திங்கள், ஆகஸ்ட் 31, 2009

கொழும்பு சர்வதேச வானொலி

கொழும்பு சர்வதேச வானொலி தனது வானொலி ஒலிபரப்பை மீண்டும் நிறுத்தியுள்ளது . இதனைப் பற்றிய தகவல்களைப் பெற நீங்கள் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி :

பணிப்பாளர் நாயகம்.
இலங்கை சர்வதேச வானொலி,
போஸ்ட் பாக்ஸ் நம்பர் ;574.
கொழும்பு ‍ 7.

சிரிலங்கா ஏர் மெயில் ரூ 8.50.

கட ந்த ஒரு ஆண்டுக்கு முன்னரும் தனது ஒலிபரப்பை நிறுத்தி மீண்டும்
ஆரம்பித்த வானொலி மீண்டும் தனது ஒலி பரப்பை நிறுத்தியுள்ளது.

கட ந்த வருட நிறுத்தம் பற்றிய ஒரு இடுகை :
நன்றி :
Oct 27 2008,
http://www.yarl.com/forum3/lofiversion/index.php/t46084.html


இலங்கை இனப் பிரச்சினை, தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும் கடும்எதிர்ப்புணர்வுக்கிடையே 'அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையைஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' ஆரம்பித்துள்ளது.

இலங்கை வானொலி நிலையத்துக்கென தனி வரலாறு உண்டு. 1925-ல் 'கொழும்புரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்தநிலையத்துக்கு உலகின்இரண்டாவது வானொலி நிலையம் (முதலாவது - 'பிபிசி' - 1922) என்றபெருமையும் ஆசியாவின் முதல் வானொலி நிலையம் என்ற பெருமையும்உண்டு.

காலப்போக்கில் எத்தனையோ மாற்றங்களைக் கண்ட இந்நிலையம், 1972-ம்ஆண்டிலிருந்து 'இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற பெயரில்ஏராளமான அலைவரிசைகளுடன் செயல்பட்டுவருகிறது. இதில், கடந்த கால்நூற்றாண்டாக மத்திய அலைவரிசையில் ஒலிப்பரப்பாகிவந்த 'கொழும்புசர்வதேச நிலைய அலைவரிசை' கடந்த மே 31-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.

தென்னிந்திய வர்த்தகத்தைப் பிரதானமாகக்கொண்டு நடத்தப்பட்டுவந்த இந்தஅலைவரிசைதான் தமிழகமெங்கும் ஒலித்துவந்தது. (இலங்கை வானொலிஇன்னும் சில தமிழ் அலைவரிசைகளை ஒலிபரப்பிவந்தாலும் அவற்றை இங்குதெளிவாகக் கேட்க முடியாது). தமிழகத்தில் பரவலாக பண்பலை வானொலிநிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், ஏற்பட்டுள்ள விளம்பர வருவாய் இழப்புகடும் நிதி நெருக்கடி காரணமாகவே இந்த அலைவரிசை சேவைநிறுத்தப்பட்டதாக அப்போது இலங்கை வானொலி நிலைய வட்டாரங்கள்தெரிவித்தன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை வானொலியின் முன்னாள்அறிவிப்பாளர் பி.ஹெச். அப்துல் ஹமீத், ''தொழில்நுட்பத்தின் விளைவு இது. எதிர்காலம் மின்னலைக்கானது. எனவே, பண்பலை நிலையங்களுக்கும்கூடநாளை இதே நிலை ஏற்படலாம். இது தவிர்க்க முடியாதது எனவும் அவர்கூறியுள்ளார்.

இனி, இலங்கை வானொலி அலைவரிசையை தமிழகத்தில் கேட்கவே முடியாதுஎன்ற சூழல் ஏற்பட்டிருந்த நிலையில், ஓசைப்படாமல் கடந்த புதன்கிழமை முதல்மீண்டும் சேவையை இலங்கை வானொலி நிலையம் ஆரம்பித்துள்ளது. இதேவேளை இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழகத்தில் கடும்எதிர்ப்பு நிலவிவருவதால், பதற்றத்தைத் தணிக்கும் ராஜதந்திரமாகவேவானொலி சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதனை உறுதிப்படுத்துவதுபோல இந்த அலைவரிசையின் பெயரும்மாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 'கொழும்பு சர்வதேச நிலைய அலைவரிசை' என இருந்த பெயர் இப்போது 'அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு' எனமாற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இரண்டு மணி நேரம் ஒலிபரப்பாகிவந்த இந்தச்சேவை இப்போது நான்கு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 'முக்கிய அரசியல்வாதிகளிடம் இதற்கென வாழ்த்துச் செய்திகள்பெறப்பட்டிருப்பதாகவும் விரைவில் அவை ஒலிபரப்பப்படும் என்றும் இலங்கைவானொலி நிலைய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைப் போர் தொடர்பாக தமிழகத்தில் வெளியாகும் செய்திகள் இலங்கைஅரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தன் தரப்புசெய்திகளை மக்களிடம் கொண்டுசெல்லும் ஊடகமாக வானொலியைப்பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தஅடிப்படையிலேயே மீண்டும் வானொலி ஒலிபரப்பை அந்நாட்டு அரசுஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதிசெய்த இலங்கை வானொலிநிலைய தகவல்கள் தற்போது, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மாத்திரமேஒலிபரப்பப்பட்டுவந்தாலும் விரைவிலேயே செய்தியும் ஒலிபரப்பப்படும் எனத்தெரிவித்துள்ளன.

மற்றுமொரு இடுகை :இலங்கைப் பிரச்சினை, தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கும்கடும் எதிர்ப்புணர்வுக்கிடையே அகில இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்புசேவையைத் தொடங்கியிருக்கிறது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புநிலவிவருவதால், பதற்றத்தைத் தணிக்கும் இராஜதந்திரமாகவே வானொலிசேவை மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

1925-ல் "கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்நிலையம் 1972-ம்ஆண்டிலிருந்து "இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்' என்ற பெயரில்ஏராளமான அலைவரிசைகளுடன் செயல்பட்டு வந்தது.

இதில், கடந்த கால் நூற்றாண்டாக மத்திய அலையில் ஒலிப்பரப்பாகிவந்தகொழும்பு சர்வதேச நிலைய அலைவரிசை' கடந்த மே 31-ம் தேதியுடன்நிறுத்தப்பட்டது.

தென்னிந்திய வர்த்தகத்தைப் பிரதானமாகக்கொண்டு நடத்தப்பட்டுவந்த இந்தஅலைவரிசை தமிழகத்தில் பரவலாக பண்பலை வானொலி நிலையங்கள்தொடங்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள விளம்பர வருவாய் இழப்பு; கடும் நிதிநெருக்கடி காரணமாகவே நிறுத்தப்பட்டதாக அப்போது இலங்கை வானொலிநிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இனி, இலங்கை வானொலி அலைவரிசையை தமிழகத்தில் கேட்கவே முடியாதுஎன்ற சூழல் ஏற்பட்டிருந்த நிலையில், ஓசைப்படாமல் கடந்த புதன்கிழமை முதல்மீண்டும் சேவையைத் தொடங்கியிருக்கிறது இலங்கை வானொலி நிலையம்.

http://www.tamilwin.com/view.php?2e40QHbcb3bh9ES34d3IWnp3b02h7GQe4d44Op7c00bdnLWIde2dE2hr2cc0Fj0g3e)


..

இலங்கை வானொலி அறிவிப்பாளரின் பதில் :
Blogger பிரபா said...

//
வாய்ப்பாடி குமார் said...
கொழும்பு சர்வதேச வானொலி தனது வானொலி ஒலிபரப்பை மீண்டும் நிறுத்தியுள்ளது .

மீண்டும் ஆரம்பிக்கப்படுமா ?

http://voipadi.blogspot.com/2009/08/blog-post_31.html

ஆரம்பிக்கப்படும் ஆனால் கால அளவு சொல்ல முடியாது..

August 31, 2009 9:33 PM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக