வியாழன், டிசம்பர் 29, 2011

காதலிக்காதவள் கஷ்டப்படுவாள் !




   ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் உங்கள் பதிவுகளை சில மாதங்களாக வாசித்து வருகிறேன் நீங்கள் எழுதுவதில் சில விஷயங்கள் எனக்கு புரியும் பல புரியாது நிச்சயம் அதற்கு நீங்கள் காரணம் அல்ல என் அறிவு குறைபாடுதான் காரணம் ஜோதிடம் மதம் அரசியல் என்று எவ்வளவோ எழுதுகிறீர்கள் சில நேரம் எனக்கு பிரமிப்பாகவும் இருக்கும் இப்படியெல்லாம் கூட கருத்துக்கள் இருக்கிறதா என்று தோன்றும் அப்படி தோன்றும் போதே உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா என்ற ஆசை வரும்

நீங்கள் பெரியவர் பயனுள்ள அனுபவங்கள் பலவற்றை பெற்றவர் உங்களிடத்தில் சிறுபிள்ளை தனமாக கேள்வி கேட்க கூடாது அது தவறு என்று மனதில் ஒரு பகுதியில் எச்சரிக்கை மணி அடிக்கும் இருந்தாலும் ஆசையை அடக்க முடியவில்லை என்பதனால் கடேசியில் உங்களிடம் கேட்டே விடுவது என்று முடிவு செய்து இந்த மடலை எழுதுகிறேன்

எனது பிறந்த தேதி போன்ற விபரங்கள் எதுவும் தெளிவாக தெரியாது சான்றிதழ்களில் உள்ள தேதிகள் எதுவும் சரியில்லை என்று எனது தாயார் சொல்லிவிட்டார் அவருக்கும் நான் பிறந்த தேதி மறந்துவிட்டது அதனால் நான் கேட்க போகும் இந்த கேள்விக்கு ஜோதிட ரீதியான பதிலை சொல்லாமல் உங்கள் மனதில் பட்ட பதிலை தெளிவாக சொல்லிவிடுங்கள் அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை தெய்வ வாக்காகவே எடுத்துக்கொள்கிறேன்

ஐயா நான் மூன்று வருடமாக ஒரு பெண்ணை காதலித்தேன் காதலித்தேன் என்று சொல்வதை விட மானசீகமாக அவளுடன் வாழ்க்கை நடத்தினேன் என்று சொல்லலாம் அவளும் என்னை காதலித்தாள் கடேசியில் சரியான காரணங்கள் எதுவும் சொல்லாமல் பெற்றோர்கள் பார்த்த மணமகனை திருமணம் செய்து கொண்டாள் அதற்கு அவள் சொல்லுகின்ற எல்லா காரணங்களும் கற்பனையாக தெரிகிறதே தவிர உண்மையானதாக தெரியவில்லை

என்னை அவள் திருமணம் செய்யாமல் போனதற்கு அவள் வீட்டாரின் எதிர்ப்பு ஒரு காரணம் என்றாலும் எனக்கு சரியான வேலை இல்லை குடும்ப பின்னணி இல்லை எல்லாவற்றுக்கும் மேலாக சொந்த வீடு சொத்து சுகம் ஒன்றும் இல்லை என்பதாகத்தான் இருக்கும் என்று என் மனதில் படுகிறது

அவள் இல்லை என்றாலும் அவளது நினைப்பு என்னை விட்டு அகலவே இல்லை பல நேரங்களில் தற்கொலை செய்து கொள்ள எண்ணம் வருகிறது என்னையே நம்பி உள்ள தாயாரையும் தம்பியையும் நினைத்து அந்த எண்ணத்தை அப்புறத்தள்ளுகிறேன் இருந்தாலும் நான் சாதரண மனிதன் தானே இயலாமையும் இழப்பும் என்னை பாடாய் படுத்துகிறது இரவில் உறக்கம் இல்லாமல் சரிவர உண்ண முடியாமல் தவிக்கிறேன் யாரோடும் சிரித்து பேச முடியவில்லை எப்போதும் அவள் நினைவு என்னை வாட்டி வதைக்கிறது

ஆனாலும் நிஜம் எனது கண்ணெதிரே தெளிவாகத்தெரிகிறது அவள் இல்லை இனி அவள் கிடைக்க மாட்டாள் அவள் இல்லாமல் தான் நான் வாழ்ந்தாக வேண்டும் அதற்கு அவளை மறக்க வேண்டும் என்பது நன்றாக புரிகிறது ஆனாலும் என்னால் நிஜத்தை ஜீரணிக்க முடியவில்லை அவள் என்னை ஏமாற்றி போய் வருடம் ஒன்றாகி விட்டாலும் நேற்றுதான் நடந்தது போல் மனது ரத்தகண்ணீர் வடிக்கிறது

ஐயா இன்னும் நிறைய எழுத நினைக்கிறேன் ஆனால் அவைகளெல்லாம் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கும் என்பதனால் எழுதவில்லை அவளை நான் மறக்க வேண்டும் அவள் என்னை பிரிந்ததற்கு பணம் தான் காரணம் என்றால் அந்த பணத்தை நான் எப்படியும் பெற வேண்டும் அதற்கு என்ன வழி கண்கள் இருந்தும் குருடனை போல் வழி தெரியாமல் தவிர்க்கும் இந்த ஏழைக்கு வழிகாட்டுங்கள் காலமெல்லாம் உங்களுக்கு நன்றிகடன் பட்டவனாக இருப்பேன்
சங்கரலிங்கம் திருநெல்வேலி


    ரு மனிதனுக்கு முப்பது வயதுக்குள் கம்யூனிச சிந்தனை வரவில்லை என்றால் அவன் சோம்பேறி முப்பது வயதுக்கு மேலும் அவன் கம்யூனிஸ்ட்டாக இருந்தால் அவன் முட்டாள் என்று சொல்வார்கள் இதை நான் இங்கு அரசியல் அர்த்தங்களுக்காக சொல்லவில்லை வயதுக்கு ஏற்ற குணமும் செயலும் மனிதனுக்கு இருக்க வேண்டும் என்பதக்காகவே சொல்கிறேன் குழந்தை வயதில் விளையாட வேண்டும் வாலிப வயதில் காதல் போன்ற உணர்வுகளுக்கு ஆட்பட வேண்டும் வயோதிக வயதில் இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி கொள்ள வேண்டும் இது தான் சராசரி வாழ்க்கை முறை

குழந்தை பிராயத்தில் விளையாட முடியவில்லை என்று வாலிப வயதில் விளையாடக் கூடாது வாலிபத்தில் காதலிக்க முடியாத போது வயோதிகத்தில் காதலிக்க போனால் அது அறிவீனம் இதை போன்று தான் நமது வாழ்வில் வரும் எல்லா சம்பவங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்

நீங்கள் காதல் வசப்பட்டதை குற்றம் என்று நான் சொல்ல வில்லை நீங்கள் விரும்பியவள் உங்களை விட்டு விட்டு போன பிறகும் அதுவும் எந்த வித நியாயமும் இல்லாத காரணங்களுக்காக கைவிட்ட பிறகு அவளையே நினைத்து கொண்டு வாழ்க்கையை வீணடிப்பது முட்டாள் தனம் இந்த முட்டாள் தனத்தையே தொடர்ந்து நான் செய்கிறேன் என்று பெருமையாக சொல்லிக்கொண்டு திரிவது வடிகட்டிய பைத்திய காரத்தனம்

உங்கள் காதலி நியமான காரணதிற்காகவே உங்களை கைவிட்டு விட்டாள் என்றே வைத்து கொள்வோம் ஆனாலும் இன்று அவள் வேறொருவனின் மனைவி அடுத்தவன் மனைவியை நினைத்து கொண்டிருப்பது பெரிய பாவம் முதலில் அவளை உங்கள் காதலி என்று நினைப்பதை கைவிடுங்கள் தானாக உங்களது சோகம் குறைய துவங்கி விடும்

நாம் நினைத்து கொண்டிருக்கிறேம் கடவுள் அர்த்தமே இல்லாமல் நமது வாழ்வில் பல சோதனைகளை தருகிறான் என்று இந்த எண்ணம் தவருதலானது அவன் தருகின்ற இன்பமாக இருக்கட்டும் துன்பமாக இருக்கட்டும் அனைத்துக்கு பின்னாலும் ஆழமான அர்த்த புஷ்டியான காரணம் இருக்கும் அது இப்போது நமக்கு தெரியாது காலம் செல்ல செல்ல தானாக புரியும்

உங்களது சோகத்தை நினைத்து எனக்கு கோபம் வந்தாலும் நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு வார்த்தை என் மனதை ஆறுதலடைய செய்கிறது என்னையே நம்பி இருக்கும் தாயாரை தம்பியை நினைக்கிறேன் என்று சொல்லி உள்ளீர்கள் அந்த ஒரு வார்த்தையிலேயே உங்களுக்குள் மறைந்து கிடைக்கும் வேகத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது

ஒரு பிரச்சனையை முடிக்க வேண்டுமென்றால் வேறொரு பெரிய பிரச்சனையை உருவாக்க வேண்டுமென்று எனது சிஷ்யர் திரு வி.வி.சந்தானம் சொல்வார் அது விளயாட்டு அல்ல வாழ்க்கை சவால்களை எதிர்கொண்டு வெற்றி கொள்ள நினைக்கும் ஒவ்வொருவனும் கைகொள்ள வேண்டிய ஆயுதமாகும்

உங்களது துயரத்தை மறக்க தற்போது செய்து கொண்டிருக்கும் வேலையை வெளியூருக்கு மாற்றுங்கள் அல்லது வெளியூரில் வேறு வேலையை ஏற்படுத்தி கொள்ளுங்கள் முழு கவனத்தையும் ஆர்வத்தையும் வேலையில் வையுங்கள் கால நேரம் பாராமல் கடினமாக பாடுபடுங்கள் கிடைக்கும் பணத்தை குறைவாக செலவழித்து சேமிப்பில் கவனம் செலுத்துங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் சேர்ந்தவுடன் அதை இரட்டிப்பாக்க சொந்தமாக எதாவது தொழில் செய்யுங்கள் தானாக உங்களது செல்வமும் செல்வாக்கும் வளரும் உங்களை இழந்ததற்காக அந்த பெண் கூட நாளை வருத்தப்படலாம்.
***********************************************************************************************************************************
நன்றி 

இந்த அருமையான தொகுப்பு அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதால் இங்க காப்பி பேஸ்ட் செய்யப்டுகிறது...
உஜிலாதேவி அவர்களுக்கு நன்றி..

...

செவ்வாய், டிசம்பர் 06, 2011

முல்லைப்பெரியாறு- ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

முல்லைப்பெரியாறு அணையைக்கட்டிய" பென்னிகுயிக்" ஆத்மா சாந்தியடைந்திருக்கும்.இல்லையென்றால் இன்னைக்கு கண்டிப்பாக வருத்தப்பட்டிருக்கும்.

சொத்தை விற்றுக்கட்டிய அணையை நாம் எவ்வளவு தூரம் மதிக்கிறோம் என்பதை அவரின் ஆத்மா கண்டிப்பாக மன்னிக்காது..

1978இல் நீர்மின்சக்திக்காக கட்டிய இடுக்கி அணை முல்லைப்பெரியாறின் கொள்ளளவை விட 70 மடங்கு பெரியது..ஆனால் அதற்கு தண்ணீர் எங்கிருந்து வரும்? முல்லைப்பெரியாறு நிரம்பி வழிந்து வரும் தண்ணீர்தான் ..அதற்கு என்ன வழி..தமிழகத்திற்கு செல்லும் நீரை மறித்து இங்கே அனுப்ப வேண்டும்.

இந்த காரணங்களை முன்னிறுத்தி மறைமுகமாக 1978 ‍ல் மனோரமாவில் ஒரு கட்டுரை வெளிவந்தது..அந்தகட்டுரை முல்லைப் பெரியாறு அணை உடையும் நிலையில் உள்ளது..கூடிய விரைவில் மூன்று மாவட்டமக்கள் நீரில் மிதப்பார்கள் என பீதியை ஏற்படுத்துவதாக இருந்தது.

இதனை மற்ற ஊடகங்களும் ஊதிப் பெரிது பண்ணிவிட்டன..கேரள அரசியல்வாதிகளும் வேறு வழியில்லாமல் புலிவாலைப் பிடித்து விட்டு இன்று வரை தொங்கி கொண்டிருக்கின்றனர்..

அன்று அவர்கள் சொன்ன காரணம் சுண்ணாம்பினால் கட்டப்பட்ட அணையின் ஆயுள் காலம் வெறும் 50 ஆண்டுகள் என்று..ஆனால் சொல்லும்காலத்திலேயே 100 ஆண்டுகள் ஆகி விட்டது..

இன்றோ நாளையோ உடைந்துவிடும் என்று 78களில் சொல்லப்பட்டு இன்று 35 ஆண்டுகள் ஆகியும் அணை நன்றாகத்தான் உள்ளது..மேலும் இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் அணையில் இரும்புக்கம்பிகளையும் காங்கிரிட் கலவையும் கொண்டு பில்லர் ஏற்படுத்தியும்,அணையை தண்ணீர் தேங்கும் பகுதியில் 3 அடி அளவில் காங்கிரிட் கலவையை கொண்டு தொப்பி அமைப்புகொண்டு பலப்படுத்தி உள்ளனர்,,,

இதற்கு மேலும் அணையை பல வல்லுனர்கள் ஆராய்ந்து அணை நல்ல நிலையில் உள்ளது என்று சர்டிபிகேட் கொடுத்தாலும் 136 இல் இருந்து நீர்மட்டத்தை 142க்கு உயர்த்த அனுமதிக்காத காரணம் நீர்மட்டம் குறைந்தகாலங்களில் தண்ணீர் இல்லாத இடங்களை ஆக்ரமித்த அரசியல்வாதிகளின் நிரந்தரவருமானம் தடை பட்டுவிடும் என்பதே..

அணையை ஏன் உடைக்கவேண்டும் ..அதற்கு காரணம் அணை உடைந்தால் இடுக்கி,குமுளி,எல்லப்பாரா மக்கள் தண்ணீரில் மிதப்பார்கள் என்று..ஆனால் உண்மை வேறு..இந்த மூன்று இடங்களும் அணையின் தண்ணீர் வெளியேறும் பகுதியை விட அதிக உயரத்தில் இருக்கின்றன ..

இவர்களுக்காக வேதனைப்பட்டும்,அச்சத்திலும் இருப்பதாக காட்டும் கேரள அரசு ஏன் டேமில் நடைபெறும் படகுசவாரியை இது வரை நிறுத்தவில்லை..அணை உடைந்தால் அவர்கள் அதே படகுகளில் அரபிக்கடல் வரை பாதுகாப்பாக போய்விடுவார்களா?

இதற்கு எல்லாம் யார் காரணம் வரலாற்றை ஆராய்ந்தால் சற்று விளங்கும்..

காமராஜர்தான் இதற்கு காரணம்..கேரள அரசாங்கம் தேவிகுளம்,பீர்மேடு,மூணாறு ஆகிய பகுதிகளை கேட்டபோது தமிழர்கள் இருந்தாலும் அந்த பகுதி கேரளாவிற்கு போனாலும் இந்தியாவிற்குள்ளேதானே இருக்குது என கூறியதே..

இதற்கு தீர்வுதான் என்ன?

முல்லைப்பெரியாறின் மூலம் நம் தென்மாவட்ட மக்கள் பெறும் தண்ணீர் அளவு 1850 டிஎம்சிதான்..ஆனால் சென்னையில் மலையாளிகளின் டீக்கடைகள் 40000 இருக்கின்றது..அவர்கள் தமிழகத்தில் இருந்து எடுக்கும் தண்ணீர் அளவு 8500 டிஎம்சி..இதைக் கணக்கிட்டால் அவர்கள் முல்லைப்பெரியாறு பற்றி வாயே திறக்கக்கூடாது.

மேலும் புதிய டேம் கட்டுவதுதான் தீர்வு என்றால் அந்த டேம் கட்டும்போது அந்த அணையின் பராமரிப்பு,பாதுகாப்பு விடயத்தில் தமிழகத்துக்கு உரிமை இல்லை என்ற சரத்து நீக்கப்பட்டு அணையின் மீதான அனைத்து உரிமைகளும் தமிழகத்துக்கு கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும்..இல்லையெனில் தமிழகத்துக்கு சொட்டுத்தண்ணீர்கூட கிடைக்காது..

அவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களையும்,வருமானம் கொடுக்கும் அய்யப்ப பக்தர்களையுமே தாக்கும் அவர்களுக்கு மனிதாபிமானம் இருக்காது என்பதே உண்மை..

வன்முறையை தமிழ் மக்கள் கையில் எடுக்கமாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்துகொண்டு மூலைக்கு மூலை டீக்கடைகளையும்,நகைக்கடைகளையும்,வட்டிக்கடைகளையும் திறந்து வைத்திருக்கும் சேட்டன்களுக்கு நேரம் கொஞ்சம் கெட்டுவிட்டதோ என்றுதான் தோன்றுகிறது..

கடவுள் தேசம் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வதை அந்த அய்யப்பனும் கூட மன்னிக்கமாட்டான் என்பதை கடந்த ஆண்டு ஜோதி தரிசனக்கதையிலேயே தமிழ்மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

இல்லையெனில் நாமும்,அவர்களைப் போல் மூணாறு,பீர்மேடு,தேவிகுளம் பகுதிகளை மீண்டும் தமிழ்நாட்டுடன் இணைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டியதுதான்..பதிலுக்கு பதில் வேறு வழியில்லை.

...

புதன், நவம்பர் 30, 2011

தட்டி மெஸ்-ஒரு தடபுடலான விருந்து..

நேற்று திருப்பூரிலிருந்து ஒரு வேலையாக மயிலாடுதுறை செல்ல நேர்ந்தது..ஜனசதாப்தி பஸ் கட்டணத்தை குறைவாக இருந்ததால் அதுவே நமக்கு தோதாக இருக்கும் என்பதாலும் காலை 7.30 மணீக்கு ஏறி அமர்ந்தோம்..









உருட்டல்னா உருட்டு அப்படி ஒரு உருட்டு..சராசரியாக 70ல் சென்றிருக்கும் என்று நினைக்கிறேன்.திருச்சி சென்று சேரும் போது மணி 12.அதன் பிறகு இன்னும் கொஞ்சம் உருட்டு..தஞ்சாவூர்,கும்பகோணம் வழியாக மயிலை சென்று சேரும்போது மணீ 1.45 ..பசி வயிற்றை கிள்ளியது.



நெற்களஞ்சியம்


நண்பர் ஒருவர்
மயிலையில் 'தட்டி மெஸ்'என்று உள்ளது ,அதில் மீன் குழம்புடன் சாப்பாடு அருமையாக இருக்கும் \,சென்று சாப்பிடுங்கள் என்று கூறினார்..அதன்படி சென்று அமர்ந்தால் மணக்க மணக்க சாப்பாடு பரிமாறப்பட்டது..மீன்குழம்புடன் அதுவும் 3 மீன் முழுவறுவல்,2குழம்பு மீன் என வந்தது..

நன்கு கட்டிவிட்டு பில் ரூ120 வந்தது..அருகிலேயே இந்த மெஸ்ஸின் சுவை தெரிந்தே என்னவோ கவர்ன்மெண்ட் கடை வைத்துள்ளனர்....உ.பா சாப்பிடுபவர்களுக்கு சரியான மெஸ் இது...கடை உரிமையாளரே பரிமாறவும் செய்கிறார்..









நல்ல திருப்தியான சாப்பாடுதான்..இரவும் அங்கியே அருகில் சாப்பாடு முடித்துவிட்டு மறுநாள் காலை தஞ்சை பெரிய கோவில் சென்றோம்..அங்கு நாம் கண்ட காட்சி எத்தனை விருந்து சாப்பாடு சாப்பிட்டாலும் இதற்கு ஈடாகாது என்பதை பறை சாற்றியது..






ஆமாம்.வறியவர்களை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு எவர்சில்வர் தட்டமும் கொடுத்து 4 இட்லியையும் சாம்பாரையும் ஒருவர் பரிமாறிக்கொண்டிருந்தார்..சாப்பிடுபவர்களின் மனநிலையில் யோசிக்கும் போது தட்டி மெஸ்ஸில் 120 க்கு சாப்பிட்ட சாப்பாடு கொஞ்சம் மறக்கத்தான் செய்தது....


...

சனி, நவம்பர் 19, 2011

வயக்காடு வாங்கலாம் வாங்க...






நமக்கு வயக்காடு இருந்தா இப்படி இருக்கனுமின்னு ஆசை..இல்லை என்ன செய்யலாம்..வேற யாராவது வயக்காட்ட‌ போட்டோபோட்டு பாத்துக்க வேண்டியதுதான்..........






நமக்கு வயக்காடு இருந்தா இப்படி இருக்கனுமின்னு ஆசை..இல்லை என்ன செய்யலாம்..வேற யாராவது வயக்காட்ட‌ போட்டோபோட்டு பாத்துக்க வேண்டியதுதான்..........

திங்கள், நவம்பர் 07, 2011

திருப்பூரின் நொய்யல் வெள்ளம்




திருப்பூரின் நொய்யல் வெள்ளம்,மற்றும் ஜம்மனை பள்ளம் பாலம் உடைப்பு




















திருப்பூரின் நொய்யல் வெள்ளம்,மற்றும் ஜம்மனை பள்ளம் பாலம் உடைப்பு

..

வியாழன், நவம்பர் 03, 2011

வானொலி கேட்டல்

வானொலி ..வானொலி கேட்ட ஆரம்ப நாட்கள் எப்படிப்பட்டன என்பது இன்று நினைத்தாலும் மனம் மகிழ்ச்சியடையும் என்பது அந்த காலங்களில் வானொலி கேட்டவர்களுக்குதான் தெரியும்..

நான் சிறு பையனாக இருந்தபோது, எங்கள் வீட்டின் அருகில் ஒரு கைத்தறி நெசவுக்கூடம் ஒன்றில் பிலிப்ஸ் ரேடியோ,பாடிக்கொண்டிருக்கும்... அதில் காலை 6மணி முதல் 8.30 வரை திருச்சி வானொலியும் ,பிறகு 8.30 முதல் 9 வரை கோவை வானொலியும் பாடிக்கொண்டு இருக்கும்.
பிறகு 9மணி முதல் மாலை 4 மணி வரை இலங்கை வானொலி வர்த்தக சேவையின் சிற்றலை வரிசையில் பாடிக்கொண்டு இருக்கும்,

பக்கத்து வீட்டில் இருக்கும் பெரியப்பா மர்ப்பி வானொலி ஒன்றை கிரிக்கெட் கமெண்ட்ரி கேக்கவென்றே புதிதாக வாங்கினார்.அவர் தயவால் இன்னும் கொஞ்சம் வானொலி நிகழ்ச்சிகளை தெளிவாக கேட்க முடிந்தது.

நமது வாமுகோமு ரேடியோவில் சில சித்துவேலைகளை செய்து உலக வானொலிகளை அவ்வப்போது ஒலிக்க விடுவார்..

அதன் பிறகு எங்கள் வீட்டில் புதிதாக பிலிப்ஸ் ரேடியோ ஒன்றை எங்களப்பா எலக்சன் செய்தி கேக்கவென வாங்கி வந்தார்..அடடா அந்த ரேடியோவை காண என் நண்பர் கூட்டமாக வந்தது தனிக்கதை..

பிறகு சொல்லவா வேணும்.என் நேரமும் அந்த ரேடியோவை குடஞ்சுகிட்டே இருக்கறதுதான் நம்ம வேலை. இதில் SW 3 பேண்ட் இருந்தது...13‍மீ முதல் 90மீ வரை இருந்தது..பாதிக்குமேல் எந்த ஸ்டேசனும் வராது..பள்ளி ஆண்டு விடுமுறை நமக்கு இதில் தான்..

எந்த எந்த வானொலியில் எந்த நேரங்களில் பாட்டுப்போடுவார்கள் ..எந்த எந்த வெளிமாநில ரேடியோக்களில் தமிழ் எந்த நேரம் வரும் என்பதும் நமக்கு அத்துபடி.. திருவனந்தபுரம் ரேடியோவுல கூட தமிழ் நிகழ்ச்சி,பாட்டு போடுவாங்க..

தமிழ் நிகழ்ச்சி ஒலிபரப்பும் எல்லா நாட்டு வானொலியையும் நமக்கு அறிமுகம்.

பாகிஸ்தான் வானொலியிலும் தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவார்கள். மதியம் 2.45 முதல் 3.15 வரை. சினிமா பாடல்கள் ஒலிபரப்புவார்கள்.

இரவு 7.30 முதல் 8.30 நேரங்களில் சீன வானொலி(தற்போது காலை நேரமும் வருகிறது)அறிவிப்பாளர்கள் தமிழ் பெயரைக் கொண்ட சீனர்கள்...

மாலை 5க்கு மேல் சிங்கப்பூர் வானொலி...அருகிலேயே 7க்கு மேல் எடுக்கும் மலேசியா தமிழ்.
நம்ம ரபி பெர்னாட் முதல் முதலா வந்த பிலிப்பைன்ஸ் வானொலி,வேரித்தாஸ் வானொலி,மாஸ்கோ தமிழ், இரவு லண்டன் பி.பி.சி தமிழோசை... இப்படி பல வானொலிகளும் அதன் நிகழ்ச்சிகளும் நமக்கு அத்துபடி..


இதுபோக புலிகளின் குரல் என பல வானொலிகள் நினைத்த நேரங்களில் வந்து கொண்டு இருந்தது..இந்த வானொலியை 3 ஆண்டுகளுக்கு முன்னால் சேட்டிலை மூலமாக சி பேண்ட்டில் கேட்டதுண்டு.

இந்த நேரங்களில் இந்த நாட்டு வானொலி எனக்கு கிடைத்தது ..உனக்கு கிடைத்தா என கேட்பதற்கே நண்பர்கள் வட்டம் உண்டு..மறு நாள் அந்த வானொலி நிகழ்ச்சியை கேட்காமல் தூக்கமே வராது..

இப்படித்தான் இலங்கை வானொலியின் சிற்றலை வர்த்தக சேவையும்,ஆசிய சேவையும்,அவ்வப்போது வரும் சிறப்பு சேவைகளும்..அதிலும் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையின் நிகழ்ச்சிகளை கேட்டிருக்காத அந்த கால நேயர்கள் யாருமேயில்லை என்று கூட சொல்லலாம்..

புலரும் பொழுது, காலைக்கதிர், ,, பொங்கும் பூம்புனல்,, என் விருப்பம்... , நேயர் விருப்பம்.,சித்திரை செவ்வானம், நெஞ்சில் நிறைந்தவை, ஒரு படப்பாடல்கள்,இசை களஞ்சியம், இன்றைய நேயர்,இப்படி பல வித்தியாசமான தலைப்புகளில் நிகழ்ச்சிகளை அளித்தது இலங்கை வானொலி என்பது மறுக்கமுடியாது..

ஞாயிறுகளில் வரும் பாட்டுக்கு பாட்டு,ஒலிச்சித்திரம்..கதையும் கானமும் அருமையான நிகழ்ச்சிகள்..இந்த பாட்டுக்கு பாட்டுதான் சிறிய மாற்றங்களுடன் இன்றும் பி.எச்.அப்துல்ஹமீது அவர்களால் சன்டிவியில வருகிறது ,தற்போது கலைஞர் என நினைக்கிறேன்.

இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து கொழும்பு சர்வதேசவானொலி மீடியம் வேவில் வந்தது.. தமிழர்களுக்கு புதுப்பாடல் மோகத்தை தீர்க்கவும் ,,தமிழக விளம்பரங்களை குறி வைத்தும் வந்ததென சொல்லலாம்,6 மணியுடன் நிறுத்தி மத நிகழ்ச்சிகளுக்கு சென்று விடுவார்கள்..அதில் மாலை 5.45 தமிழ் போராளிகளை கிண்டலிக்கவும் செய்தார்கள்.இந்திய ரேடியோக்கள் புதுப்பாடல் போடவே மாட்டார்கள்.

அந்த சிறு பிள்ளை வயதுகளில் இலங்கை போக எங்கள் ஏரியாவில் மக்களை கொள்ளை கொண்டது கோவை வானொலியின் கொங்குத்தமிழ் வழக்கில் வரும் சூலூர் கணேசின் புதன் இரவு,சனி காலை நாடக‌ங்கள்தான், மக்கள் இதற்கென காத்துக்கொண்டு இருந்தது ஒரு காலம்...

அன்றைய நாளில் இலங்கை வானொலி அழகிய உச்சரிப்புடன் தமிழை சிதைக்காமல் தந்த இனிமையை கேட்ட காதுகளுக்கு, இப்போதைய பண்பலை ஒலிபரப்புகள் இனிமையை தருவதில்லை. .

அன்று வானொலி கேட்டல் மிக பெரிய பொழுது போக்கு. இன்று பல்வேறு பொழுது போக்குகள் வந்துவிட்டன.

மலை மீது இருந்து எட்டுத்திக்கும் மெட்டுப்போடும் கோடைப்பண்பலை கொஞ்சம் உயிரோட்டமான வானொலி என்பதை மறுக்க முடியாது..22 மாவட்டங்களை கொள்ளை கொண்டுள்ள கோடைப்பண்பலை தற்போது தமிழகம் தாண்டி இலங்கையின் சில இடங்கள்,கேரளாவின் பல இடங்கள் என சென்று கொண்டிருக்கும் பண்பலை ஒலிபரப்பு,இன்னும் கொஞ்சம் தன் திறனை 10 மெகாவாட்டிலிருந்து 20 மெகாவாட்டாக உயர்த்துமெனில் மைசூர்,ஆந்திரா என எட்டும் என்பது எங்கள் அவா..

ஆனால் இலங்கையில் 90களீல் பண்பலை பிரபலமாகிவிட்டதென நினைக்கிறேன்.அப்போதே தனது பரிட்சார்த்த ஒலிபரப்பை ஆரம்பித்த இந்த கோடைபண்பலை மதுரை வானொலியை அஞ்சல் செய்ய ஆரம்பிக்க அதுவும் படுமோசமான ஒலிபரப்பாக 2000 ஆரம்பித்த ஞாபகம்..ஆனால் அதற்கு முன்பு இவர்களின் பரிட்சார்த்த ஒலிபரப்பை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் " புதுசா சிடி பிளேயர் எதும் வாங்கிட்டியா" என கேட்டதுண்டு.நல்ல வேலை கொஞ்ச நாளிலேயே தனது சொந்த ஒலிபரப்புக்கு மாறிவிட்டது.

வானொலிக்கும் சேவை என்பது போய் வியாபாரமாகி விட்டன. பாடல்களுக்கு நடுவே விளம்பரங்கள் போய் இப்போது விளம்பரங்களுக்கு நடுவே பாடல்கள். நல்ல பாடல் வருகிறதென்றால், சகித்து கொண்டு நாற்பது விளம்பரங்களை கேட்கலாம். விளம்பரம் முடிந்து வரும் பாடலை கேட்டால், விளம்பரமே தேவலாம் என்கிற ரீதியில் பாடல்கள் வருகிறது. ஆனால் கோடைப்பண்பலையில் அவர்கள் போடும் ஒன்றிரண்டு பாடல்களுக்காகவே விளம்பரங்களை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இன்னும் பல விசயங்களை எழுதலாம்...பிறகு ஒரு தனிப்பதிவாக எழுதலாம்..இப்போது வானொலி கேட்காவிட்டாலும், வானொலியை பெரிய விஷயமாக கருதி வாழ்ந்த நாட்களை மறக்க இயலாது.
..


புதன், செப்டம்பர் 07, 2011

சன் டிவியின் பொய் பிரச்சாரம்

சன் டிவி அரசு கேபிளால் தன் டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்து வருவதால்,அதற்கு எதிராக பொய் பிரச்சாரம் ஒன்றை கட்டவிழ்த்து இருக்கிறது.

சன் டைரக்டில் எதேச்சையாக பார்த்தபோது,எமெர்ஜென்ஸி செய்தி போல ,தொடர்ச்சியாக மக்களிடம் பேட்டி எடுக்கின்றனர்.சன் குழும சேனல்கள் இல்லாமல் போரடிக்கிறது.அதனால் பழைய இணைப்புக்கே திரும்பி விட மக்கள் விரும்புவதாக சொல்கிறது.

மக்களிடம் தொடர்ச்சியாக பேட்டி எடுத்து வெளியிடுகிறது.சன் ரொம்ப பயந்து போய்தான் இருக்கிறது.உண்மையில் எனக்கும் சன் குழும சேனல் இல்லாமல் போர் அடிக்கத்தான் செய்கிறது.டிராய் சன் குழுமத்துக்கு மாதம் 7 கோடி கொடுத்து சேனல்களை அரசு வாங்கி கொள்ளலாம் என பரிந்துரை செய்திருக்கிறது.
நன்றி :astrosuper.com




ஆனால் சன் தரப்போ 15 கோடி கேட்பதாக சொல்கிறார்கள்.இன்னும் பேச்சு வார்த்தை இழுபறிதான்.டிராய் சொன்னபடி தருகிறோம் என முதல்வர் சொல்லிவிட்டார்.சன் தான் இறங்கி வர வேண்டும்.சன் தனது எஸ்.வி.ஐ மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கவே திட்டம் போடுகிறது..கேபிள் ஆப்ரேட்டர்கள் மக்கள் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள்.பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று.

புதன், ஆகஸ்ட் 31, 2011

கள்ளி


>> 17 AUGUST 2011





பத்தாண்டு சென்னை வாழ்க்கையில் பெற்றதைவிடவும் இழந்தது அதிகம். அதில் குறிப்பிடத்தக்கது கொங்குதமிழ் பேச்சு. ஏனோ நாட்பட நாட்பட என் கொங்குதமிழும் நீர்த்துப்போய் இன்னாமச்சி கோட்டர்தமிழாக மாறிவிட்டது. பேச்சுவழக்கெல்லாம் மறந்துபோகுமா என்ன? என என்னை நானே பலமுறை கேட்டுக்கொண்டிருந்தாலும்..மறந்துவிட்டது விட்டதுதான்.

மறந்துபோன கொங்குத்தமிழை அதன் சுவையை மீட்டெடுக்கிற சீரிய முயற்சியை அண்மைக்காலங்களில் மேற்கொண்டு வருகிறேன். அதைப்பற்றி எப்போதோ நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கையில் வாமுகோமுவின் கள்ளி குறித்து குறிப்பிட்டார். கொங்குத்தமிழை அட்டகாசமாக கையாளுகிற சமகால எழுத்தாளர்களில் வாமுகோமு முக்கியமானவர் என்பதை அவருடைய சில சிறுகதைகளின் வாயிலாக அறிந்திருந்தேன்.

உயிர்மையில் அவருடைய சில சிறுகதைகள் படித்திருந்தாலும் நாவல் என்கிற வகையில் சாந்தாமணியும் இன்னபிற காதல்கதைகளும் குறித்த பல்வேறுபட்ட எதிர்மறை விமர்சனங்களின் அடிப்படையில் அதை படிக்கவேண்டும் என்கிற ஆவல் நிறையவேயிருந்தது. அதுவும் போக சரோஜா தேவி காலந்தொட்டே படிக்கும்போது கிடைக்கிற பாலியல் இன்பம் அண்மைக்காலங்களில் குறைந்துபோனதும், அது வாமுகோமுவின் எழுத்துகளில் ஏகத்திற்கும் கிடைப்பதாக நண்பர்கள் சொன்னதும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியது.

அஜால்குஜால் கதை படிக்க போகிறோம் என்கிற ஆர்வத்தோடு புத்தகத்தை விரித்து வைத்து படிக்க ஆரம்பித்தேன். எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்கிறது நாவல். புத்தகத்தின் எந்தப்பக்கத்தை திறந்தாலும் சாராய போதையும் புணர்ச்சியும் மலிந்து காணப்பட்டது. ஆனால் அதற்காக இந்த நாவலை வெறும் பாலியல் கதையென்கிற என்கிற ஒற்றை பரிமாணத்தின் அடிப்படையில் சுருக்கிவிட இயலாது. வட்டார வழக்கு, தலித் அரசியல், பாசங்கில்லாத அப்பட்டமான கிராமத்து மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறை.. கொஞ்சமாய் ஆங்காங்கே தொட்டுக்கொள்ள ஊறுகாயாட்டம் செக்ஸ்!

இதை கிட்டத்தட்ட பத்து சிறுகதைகளின் தொகுப்பு என்றும் கொள்ளலாம். ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு விதமான கிராமத்து சூழல்,மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசுகின்றன. அதையே தன் முன்னுரையில் நாவலாசிரியராகப்பட்டவரான வாமுகோமுவும் தெரிவிக்கிறார். வாய்ப்பாடி என்னும் ஊரைச்சேர்ந்த மல்லி என்னும் தலித் கூலியாளின் ஒரு மாலைப்பொழுதிலிருந்து கதை துவங்குகிறது. பின் ஒவ்வொரு கதாபாத்திரங்களாக உள்ளே நுழைய தலித்துகளுக்கும் ஆதிக்கசாதி இந்துகளுக்குமான ஒரு போட்டி தொடங்குகிறது.

போக்கிடமில்லாமல் பிழைப்புக்கு வழியில்லாமல் கவுண்டர் சாதி முதலாளிகளிடம் கைகட்டி வாய்பொத்தி அவர்களிம் ஏச்சும் பேச்சும் வாங்கிக்கொண்டு ஆண்டாண்டு காலம் வாழ்ந்த ஒரு சமூகம் , அருகாமை நகரத்தில் உருவாகும் தொழிற்புரட்சியால் கிடைத்த வாய்ப்பின் அடிப்படையில் முதல்முறையாக ஆதிக்கசாதிக்காரர்களிடம் எதிர்த்து நின்று கேள்வி கேட்கிறது. அது அந்த ஊரிலும் வாழ்க்கை முறைகளிலும் பெரிய மாற்றத்தை உண்டுபண்ணுகிறது.

வீடுவீடாக போய் சவரம் செய்துகொண்டிருந்த நாசுவன் தனியாக கடைபோடுகிறான். ஏன்டா உன்ரா எடத்துக்கு நாங்க வந்து முடிவெட்டிக்கோணுமா என கவுண்டர்கள் கொதிக்கிறார்கள். தலித் பையன் சின்ன கவுண்டச்சியை காதலித்து ஊரைவிட்டே ஓடுகிறான். பத்தாவது வரை படித்த தலித் பையன் வெள்ளையும் சொள்ளையுமாக சேரில் உட்கார்ந்து கணக்கெழுதுவதை கண்டு சகிக்க முடியாமல் வயிறெரிகிறது ஆதிக்கசாதிக்கு! இறுதியில் தன் வீட்டு வேலைக்கு தலித்திடம் கெஞ்சி கூத்தாடுவதாக கவுண்டனின் கதை முடிகிறது! ஆதிக்கசாதியின் அடுத்த தலைமுறை தலித்துகளை முற்றிலுமாக நிராகரித்துவிட்டு தன் அப்பன் பிணத்தை புதைக்க அதுவே குழிதோண்டுகிறது. கல்வியும் வேலைவாய்ப்பும் தலித்திய சமூகத்தில் பெரிய மாற்றங்களை உண்டுபண்ணுகிறது. அது அவர்களை எதிர்த்து கேள்விகேட்கவும் தூண்டுகிறது.முதல்முறையாக திருப்பூர் பனியன் பாக்டரிகள் வாய்பாடியில் தலித்துகளின் புரட்சிக்கு வித்திடுகிறது.

ஆதிக்க சாதியின் பாலியல் வாழ்க்கையும் தலித்துகளின் பாலியல் வாழ்க்கையும் ஒரு ஊரில் எப்படி இருவேறாக கூர்நோக்கப்படுகிறது என்கிற பார்வையும் இக்கதையினூடாக சொல்லப்பட்டிருக்கிறது. கதையில் முதலில் ஒரு விஷயம் மிகவும் நெருடலாக இருந்தது. கதையின் பாத்திரமான பழனிச்சாமியோடு உறவு வைத்துக்கொள்ள கதையில் வருகிற மற்ற எல்லா பெண்களும் துடிக்கின்றனர். அவனோடு எல்லா கிட்டத்தட்ட எல்லா பெண்களும் படுத்துக்கொள்கின்றனர். அவன் காடு மேடு கரடு வீடு என எங்கும் யாரையாவது புணர்ந்தபடியே அலைகிறான். (கதைக்குள் பழனிச்சாமி வரும்போதெல்லாம் படிக்கும் நமக்கு மனம் குதூகலிக்கிறது! ஷகிலா படங்களில் ஷகிலா வருவார் முன்னே பிட்டு வரும் பின்னே என்பதற்கிணங்க). ஆனால் ஒவ்வொரு பெண்ணும் பழனிச்சாமியோடு உறவுக்கு ஒப்புக்கொள்வதற்கு பின்னாலிருக்கிற உளவியல் பிரச்சனைகளையும் சமூக காரணங்களையும் போகிற போக்கில் வசனங்களினூடாகவும் நிகழ்வுகளினூடகவும் தந்துவிடுகிறார்.

அறுப்புக்கு வந்த ரெகார்ட் டேன்ஸ் பெண்ணை கவரும் முத்தா கவுண்டர். அவளை உறவுக்கு அழைத்து உறவின் உச்சநிலையில் கைமேல காசுவெச்சாதான் அடுத்து என சொல்வதிலாகட்டும், இருட்டுக்குள் மாதாரி பெண்ணை புணர்ந்தபடியிருக்கும்போது மாதாரிகளிடம் மாட்டிக்கொள்ளும் ஆதிக்கசாதி சுரேந்திரன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு தெனாவெட்டாக இருப்பதாகட்டும், அறுப்பு கூலியை ஏமாற்ற முனையும் கவுண்டனை மிரட்டி பணியவைக்கும் வெளியூர் கூலிகளால் தெம்பாகி தானும் முரண்டு பிடிக்கும் மல்லியின் பாத்திரமாகட்டும் முகத்தில் அறைகின்றன.

குழந்தைகள் இருவர் செக்ஸ் என்பது என்னவென்று தெரியாத காலத்தில் எடக்கு மடக்காக ஏதோ செய்து பார்க்கின்றனர். அதை பார்க்கிற பெண்குழந்தையின் தாய் பையனை அடிக்க.. பையனின் அம்மாவும் பெண்ணின் அம்மாவும் போட்டுக்கொள்கிற சண்டை பிரமாதமானது. அதுமாதிரி ஊர்பக்கம் நிறைய பார்த்திருக்கிறேன். அப்படியே அச்சு அசல் வார்த்தைகளின் கோர்வையாக அந்த அத்தியாயம் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு பாத்திரமும் வெவ்வேறு மனநிலையில் சித்தரிக்கப்பட்டிருப்பது சிறப்பு.
பழனிச்சாமியும்,மல்லியும்,சுரேந்திரனும்,முத்தா கவுண்டரும்,சுந்தரியும்,வெள்ளைசீலைக்காரியும் நாவலை மூடிவைக்கும்போது மனசெல்லாம் நிறைந்துவிடுகின்றனர்.

கொங்கு மண்ணின் அசல்மனிதர்களையும் வட்டார வழக்கின் சுவையையும் கடந்த ஆண்டுகளில் அங்கே நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் எந்த வித பாசாங்குமில்லாமல் அச்சு அசலாக பதிவு செய்திருக்கிறார் வாமுகோமு.

(உயிர்மை பதிப்பகம் வெளியீடு)
(புத்தகம் தந்து உதவிய ரோமியோவிற்கு நன்றி)
நன்றி

http://www.athishaonline.com/2011/08/blog-post_17.html

...


மதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா


உயிர்மை பதிப்பகம் அன்புடன் அழைக்கிறது

மதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

நாள்: 3.9.2011 சனிக்கிழமை

நேரம்: மாலை 4 மணி

இடம்: புத்தக கண்காட்சி மைதானம்,

தமுக்கம் மைதானம், மதுரை

வெளியிடப்படும் நூல்கள்

1) இரண்டு சூரியன் - தேவதச்சன்

2) சேகுவேரா வந்திருந்தார் - வா.மு.கோமு

3) திரைப்படக் கலை - முனைவர். வெ.மு.ஷாஜகான் கனி

4) ஈழத்து நாட்டார் பாடல்கள் - தொகுப்பு: ஈழவாணி

வரவேற்புரை:

மனுஷ்ய புத்திரன்

சிறப்புரைகள்:

1) மு.ராமசாமி

2) எஸ்.ராமகிருஷ்ணன்

3) சுகுமாரன்

4) . முருகேச பாண்டியன்

5) எஸ். அர்ஷியா

முதல் பிரதி பெறுவோர்:

1) சேது சொக்கலிங்கம்

2) சமய வேல்

3) தேவேந்திர பூபதி

4) .முத்து கிருஷ்ணன்

வெளியிடப்படும் நான்கு நூல்கள் மொத்த விலை: ரூ.610

வெளியீட்டரங்கில்: ரூ. 475

அனைவரும் வருக...


..

வியாழன், ஜூலை 28, 2011

8வகுப்பு படிக்கும் ஒரு மாணவனுக்கு உதவி செய்யுங்கள்.

அண்மையின் நடந்த ஒரு பள்ளித்தேர்வில் எங்களது கிராமத்தை சேர்ந்த ஒரு மாணவன் வெற்றிபெற்றான்,அவனை அழைத்த மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தினர் கையில் ரூ 5000 கொடுத்து ஏதேனும் ஒரு கண்டுபிடிப்பு அல்லது வாழ்க்கைக்கு உதவும் வகையில் ஒரு ப்ராஜக்ட் கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளனர்,அவருக்கு உங்களால் முடிந்த ஐடியா கொடுத்து உதவி செய்யுங்கள் என உங்களை அழைக்கிறேன்.

..

புதன், ஜூலை 27, 2011

அணைக்கட்டு ஓடையில் ஆனந்த‌குளியல்


நம்ம ஊருக்கு பக்கத்துல ஒரு அணைக்கட்டு ,அணைக்கட்டுனா அதில வெளியே வரும் வாய்க்கால் தண்ணில குளிக்கலாமுன்னு எல்லாருக்கும் தோணும்,

இந்தடேம்ல தோணும்,ஆனா குளிக்க முடியாது,ஏன் தண்ணி வராதா? வரும். ஆனா நல்லதண்ணியா வராது. ஆனா அதிலயும் ஒருத்தன் இன்பமா குளிச்சான்.

அவனோட குளியல் காட்சிகள்தான் இனி வரும் படங்கள்.,












ஒரத்துபாளையம் டேம்தானுங்க,இந்த அணைக்கட்டு.

..

சனி, ஜூலை 23, 2011

மௌனமே காதலாய்!

பனிரெண்டு பாலைவன வருஷங்களுக்குப் பிறகு
அவ‌னை பார்க்க நேருகிறது.
எங்கெனில்..
ஒரு ரயில் நிலையத்தில்.

எப்போதெனில்..
ஒரு நள்ளிரவில்.

எதிரெதிர் திசையில் செல்லும் ரயில்கள் இளைப்பாறிக்
கொள்ளும் அந்த இடைவெளியில்..

ரயில்களின் எதிரெதிர் பெட்டிகளில்
பழைய கண்கள் நான்கு பார்த்துக் கொள்கின்றன.

அப்பொழுது-
மனசில் எத்தனை மௌன பூகம்பம்!)
உன்னைப் பார்த்த
ஒரு நிமிஷத்தில்
இமைகளைக்
காணாமல் போட்டு விட்டன
கண்கள்.


நீதானா?
இல்லை-
வேறொரு கண்களால்
நான்
பார்ககிறேனா?

மனசின் பரப்பெங்கும்
பீச்சியடிக்கும் ஒரு
பிரவாகம்.

இதயத்தின்
ஆழத்தில் கிடந்த
உன்முகம்
மிதந்து மிதந்து
மேலே வருகிறது.

அதே நீ!
என் பழையவனே!

என்
கனவுகளில் அலையும்
ஒற்றை மேகமே!

உன் நினைவுகளில்
நான்
எத்தனையாவது பரணில்
இருக்கிறேன்?

உன் பெயரை
மறக்கடிப்பதில்
தூக்க மாத்திரை கூடத்
தோற்றுப் போனதே!

ஓ!
நீ மாறியிருக்கிறாய்.
உன்
கேச‌த்தின் அடர்த்தி
கொஞ்சம்
குறைந்திருக்கிறது.

உன்
க‌ருப்பில் கொஞ்சம்
சிதைந்திருக்கிறது
உன்
இதழ்களில் மட்டும்
அதே மெள‌ன‌ம்.

இப்போதும்
நாம்
பேசப்போவதில்லையா?

வார்த்தைகள் இருந்தபோது
பிரிந்து போனவர்கள்
ஊமையான பிறகு
சந்திக்கிறோமா?

உன் நினைவுகள்
உன் ம‌னைவியை போலவே
உறங்கியிருக்கலாம்.
ஆனால்
என் நினைவுகள்
உன்னைப் போலவே
விழித்திருக்கின்றன.

ஓ!
இந்த
ரயில் வெளிச்சம்
நீ
வ‌ருத்த‌ப்ப‌டுவ‌தாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்!

விழியில் ஒழுகும்
வேத‌னையால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தைக்
கெடுத்து விடாதே!

இதோ
விசில் சத்தம் கேட்கிறது
நம்மில் ஒரு வண்டி
நகரப் போகிறது.

போய் வருகிறேன்!
அல்லது
போய்வா!
மீண்டும் சந்திப்போம்!
விதியை விடவும்
நான்
ரயிலை நம்புகிறேன்.

அப்போது
ஒரே ஒரு கேள்விதான்
உன்னை நான் கேட்பேன்!

"நீயும் என்னைக்
காதலித்தாயா?"

...

திங்கள், ஜூலை 18, 2011

Best Young Writers

Va Mu Komu is the pen name of VM Komakan from Erode district of Tamil Nadu. He is a poet and a regular writer in the literary magazine Sugan which also brought out his first collection of stories Azuvachi Varuthunga Sami (I feel Like Crying, Sir). His second collection Mann Bootham (Demons of Sand) came out in 2006 and a novel Kalli (Thief) in 2007. Sollak Koosum Kavithaikal (Poems You Cringe from Uttering) and a third collection of stories, Thavalaikal Kuthikkum Vayiru (Jumping Frogs in the Stomach) came out in 2008. His unabashed language and the manner in which his stories speak about sex and sexuality broke all rules of sophistication and “dignity” associated with creative literature. The youth in his stories are constantly dealing with notions of love and the reality of sex, deceit and disease. There is a feeling that he writes to shock people out of their delusions. I find his language deliberately merciless for the lives he is dealing with lack the luxury of “grace” and “dignity”.

..

வெள்ளி, ஜூலை 01, 2011

நாடார் வரலாறு 3


இந்த கட்டுரை விக்கிப்பீடியா,தேவியர் இல்லம்,கொடுக்கி,மற்றும் பல இணைய தளங்களில் இருந்தே தொகுக்கப்பட்டது.எனவே கருத்துகள் அனைத்தும் சொந்தகருத்தல்ல என்பதையும் தொகுப்பின் முன் பதிவிலேயே தெரிவித்துக்கொள்கிறோம்.


சென்ற நூற்றாண்டில் நாடார் சமுகத்தின் நிலை மிக உயர்வாக இல்லை, அனால் சில குடும்பங்கள் நில கிளர்களாக இருந்துள்ளனர்...

-
குறிப்பாக நட்டாத்தி என்ற ஊரை 1892 வரை ஆண்டு வந்தவர் நட்டாத்தி ஜமிந்தர்கள்,
இந்த ஊரின் கடைசி ஜமின்தார் வைகுண்ட திருவளழுதி நாடார்.


-
திருச்சந்தூர் ஆதித்த நாடார்கள் பரம்பரை நில கிழார்கள்.

-
முட்டம் நாடான் மார்கள்(நாடார்கள்) பரம்பரை பரம்பரையாக வரி வசூல் செய்ய தகுதி பெற்றவர்கள்.

- travancore state manual
இன் படி, அகதீஸ்வரம் நாடான் மார்கள் (நாடார்கள்) கோட்டை, மற்றும் 100 போர் சேவகர்கள் கொண்டு ஆண்டு அந்த ஊரை ஆண்டு வந்தவர்கள், தோள் சீலை கழகத்தில் பொழுது , இந்த நாடார் குடும்பத்தினர்களுக்கு எந்த அடக்குமுறையும் செலுத்தப்படவில்லை.

-
பொறையார் நாடார் குடும்பம் பழம் பெரும் குடும்பம், அரியலூர் ஜமின் கிராமத்தை சென்ற நூற்றாண்டில் ஏலத்தில் எடுத்த பெருமை, பண பலம் அவர்களுக்கு உண்டு.

-
திருவதான்கூர் சமஸ்தானத்தின் படை தளபதி ஆனந்த பத்பநாப நாடார், இன்றும் அவர்களிடம் மன்னர் கொடுத்த பல ஏக்கர் நிலங்களும், பரிசாக கொடுத்த மன்னருடைய வாழும் அவர்கள் வசம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த வாழ் தற்போதய மன்னருக்கு பரிசாக அளிக்க பட்டது.

[தொகு] சமுதாயத்தினர் இன்றைய நிலை

இன்று தமிழ்நாட்டில் பொருளாதார வசதியுடையவர்களாக இச்சமூகத்தினர் முன்னேற்றமடைந்துள்ளனர். பல துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். மேலும் இவர்கள் அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளனர். தமிழகத்தில் இச்சமூகத்தைச் சேர்ந்த காமராசர் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இச்சாதியினரில் பலர் தமிழக அமைச்சரவையிலும் இந்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். தற்போதைய தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பூங்கோதை ஆலடி அருணா , சமூகநலத் துறை அமைச்சராக கீதாஜீவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

[தொகு] முக்கியப் பிரமுகர்கள்

இந்த நாடார் சமுதாயத்தில் முக்கியப் போராட்டங்களின் மூலமும், அரசியல் பங்களிப்பின் மூலமும் சிறப்பு பெற்ற பலர் இருக்கின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கதாகச் சிலரைக் குறிப்பிடலாம்.

அய்யா வைகுண்டர்

நாடார் சமூகத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த முத்துக்குட்டி என்பவர். கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த தீண்டாமைக் கொடுமையை எதிர்த்துப் போராடியவர். அய்யா வழி எனும் புதிய வழிபாட்டு முறையைக் கண்டறிந்து வழிகாட்டியவர்.

மார்ஷல் நேசமணி

1956 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைக் கேரளாவோடு இணைக்க வேண்டும் என்ற நிலையில் போராடி அம்மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கப் பாடுபட்டவர்.

காமராசர்

ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய பல விடுதலைப் போராட்ட வீரர்களில் தமிழ்நாட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காமராசரும் ஒருவர். இவர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்ததுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி ஆகியோரை இந்திய அரசின் பிரதமராகக் கொண்டு வர முன் நின்றவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கே.டி.கோசல்ராம்

சுதந்திரப் போராட்ட தியாகியான இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு அணையை தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்தும் வசூலித்து கட்ட வைத்த பெருமைக்குரியவர்.

பட்டிவீரன்பட்டி சௌந்தர பாண்டியன்

பொது இடங்களில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கும் மற்றவர்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று போராடிய சிலருள் இவர் முக்கியமானவர். நாடார் சமூகத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி முதல் மேல்சபை உறுப்பினரானவர்.

[தொகு] கல்விப் பணி

தமிழ்நாட்டில் நாடார் சமுதாயத்தினர் ஆற்றி வரும் கல்விப்பணி அரியது. கிறித்துவ மத சார்புடைய அமைப்புகளுக்கு அடுத்ததாக நாடார் சமூகத்தினர் அதிக அளவில் கல்விக்கூடங்களை உருவாக்கியுள்ளனர். இந்த க் கல்விக்கூடங்களின் வாயிலாக தமிழகத்தில் சிறப்பான கல்விப்பணியாற்றும் நாடார் சமுதாயத்தின் பங்களிப்பு பெரிதும் போற்றக் கூடியது.

[தொகு] அரசியல் பங்களிப்புகள்

தமிழ்நாட்டில், தென் மாவட்டங்களில் அதிக அளவாக இச்சமுதாயத்தினர் அரசியலில் பங்களிப்பு செய்து வருகின்றனர். இச்சாதியினரில் பலர் தமிழக அரசின் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பங்களிப்பு செய்துள்ளனர். இவர்களில் சிலர் தமிழக அமைச்சரவையிலும் இந்திய அமைச்சரவையிலும் அமைச்சர்களாகப் பணியாற்றியிருக்கின்றனர். இவர்களில் குறிப்பாக சிலரைக் குறிப்பிடலாம்.

[தொகு] இலக்கியம், தொழில், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பங்களித்துள்ள நாடார் பெருமக்கள்

தமிழ்நாட்டில் நாடார் சமூகத்தினர் பலர் இலக்கியம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர்.

  • ஆபிரகாம் பண்டிதர் - தமிழிசை, பாரம்பரிய மருத்துவத் துறை அறிஞர்; ’கருணாமிருத சாகரம்என்ற ஆய்வு நூலை எழுதியவர். [6] [7]
  • .​ பொ. சிவஞானம் - சிலம்புச்செல்வர் எனப்போற்றப்பட்டவர்; 140 க்கும்மேலான நூல்களை எழுதியவர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1966).
  • தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (தெ.பொ.மீ.) - தமிழறிஞர்
  • நாரண துரைக்கண்ணன் - தமிழறிஞர்
  • குமரி அனந்தன் - பனைத்தொழிலாளர்கள் நலவாரியத்தலைவர்
  • பிரபஞ்சன் - புகழ்பெற்ற எழுத்தாளர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1995)
  • பொன்னீலன் - புகழ்பெற்ற எழுத்தாளர்; சாகித்திய அகாதமி விருது பெற்றவர் (1994)
  • பேரா..பஞ்சாங்கம் - எழுத்தாளர்
  • எஸ். டி. நெல்லை நெடுமாறன் - வரலாற்று ஆய்வாளர்; தொல்லியல் அறிஞர் பட்டம் பெற்றவர்; பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்
  • சிவ நாடார் - பத்மபூஷண் விருது பெற்றார்; HCL Technologies தலைவர்[8]
  • வி.ஜி.பன்னீர்தாஸ் - VGP Group நிறுவனங்கள்; பல துறைகளில் சிறப்பு
  • பெரும்புலவர் அருளப்பனார் - இலக்கியப் பங்களிப்பு
  • பேராசிரியர் மரிய அந்தோணி - தேம்பாவணி அறிஞர்
  • தமிழ்ப் புலவர் சேவியர் முத்து - இலக்கியப் பங்களிப்பு
  • டாக்டர் மத்தியாஸ் - குமரி மாவட்டத்தில் பெயரெடுத்த மருத்துவர்
  • ஜெயராஜ் செல்லத்துரை நாடார் - கல்வித் துறைப் புரவலர்

[தொகு] கிறித்துவ மதத்திற்கு மாறியவர்கள்

1800ஆம் ஆண்டில் தஞ்சாவூர்ப் பிரதேசத்தைப் பூர்விகமாகக் கொண்ட புராசடஸ்டண்ட் கிறிஸ்தவ நாடார்கள் நெல்லை சீமையிலுள்ள திருச்செந்தூருக்கு அருகில் குதிரைமொழித்தேரியை அடுத்துள்ள வாழையடி வகுத்தான் குப்பம் என்ற ஊரில் மிஷனரிமார்களால் குடியேற்றப்பட்டனர். அந்தப் புதிய குடியேற்றத்துக்கு நாசரேத் என்ற பெயரையும் சூட்டினர். ஒப்பீட்டளவில் திருவிதாங்கூர் பகுதி போல சான்றோர் சமூகத்துக்கு எதிரான இயக்கங்கள் எவையும் நடைபெறாத தஞ்சாவூர்ப் பிரதேசத்தில் சான்றோர் சமூகத்தவர் புராடஸ்டண்ட் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளனர்.[9]

[தொகு] இசுலாம் மதத்திற்கு மாறியவர்

"தமிழத்தில் வாழும் இந்துச் சமுதாய மக்களுடைய சாதிகளுள் 'நாடார்' என்பதொரு சாதியாகும். நாடார் சாதியினருக்கு 'பரம்பரை'த் தொழிலாக ஒரு காலத்தில் தென்னை-பனை மரங்களிலிருந்து கள் இறக்குவது 'ஒதுக்கப் பட்டிருந்தது'. பின்னர், தங்களுடைய நிலையை உணர்ந்தவர்களாகத் தங்கள் பரம்பரைத் தொழிலைக் கைவிட்ட நாடார்கள் பலர் சென்னை போன்ற நகரங்களுக்குச் சென்று கடைகளில் பணியாற்றியும் சொந்தமாகத் தொழில் செய்தும் பொருளாதார ரீதியில் ஓரளவு உயர்ந்தார்கள். எனினும், உயர்ந்த சாதியினர் என்று சொல்லிக் கொள்பவர்களால் ஒதுக்கப் பட்டவர்களாகக் கருதப் பட்ட நாடார் பெருமக்களுள், "சமூக ரீதியில் உயர்வு பெறுவது எப்படி?" என்று சிந்தித்தவர்கள் மிகச் சிலரே.

அவ்வாறு சிந்தித்தவர்களுள் ஒருவர்தாம் சக்திவேல் நாடார். பல்லாண்டுகளுக்கு முன்னர் இஸ்லாத்தின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு, முஸ்லிமாக மாறி, சமூக ரீதியான உயர்வு பெற்ற சாதிக் என்ற முன்னாள் சக்திவேல் நாடார், பல்லவி என்றழைத்துப் பெயரிட்ட தம் மகளையும் பர்சானா என்று மாற்றினார். பர்சானா, எஸ் தேர்வில் இந்திய அளவில் 30ஆவது தரம் பெற்றதோடு தமிழகத்தின் பெண் ..எஸ்-களில் முதலிடமும் பெற்றிருக்கிறார்." [1