வெள்ளி, பிப்ரவரி 10, 2012

சென்னிமலை

 

இறைவன்சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)
இறைவிஅமிர்த வல்லி, சுந்தர வல்லி
தல மரம்புளியமரம்
தீர்த்தம்மாமாங்கம்
புராண பெயர்புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி
கிராமம்/நகரம்சென்னிமலை
மாவட்டம்ஈரோடு
மாநிலம்தமிழ்நாடு
வரலாறு : நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.திருவிழா : தைப்பூசத் திருவிழா 15 நாள், 30 ஆயிரம் பக்தர்கள் கூடுவர் பங்குனி உத்திரம் 7 நாள் 10 ஆயிரம் பக்தர்கள் கூடுவர் கந்த சஷ்டி 6 நாள் 5 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். மாதாமாதம் கிருத்திகை அன்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழயும். தவிர முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டம் விசேசமாக இருக்கும். பொங்கல், தீபாவளி, வருடப்பிறப்பு ஆகிய நாட்களில் இத்தலம் பக்தர்களின் வருகையால் நிரம்பி வழியும்
சிறப்பு : கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது. மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.
திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல் : சத்தியஞானி புண்ணாக்கு சித்தர். மலைமேல் இவர் குகை உள்ளது. அம்மன் சந்நிதியிலிருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு சித்தர் (புண்ணாக்கு சித்தர் கோயில் வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவணமாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது.
இங்கு விநாயகர் திருச்சந்தி விநாயகரõகவும், காவல் தெய்வமாக இடும்பன் அருள்பாலிக்கிறார்கள் .
சென்னிமலையின் விளக்கம் : சென்னிமலை (சிரகிரி – சிரம் சென்னி, கிரி-மலை)
பிரார்த்தனை : கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது.
இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.
இயற்கை மூலிகை மரங்கள் செடி கொடிகள் நிறைந்த மலையாக இருப்பதால் இங்கு வரும் ரத்தகொதிப்பு ஆஸ்துமா நெஞ்சுவலி நோய்கள் உடையவர்கள் குணமாகிறார்கள். இது இத்தலத்துக்கு அடிக்கடி வந்து போகும் பக்தர்கள் அனுபவப்பூர்வமாக கண்ட உண்மை என தெரிவிக்கிறார்கள்
நேர்த்திக்கடன் : முருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. தவிர காவடிஎடுத்தல், முடிக்காணிக்கை முதலியன, கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம்.
தல சிறப்பு : மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது.
இது ஒர் மலைக்கோயில் இதன் உயரம் 1740 அடி, படிகள் 1320.
அதிசயத்திலும் அதிசயமாக இரட்டை மாட்டு வண்டி 1320 திருப்படிகள் வழியே தங்கு தடையின்றி ஏராளமான செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே மலையேறிய அதிசயம் நடந்தது.
சிறப்பு மிகுந்த சஷ்டி விரதம் : குழந்தை வரம் வேண்டுவோர் முறையாக சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும்.
சிரசுப் பூ உத்திரவு கேட்டல் : திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்டவர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை.
முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு.
கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம்.
வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.
அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம்.
முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம்.
இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம்.
அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை. இவர் மிகவும் விசேஷமானவர். கோயிலுக்கு பின்புறம் பிண்ணாக்கு சித்தர் குகை உள்ளது. தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது.
அடர்ந்த மரங்கள் அடர்ந்த மலை மீது அமைந்துள்ள மிக அழகான அமைதியான சிறப்பு வாய்ந்த கோயில்.
பாடியவர்கள் : -
முகவரி : அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில், சென்னிமலை – 638 051 ஈரோடு மாவட்டம்

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

காதலித்தாலே அச்சமென்ன?

காதலில் எத்தனை கதைகள் வந்தாலும் சலீம் அனார்கலியின் காதல்தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.பேரரசு அக்பர் வாரிசுதான் சலீம்,அனார்கலி அரசவையில் நடனமாடும் மங்கையர் வகையை சேர்ந்தவர்..சலீம் உண்மை.அனார்கலி கற்பனைக்காக உருவாக்கப்பட்ட பாத்திரம்.இந்த கதையை மையமாக வைத்து 1960களில் இந்தியில் 'மொகலே ஆஷம்' திரைப்படம் ஆஷிப் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்தது.

இதில் அக்பர் வேடத்தில் பிரித்திவிராஜ் நடித்து இருந்தார்.பின்னாளில் வந்த அனைத்து அக்பர் வேடங்களும் இவர்தான் முன்னோடியாகவும் இந்த படத்தில் உருவெடுத்தார்..

சலீமாக 'திலிப்குமாரும்',அனார்கலியாக'மதுபாலாவும்' நடித்து இருந்தனர்.இந்த மூன்று கதாபாத்திரங்களும் இணைந்து நடிக்க அந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவமாகவே மக்கள் மனதில் இடம் பிடித்தது.

அந்த அளவு மக்களின் மனதில் இடம் பிடிக்க காரணம் திலிப்குமார்,மதுபாலாவின் நடிப்பைத்தாண்டிய ஒரு விசயம் அவர்களிடையே குடிகொண்டிருந்த காதல்..ஆம் அந்த காலகட்டங்களில் இருவருக்கும் காதல் நிகழ்ந்து அந்த காதல் மதுபாலா வின் அப்பாவால் ஏற்றுக் கொள்ளப்படாமல்,நிராகரிக்கப்பட்டு பிண்ணனிப்பாடகர் கிஷோர்குமாரை மதுபாலா மணந்துகொண்டார்.அதன்பிறகு எடுக்கப்பட்ட இந்த படத்தில் இருவரும் மிக நெருக்கமாக நடித்ததும் ,உணர்வுபூர்வமாக நடித்ததும் தாமாகவே நிகழ்ந்தது.

http://www.youtube.com/watch?v=plsRqFDk-2A

இந்த படத்தில் வரும் 'பியார் கியா தோ தர்ணா'பாடலில் நடனமாடியபடியே அக்பர் பார்த்து கேள்விகள் கேட்கும் பாடலில் திலிப்குமாரின் முக பாவங்கள் மிகவும் துல்லியமாக,வேதனையுடனும்,காதல் நிறைவேறாத ஏக்கமும் ஒருசேர பிரதிபலிக்கும்..

இந்த பாடல் தமிழில் 'காதல் கொண்டாளே' என்று என்று சுசிலாவின் குரலிலும்,


காதலித்தாலே அச்சமென்ன என்று{'அனார்கலி2006'} சுவர்ணலதாவின் குரலிலும் வந்துள்ளது..

படத்தில் அக்பர்,அனார்கலியை விசாரிக்க அழைத்ததும் ,அனார்கலி வரும் நடையிலும் ,அவர் அக்பரை பார்த்து கேட்பதும் கவனித்தால் அரச பெண்களுக்கேயான  பாவனை தெரியும்..

மேலும் இந்த இடத்தில் அவர் கேட்கும் கேள்விகள் தன் அப்பாவை பார்த்து கேட்பதாகதான் பட்டது..

பாடலில் மதுபாலாவின் பிம்பங்கள் தெரியும் கண்ணாடிகளின் அழகு மனதை கொள்ளச் செய்கின்றன.

அக்பர் மதுபாலாவிற்கு மரணதண்டனை அளிக்கும் முன் கடைசி ஆசை என்னவென கேட்க 'ஒரே ஒரு நாள் மொகலாய பேரரசுக்கு இராணியாக வேண்டுமென' மதுபாலா கேட்கிறார்.அதன்படியே செய்வதாகவும்,தண்டனை சலீம்க்கு தெரிய கூடாததெனவும்,தண்டனை நேரத்தில் சலீம் இருக்கக்கூடாது எனவும்,எனவே அனார்கலியே சலீமை மயங்கச் செய்யவேண்டுமெனவும்,கூறப்படுகிறது..அதன்படியே செய்தும் முடிக்கும்போது அக்பர் அனார்கலியை கொல்லாமல் நாடு கடத்திவிடுகிறார்..இவ்வாறு படம் முடிகிறது..

படத்தின் சில காட்சிகள் வெளிப்புற படப்பிடிப்புகளுக்காக இருந்தது.ஆனால் மதுபாலாவின் தந்தை வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு அனுப்பினால் இவர்களின் காதல் நெருக்கம் அதிகமாகும் என்று அனுப்ப மறுத்துவிட்டார்.

படம் முடிந்தாலும்,உண்மையில் திலிப்குமாரின் ஞாபகத்திலேயேயும்,தந்தைக்காக காதலை இழந்த வருத்தத்தினாலும் அதை நினைத்து ஏங்கியே மதுபாலாவின் உயிர் 32 வயதில் பிரிந்தது..திரைக்கதையின் கதை கற்பனை என்றாலும் கதாபாத்திரங்களுக்குள் காதல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த படம் உணர்த்துகிறது.......