வெள்ளி, ஜூலை 13, 2012

மூலிகைப்பெட்ரோல்‍ -இராம ரகசியம்



எப்பெல்லாம் பெட்ரோல் விலை ஏறுதோ அப்ப எல்லாம் மாற்று எரிபொருள் தேவை என மக்கள் மனதில்(நன்றாக‌ கவனிக்கவும் மக்கள் மனதில்)மட்டும் தோன்றுகிறது. ஆள்பவர்கள் இதில் எல்லாம் கவனம் கொள்வதில்லை,ஆளுங்கட்சி ஏற்றுவதும்,அதை உடனே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதும் பாகிஸ்தானில் இவ்வளவு,ஈரானில் இவ்வளவு என வரைபடத்தில் கூட காணமுடியாத சில நாடுகளையும் சேர்த்து ஒப்பிடுவதிலேயே மக்களை மாற்று எரிபொருள் பற்றிச் சிந்திக்கவிடாமல் மழுங்கடித்துவிடுகின்றனர்.

இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் யாரேனும் ஒருவர் நாட்டின் நலனை வேண்டாமே,மக்களின் நலனை வேண்டாம்,சொந்த நலனை முன்னிட்டு மாற்று எரிபொருள் பற்றி ஏதேனும் செய்தால் அவர்களை கேள்வி கேட்டே கொன்றுவிடுவதில் நம் விஞ்ஞானிகளை விட வில்லன்கள் வேறு யாரும் இருந்துவிட முடியாது.

அதையும் மீறி நிரூபித்தால் அரசியல்வாதிகள் விடுவதில்லை,இரகசியத்தை தெரிந்து கொண்டு நாம் சம்பாரித்துக் கொள்ளலாம் என மிரட்டல்கள் வேறு,சொல்லவில்லை எனில் அவர்கள் மீது வழக்குகள்,மோசடிக் குற்றச்சாட்டுகள் என பல வழிகளில் நோகவைத்துவிடுகின்றனர்..

இந்த வழியில் மூலிகைப்பெட்ரோல் என அறிவித்து அதை நிரூபித்தாலும் இவர்களிடம் தப்ப முடியாமல் வழக்குகளில் சிக்கி சில காலம் காணாமல் இருந்த நமது மூலிகை இராமர் மீண்டும் தனது பணியைச் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார்.கடந்தமுறை மூலிகைப்பெட்ரோல் என்று அறிவித்துதான் சிக்கல் ஏற்பட்டது எனவும் இந்த முறை மாற்று எரிபொருள் என அறிவித்து தனது தயாரிப்பை சந்தைப்படுத்த தயாராக அறிவித்து உள்ளார்.

இவரது தயாரிப்பை உலகின் உயர்ந்த ஆய்வுக்கூடமான டென்மார்க் ஆய்வு மையம் சிறந்த மாற்று எரிபொருள் என அறிவித்து உள்ளது.கூடவே மலேசிய,சிங்கை ஆய்வுக்கூடங்களும் அங்கீகரித்து உள்ளது.

இதுவரை இவரின் தயாரிப்பை பயன்படுத்தி ஓடிய பைக்குகளும்,எந்த வித பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை.

தண்ணீரைப் பயன்படுத்தி இவர் எப்படி மூலிகை பெட்ரோலை எப்படி தயாரிக்கிறார் என்பது பற்றிய ஒரு விளக்கத்தை இராமரே கூறியதை நாம் காண்போம்..

தண்ணீரின் மூலக்கூறுகளான ஹைட்ரஜனையும்,ஆக்சிஜனையும் தனித்தனியாக பிரித்து ஹைட்ரஜனை எரிக்க உறுதுணையாக தண்ணீரில் உள்ள ஆக்சிஜனையே பயன்படுத்துவதே இவர் கண்டுபித்துள்ள மூலிகை கலவையின் சாமர்த்தியம்.

எப்படிக்கண்டுபிடித்தார் இந்த விசயத்தை.9வகுப்பு வரை படித்த இவரால் எப்படி சாத்தியம்..அவரே அதையும் கூறுகிறார்,சிறுவயதில் கல்விச் சுற்றுலா சென்ற இடத்தில் சமையல் செய்யும் போது அங்கிருந்த ஒரு பசுந்தழை ஒன்று குபுக் கென்று தீப்பிடித்து எரிந்ததை வைத்து மண்டையை உடைத்து இந்த விசயத்தை கண்டுபிடித்து உள்ளார்.ஆம் பசுந்தழையும் ,வெங்கச்சாம் கல் எனப்படும் நெருப்பை உண்டாக்கப்பயன்படும் சிக்கி முக்கி கல்லையும் உடைத்து சரிவிகிதக்கலவை உண்டாக்கி பவுடராக்கி,சிட்ரிக் உப்பையும்,தண்ணீரில் கலந்து அதை சூடுபடுத்தி அந்த தண்ணீரை சிறிது நேரம் ஆறவைக்கும் போது தண்ணீர் பிரிந்து பெட்ரோலாக மாறி வருவதை காணலாம்.

மேலே உள்ள நீர்மத்தை பைக்கில் ஊற்றி வண்டியை ஓட்டும் போதோ,அல்லது அந்த தண்ணீர் கலவையில் நெருப்பை வைக்கும் போதோ அதன் எரிபொருள் தன்மை நமக்கு நன்கு தெரிகிறது,,

இந்த விசயங்கள் சாத்தியமா என பழம்பொருள் ஆய்வாளர்களிடம் கேட்டபோது ஆம் மலைக்காடுகள் சில நேரங்களில் தீப்பிடிப்பதும் இது போன்ற நிகழ்வுதான் என்று கூறுகின்றனர்.அந்த வகையில் அவர்கள் சொன்ன அரிய வகை மூலிகைகள் பற்றி புறநானூறு பாடல்களில் வருவதாக கூறியுள்ளனர்.

அந்தவகையான மூலிகைகளில் ஒன்றுதான் விராலிச்செடி.இதன் இலை இரண்டு மூன்றை சேர்த்து வைத்து நெருப்பை வைக்கும்போது உடனடியாக தீப்பிடிக்கிறது.இதனுடன் அரச மர இலை சேர்த்து இராமர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது..

மேலும் பிரத்தேயகமான மெசின் ஒன்றையும் தயாரித்துள்ளார்,இதற்கு காப்புரிமை மட்டும் அரசிடம் இருந்து கேட்டுள்ளார்,அவ்வாறு கிடைக்கும்பட்சத்தில் இந்த மாற்று எரிபொருளை ரூ5/க்கு தன்னால் அளிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.,இது மட்டும் சாத்தியமானால் இந்தியாவை உலக நாடுகள் திரும்பிபார்க்க வைப்பதில் இராமர் பெருமைப்படலாம்;;

அதெல்லாம் கிடக்கட்டுமுங்க என்னவோ நாதஸ்வரத்துல எல்லோரும் சேந்துட்டாங்களாமே,எல்லாத்துக்கும் மயிலுதான் காரணமாமே?பெட்ரோல் ஏறுனா என்ன? எறங்குனா என்ன? மூக்கைச்சிந்துங்க முதல்ல......

1 கருத்து: