புதன், நவம்பர் 30, 2011

தட்டி மெஸ்-ஒரு தடபுடலான விருந்து..

நேற்று திருப்பூரிலிருந்து ஒரு வேலையாக மயிலாடுதுறை செல்ல நேர்ந்தது..ஜனசதாப்தி பஸ் கட்டணத்தை குறைவாக இருந்ததால் அதுவே நமக்கு தோதாக இருக்கும் என்பதாலும் காலை 7.30 மணீக்கு ஏறி அமர்ந்தோம்..









உருட்டல்னா உருட்டு அப்படி ஒரு உருட்டு..சராசரியாக 70ல் சென்றிருக்கும் என்று நினைக்கிறேன்.திருச்சி சென்று சேரும் போது மணி 12.அதன் பிறகு இன்னும் கொஞ்சம் உருட்டு..தஞ்சாவூர்,கும்பகோணம் வழியாக மயிலை சென்று சேரும்போது மணீ 1.45 ..பசி வயிற்றை கிள்ளியது.



நெற்களஞ்சியம்


நண்பர் ஒருவர்
மயிலையில் 'தட்டி மெஸ்'என்று உள்ளது ,அதில் மீன் குழம்புடன் சாப்பாடு அருமையாக இருக்கும் \,சென்று சாப்பிடுங்கள் என்று கூறினார்..அதன்படி சென்று அமர்ந்தால் மணக்க மணக்க சாப்பாடு பரிமாறப்பட்டது..மீன்குழம்புடன் அதுவும் 3 மீன் முழுவறுவல்,2குழம்பு மீன் என வந்தது..

நன்கு கட்டிவிட்டு பில் ரூ120 வந்தது..அருகிலேயே இந்த மெஸ்ஸின் சுவை தெரிந்தே என்னவோ கவர்ன்மெண்ட் கடை வைத்துள்ளனர்....உ.பா சாப்பிடுபவர்களுக்கு சரியான மெஸ் இது...கடை உரிமையாளரே பரிமாறவும் செய்கிறார்..









நல்ல திருப்தியான சாப்பாடுதான்..இரவும் அங்கியே அருகில் சாப்பாடு முடித்துவிட்டு மறுநாள் காலை தஞ்சை பெரிய கோவில் சென்றோம்..அங்கு நாம் கண்ட காட்சி எத்தனை விருந்து சாப்பாடு சாப்பிட்டாலும் இதற்கு ஈடாகாது என்பதை பறை சாற்றியது..






ஆமாம்.வறியவர்களை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு எவர்சில்வர் தட்டமும் கொடுத்து 4 இட்லியையும் சாம்பாரையும் ஒருவர் பரிமாறிக்கொண்டிருந்தார்..சாப்பிடுபவர்களின் மனநிலையில் யோசிக்கும் போது தட்டி மெஸ்ஸில் 120 க்கு சாப்பிட்ட சாப்பாடு கொஞ்சம் மறக்கத்தான் செய்தது....


...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக