புதன், ஜூன் 16, 2010

கரூர் வைஸ்யா பேங்க் ஏடிஎம்


அண்மையில் கரூர் வைஸ்யா பேங்க் ஏடிஎம் மில் நண்பரொருவர் ரூ 30000/=‍ எடுக்கச் சென்று எடுத்தும் விட்டார். நோட்டை எண்ணியவர் உடனடியாக தன் தங்கையின் காலேஜ் பீஸ் கட்டச் சென்று , கவுண்டரில் கொடுத்தார். அவர்கள் அதை எண்ணியபின் அதிலிருந்து ஆறு ரூ 500 நோட்டுகளை திருப்பிக் கொடுத்தனர். வாங்கிப் பார்க்கும்போது அந்த ஆறு நோட்டும் ஒரே மாதிரி கிழிந்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

உடனடியாக பல்லடம் பேங்கிற்கு சென்று மேனேஜரிடம் கிழிந்த நோட்டுப்பற்றிக் கூறிய போது "இந்த மாதிரி கிழிந்த நோட்டெல்லாம் எங்க ஏடிஎம் மில் வராது " என்று பதிலளித்துள்ளார். அதுவுமில்லாமல் நோட்டை மாற்றித்தர மறுத்தும் விட்டார்.

அப்ப "ஏடிஎம்" இல் பணம் எடுத்த என் நண்பர் இ.வாவா?
அல்லது எங்க "ஏடிஎம்மில் இந்த மாதிரி கிழிந்த நோட்டெல்லாம் வராது" அப்படின்னு சொன்னாரே மானேஜர் , அப்படினா அந்த ஏடிஎம் என்ன பணம் பிரெஸ்ஸா அச்சடிக்கிற மெசினா ?

இல்லை இதுக்கு வேற ஏதாவது வழி இருக்கா ? உடனே ஸ்டேட் பாங்க் போங்கன்னு சொல்லாதீங்க. உருப்படியான வழி ஒண்ணு சொல்லுங்க.

இது மோசடியா ? இல்லையா ?

2 கருத்துகள்:

  1. ASk your friend to take the statement from the bank. It will show from which ATM he has taken the amount. And even after the Bank refuse.ask your friend to contact Bank Ombudsman

    பதிலளிநீக்கு
  2. சுலபமான வழி

    axis bank account இருந்தால் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்..

    நான் அப்படித்தான்,

    பதிலளிநீக்கு