் யோக பலனாக அமையும். அதிலும் ஜனன காலத்தில் குரு வக்ரமாக இருக்கும் ஜாதகர்களுக்கு, இப்போது கோட்சாரத்தில் வக்ரமாக இருக்கும் சமயம் அற்புத பலன்களாக நடக்கும். எதிர்பாராத லாபம், வெற்றி, சேமிப்பு, குடும்பத்தில் மங்களகாரியம், தனவரவு ஆகிய பலன்கள் நடக்கும்.

கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி உங்கள் நீண்டகாலக் கனவுகளையும் திட்டங்களையும் நிறைவேற்றும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலப் பலன்கள் நல்ல முறையில் செயல்படும். படிப்பு, திருமணம், வாரிசு, வேலை உயர்வு போன்ற அற்புத பலன்களை எதிர்பார்க்கலாம். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்று வழிபடலாம். அதன் அருகில் திருமங்கலக்குடி உள்ளது. அங்கு பிராணநாதேஸ்வரர் கோவிலில் மாங்கல்யம் காத்த மங்களாம்பிகை சந்நிதியும் உண்டு. அங்கும் சென்று வழிபடலாம்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி வாழ்க்கையில் புதிய திருப்பத்தையும் முன்னேற்றத்தையும் உண்டாக்கும். கடந்த சில ஆண்டுகளாக கஷ்டத்தையும் நஷ்டத்தையும் போராட்டத்தையும் கடன் தொல்லை களையும் சந்தித்தவர்களுக்கு இனிமேல் விடிவு காலம்! வீழ்ச்சி யடைந்தவர்களுக்கு இனி தாழ்ச்சியில்லை. தன்னம்பிக்கையும் தைரிய மும் உங்களைத் தலைநிமிரச் செய்யும். புதுவாழ்வும் புனர்வாழ்வும் உண்டாகும். செல்வாக்கும் சிறப்பும் உண்டாகும்.

மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:

கடந்த காலத்தில் (ரிஷபத்தில் குரு இருந்த காலம்) கஷ்ட நஷ்டம், இழப்பு, ஏமாற்றம் போன்றவற்றைச் சந்தித்தவர்களுக்கு இனிமேல் யோகம், தனவரவு, செல்வாக்கு, பதவியோகம் உண்டாகும். திருமணம், புதிய தொழில் முயற்சி, வாரிசு யோகங்களைத் தரும். வீடு, மனை, வாகன யோகம் அமையும். குடும்பத்தில் சுபமங்களச் செலவுகள் உண்டாகும்.

மேஷம்



(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

        மேஷ ராசி அன்பர்களே!

கடந்த ஓராண்டு காலமாக மேஷ ராசிக்கு 2-ல் இருந்த குரு இப்போது 3-ஆம் இடத்துக்கு மாறுகிறார். "தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்' என்பது பாடல். '2-ஆம் இடத்தில் இருந்தபோது பாக்கியாதிபதி குரு 2-ல் நின்று பாக்கிய ஸ்தானத்தையே பார்த்ததால், பொருளாதாரத்திலும் குடும்பச் சூழ்நிலையிலும் கொடுக்கல்- வாங்கலிலும் குறைவில்லாமல் எல்லாம் நிறைவாக நிகழ்ந்தன. அதேசமயம் தொழில் ஸ்தானாதிபதி சனி துலாத்தில் உச்சம் பெற்று மேஷ ராசியை பார்த்தார். ஆனால் குருவும் சனியும் 6 ஷ் 8 சஷ்டாஷ்டகமாக இருந்ததால் தொழில், குடும்பம், வாழ்க்கை, பதவி, உத்தியோகத்தில் பல பிரச்சினைகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. சிலருக்கு வேண்டாத விவகாரங்களும், வேலையில் இடப்பெயர்ச்சி களும் அல்லது குடியிருப்பு மாற்றங்களும் ஏற்பட்டன. 

ரிஷப குரு மேஷ ராசிக்கு 6-ஆம் இடம்,  8-ஆம் இடம், 10-ஆம் இடங்களைப் பார்த்தார். 6-ஆம் இடம் கடன், போட்டி, பொறாமை, எதிர்ப்பு, இடையூறுகளைக் குறிக்கும் இடம் என்பதால், இவற்றை யெல்லாம் சந்தித்தீர்கள். திருமணம் ஆகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் நடந்தது. (2-ஆம் இடம் குடும்பத்தைக் குறிக்கும் இடம்). திருமணம் ஆனவர்கள் மனைவி பேரில் புதிய உப தொழில்களை ஆரம்பித்திருப்பார்கள். தொழில் வகைக்காக அல்லது புதிய வாகன வகைக்காக அல்லது புதிய இடம் கிரயம் முடிக்க கடன் வாங்கியிருக்கலாம். நகைகளை வைத்து "ஜுவல் லோன்' போட்டிருக்கலாம். அதற்காக வட்டி செலுத்தி நாணயத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கவலைப்பட்டிருக்கலாம்.

8-ஆம் இடம் என்பது சஞ்சலம், ஏமாற்றம், விபத்து, இழப்பு, அபகீர்த்தி, அவதூறு ஆகியவற்றைக் குறிக்கும் இடம். இந்த இடத்தை பாக்கியாதிபதி குரு பார்த்ததால், ரிஷப குரு மேஷ ராசிக்காரர்களுக்கு மேற்கண்ட துர்ப் பலன்களையெல்லாம் கொடுத்தார். குரு இயற்கையில் சுபகிரகம். அவர் எந்தெந்த இடத்தைப் பார்க்கிறாரோ அந்த இடத்துப் பலன்களை அதிகப்படுத்துவார். நல்ல இடத்தைப் பார்த்தால் நன்மைகளை அள்ளித் தருவார் கெட்ட இடங்களைப் பார்த்தால் கெட்ட பலன்களை அள்ளித் தருவார்,. 6-ஆம் இடத்தைப் பார்த்ததால் எதிரி, கடன், நோய், விவகாரங்களை அதிகமாகவே உருவாக்கினார். அதேபோல 8-ஆம் இடத்தைப் பார்த்ததால் உறவினர் பகை, ஏமாற்றம், இழப்பு, உதவி செய்தும் உபத்திரவம், கீழே விழுந்து காயம்படுதல், விபத்து, தேவையற்ற அவதூறு, அபகீர்த்தி, குடும்பக் குழப்பம், கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, விவகாரம் ஆகிய பலன்களையும் சந்தித்தீர்கள். கெட்ட கிரகம் கெட்ட இடத்தைப் பார்த்தால் கெடுதல்களை அழிக்கும். கெட்ட கிரகம் சுப கிரகங்களைப் பார்த்தால் அந்த இடத்து சுபபலன்களை அழிக்கும். இதில் ஒரு சந்தேகம் வரும். "குரு பார்க்கக் கோடி தோஷம் விலகும் என்பார்கள்- அப்படியிருக்க 6, 8, 12-ஆம் இடங்களை குரு பார்ப்பதால் மேற்படி கெடுதல்கள் விலகாதா' என்று கேட்கலாம். கெட்ட இடங்களைப் பார்க்கும் குரு கெட்டதைக் கொடுத்து பிறகு அதன் தோஷத்தைப் போக்கும். உதாரணமாக ஐஸ்கிரீம் கேட்டு அழுது பிடிவாதம்செய்யும் குழந்தையை அடித்து அழவைத்த பிறகு, கடைசியில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து சமாதானப்படுத்துவது போல!

இவையெல்லாம் கடந்த கால அனுபவங்கள். இப்போது குரு மேஷ ராசிக்கு 3-ல் மிதுன ராசிக்கு மாறியிருக்கிறார். மிதுன குரு 5-ஆம் பார்வையாக மேஷ ராசிக்கு 7-ஆம் இடத்தைப் பார்ப்பதால், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத் தடை விலகும். ஆண்களானாலும் பெண்களானாலும் திருமணம் கூடிவிடும். மேஷ ராசிக்கு தற்போது ஏழில் சனியும் ராகுவும் நிற்க, அவர்களை மேஷத்தில் உள்ள கேது பார்ப்பதால் தோஷமுண்டு. அதனால் பருவ வயது வந்தும் பலருக்கு திருமணம் ஆகாமல் தள்ளிப் போகும். அல்லது தடைப்படலாம். பொதுவாக 7-ல் சனி இருந்தால் 30 வயதாகியும் பெண்களுக்குத் திருமணம் நடக்காது. ஆண்களுக்கு 40 வயது வரை திருமணம் நடக்காது. இப்போது ராகுவுக்கும் சனிக்கும் குரு பார்வை கிடைப்பதால் அவர்களுக்கு மேற்கண்ட தோஷம் நிவர்த்தியாகும். குரு பார்க்க கோடி தோஷம் போகுமல்லவா!

இருந்தாலும் திருமணத் தடை விலகவும் நல்ல மனைவி அல்லது நல்ல கணவன் அமையவும் ஹோமம் செய்துகொள்வது நல்லது. பெண்கள் பார்வதி சுயம்வரகலா ஹோமம் செய்து அபிஷேகம் செய்துகொண்டால் நல்ல மாப்பிள்ளை அமையும். ஆண்கள் கந்தர்வராஜ ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். இப்படி ஜனன ஜாதகத்தில் சனி, ராகு- கேது தோஷம் உடையவர்களுக்கு இளவயதில் திருமணம் ஆகியிருந்தால் விவாகரத்து அல்லது தம்பதிகளுக்குள் பிரிவு, பிளவு உண்டாகியிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது குரு பார்வை 7-க்கு கிடைக்கும் காலத்தில் மறுமண யோகம் செயல்பட, புனர்விவாக மந்திர ஜெபம் செய்து மேற்படி ஹோமம் செய்தால் மறுமணம் நடக்கும்.  இந்த ஹோமங்களை காரைக்குடி நாகநாதசுவாமி கோவிலிலும், பள்ளத்தூர் அருள் நந்தி ஆஸ்ரமத்திலும், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திலும், இராமநாதபுரம் அருகில் தேவிப்பட்டினத்தில் சக்தி சீனிவாச சாஸ்திரி  ஆசிரமத்திலும் முறையாகச் செய்வார்கள். 

சனி, செவ்வாய், ராகு- கேது சம்பந்தம் இருந்தால் (7, 8, 2-ஆம் இடங்களில்) ஆணோ பெண்ணோ ஜாதிவிட்டு ஜாதி திருமணம் செய்துகொள்வார்கள். சில பெண்கள் தன்னிலும் வயது குறைந்த ஆண்களை விரும்பலாம். அல்லது தன்னைவிட படிப்பு குறைந்த பையனை விரும்பலாம். சில ஆண்கள் திருமணமான பெண்களைக்கூட நேசிக்கலாம். குழந்தைகள் பெற்ற வயது மூத்த பெண்ணைக்கூட விரும்பலாம். அப்படிப்பட்டவர்கள் காமோகர்ஷண ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்துகொண்டால், முறையற்ற ஆசை- தவறான காதல்- கூடாத பழக்க வழக்கம் மாறிவிடும். மிதுன ராசியில் குரு இருக்கும் இக்காலகட்டத்தில்- 7-ஆம் இடத்தை 5-ஆம் பார்வையாக பார்க்கும் காலத்தில் இந்தப் பரிகாரங்களைச் செய்தால் உடனடியாக கைமேல் பலன் கிடைக்கும். அதாவது காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டும். சுத்த ஜாதகங்களுக்கு இந்த பரிகாரம் தேவையில்லை.

மிதுன குரு 7-ஆம் பார்வையாக மேஷ ராசிக்கு 9-ஆம் இடத்தைப் பார்க்கிறார். 9-ஆம் இடம் தகப்பனார், பூர்வ புண்ணியம், பாக்கிய ஸ்தானம். 9-ஆம் இடத்துக்குடையவரே  9-ஆம் இடத்தைப் பார்ப்பது யோகம். அதாவது பாவகாதிபதி பாவகத்தைப் பார்க்க பாவக புஷ்டி. அதனால் குருவருளும் திருவருளும் பரிபூரணமாகத் திகழும். தகப்பனார் வகை பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். 9-ஆம் இடத்துக்கு குரு 9, 12-க்குடையவர் என்பதால் (12 விரயம்) சில சொத்துகளை விக்கிரயம் செய்து வேறு புதிய இடம் வாங்கலாம். இதற்கு பரிவர்த்தனை என்று பெயர். ஜாதக ரீதியாக 9-ஆம் இடம், 5-ஆம் இடங்களில் குரு சம்பந்தம் இருந்தால் உபாசனா தீட்சை வாங்கலாம். யோகா, தியானப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபாடு உண்டாகும். ராகு- கேது தசாபுக்தி சம்பந்தம் இருந்தால் கோவில் திருப்பணிகளில் ஈடுபடலாம். டிரஸ்டி, திருப்பணி கமிட்டி உறுப்பினர் ஆகலாம். நீண்ட கால தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். ஆன்மிக யாத்திரை போகலாம். சிலர் சீரடி, காசி, கயா, தர்மசாலா, மூகாம்பிகை கோவில், கைலாஸ யாத்திரை, ரிஷிகேஸ் போன்ற புண்ணிய தலங்களுக்குப் போய்வரும் பாக்கியம் உண்டாகும். குரு 9-க்கும் உடையவர், 12-க்கும் உடையவர். 12 என்பது பயணத்தையும் குறிக்கும், விரயத்தையும் (செலவுகளை) குறிக்கும். எனவே சுபவிரயம்- புண்ணிய தலங்களுக்குப் போய்வர சுபச்செலவு உண்டாகும். வீட்டிலும் குடும்பத்திலும் சுபமங்களச் செலவுகள் உண்டாகும்.

சொந்தக்காரர்கள்- சுற்றத்தார்கள் வகையிலும் செலவுகள் ஏற்படலாம். அது சம்பந்தமாக புதிய கடன்கள் வாங்க நேரும். அதற்காக வட்டி கட்டுவதும் செலவுதான்.

1-6-2013 முதல் 1-7-2013 வரை குரு அஸ்தமனம்

மேஷ ராசிக்கு 9-க்குடைய குரு 3-ல் அஸ்தமனம் என்பதால் தகப்பனார் வகை உறவு முறையில் சில பிரச்சினைகளை புதிய அனுபவமாக சந்திக்க நேரும். அத்துடன் 3-ஆம் இடம் சகோதரர்- பங்காளி வகையையும் நண்பர்களையும் குறிக்கும் இடம். குருவின் அஸ்தமனத்தால் மேற்படி இடங்களில் சங்கடமான சம்பவங்களைச் சந்திக்கக் கூடும். சகோதர- சகோதரி, பங்காளி வகையில் வருத்தமூட்டும் நிகழ்ச்சிகள் நடக்கலாம். அல்லது வீட்டுக்குத் தெரியாமல் உடன் பிறந்தவர்கள் பட்ட கடன்களை அல்லது பொருளாதார நெருக்கடி களைத் தீர்க்க நீங்கள் முயன்று, அதனால் நீங்களும் சுமைகளைச் சுமக்கலாம். அதேபோல நண்பர்களுக்கு உதவி செய்து வம்பில் மாட்டிக் கொள்ளலாம்.

ஒரு உதாரணம்- இரண்டு நண்பர்கள் நகமும் சதையுமாகப் பழகியவர்கள். கொடுக்கல்- வாங்கல், வரவு- செலவுகளில் கலந்து கொண்டவர்கள். ஒரு கட்டத்தில் ஒரு நண்பரின் மைத்துனர் வீட்டில் விசேஷம். அதற்கு 50 ஆயிரத்துக்குமேல் செய்முறை செய்யவேண்டும். நண்பர் பணம் புரட்ட இயலாத சூழ்நிலை. அவர் மனைவி தன் அண்ணன் வீட்டு விசேஷத்துக்கு அவசியம் செய்தாக வேண்டும் என்று வற்புறுத்த, இருவருக்கும் வாக்குவாதம் உருவானது. இதனூடே அவர் மனைவி தனது நகையை அடமானம் வைத்து, கணவரின் நண்பரிடம் மொய் செய்யப் பணம் கொடுத்து, அவர் கொடுப்பதுபோல கொடுக்கச் சொன்னார். தான் கொடுத்ததாகச் சொன்னால் திருப்பித் தரமாட்டார் என்பதற்காக மறைத்தார். நண்பரும் அப்படியே தான் கொடுத்த மாதிரி பணத்தைக் கொடுத்துவிட்டார். ஆனால் சிறிது நாளில் உண்மை தெரிந்துவிட்டது. மனைவிக்கு உடந்தையாக நண்பரும் பொய் சொல்லிவிட்டார் என்று இருவரும் பகையாகிப் பிரிந்துவிட்டார்கள். 

அஸ்தமன தோஷமுள்ள ஒருமாதப் பொழுதை சுலபமாக சமாளிக்க சித்தர்களின் ஜீவசமாதிகளுக்குச் சென்று வழிபட வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனையோ ஜீவசமாதிகள் இருக்கின்றன. அதில் ஒன்று நாமக்கல் அருகில் சேந்தமங்கலத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோவில். (சாமியார்கரடு பஸ் நிறுத்தம்). தத்தாத்ரேயர் சந்நிதிக்குக்கீழ் சுயம் பிரகாச சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது. புதுக்கோட்டை ஜட்ஜ் சுவாமிகளின் சீடர். ஸ்கந்தாஸ்ரம சாந்தானந்த சுவாமிகளின் குருநாதர், அவதூதர். அங்கு சென்று தியானம் செய்யலாம். அந்த எல்லையில் ஏழரை அடி உயரத்தில் சனீஸ்வரரும், அவர் எதிரில் ஒன்பது அடி உயரத்தில் பஞ்சமுக ஆஞ்சனேயர் சந்நிதியும் உண்டு. இதுதவிர பஞ்சமுக விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, ஐயப்பன், கருப்பர், இடும்பன், முருகன் ஆகிய சந்நிதிகள் உண்டு. அர்ச்சகர் பாலசுப்பிரமணியம், அலைபேசி: 93454 38950-ல் தொடர்புகொண்டு போகலாம்.

24-10-2013 முதல் 20-2-2014 வரை குரு வக்ரம்

குரு அஸ்தமனத்தில் கெடுதல் நடந்தாலும் குரு வக்ரத்தில் நற்பலன்கள் நடக்கும். குறிப்பாக ஜனன கால ஜாதகத்தில் குரு வக்ரமாக இருந்தால் கோட்சாரத்தில் குருவின் வக்ரம் யோகமாக இருக்கும். நற்பலன்கள் நடைபெறும். குரு நின்ற இடம் 3-ஆம் இடம். சகோதர அனுகூலம், நண்பர்கள் நல்லுதவி, உடன்பிறப்புக்களின் ஒத்துழைப்பு, மனதில் நம்பிக்கை, தைரியம், எதிர்காலத்தைப் பற்றிய தெளிவு ஆகிய பலன்களை எதிர்பார்க்கலாம். குரு நின்ற இடத்துப் பலனைப்போலவே அவர் பார்வைபடும் இடங்களும் குருவின் வக்ரகாலத்தில் மிகச் சிறப்பாக அமையும்.

7-ஆம் இடம், 9-ஆம் இடம், 11-ஆம் இடம் ஆகியவை குருவின் பார்வைபடும் இடங்கள். குருவின் வக்ர காலத்தில் இவையெல்லாம் சீரும் சிறப்பும் மேன்மையும் அடையும். திருமணமாகும் பருவத்தில் உள்ளவர்களுக்கு திருமணம் நிறைவேறும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இணைந்து வாழலாம். தனிமையில் தவித்தோர் இணைந்து இனிமை காணலாம்.

அதேபோல 9-ஆம் இடத்துப் பலன்களும் உயர்வாக பலன் தரும். உன்னதமாக இருக்கும். ஆன்மிகத்தில் ஆனந்தமடையலாம். 11-ஆம் இடம் லாப ஸ்தானம், ஜெய ஸ்தானம். முயற்சிகளில் முன்னேற்றமும் வெற்றியும் உண்டாகும். கருதிய காரியங்களில் லாபம் பெருகும். வில்லங்கம், விவகாரங்களில் வெற்றியுண்டாகும்.

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி ஆன்மிக ஈடுபாடும் நாட்டமும் ஏற்படுத்தும். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையூட்டும். சங்கடங்கள் மலைபோல வந்தாலும் பனிபோல விலகிவிடும். குருவருளும் திருவருளும் உங்களை வழிநடத்தும். சிலர் ஜோதிடப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்கலாம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை வழிபடவும்.

பரணி நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி மகிழ்ச்சியும் மனநிறைவையும் தரும். குடும்பத்தில் மங்கள சுபகாரியங்கள் நடக்கும். சிலருக்கு இடம், வீடு, யோகத்துக்கு பிள்ளையார்சுழி போடும். தேக சுகம் ஏற்படும். கணவர் அல்லது மனைவி வகையில் நற்பலன்கள் உண்டாகும். கும்பகோணம் சூரியனார் கோவில் அருகில் கஞ்சனூர் சென்று வழிபடவும். அது சுக்கிரனுக்குரிய தலம்.

கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்த குருப்பெயர்ச்சி உங்கள் நீண்ட காலக் கனவுகளையும் திட்டங்களையும் நிறைவேற்றும். வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமையுண்டாகும். பிள்ளைகளின் எதிர்காலப் பலன்கள் நல்ல முறையில் செயல்படும். படிப்பு, திருமணம், வாரிசு, வேலை உயர்வு போன்ற அற்புத பலன்களை எதிர்பார்க்கலாம். கும்பகோணம் ஆடுதுறை அருகில் சூரியனார் கோவில் சென்று வழி படலாம். அதன் அருகில் திருமங்கலக்குடி உள்ளது. அங்கு பிராண நாதேஸ்வரர் கோவிலில் மாங்கல்யம் காத்த மங்களாம்பிகை சந்நிதியும் உண்டு. அங்கும் சென்று வழிபடவும்.