புதன், நவம்பர் 20, 2013

எனக்கு காதலிக்கத் தெரியவில்லை

சுப்பிரமணி பழனிச்சாமியிடம் சோகமாய் சொன்னான்! வாழ்க்கை கசந்து விட்டது நண்பா! மனைவியை கூட எனக்கு காதலிக்கத் தெரியவில்லை என்றான்.
கடைவீதி போய் பூங்கொத்து வாங்கிக் கொண்டு வீடு போ நண்பா! போனதும் இன்று பகல் முழுதும் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன் சகி! என்று கூறு! வாழ்க்கை இனிக்கும், என்றான் பழனிச்சாமி.
சுப்பிரமணி அப்படியே செய்தான். கதவைத் தட்டினான். மனைவி வெளியே வந்ததும் மண்டி போட்டு நீட்டி வசனம் சொன்னான்.
-அடக்கருமமே! காத்தால இருந்து எனக்கு நேரமே செரியில்லை போல. கண்ணாடி பாத்திரத்தை மதியம் உடைத்து விட்டேன். குழந்தைக்கு வயிற்றுப்போக்கு! துவைக்க ருக்கா வரலை! எங்கம்மாக்கு ஒடம்புக்கு முடியலியாம்! நீ என்னடான்னா குடிச்சுட்டு வந்திருக்கே?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக