Monday, March 12, 2012

வாய்ப்பாடி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

வாய்ப்பாடி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடந்த மாதம் வாய்பாடியில் நடைபெற்ற கும்பாபிஷேகம் நிகழ்வுகள் ஒரு தொகுப்பாக,

உங்கள் பார்வைக்கு.....






Friday, February 10, 2012

சென்னிமலை

 

இறைவன்சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)
இறைவிஅமிர்த வல்லி, சுந்தர வல்லி
தல மரம்புளியமரம்
தீர்த்தம்மாமாங்கம்
புராண பெயர்புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி
கிராமம்/நகரம்சென்னிமலை
மாவட்டம்ஈரோடு
மாநிலம்தமிழ்நாடு
வரலாறு : நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.திருவிழா : தைப்பூசத் திருவிழா 15 நாள், 30 ஆயிரம் பக்தர்கள் கூடுவர் பங்குனி உத்திரம் 7 நாள் 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர் கந்த சஷ்டி 6 நாள் 5 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். மாதாமாதம் கிருத்திகை அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழயும். தவிர முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் விசேசமாக இருக்கும். பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் இத்தலம் பக்தர்களின் வருகையால் நிரம்பி வழியும்
சிறப்பு : கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது. மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : சத்தியஞானி புண்ணாக்கு சித்தர். மலைமேல் இவர் குகை உள்ளது. அம்மன் சந்நிதியிலிருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு சித்தர் (புண்ணாக்கு சித்தர் கோயில் வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவணமாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது.
இங்கு விநாயகர் திருச்சந்தி விநாயகரõகவும், காவல் தெய்வமாக இடும்பன் அருள்பாலிக்கிறார்கள் .
சென்னிமலையின் விளக்கம் : சென்னிமலை (சிரகிரி – சிரம் சென்னி, கிரி-மலை)
பிரார்த்தனை : கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது.
இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.
இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். இது இத்தலத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை என தெரிவிக்கிறார்கள்
நேர்த்திக்கடன் : முருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. தவிர காவடிஎடுத்தல், முடிக்காணிக்கை முதலியன, கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம்.
தல சிறப்பு : மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது.
இது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, படிகள் 1320.
அதிசயத்திலும் அதிசயமாக இரட்டை மாட்டு வண்டி 1320 திருப்படிகள் வழியே தங்கு தடையின்றி ஏராளமான செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே மலையேறிய அதிசயம் நடந்தது.
சிறப்பு மிகுந்த சஷ்டி விரதம் : குழந்தை வரம் வேண்டுவோர் முறையாக சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்.
சிரசுப் பூ உத்திரவு கேட்டல் : திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்டவர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை.
முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு.
கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம்.
வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.
அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம்.
முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம்.
இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம்.
அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை. இவர் மிகவும் விசேஷமானவர். கோயிலுக்கு பின்புறம் பிண்ணாக்கு சித்தர் குகை உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது.
அடர்ந்த மரங்கள் அடர்ந்த மலை மீது அமைந்துள்ள மிக அழகான அமைதியான சிறப்பு வாய்ந்த கோயில்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை – 638 051 ஈரோடு மாவட்டம்

Tuesday, February 07, 2012

காதலித்தாலே அச்சமென்ன?

காதலில் எத்தனை கதைகள் வந்தாலும் சலீம் அனார்கலியின் காதல்தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.பேரரசு அக்பர் வாரிசுதான் சலீம்,அனார்கலி அரசவையில் நடனமாடும் மங்கையர் வகையை சேர்ந்தவர்..சலீம் உண்மை.அனார்கலி கற்பனைக்காக உருவாக்கப்பட்ட பாத்திரம்.இந்த கதையை மையமாக வைத்து 1960களில் இந்தியில் 'மொகலே ஆஷம்' திரைப்படம் ஆஷிப் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது.

இதில் அக்பர் வேடத்தில் பிரித்திவிராஜ் நடித்து இருந்தார்.பின்னாளில் வந்த அனைத்து அக்பர் வேடங்களும் இவர்தான் முன்னோடியாகவும் இந்த படத்தில் உருவெடுத்தார்..

சலீமாக 'திலிப்குமாரும்',அனார்கலியாக'மதுபாலாவும்' நடித்து இருந்தனர்.இந்த மூன்று கதாபாத்திரங்களும் இணைந்து நடிக்க அந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவமாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தது.

அந்த அளவு மக்களின் மனதில் இடம் பிடிக்க காரணம் திலிப்குமார்,மதுபாலாவின் நடிப்பைத்தாண்டிய ஒரு விசயம் அவர்களிடையே குடிகொண்டிருந்த காதல்..ஆம் அந்த காலகட்டங்களில் இருவருக்கும் காதல் நிகழ்ந்து அந்த காதல் மதுபாலா வின் அப்பாவால் ஏற்றுக் கொள்ளப்படாமல்,நிராகரிக்கப்பட்டு பிண்ணனிப்பாடகர் கிஷோர்குமாரை மதுபாலா மணந்துகொண்டார்.அதன்பிறகு எடுக்கப்பட்ட இந்த படத்தில் இருவரும் மிக நெருக்கமாக நடித்ததும் ,உணர்வுபூர்வமாக நடித்ததும் தாமாகவே நிகழ்ந்தது.

http://www.youtube.com/watch?v=plsRqFDk-2A

இந்த படத்தில் வரும் 'பியார் கியா தோ தர்ணா'பாடலில் நடனமாடியபடியே அக்பர் பார்த்து கேள்விகள் கேட்கும் பாடலில் திலிப்குமாரின் முக பாவங்கள் மிகவும் துல்லியமாக,வேதனையுடனும்,காதல் நிறைவேறாத ஏக்கமும் ஒருசேர பிரதிபலிக்கும்..

இந்த பாடல் தமிழில் 'காதல் கொண்டாளே' என்று என்று சுசிலாவின் குரலிலும்,


காதலித்தாலே அச்சமென்ன என்று{'அனார்கலி2006'} சுவர்ணலதாவின் குரலிலும் வந்துள்ளது..

படத்தில் அக்பர்,அனார்கலியை விசாரிக்க அழைத்ததும் ,அனார்கலி வரும் நடையிலும் ,அவர் அக்பரை பார்த்து கேட்பதும் கவனித்தால் அரச பெண்களுக்கேயான  பாவனை தெரியும்..

மேலும் இந்த இடத்தில் அவர் கேட்கும் கேள்விகள் தன் அப்பாவை பார்த்து கேட்பதாகதான் பட்டது..

பாடலில் மதுபாலாவின் பிம்பங்கள் தெரியும் கண்ணாடிகளின் அழகு மனதை கொள்ளச் செய்கின்றன.

அக்பர் மதுபாலாவிற்கு மரணதண்டனை அளிக்கும் முன் கடைசி ஆசை என்னவென கேட்க 'ஒரே ஒரு நாள் மொகலாய பேரரசுக்கு இராணியாக வேண்டுமென' மதுபாலா கேட்கிறார்.அதன்படியே செய்வதாகவும்,தண்டனை சலீம்க்கு தெரிய கூடாததெனவும்,தண்டனை நேரத்தில் சலீம் இருக்கக்கூடாது எனவும்,எனவே அனார்கலியே சலீமை மயங்கச் செய்யவேண்டுமெனவும்,கூறப்படுகிறது..அதன்படியே செய்தும் முடிக்கும்போது அக்பர் அனார்கலியை கொல்லாமல் நாடு கடத்திவிடுகிறார்..இவ்வாறு படம் முடிகிறது..

படத்தின் சில காட்சிகள் வெளிப்புற படப்பிடிப்புகளுக்காக இருந்தது.ஆனால் மதுபாலாவின் தந்தை வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு அனுப்பினால் இவர்களின் காதல் நெருக்கம் அதிகமாகும் என்று அனுப்ப மறுத்துவிட்டார்.

படம் முடிந்தாலும்,உண்மையில் திலிப்குமாரின் ஞாபகத்திலேயேயும்,தந்தைக்காக காதலை இழந்த வருத்தத்தினாலும் அதை நினைத்து ஏங்கியே மதுபாலாவின் உயிர் 32 வயதில் பிரிந்தது..திரைக்கதையின் கதை கற்பனை என்றாலும் கதாபாத்திரங்களுக்குள் காதல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த படம் உணர்த்துகிறது.......

Thursday, December 29, 2011

காதலிக்காதவள் கஷ்டப்படுவாள் !




   ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் உங்கள் பதிவுகளை சில மாதங்களாக வாசித்து வருகிறேன் நீங்கள் எழுதுவதில் சில விஷயங்கள் எனக்கு புரியும் பல புரியாது நிச்சயம் அதற்கு நீங்கள் காரணம் அல்ல என் அறிவு குறைபாடுதான் காரணம் ஜோதிடம் மதம் அரசியல் என்று எவ்வளவோ எழுதுகிறீர்கள் சில நேரம் எனக்கு பிரமிப்பாகவும் இருக்கும் இப்படியெல்லாம் கூட கருத்துக்கள் இருக்கிறதா என்று தோன்றும் அப்படி தோன்றும் போதே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்ற ஆசை வரும்

நீங்கள் பெரியவர் பயனுள்ள அனுபவங்கள் பலவற்றை பெற்றவர் உங்களிடத்தில் சிறுபிள்ளை தனமாக கேள்வி கேட்க கூடாது அது தவறு என்று மனதில் ஒரு பகுதியில் எச்சரிக்கை மணி அடிக்கும் இருந்தாலும் ஆசையை அடக்க முடியவில்லை என்பதனால் கடேசியில் உங்களிடம் கேட்டே விடுவது என்று முடிவு செய்து இந்த மடலை எழுதுகிறேன்

எனது பிறந்த தேதி போன்ற விபரங்கள் எதுவும் தெளிவாக தெரியாது சான்றிதழ்களில் உள்ள தேதிகள் எதுவும் சரியில்லை என்று எனது தாயார் சொல்லிவிட்டார் அவருக்கும் நான் பிறந்த தேதி மறந்துவிட்டது அதனால் நான் கேட்க போகும் இந்த கேள்விக்கு ஜோதிட ரீதியான பதிலை சொல்லாமல் உங்கள் மனதில் பட்ட பதிலை தெளிவாக சொல்லிவிடுங்கள் அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை தெய்வ வாக்காகவே எடுத்துக்கொள்கிறேன்

ஐயா நான் மூன்று வருடமாக ஒரு பெண்ணை காதலித்தேன் காதலித்தேன் என்று சொல்வதை விட மானசீகமாக அவளுடன் வாழ்க்கை நடத்தினேன் என்று சொல்லலாம் அவளும் என்னை காதலித்தாள் கடேசியில் சரியான காரணங்கள் எதுவும் சொல்லாமல் பெற்றோர்கள் பார்த்த மணமகனை திருமணம் செய்து கொண்டாள் அதற்கு அவள் சொல்லுகின்ற எல்லா காரணங்களும் கற்பனையாக தெரிகிறதே தவிர உண்மையானதாக தெரியவில்லை

என்னை அவள் திருமணம் செய்யாமல் போனதற்கு அவள் வீட்டாரின் எதிர்ப்பு ஒரு காரணம் என்றாலும் எனக்கு சரியான வேலை இல்லை குடும்ப பின்னணி இல்லை எல்லாவற்றுக்கும் மேலாக சொந்த வீடு சொத்து சுகம் ஒன்றும் இல்லை என்பதாகத்தான் இருக்கும் என்று என் மனதில் படுகிறது

அவள் இல்லை என்றாலும் அவளது நினைப்பு என்னை விட்டு அகலவே இல்லை பல நேரங்களில் தற்கொலை செய்து கொள்ள எண்ணம் வருகிறது என்னையே நம்பி உள்ள தாயாரையும் தம்பியையும் நினைத்து அந்த எண்ணத்தை அப்புறத்தள்ளுகிறேன் இருந்தாலும் நான் சாதரண மனிதன் தானே இயலாமையும் இழப்பும் என்னை பாடாய் படுத்துகிறது இரவில் உறக்கம் இல்லாமல் சரிவர உண்ண முடியாமல் தவிக்கிறேன் யாரோடும் சிரித்து பேச முடியவில்லை எப்போதும் அவள் நினைவு என்னை வாட்டி வதைக்கிறது

ஆனாலும் நிஜம் எனது கண்ணெதிரே தெளிவாகத்தெரிகிறது அவள் இல்லை இனி அவள் கிடைக்க மாட்டாள் அவள் இல்லாமல் தான் நான் வாழ்ந்தாக வேண்டும் அதற்கு அவளை மறக்க வேண்டும் என்பது நன்றாக புரிகிறது ஆனாலும் என்னால் நிஜத்தை ஜீரணிக்க முடியவில்லை அவள் என்னை ஏமாற்றி போய் வருடம் ஒன்றாகி விட்டாலும் நேற்றுதான் நடந்தது போல் மனது ரத்தகண்ணீர் வடிக்கிறது

ஐயா இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன் ஆனால் அவைகளெல்லாம் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கும் என்பதனால் எழுதவில்லை அவளை நான் மறக்க வேண்டும் அவள் என்னை பிரிந்ததற்கு பணம் தான் காரணம் என்றால் அந்த பணத்தை நான் எப்படியும் பெற வேண்டும் அதற்கு என்ன வழி கண்கள் இருந்தும் குருடனை போல் வழி தெரியாமல் தவிர்க்கும் இந்த ஏழைக்கு வழிகாட்டுங்கள் காலமெல்லாம் உங்களுக்கு நன்றிகடன் பட்டவனாக இருப்பேன்
சங்கரலிங்கம் திருநெல்வேலி


    ரு மனிதனுக்கு முப்பது வயதுக்குள் கம்யூனிச சிந்தனை வரவில்லை என்றால் அவன் சோம்பேறி முப்பது வயதுக்கு மேலும் அவன் கம்யூனிஸ்ட்டாக இருந்தால் அவன் முட்டாள் என்று சொல்வார்கள் இதை நான் இங்கு அரசியல் அர்த்தங்களுக்காக சொல்லவில்லை வயதுக்கு ஏற்ற குணமும் செயலும் மனிதனுக்கு இருக்க வேண்டும் என்பதக்காகவே சொல்கிறேன் குழந்தை வயதில் விளையாட வேண்டும் வாலிப வயதில் காதல் போன்ற உணர்வுகளுக்கு ஆட்பட வேண்டும் வயோதிக வயதில் இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி கொள்ள வேண்டும் இது தான் சராசரி வாழ்க்கை முறை

குழந்தை பிராயத்தில் விளையாட முடியவில்லை என்று வாலிப வயதில் விளையாடக் கூடாது வாலிபத்தில் காதலிக்க முடியாத போது வயோதிகத்தில் காதலிக்க போனால் அது அறிவீனம் இதை போன்று தான் நமது வாழ்வில் வரும் எல்லா சம்பவங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்

நீங்கள் காதல் வசப்பட்டதை குற்றம் என்று நான் சொல்ல வில்லை நீங்கள் விரும்பியவள் உங்களை விட்டு விட்டு போன பிறகும் அதுவும் எந்த வித நியாயமும் இல்லாத காரணங்களுக்காக கைவிட்ட பிறகு அவளையே நினைத்து கொண்டு வாழ்க்கையை வீணடிப்பது முட்டாள் தனம் இந்த முட்டாள் தனத்தையே தொடர்ந்து நான் செய்கிறேன் என்று பெருமையாக சொல்லிக்கொண்டு திரிவது வடிகட்டிய பைத்திய காரத்தனம்

உங்கள் காதலி நியமான காரணதிற்காகவே உங்களை கைவிட்டு விட்டாள் என்றே வைத்து கொள்வோம் ஆனாலும் இன்று அவள் வேறொருவனின் மனைவி அடுத்தவன் மனைவியை நினைத்து கொண்டிருப்பது பெரிய பாவம் முதலில் அவளை உங்கள் காதலி என்று நினைப்பதை கைவிடுங்கள் தானாக உங்களது சோகம் குறைய துவங்கி விடும்

நாம் நினைத்து கொண்டிருக்கிறேம் கடவுள் அர்த்தமே இல்லாமல் நமது வாழ்வில் பல சோதனைகளை தருகிறான் என்று இந்த எண்ணம் தவருதலானது அவன் தருகின்ற இன்பமாக இருக்கட்டும் துன்பமாக இருக்கட்டும் அனைத்துக்கு பின்னாலும் ஆழமான அர்த்த புஷ்டியான காரணம் இருக்கும் அது இப்போது நமக்கு தெரியாது காலம் செல்ல செல்ல தானாக புரியும்

உங்களது சோகத்தை நினைத்து எனக்கு கோபம் வந்தாலும் நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு வார்த்தை என் மனதை ஆறுதலடைய செய்கிறது என்னையே நம்பி இருக்கும் தாயாரை தம்பியை நினைக்கிறேன் என்று சொல்லி உள்ளீர்கள் அந்த ஒரு வார்த்தையிலேயே உங்களுக்குள் மறைந்து கிடைக்கும் வேகத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது

ஒரு பிரச்சனையை முடிக்க வேண்டுமென்றால் வேறொரு பெரிய பிரச்சனையை உருவாக்க வேண்டுமென்று எனது சிஷ்யர் திரு வி.வி.சந்தானம் சொல்வார் அது விளயாட்டு அல்ல வாழ்க்கை சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ள நினைக்கும் ஒவ்வொருவனும் கைகொள்ள வேண்டிய ஆயுதமாகும்

உங்களது துயரத்தை மறக்க தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை வெளியூருக்கு மாற்றுங்கள் அல்லது வெளியூரில் வேறு வேலையை ஏற்படுத்தி கொள்ளுங்கள் முழு கவனத்தையும் ஆர்வத்தையும் வேலையில் வையுங்கள் கால நேரம் பாராமல் கடினமாக பாடுபடுங்கள் கிடைக்கும் பணத்தை குறைவாக செலவழித்து சேமிப்பில் கவனம் செலுத்துங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தவுடன் அதை இரட்டிப்பாக்க சொந்தமாக எதாவது தொழில் செய்யுங்கள் தானாக உங்களது செல்வமும் செல்வாக்கும் வளரும் உங்களை இழந்ததற்காக அந்த பெண் கூட நாளை வருத்தப்படலாம்.
***********************************************************************************************************************************
நன்றி 

இந்த அருமையான தொகுப்பு அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதால் இங்க காப்பி பேஸ்ட் செய்யப்டுகிறது...
உஜிலாதேவி அவர்களுக்கு நன்றி..

...

Tuesday, December 06, 2011

முல்லைப்பெரியாறு- ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

முல்லைப்பெரியாறு அணையைக்கட்டிய" பென்னிகுயிக்" ஆத்மா சாந்தியடைந்திருக்கும்.இல்லையென்றால் இன்னைக்கு கண்டிப்பாக வருத்தப்பட்டிருக்கும்.

சொத்தை விற்றுக்கட்டிய அணையை நாம் எவ்வளவு தூரம் மதிக்கிறோம் என்பதை அவரின் ஆத்மா கண்டிப்பாக மன்னிக்காது..

1978இல் நீர்மின்சக்திக்காக கட்டிய இடுக்கி அணை முல்லைப்பெரியாறின் கொள்ளளவை விட 70 மடங்கு பெரியது..ஆனால் அதற்கு தண்ணீர் எங்கிருந்து வரும்? முல்லைப்பெரியாறு நிரம்பி வழிந்து வரும் தண்ணீர்தான் ..அதற்கு என்ன வழி..தமிழகத்திற்கு செல்லும் நீரை மறித்து இங்கே அனுப்ப வேண்டும்.

இந்த காரணங்களை முன்னிறுத்தி மறைமுகமாக 1978 ‍ல் மனோரமாவில் ஒரு கட்டுரை வெளிவந்தது..அந்தகட்டுரை முல்லைப் பெரியாறு அணை உடையும் நிலையில் உள்ளது..கூடிய விரைவில் மூன்று மாவட்டமக்கள் நீரில் மிதப்பார்கள் என பீதியை ஏற்படுத்துவதாக இருந்தது.

இதனை மற்ற ஊடகங்களும் ஊதிப் பெரிது பண்ணிவிட்டன..கேரள அரசியல்வாதிகளும் வேறு வழியில்லாமல் புலிவாலைப் பிடித்து விட்டு இன்று வரை தொங்கி கொண்டிருக்கின்றனர்..

அன்று அவர்கள் சொன்ன காரணம் சுண்ணாம்பினால் கட்டப்பட்ட அணையின் ஆயுள் காலம் வெறும் 50 ஆண்டுகள் என்று..ஆனால் சொல்லும்காலத்திலேயே 100 ஆண்டுகள் ஆகி விட்டது..

இன்றோ நாளையோ உடைந்துவிடும் என்று 78களில் சொல்லப்பட்டு இன்று 35 ஆண்டுகள் ஆகியும் அணை நன்றாகத்தான் உள்ளது..மேலும் இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அணையில் இரும்புக்கம்பிகளையும் காங்கிரிட் கலவையும் கொண்டு பில்லர் ஏற்படுத்தியும்,அணையை தண்ணீர் தேங்கும் பகுதியில் 3 அடி அளவில் காங்கிரிட் கலவையை கொண்டு தொப்பி அமைப்புகொண்டு பலப்படுத்தி உள்ளனர்,,,

இதற்கு மேலும் அணையை பல வல்லுனர்கள் ஆராய்ந்து அணை நல்ல நிலையில் உள்ளது என்று சர்டிபிகேட் கொடுத்தாலும் 136 இல் இருந்து நீர்மட்டத்தை 142க்கு உயர்த்த அனுமதிக்காத காரணம் நீர்மட்டம் குறைந்தகாலங்களில் தண்ணீர் இல்லாத இடங்களை ஆக்ரமித்த அரசியல்வாதிகளின் நிரந்தரவருமானம் தடை பட்டுவிடும் என்பதே..

அணையை ஏன் உடைக்கவேண்டும் ..அதற்கு காரணம் அணை உடைந்தால் இடுக்கி,குமுளி,எல்லப்பாரா மக்கள் தண்ணீரில் மிதப்பார்கள் என்று..ஆனால் உண்மை வேறு..இந்த மூன்று இடங்களும் அணையின் தண்ணீர் வெளியேறும் பகுதியை விட அதிக உயரத்தில் இருக்கின்றன ..

இவர்களுக்காக வேதனைப்பட்டும்,அச்சத்திலும் இருப்பதாக காட்டும் கேரள அரசு ஏன் டேமில் நடைபெறும் படகுசவாரியை இது வரை நிறுத்தவில்லை..அணை உடைந்தால் அவர்கள் அதே படகுகளில் அரபிக்கடல் வரை பாதுகாப்பாக போய்விடுவார்களா?

இதற்கு எல்லாம் யார் காரணம் வரலாற்றை ஆராய்ந்தால் சற்று விளங்கும்..

காமராஜர்தான் இதற்கு காரணம்..கேரள அரசாங்கம் தேவிகுளம்,பீர்மேடு,மூணாறு ஆகிய பகுதிகளை கேட்டபோது தமிழர்கள் இருந்தாலும் அந்த பகுதி கேரளாவிற்கு போனாலும் இந்தியாவிற்குள்ளேதானே இருக்குது என கூறியதே..

இதற்கு தீர்வுதான் என்ன?

முல்லைப்பெரியாறின் மூலம் நம் தென்மாவட்ட மக்கள் பெறும் தண்ணீர் அளவு 1850 டிஎம்சிதான்..ஆனால் சென்னையில் மலையாளிகளின் டீக்கடைகள் 40000 இருக்கின்றது..அவர்கள் தமிழகத்தில் இருந்து எடுக்கும் தண்ணீர் அளவு 8500 டிஎம்சி..இதைக் கணக்கிட்டால் அவர்கள் முல்லைப்பெரியாறு பற்றி வாயே திறக்கக்கூடாது.

மேலும் புதிய டேம் கட்டுவதுதான் தீர்வு என்றால் அந்த டேம் கட்டும்போது அந்த அணையின் பராமரிப்பு,பாதுகாப்பு விடயத்தில் தமிழகத்துக்கு உரிமை இல்லை என்ற சரத்து நீக்கப்பட்டு அணையின் மீதான அனைத்து உரிமைகளும் தமிழகத்துக்கு கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும்..இல்லையெனில் தமிழகத்துக்கு சொட்டுத்தண்ணீர்கூட கிடைக்காது..

அவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களையும்,வருமானம் கொடுக்கும் அய்யப்ப பக்தர்களையுமே தாக்கும் அவர்களுக்கு மனிதாபிமானம் இருக்காது என்பதே உண்மை..

வன்முறையை தமிழ் மக்கள் கையில் எடுக்கமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்துகொண்டு மூலைக்கு மூலை டீக்கடைகளையும்,நகைக்கடைகளையும்,வட்டிக்கடைகளையும் திறந்து வைத்திருக்கும் சேட்டன்களுக்கு நேரம் கொஞ்சம் கெட்டுவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது..

கடவுள் தேசம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதை அந்த அய்யப்பனும் கூட மன்னிக்கமாட்டான் என்பதை கடந்த ஆண்டு ஜோதி தரிசனக்கதையிலேயே தமிழ்மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

இல்லையெனில் நாமும்,அவர்களைப் போல் மூணாறு,பீர்மேடு,தேவிகுளம் பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டியதுதான்..பதிலுக்கு பதில் வேறு வழியில்லை.

...

Wednesday, November 30, 2011

தட்டி மெஸ்-ஒரு தடபுடலான விருந்து..

நேற்று திருப்பூரிலிருந்து ஒரு வேலையாக மயிலாடுதுறை செல்ல நேர்ந்தது..ஜனசதாப்தி பஸ் கட்டணத்தை குறைவாக இருந்ததால் அதுவே நமக்கு தோதாக இருக்கும் என்பதாலும் காலை 7.30 மணீக்கு ஏறி அமர்ந்தோம்..









உருட்டல்னா உருட்டு அப்படி ஒரு உருட்டு..சராசரியாக 70ல் சென்றிருக்கும் என்று நினைக்கிறேன்.திருச்சி சென்று சேரும் போது மணி 12.அதன் பிறகு இன்னும் கொஞ்சம் உருட்டு..தஞ்சாவூர்,கும்பகோணம் வழியாக மயிலை சென்று சேரும்போது மணீ 1.45 ..பசி வயிற்றை கிள்ளியது.



நெற்களஞ்சியம்


நண்பர் ஒருவர்
மயிலையில் 'தட்டி மெஸ்'என்று உள்ளது ,அதில் மீன் குழம்புடன் சாப்பாடு அருமையாக இருக்கும் \,சென்று சாப்பிடுங்கள் என்று கூறினார்..அதன்படி சென்று அமர்ந்தால் மணக்க மணக்க சாப்பாடு பரிமாறப்பட்டது..மீன்குழம்புடன் அதுவும் 3 மீன் முழுவறுவல்,2குழம்பு மீன் என வந்தது..

நன்கு கட்டிவிட்டு பில் ரூ120 வந்தது..அருகிலேயே இந்த மெஸ்ஸின் சுவை தெரிந்தே என்னவோ கவர்ன்மெண்ட் கடை வைத்துள்ளனர்....உ.பா சாப்பிடுபவர்களுக்கு சரியான மெஸ் இது...கடை உரிமையாளரே பரிமாறவும் செய்கிறார்..









நல்ல திருப்தியான சாப்பாடுதான்..இரவும் அங்கியே அருகில் சாப்பாடு முடித்துவிட்டு மறுநாள் காலை தஞ்சை பெரிய கோவில் சென்றோம்..அங்கு நாம் கண்ட காட்சி எத்தனை விருந்து சாப்பாடு சாப்பிட்டாலும் இதற்கு ஈடாகாது என்பதை பறை சாற்றியது..






ஆமாம்.வறியவர்களை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு எவர்சில்வர் தட்டமும் கொடுத்து 4 இட்லியையும் சாம்பாரையும் ஒருவர் பரிமாறிக்கொண்டிருந்தார்..சாப்பிடுபவர்களின் மனநிலையில் யோசிக்கும் போது தட்டி மெஸ்ஸில் 120 க்கு சாப்பிட்ட சாப்பாடு கொஞ்சம் மறக்கத்தான் செய்தது....


...

Saturday, November 19, 2011

வயக்காடு வாங்கலாம் வாங்க...






நமக்கு வயக்காடு இருந்தா இப்படி இருக்கனுமின்னு ஆசை..இல்லை என்ன செய்யலாம்..வேற யாராவது வயக்காட்ட‌ போட்டோபோட்டு பாத்துக்க வேண்டியதுதான்..........






நமக்கு வயக்காடு இருந்தா இப்படி இருக்கனுமின்னு ஆசை..இல்லை என்ன செய்யலாம்..வேற யாராவது வயக்காட்ட‌ போட்டோபோட்டு பாத்துக்க வேண்டியதுதான்..........