திங்கள், செப்டம்பர் 27, 2010

வியாழன், செப்டம்பர் 23, 2010

திருப்பூர் 24,25 பந்த்.

திருப்பூர் டீமா எனப்படும் எக்ஸ்போர்ட் அசோஷியேசன்,உற்பத்தியாளர் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து நடத்தும் இரண்டு நாள் 48 மணீ நேர வேலை நிறுத்தப் போராட்டம் , அதிகரித்து வரும் பஞ்சு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி நடைபெறுகிறது.

ஆனால் இதை தீபாவளி ஆர்டர்களை காரணம் காட்டி டீ எனப்படும் திருப்பூர் எக்ஸ்போர்ட் சங்கம் "தற்போதைய நிலையில் இந்த போராட்டம் திருப்பூருக்கு உகந்ததல்ல " எனவே எங்கள் சங்கத்தின் கம்பெனிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவித்துள்ளது.

வரும் 27 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை வைத்து பிற்பாடு ஒரு போராட்டம் அல்லது ஏதேனும் மாற்று வழியினை மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

முதல் குழுவான டீமாவுக்கு ஆதரவு தெரிவித்து பேப்பரில் வந்திருக்கும் விளம்பரத்தில் திருப்பூரில் இத்தனை சங்கங்களா ? என தோன்றுகிறது.

இரண்டாவது குழுவான "டீ"க்கு 5 சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதிலும் சாயப்பட்டறை சங்கம் " வெள்ளீ, சனிக்கிழமைகளில் " எப்போதும் இயங்குவதில்லை. இருந்தாலும் "டீ"க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சில விஷயங்களில் எத்தனை சங்கங்கள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் ,இல்லையெனில் எந்தவிதமான முன்னேற்றமோ, நல்ல விஷயங்களோ கண்டிப்பாக நடைபெறாது என்பது கடந்த கால அனுபவங்களிலிருந்தே திருப்பூருக்கு நன்றாகத் தெரியும் , இருப்பினும் இந்த முரண்பாடு ஏன் என்பது நமக்கு விளங்கவில்லை.

..

புதன், செப்டம்பர் 22, 2010

நாதஸ்வரம்‍ -சன்டீவி சீரியல்விமர்சனம்

ஹீரோ டெய்லர், கூட அந்த 7 நாட்கள் மாதிரி ஒரு காஜாப்பையன். சில நேரங்களில் தான் ஓனரா? அவன் ஓனரா ? அப்படிங்கற பீலிங் ஹீரோவுக்கே வந்துருது. ஹீரோ மூணு தங்கச்சிங்க. அதுல ஒண்ணுக்கு கல்யாணம். அட அதுல பல சிக்கல். பொண்ணு குடுக்கறது ஒரு பிராடு குடும்பத்துக்கு. வாடகை வீட்ட சொந்தவீடுன்னு சொல்லிட்டு இருக்கறவங்க அவங்க.

போட்ட நகையில ஒண்ணை பெரியப்பா பையன் கவரிங்கா மாத்திப்போட , அதை அடகு வைக்க கல்யாணபொண்ணோட நாத்தனார் ஊட்டுக்காரர் அடகுக்கடைக்கு போக, அவன் போலீஸுக்கு போக , பொண்ணை திருப்பி பொறந்த ஊட்டுக்கே அவனுங்க தொரத்த, ஹீரோவும் அவன் அப்பாவும் உடனே அடிச்சு பிடிச்சு உன்னோர் நகையை வாங்கி போட்டு திரும்ப புகுந்த ஊட்டுக்கு அனுப்ப ,

அப்பப்பாத்து ஊட்டுக்காரன் வந்து ஊட்டை காலிபண்ணூ இல்லைன்னா நல்லால்லைன்னு சொல்ல ,இது பொண்ணுக்கு தெரிய நாத்தனாருக்கு பேயறைஞ்ச மாதிரி ஆகி ,

இதுக்குள்ள இன்னோரு டிராக் :

ஹீரோவுக்கு மாமன் புள்ள மகா வேற லைன் போட்டுட்டு இருக்குது. மாமனுக்கு இது புடிக்காது. மாமன் பையனும், மாமனும் ஹீரோவப் போட்டுத்தள்ள ரெடி பண்றாஙக். மாமன் பையன் ஒரு காமெடியன்.

இது பத்தாதுன்னு மின்சார வாரிய என்ஜினியர் மேடம் ஒருத்தர் ஹீரோவ லவ் பண்றாங்க,தலைவருக்கு தெரியும்,இருந்தாலும் "மேடம்" "மேடம்" அப்படின்னு கூப்பிடுகிறார்.

மலர் மேடத்துக்கு ஒரு தங்கச்சி , அது வேற ஒருத்தன லவ் பண்ணுது. அக்கா லைன் கிளியருன்னா நம்ம லைன் கிளியருன்னு ஊட்டுப் பொறக்கடை வழியா ஒருத்தன வரவெச்சு பேசிட்டு ,

அக்கா காதலுக்கு இவளே தூது போறா, தலைவருக்கு அங்க தலை போற வேல. பொறகு பேசலாமுன்னு கெளம்பீறாரு.

இப்படி ஒரு கொழுந்தியா இருக்குமுன்னா அப்பவே பேச வேண்டியதுதானே ? (இவரு பெரிய ஜில்லா கலெக்டரு ! கையெழுத்துபோட நேரமாயிருச்சுன்னு கிளம்பறாரு.)

அம்மணி உடனே அக்காகாரிகிட்ட போயி "இந்த லவ்வெல்லாம் அந்த ஆளுக்கு ஆகாது , என்னைவே மதிக்கமாட்டேங்கிறாரு. உன்னோட அந்தஸ்துக்கு அவனப்போயி லவ் பண்ணீட்டு" அப்படின்னு உசுப்பேத்த அக்காக்கு கோபம் பொசுக்குன்னு வந்து அப்பன்கிட்ட போயி " ஏற்கனவே சொன்ன கோயமுத்தூர் மாப்பிள்ளைய வரச்சொல்லி " நிச்சயம் பேசி முடிக்க ரெடியாகிறா!

இப்ப போயி ஹீரோவுக்கு நைட் தூங்கற நேரத்துல "அம்மிணி" நெனப்பு வர கூடப்பொறந்த தங்கச்சிங்க நெலமை தெரியாம "மகாவா? மலரா? யாரை கட்டிக்க போறீங்கன்னு"கிண்டலை உதிர்க்கிறாங்க.

அட சாமி , மூணு நாள் பாத்ததுக்கே இத்தனை கூத்தா? எப்படித்தான் திங்கள் முதல் வெள்ளிவரை இடையிடையே வர்ற‌ வெளம்பரத்தையும் சகிச்சுகிட்டு சீரியலைப் பாக்குறாங்களோ?

இந்த சீரியலுதான் இன்னைக்கு ரேஞ்சுல ஹிட்டாம் ! நெசமாலுமா? ஆன் லைன்ல வேற ஓடிட்டு இருக்குது.

நியதி ; லவ் பண்ண போறீங்களா , பொண்ணோட தங்கச்சியையும் அப்பப்ப மதிச்சு ஒரு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுங்க, அப்பத்தான் நம்ம லவ் ஸ்ட்ராங் ஆகும். இல்லை நம்ம ஹீரோ கதைதான்.

..

திங்கள், செப்டம்பர் 20, 2010

கவர்ன்மெண்ட் பஸ்ஸூம் , காலக்கொடுமையும்.

அண்மையில் ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் வரை கோவிலுக்கு செல்லலாம் என்று ஈரோட்டில் இருந்து இருக்கும் பஸ்ஸுக்கு ஒரு வாரம் முன்பே புக் செய்து டிக்கட்டும் பெற்றாகி விட்டது.

கிளம்ப வேண்டிய தினத்தன்று எதற்கும் இருக்கட்டும் என்று இரண்டு ஆடியோ, வீடீயொ சாங்க் காசட்டுகளையும் எடுத்து வைத்திருந்தேன். பஸ் இரவு 7.40 மணீக்கெல்லாம் கிளம்பியது. படம் எதுவும் போடாமல் இருந்த நிலையில் டிக்கட் கொடுத்து முடித்த பின்பு கண்டக்டர் "மாயாவி" படத்தை போட்டார்,

வீடியோ நன்றாக இருந்தாலும் ஆடியோ ஏதோ திருவிழாவுக்காக கட்டிய குடை ஸ்பீக்கரில் வரும் ஒலியைப் போன்று நாரசமாக இருந்தது.கொஞ்சதூரம்தான் படத்தை நிறுத்திவிட்டு கரூர் தாண்டும்வரை படம் எதுவும் இல்லாமல் வந்தது.

கரூர் தாண்டியவுடன் கண்டக்டர் எழுந்து எம் ஜி ஆர் படப்பாடல்களை போட்டு விட்டார்.

சவுண்ட் ?

அய்யோ ! காதுகளை ரணமாக்கி விட்டார். எத்தனையோ எம் ஜிஆர் பாடல்கள் இருந்தாலும் " நான் ஏன் பிறந்தேன் " டைப் பாடல்களை போட்டு குழந்தை குட்டிகளை தூங்கவிடாமலும் , நம்மையும் தூங்கவிடாமலும் செய்துவிட்டார்.

சிறிது தூரத்தில் ஒரு டீக்கடையில் நிறுத்திவைத்தனர். அப்போது கண்டக்டரிடம் நாம் "சார் புதுப்பாடல்கள் , மீடியம் சாங்க் கேசட் இருக்கிறது .போடுகிறீர்களா ? " என்று கேட்டதிற்கு " இன்னும் சிறீது தூரம் சென்றதும் நானே உங்களிடம் கேட்டு வாங்கி போட்டுவிடுகிறேன்" என்று கூறி விட்டார்.

சவுண்ட்டையாவது குறைக்கலாமே என்று கேட்டதிற்கு சற்றும் குறைக்கவில்லை.

அவரும் கேசட்டை கேட்பார் என்று பார்த்தால் , எம்ஜிஆர் படப்பாடல் முடிந்தது சிவாஜி படப்பாடல்களை போட்டு விட்டார். இப்படியே கொடுமையினும் கொடுமையாக காலை 4.30 மணீக்கு திருச்செந்தூர் கொண்டு போய் விட்டே விட்டார்.

இப்பத்தான் தெரியுது, ஏன் பிரைவேட் ஆம்னி பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று .

எல்லாமே புக்கிங் டிக்கெட்தான் , நிம்மதியா தூங்கிட்டு காலையில போயி முருகனை தரிசிக்கலாமுன்னு நினைச்சா இவனுங்க கொடுமை ரொம்பத்தான் இருக்குது. லாங் ரூட் வண்டியில எல்லாம் வீடியோ வைக்கல அப்படின்னு எவனாவது இவங்ககிட்ட கேட்டாங்களா ?

என்ன செய்ய ! எல்லாம் நம்ம தலையெழுத்து!

இதைப்பற்றி இன்னும் தெளீவா ஒரு கம்ளெயிண்ட் அனுப்ப‌ இருக்கேன் ,நீங்க என்ன சொல்லறீங்க ?

..

வியாழன், செப்டம்பர் 16, 2010

இப்படியும் சொருகலாமோ?




கவனக்குறைவு , ஓவர் ஸ்பீட் இவற்றைப் பற்றி நாம் எழுதிய இரண்டு வாரங்களில் மற்றுமொரு நிகழ்வு.

பனியன் நகரத்தின் பரபரப்பான ஒரு மதிய நேர இடைவேளையில் நகரின் பிரதான கோயில் முன்னால் நடந்த நிகழ்வு.

ஒரு தடுப்பு வெச்சிருக்கறாங்கன்னா அது எதுக்கு? அதுக்குள்ள நம்ம வண்டி போகுமா ! போகாதா ? இப்படி பாக்கணுமா ? வேண்டாமா ?

இல்லை ரொம்ப பசியானதால பசி கண்ணை அடைச்சிருச்சோ?

ஏதோ ஒண்ணு படத்தை பாருங்க, சிக்கின வண்டியோட நிலைமையை.

கடைசியா செய்கூலி சேதாரத்தோடதான் வண்டிய எடுக்க முடிஞ்சுது.

புதன், செப்டம்பர் 15, 2010

மாவுப்பூச்சி அல்லது கள்ளிப்பூச்சி

தற்போது தமிழகத்தில் , ஈரோடு, திருப்பூர்,கோவை மாவட்டங்களில் பப்பாளிப்பழங்களை தாக்கிக்கொண்டிருந்த மாவுப்பூச்சி , கொய்யா மரங்களையும் , திராட்சை , சீதாப்பழ, சப்போட்டா மரங்களையும் தாக்கத் தொடங்கியுள்ளது.
இந்த இந்தப் பூச்சிகள் தற்போது அதிகாலை நேரஙகளில் அதிகமாக படையெடுக்கத் தொடங்கியுள்ளது.

வேளாண் விஞ்ஞானிகள் ஏதேதோ மருந்துகளை சொன்னாலும் அவைகள் அதற்கு கட்டுப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் இதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை என்றே தோன்றுகிறது .

இதைப் படிக்கும் அன்பர்கள் தெரிந்தவர்களிடம் , விஞ்ஞானிகளிடம் சொல்லுங்கள் அல்லது இதை ஒழிக்க ஏதேனும் ஒரு முயற்சி எடுங்கள் , மேலும் இந்த பூச்சிகள் இங்கு மட்டும்தானா அல்லது அயல் நாடுகளிலும் உண்டா ? என்று நமக்கு சொல்லுங்கள் .

..

கருத்துரைகளை அனைவரும் படிப்பீர்களா என்று தெரியவில்லை. தற்போது நமது தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு மிகவும் அவசியமான இந்த பதிவு அனைவருக்கும் சென்று சேரும் விதமாக இருக்கவேண்டும் என்பதால் கருத்துரைகளை நமது இடுகையிலே இணைத்து விடுகிறோம்.

நன்றி.



மதுரை சரவணன் சொன்னது

ஆமாம்மில்ல... பார்த்திருக்கேன். பகிர்வுக்கு நன்றீ.
15 செப்டெம்ப்ர், 2010 11:02 pm

DrPKandaswamyPhD சொன்னது

கவன ஈர்ப்புக்கு நன்றி. மேலதிக தகவல்களை சேகரிக்க நான் முயலுகிறேன்.

இந்தப்பூச்சிகள் நம் ஊரிலுள்ள சப்பாத்திக்கள்ளிகளை அழிப்பதற்காக வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. சப்பாத்திக்கள்ளி ஒழிந்து விட்டது. ஆனால் இந்தப்பூச்சிகள் ஒழியவில்லை.

அவைகள் சாப்பிடுவதற்கு சப்பாத்திக்கள்ளிகள் இல்லாததால் எல்லாவற்றையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டன. இது ஒரு முக்கியமான பிரச்சினை.

நான் சம்பந்தப்பட்ட துறையினருடன் பேசி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த தளத்தில் கருத்துரையாகப் பதிகிறேன்.
16 செப்டெம்ப்ர், 2010 4:17 am


நன்றிகள் திரு கந்தசாமி அய்யா அவர்களே,

காலை நேரங்களில் மிக அதிகமாக பறக்க ஆரம்பித்துள்ளன. வெளியில் நடந்தால் கண்கள் , காதுகள் , தலைமுடிகளில் எல்லாம் விழுந்து சிக்கிக் கொண்டு விடுகிறது. அதுவில்லாமல் கண்களில் விழுந்தால் ஏதேனும் தீங்கு ஏற்படுமா என்பதையும் அறியதரவும்.

..

புதன், செப்டம்பர் 01, 2010

வாழ்க்கை இவ்வளவுதானா !

ரெண்டு நாளுக்கு முன்னாடி திங்கள்கிழமை காலையில் திருப்பூர் பரபரப்பு தொற்றிக்கொண்ட அதிகாலை மணி 8.20 க்கு வீட்டிலிருந்து கிளம்பி ஈரோடு ‍திருப்பூர் சாலையை மேட்டுக்கடையில் தொட்டு திருப்பூரை நோக்கி பயணித்தோம் . உடன் வழக்கம்போல எனது நண்பரொருவரும் வர சற்று தூரத்திலேயே ஒரு கூட்டம் சாலையின் அருகில் காணப்பட நாமும் அங்கு வண்டியை நிறுத்தினோம். என்னவென்று பார்க்கும் போது ஒரு ஆண் வயது 40 இருக்கும், ஸ்பெலண்டர் பைக்கை நிறுத்திவிட்டு அருகில் படுத்தவாக்கில் இறந்து கிடந்தார். விசாரித்தபோது மனிதர் இரவே அதிக மப்பில் வண்டி ஓட்ட முடியாததால் வண்டியை நிறுத்திவிட்டு தூங்கியவர் தூங்கியே விட்டார்.

இதைப்பார்த்து விட்டு நாம் நமது பயணத்தை சற்று கவலையுடன் ஆரம்பித்தோம். ஊத்துக்குளியை நெருங்கும் போது ரோட்டில் ஸ்கூல் பிள்ளைகளை பஸ்ஸில் ஏற்றிய மக்கள் சற்றே பரபரப்புடன் "மேட்டுக்கடை பக்கத்தில்" என்று பேசிக்கொண்டனர்.

சரி , நாம் பார்த்த நிகழ்வைத்தான் பேசுகிறார்கள் என்று வண்டியை ஸ்லோ செய்தபோது அவர்கள் பேசுவது அதுவல்ல, மற்றொரு விபத்தைப்பற்றி என்று தெரிந்தது.

அதுவும் மேற்க்கூறிய நிகழ்வுக்கு மிக அருகாமையில் 8.30 க்கு நடந்தது. எப்படி ?

டூவீலர் பைக்கில் பவானி குமாரபாளையத்தில் இருந்து திருப்பூர் வேலைக்கு இரண்டு நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அவர்கள் பைக்கின் முன்சக்கரம் திடீரென பஞ்சர் ஆகிவிட , ஓவர்ஸ்பீடு வண்டி கன்ட்ரோல் ஆகவில்லை. வழுக்கிவிட அந்த நேரம் பார்த்து எதிரில் ஒரு ஸ்விப்ட் வர , அவர்கள் அதில் மோத இருவரும் ஸ்பாட் அவுட்.

ஹெல்மெட் தெறித்து ஓடிவிட்டது. இருவரும் நண்பர்கள், ஒரே கம்பெனியில் மெர்ச்சண்டைசர்களாப் பணீபுரிபவர்கள்.

இருவரும் நான் படித்த அதே ஜவுளித்தொழில் நுட்பப் பயலகத்தில் 2004 ஆம் ஆண்டு படித்தவர்கள் என்பது கூடுதலான ஒரு வருத்தம் .

எப்படி, எப்படி எல்லாம் வாழ்க்கை எளிதாக முடிந்து விடுகிறது . இதற்குள் எத்தனை கலகங்கள் , வருத்தங்கள், மகிழ்ச்சிகள்!

இன்னுமொரு கூடுதல் வருத்தம் என்னவெனில் இந்த ஒரு பத்து மாதங்களில் இந்த பாதையில் இதே இடங்களில் குறைந்தது பதினைந்து பேர்கள் விபத்துகளில் மரணமடைந்துள்ளனர்.

ஏன் ? ரோடு மோசமா? கவனக்குறைவா? ஓவர் ஸ்பீடா? எதுவென இதுவரை தெரியவில்லை . எனக்கு தெரிந்து ஓவர் ஸ்பீட் என்றுதான் தெரிகிறது.