திங்கள், ஜூலை 20, 2015

மந்திரி தந்திரி - 10 !

மந்திரி தந்திரி - 10 ! கேபினெட் கேமராவிகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப்கான், கண்ணா
மயிலை மாங்கொல்லை திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் புரட்டுகளை அடுக்கலாம். ஏ.சி காற்று தாலாட்டும் காமராஜர் அரங்கத்தில் கப்சாக்களைக் கட்டவிழ்க்கலாம். அ.தி.மு.க மேடைகளில் பொய் மாளிகை கட்டலாம். ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அப்படியெல்லாம் இஷ்டத்துக்குப் பேசிவிட முடியாது. அங்கே என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்பதற்கு நிறைய வரையறைகள் வகுத்துவைத்திருக்கிறார்கள். ஆனால், 'அதனால் எனக்கு என்ன?’ என அவற்றைக் கண்டுகொள்ளாமல் சட்டமன்றத்திலேயே தவறான தகவல்களை அடுக்கியவர் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கோகோ-கோலா நிறுவனம் ஆலை அமைக்க முயற்சித்த விவகாரம் தமிழ்நாடு முழுக்க தகித்துக்கொண்டிருந்தபோது, 'ஆலை அமைக்க அனுமதி கேட்டு கோகோ-கோலா இதுவரை விண்ணப்பிக்கவில்லை. அப்படி எந்தக் கோரிக்கையும் இதுவரை அரசுக்கு வரவில்லை’ என சட்டசபையில் ஆவேசமாக முழங்கினார் தோப்பு வெங்கடாச்சலம். ஆனால், மறுநாளே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கோகோ-கோலா நிறுவனத்துக்கு நிலம் வழங்கும் அனுமதி தொடர்பான ஆவணங்களை அள்ளிப் போட்டதும்தான், சட்டமன்றத்திலேயே உண்மையை மறைத்திருக்கிறார் அமைச்சர் எனத் தெரிந்தது. இது ஒரு சாம்பிள் சம்பவம்தான். அமைச்சரின் அரசியல் வாழ்க்கை, இதைவிட பல அதிரடி அத்தியாயங்களைக் கடந்தது!
சக்தி முருகன் ரோடுவேஸ் டு அம்மா விசுவாசி!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புப்பாளையம் சொந்த ஊர் என்பதால் பெயரில் 'தோப்பு’ ஒட்டிக்கொண்டது வெங்கடாச்சலத்துக்கு. விவசாயம், கூலி வேலைகள் செய்து பெற்றோர் கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டுத்தான் வெங்கடாச்சலத்தை கல்லூரியில் சேர்த்தார்கள். பி.ஏ வரலாறு படிக்கப் போனவருக்கு, வரலாற்றைவிட அரசியல் மீதுதான் அதிக ஆர்வம். ''கல்லூரி இறுதி ஆண்டில் மாணவர் தலைவர் தேர்தலில் ஜெயித்தார். கல்லூரி இறுதியில் 'ஃபேர்வெல்’ நடத்த மாணவர்களிடம் பணம் திரட்டினார். கணிசமான கரன்சி சேர்ந்தது. சில நாட்களுக்குப் பிறகு புது லாரி ஒன்று வெங்கடாச்சலம் பெயரில் பதிவானது'' என்கிறார்கள் அவருடன் படித்த முன்னாள் மாணவர்கள். 'லாரி வாங்கலாம்... மணல் அள்ளலாம்... அரசியலில் நுழையலாம்’ எனத் திட்டமிட்டார் தோப்பு. அதுதான் அரசியல் பகடையாட்டத்தில் வெங்கடாச்சலத்தின் தாயம்!
'சக்தி முருகன் ரோடுவேஸ்’ என்ற பெயரில் லாரியில் மண் லோடு அடிக்கத் தொடங்கினார். 'மணல்’ அள்ளி 'கரன்சி’ பார்த்துக் கொண்டிருந்தவரின் லாரி, திடீரென ஒருநாள் தீ விபத்தில் சிக்க... வியாபாரம் முடங்கியது.
அது வெங்கடாச்சலத்தின் காதல் வரை காவு வாங்கியது. வெங்கடாச்சலத்துக்குக் கல்லூரியில் முளைத்த காதலுக்கு இரு வீட்டினரும் பச்சைக்கொடி காட்டிவிட்ட நிலையில், லாரி விபத்து காரணமாக வியாபாரம் நொடிந்தது. வெங்கடாச்சலத்தின் காதலியை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டனர் பெண் வீட்டார். விரக்தியின் விளிம்புக்குச் சென்ற வெங்கடாச்சலம், அப்போது பெருந்துறை எம்.எல்.ஏ-வாக இருந்த வி.என்.சுப்பிரமணியனிடம் தஞ்சம் அடைந்தார். ஒருவகையில் வெங்கடாச்சலத்துக்கு உறவினரான சுப்பிரமணியன், 'எனக்கு உதவியா இரு’ எனச் சொல்லிவிட்டார். அதுதான் அ.தி.மு.க-வோடு வெங்கடாச்சலத்துக்கு ஒரு பந்தத்தை உண்டாக்கியது!
'அம்மா’வையே சீண்டிய தோப்பு!
வி.என்.சுப்பிரமணியன் மூலம் வெங்கடாச்சலம் அரசியலில் நுழைந்தாலும், அரசியல் பாலபாடத்தைக் கற்றுக்கொண்டது செங்கோட்டையனிடம். அப்போது அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத சக்தியாக வலம்வந்த செங்கோட்டையனுக்கு தீவிர விசுவாசியாக மாறினார் வெங்கடாச்சலம். அவர் பெருந்துறை வந்தால், அவரின் தேவைகளைப் பார்த்துப் பார்த்துப் பூர்த்திசெய்வார் வெங்கடாச்சலம். அதன் பரிசாகத் தொடர்ந்தன தோப்புப்பாளையம் கிளைச் செயலாளர், பெருந்துறை பேரூராட்சி செயலாளர் பதவிகள். ஆனால், அதன் பின்னர் அரசியலில் வளர்ச்சி இல்லை. அந்தச் சலிப்பு வெங்கடாச்சலம் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது.
2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, கட்சியை ஒழுங்குபடுத்த நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வெங்கடாச்சலம் ஜெயலலிதாவையே அதிரவைத்தார். 'தலைமைப் பதவியில் இருப்பவர்கள் பணம் வாங்கிக்கொண்டுதான் பதவியே தருகிறார்கள்’ என அந்தக் கூட்டத்தில் வெங்கடாச்சலம் சொல்ல, 'அப்படின்னா... என் மீதும் குற்றம் சுமத்துகிறீர்களா... என் மீது தவறு என்கிறீர்களா?’ என ஜெயலலிதா சிடுசிடுக்க, பயத்துடன் ஊர் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்வதற்குள் அவருடைய பெருந்துறை பேரூராட்சி செயலாளர் பதவி பறிபோயிருந்தது.
அன்று அம்மாவையே சீண்டிய வெங்கடாச்சலம், இன்று அம்மா கேபினெட்டில் அசைக்க முடியாத அமைச்சர். காரணம், வெங்கடாச்சலத்தின் 'அரசியல் கபடி’ அப்படி!
கோட்டையைச் சாய்த்த மன்னார்குடி லாபி!
அம்மாவின் கோபத்துக்கு ஆளாகி பதவி இழந்த பிறகு, அரசியல் ஆர்வத்துக்கு 'பிரேக்’ விட்டு, மணல், ரியல் எஸ்டேட், டிரான்ஸ்போர்ட், ஆட்டோ கல்சல்ட்டிங்... வியாபாரங்களில் தீவிரமானார் வெங்கடாச்சலம். கரன்சி கல்லாவைச் செழுமைப்படுத்திக்கொண்ட பிறகு, மீண்டும் அரசியல் ஆர்வம் துளிர்த்தது. ஈரோட்டில் இயங்கும் மிகப் பெரிய ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை முடித்துக் கொடுத்த வகையில், அதன் உரிமையாளருக்கு செம தோஸ்த் ஆனார் வெங்கடாச்சலம். கோவையில் வசிக்கும் மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த ராவணன், அந்த உரிமையாளருக்கு வேண்டப்பட்டவர். போதாதா..? அரசியலில் மீண்டும் சுக்ர தசை ஆரம்பித்தது வெங்கடாச்சலத் துக்கு. அதோடு இரண்டு 'சாமி’களும் அவருக்கு உதவினார்கள். ஒருவர், 'மணல்’ ஆறுமுகசாமி. இன்னொருவர், முன்னாள் அமைச்சர் செ.மா.வேலுசாமி. இருவரும் ராவணனுக்கு நெருக்கமானவர்கள்.
அ.தி.மு.க-வில் செல்வாக்குடன் இருந்த செங்கோட்டையன், ஈரோடு மட்டும் அல்ல கொங்கு மண்டலத்தையே கட்டுக்குள் வைத்திருந்தார். ஆனால், சசிகலா குடும்பத்துக்கு உறுத்தலாகவே இருந்தார். மன்னார்குடிக்கு வேண்டாதவராகிவிட்ட செங்கோட்டையனின் வளர்ச்சியைத் தடுக்க, வெங்கடாச்சலத்துக்குக் கொம்பு சீவினார்கள். 'செங்கோட்டையன் தன் குருதான். ஆனால், அவரைக் காலி செய்தால்தான், தனக்கு அரசியலில் ஏற்றம் கிடைக்கும்’ எனக் கணக்குப் போட்ட வெங்கடாச்சலம் 'மன்னார்குடி’க்குக் காவடி தூக்க முடிவெடுத்தார். தக்க தருணத்துக்காகக் காத்திருந்தார்.
2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் வெற்றி பெற்றார் வெங்கடாச்சலம். சட்டமன்றத்தில் நுழைந்தவருக்கு கேபினெட்டில் இடம் கிடைக்கவில்லை. காரணம், செங்கோட்டையன் அமைச்சரானதுதான். அவரால் அந்தப் பதவியில் ஒரு வருடம்கூட நீடிக்க முடியவில்லை. அவரிடம் இருந்து வருவாய்த் துறை பறிக்கப்பட்டு, அந்தத் துறைக்கு அமைச்சராக தோப்பு வெங்கடாச்சலம் அமர்த்தப்பட்டார். உபயம்... மன்னார்குடி லாபி. 'நான் தனிமரம் அல்ல... தோப்பு’ என அப்போது நெருக்கமானவர்களிடம் சொல்லிச் சிரித்தாராம் அமைச்சர்.
ஆடாத ஆட்டமெல்லாம்...
காத்திருந்து காத்திருந்து கிடைத்த பதவி என்பதால், கண்மண் தெரியாமல் ஆடிவிட்டார் வெங்கடாச்சலம். விளைவு, வருவாய்த் துறையில் இருந்து சுற்றுச்சூழல் துறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் அமைச்சரின் அலம்பல்கள் தொடர்கின்றன. ஆனாலும், அவரை அசைக்க முடியவில்லை. சின்னச் சின்னப்
பஞ்சாயத்துகளில் சிக்கியவர்கள்கூட அமைச்சரவையில் இருந்து கழற்றிவிடப்படும்போது, 'மாநிலம் தழுவிய பரபரப்பு’களில் சிக்கிய வெங்கடாச்சலத்தை, மன்னார்குடி லாபி தொடர்ந்து காப்பாற்றிவருகிறது.
அமைச்சரின் அடாவடி நடவடிக்கைகளுக்கு ஒரே நச் உதாரணம்... கோகோ-கோலா கோல்மால். பெருந்துறை சிப்காட் வளாகத்தில் கோகோ-கோலா நிறுவனம் தங்கள் ஆலையை அமைக்க, 71.30 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு காலக் குத்தகைக்கு எடுத்தது. குத்தகை தொகை எவ்வளவு தெரியுமா? ஏக்கருக்கு 1 ரூபாய்!
ஒரு ஏக்கருக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு ரூபாய் குத்தகை என்றால், 71 ஏக்கருக்கு ஒரு வருடக் குத்தகை 71 ரூபாய். அதை 99 ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால், மொத்தம் குத்தகை தொகை 7,000 ரூபாய்தான். ஆனால், கோகோ-கோலா நிறுவனத்தின் அந்த ஆலைக்கான திட்ட மதிப்பீடு... 500 கோடி ரூபாய். நிலம் மட்டும் அல்ல... காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து கோகோ-கோலா நிறுவனத்துக்கு தினமும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க ஒப்பந்தமிடப்பட்டது.
கோகோ-கோலா ஆலை தொடங்கப்பட்டால், பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்; நிலத்தடி நீர் உறிஞ்சப்படும்; தண்ணீர் இல்லாமல் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்படும்; சுமார் 85 கிராமங்கள் பாலைவனம் ஆகும்; ஆலையின் கழிவுநீரைச் சுத்திகரிக்க மாட்டார்கள்... எனச் சொல்லி, ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடினார்கள் ஈரோடு மக்கள். அவர்களோடு பல்வேறு அமைப்புகளும் சில கட்சிகளும் கைகோக்க, போராட்டம் உக்கிரமானது. கடை அடைப்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம்... எனப் பல்வேறு ரூபங்களில் சர்ச்சை எழ, அதை முடக்க அரசு இயந்திரம் பல விதங்களில் முயற்சித்தது. ஆனால், நீதிமன்றப் படி ஏறி, போராட்டம் நடத்த உத்தரவு வாங்கி வந்தனர் போராட்டக் குழுவினர். 'அரசாங்கத்தின் அத்தனை முட்டுக்கட்டைகளுக்கும் பின்னணியில் இருந்தது அமைச்சர்தான்’ என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
ஆலை நிர்மாணம் தொடர்பாக அரசு நடத்திய கருத்துக்கேட்பு கூட்டத்தில் 99 சதவிகிதத்தினர் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், 'கோகோ-கோலா ஆலைப் பிரச்னையில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன’ எனக் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் சொன்னார் வெங்கடாச்சலம். 'இனி அமைச்சரை நம்பிப் பயன் இல்லை’ என்ற முடிவுக்கு வந்தனர் போராட்டக்காரர்கள். இந்த விவகாரம் தொடர்பாக, சம்பிரதாய அறிக்கையோடு நின்றுவிட்டது கோகோ-கோலா நிறுவனம். ஆனால், அந்த ஆலையின் பி.ஆர்.ஓ போல வெங்கடாச்சலம் ஆலைக்கு ஆதரவாக மறைமுகக் கருத்துக்களைப் பேசப் பேச, போராட்டக் களத்தில் வறுத்தெடுக்கப்பட்டார்.
இதே விவகாரத்துக்காக, சட்டமன்றத்திலும் அசிங்கப்பட்டார். 'கோகோ-கோலா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கவில்லை’ எனச் சட்டசபையில் அவர் சொல்ல, சிப்காட்டுக்கும் கோகோ-கோலா வுக்கும் இடையே 23.1.2014 அன்று கையெழுத்தான ஒப்பந்தத்தை மீடியா மக்களிடம் காட்டினார்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். வேறு வழியின்றி, 'கோகோ-கோலாவுக்காக நிலம் வழங்கப்பட்டது உண்மைதான். ஆனால், பணிகள் தொடங்கப்படவில்லை’ என ப(தி)ல் இ(அ)ளித்தார் வெங்கடாச்சலம். விவகாரம் அதீதக் கவனம் ஈர்த்ததும், கோகோ-கோலா தொழிற்சாலை செயல்படத் தடை விதித்தது தமிழ்நாடு அரசு.
ஊரே எதிர்த்துப் போராடி அரசிடம் இருந்து, சொந்த மண்ணின் வளங்களைப் பாதுகாத்துக்கொண்டது. ஆனால், அப்போதும் சரிந்த தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல், 'குளிர்பான நிறுவனத்துக்குத் தடை விதித்த அம்மாவுக்கு நன்றி’ எனப் பொதுக்கூட்டம் போட்டார் வெங்கடாச்சலம்.
துறைரீதியான சாதனை என்ன?
வெங்கடாச்சலம் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தபோது, நிவாரண முறைகேடு, அம்மா திட்ட முகாம் குளறுபடிகள், உதவித்தொகைகளை வாரி வழங்கி அரசுக்கு நிதிச் சுமை ஏற்படுத்தியது, தகுதியற்றவர்களுக்கு உதவித்தொகை... என, தொடர் புகார்கள் வெடித்தன.
''ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிபாளையம், பவானி, அந்தியூர்... ஆகிய ஆறு தொகுதிகளுக்கும் சேர்த்து சுமார் 43 லட்சம் மட்டுமே வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்டது. ஆனால், அமைச்சரின் சொந்தத் தொகுதியான பெருந்துறைக்கு 18 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தனைக்கும் தொகுதியின் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை. தகுதியற்ற நபர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. அந்த வறட்சி நிவாரண விநியோக முறைகேட்டில் பலர் கொழுத்த கடாக்களாக மாறினார்கள். வருவாய்த் துறை அமைச்சராக வெங்கடாச்சலம் இருந்தபோதுதான் இந்த மோசடி நடந்தது'' என்றார்கள் விவசாயிகள்.
இதற்கு பிறகும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்க முடியவில்லை. வருவாயில் இருந்து சுற்றுச்சூழல் என, துறையை மட்டுமே மாற்ற முடிந்தது.
சுற்றுச்சூழல் துறையின் கீழ்தான் மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் வரும்.
சாயப் பட்டறைகள் ஈரோட்டில்தான் அதிகம். அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் சுற்றுச்சூழல் துறை அமைச்சர். இப்படி சாயப் பட்டறை, ஈரோடு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்தும் என்ன பயன்? ஈரோட்டில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் என ஒன்று செயல்படுகிறதா என்றே தெரியவில்லை. அமைச்சரின் சொந்தத் தொகுதியான பெருந்துறையில் உள்ள சிப்காட் வளாகத்தில் செயல்படும் நிறுவனங்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் 'தடையில்லாச் சான்றிழ்கள்’ கிடைக்கின்றன எனக் குமுறுகிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
நீர்நிலைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு சுற்றுச்சூழல் துறை வசம்தான். ஆனால், அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவுமே நடைபெறவில்லை. தமிழ்நாடு எங்கும் அழிக்க முடியாத அளவுக்கு ப்ளாஸ்டிக் கழிவுகள் நிரம்பிக்கிடக்கின்றன. தீங்கு விளைவிக்கும் திடக்கழிவு, மருத்துவக் கழிவு, மின்னணுக் கழிவு... என தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் அபாய மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. 3,833 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூவம் நதியைச் சீரமைத்து மீட்டெடுக்கும் திட்டம் அறிவிப்பாக மட்டுமே தேங்கியிருக்கிறது.
ஆனால், கட்சித் தலைவிக்கு ஐஸ் வைப்பதற்காகச் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கையின்போது, 'அமெரிக்காவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். தென் ஆப்பிரிக்காவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் நெல்சன் மண்டேலா. கியூபாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர் மகாத்மா காந்தி. மைனாரிட்டி தி.மு.க கூட்டாட்சியில் இருந்து விடுதலை பெற்றுத் தந்தவர் புரட்சித் தலைவி அம்மா மட்டுமே!’ என முழங்கிக்கொண்டிருக்கிறார் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வெங்கடாச்சலம்.
என்னத்த சொல்ல?!
தோப்பு வெச்ச ஆப்பு!:
செங்கோட்டையனின் அமைச்சர் பதவியைக் காலி செய்ய மன்னார்குடி சர்க்கிள் காய் நகர்த்தியபோதும், ஜெயலலிதா அவரை விட்டுக்கொடுக்கவில்லை. காலம் கனியக் காத்திருந்தார்கள். செங்கோட்டையனுக்கு நெருக்கமான திருப்பூர் தொழில் அதிபர் ஒருவர், சென்னை திருவான்மியூர் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புக்கு ஓர் இடம் வாங்கினார். நிலத்தை வாங்குவதில் ஏற்பட்ட சில வில்லங்கத்தை அப்போது வருவாய்த் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தீர்க்க முயன்றார். தகவல் வெங்கடாச்சலத்துக்குத் தெரியவர, அதை மன்னார்குடி மக்களுக்கு பாஸ் செய்தார். மறுநாளே செங்கோட்டையனிடம் இருந்து வருவாய்த் துறை பறிக்கப்பட்டு, தோப்பு வசம் வந்தது. அதன் பிறகும் செங்கோட்டையனை லைம் லைட்டுக்குள் வரவிடாமல் புகார்க் கணைகளைத் தொடுத்துக்கொண்டே இருக்கிறார் வெங்கி!
காக்கிச் சட்டை நண்பா..!:
காக்கிச் சட்டை நண்பர் ஒருவர்தான் தோப்புவுக்குப் பலவிதங்களிலும் உதவிவருகிறார். இப்போது ஈரோடு மதுவிலக்குப் பிரிவு ஏ.டி.எஸ்.பி-யாக இருக்கும் குணசேகரனும் தோப்பு வெங்கடாச்சலமும் இளமைப் பருவம் முதல் நண்பர்கள். கல்லூரித் தோழர்கள். வெங்கடாச்சலம் அமைச்சரானபோது பெருந்துறை டி.எஸ்.பி-யாக இருந்தார் குணசேகரன். அனைத்து வகையிலும் அமைச்சருக்கு உதவியாக இருந்த குணசேகரன் மீது புகார் கிளம்ப, அவரை நாகர்கோவிலுக்கு மாற்றினார்கள். ஆனால், அந்த இடமாற்ற உத்தரவைக் கையில்கூட வாங்கவில்லையாம் குணசேகரன். அமைச்சர் மீண்டும் குணசேகரனை ஈரோடு மாவட்டத்திலேயே இருக்கவைத்தாராம்!
ஈமு வில்லங்கம்!:
ஈமு கோழி மோசடிப் புள்ளிகளுடன் தோப்பு வெங்கடாச்சலத்தின் ஆதரவாளர்களுக்குத் தொடர்பு இருந்ததாகப் புகார் கிளம்பியது. ஈமு கோழிப் பண்ணைத் திறக்க நமீதாவை அழைத்துவந்தபோது தோப்புவின் ஆதரவாளர்கள் அந்த விழாவில் முந்திக்கொண்டு பங்கேற்றனர். அந்தத் தகிடுதத்தங்களுக்கு உள்ளூர் போலீஸ் அதிகாரிகள் துணையாக இருந்தனர் என கார்டனுக்கு புகார்கள் தட்டிவிட்டும் பயன் இல்லை. பெருந்துறை ஓம் சக்தி நகரைச் சேர்ந்த ஒருவர் ஈமு கோழிப் பண்ணை நடத்தினார். 'முதலீட்டாளர்களை மோசடி செய்துவிட்டார்’ என போலீஸும் அவரைக் கைது செய்தது. ஆனால், ஜாமீனில் வெளிவந்த அந்த நபர், இப்போது தொகுதிக்குள் தோப்பு வெங்கடாச்சலத்துடன் அடிக்கடி தலை காட்டுகிறார்.
சுயநலமே பிரதானம்!:
தனக்கு வேண்டாதவர்கள் சொந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் வளரவிட மாட்டாராம் தோப்பு. பெருந்துறை பேரூராட்சி 10-வது வார்டில், தோப்பு வெங்கடாச்சலத்தின் வீடு இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலின்போது அங்கே இரட்டை இலை சார்பில் யாரும் போட்டியிடவில்லை. 'பொது வேட்பாளர்’ எனச் சாக்கு சொல்லி, தன் சொந்த வார்டில்கூட கட்சி வேட்பாளரை நிறுத்தாமல் பார்த்துக்கொண்டார் வெங்கடாச்சலம். காரணம், சொந்தக் கட்சி ஆளாக இருந்தாலும், தன் சொந்த கோட்டைக்குள் இன்னொருவருக்குச் செல்வாக்குக் கிடைப்பதை தோப்பு விரும்பவில்லையாம். சொந்த எதிரி, அரசியல் எதிரி யாராக இருந்தாலும் அவர்களிடம் நேரடியாக மோத மாட்டார். காக்கிகள் துணையுடன் பொய் வழக்கு போட்டு உள்ளே தள்ளுவது வெங்கடாச்சலம் ஸ்டைல்.
'சாமி’கள் ராஜ்ஜியம்!:
அரசியலில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் மணல் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தார் வெங்கடாச்சலம். அப்போது சேனாதிபதி, 'பல்கி’ மணி ஆகிய இருவரும்தான் வெங்கடாச்சலத்தின் தொழில் பார்ட்னர்கள்.
பெருந்துறை நிலவள வங்கித் தலைவராக இருக்கும் சேனாதிபதி இல்லாமல் தோப்பின் ஓர் இலைகூட அசையாது. மணல் சமாசாரங்களை 'பல்கி’ மணி பார்த்துக்கொள்வார். 'திங்களூர்’ கந்தசாமி, பெரியசாமி, ராமசாமி, குப்புசாமி ஆகிய நான்கு 'சாமி’கள்தான் வெங்கடாச்சலத்தைச் சுற்றியிருக்கிறார்கள். கட்சிப் பதவி முதல் உள்ளாட்சி மன்றப் பதவி வரை இந்தச் சாமிகள் மனது வைத்தால் மட்டுமே கிடைக்கும். சொந்தக் கட்சிக்காரர்களுக்குக்கூட எதுவும் செய்யாதவர்கள் இவர்கள். இப்படி அமைச்சருக்கு ஆதரவானவர்கள் என்ற பட்டத்துடன் வளைய வரும் பல பட்டாளங்கள் மீது, மணல் கடத்தல் புகார்கள் மலை மலையாகக் குவிகின்றன.
ஆலமரத்தையே உலுக்கும் வெங்கடாச்சலம்!
சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தி வீட்டையும் நாட்டையும் பாதுகாக்கவேண்டிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஊழல் புகாரில் திளைத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு நேரடி சாட்சி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன். இவர் பதவிக் காலத்தில் ஏராளமான முறைகேடுகளும்
லஞ்சப் புகார்களும் வெடித்துக் கிளம்ப, நடவடிக்கைகளுக்குப் பயந்து விடுமுறையில் சென்றார். அப்படிப் போனவரை மீண்டும் அழைத்து அதே பதவியைக் கொடுத்தது சுற்றுச்சூழல் துறை. அவரை அந்தப் பதவியில் மீண்டும் நியமிக்க கையெழுத்து போட்டு முதலமைச்சருக்குப் பரிந்துரை செய்தவர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம். கார்த்திகேயனின் நியமனத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தபோதே, வழக்கு விவரங்களை மறைத்துவிட்டு கார்த்திகேயனை அந்தப் பதவியில் நியமித்தார்கள். 'தவறு செய்யாதவர்களைப் பொறுப்புக்குக் கொண்டுவருவதை விட்டுவிட்டு, பொறுப்புக்குக் கொண்டுவந்தவர்களின் மீதான கறையைக் கழுவும் வேலையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏன் செய்ய வேண்டும்? கார்த்திகேயன் நியமனம் எந்த வகையிலும் சரியான நியமனம் அல்ல. எனவே, அவரை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் பதவியில் நியமித்தது செல்லாது’ எனக் கடுமையாகக் கண்டித்தது நீதிமன்றம்.
இத்தனைக்குப் பிறகும் கார்த்திகேயனை விட்டுத்தரவில்லை வெங்கடாச்சலம். கார்த்திகேயனை அந்தப் பொறுப்பில் நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல்முறையீடு செய்தார்கள். அந்த பெஞ்சும் 'கார்த்திகேயன் நியமனம் செல்லாது’ என்றது. 'தனி மனிதர்கள் பறவைகளைப் போன்றவர்கள். வருவார்கள், போவார்கள். ஆனால், நிறுவனம் என்பது ஆலமரம் போன்றது. என்றும் நிலைத்து இருக்கக் கூடியது. அதனால், தனி மனிதர்களுக்காக நிறுவனத்தின் விதிகளை மாற்றக் கூடாது’ எனத் தீர்ப்பில் கூறியது நீதிமன்றம்.
சமீபத்தில் ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நிலையத்தில் சேகரிக்கப்பட்டிருந்த கழிவுநீர்த் தொட்டி இடிந்து விழுந்து பக்கத்து தொழிற்சாலையில் தூங்கிக்கொண்டிருந்த
10 தொழிலாளர்கள் கழிவு நீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தனர். மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் செயல்படும் லட்சணத்துக்கு இந்த அலட்சியம்
ஒரு சாம்பிள்!

அன்னதானம் !!!


சிவசாமி சிவகாமி தம்பதியரின் புதல்வன் கந்தன். பணக்காரரான சிவசாமி தினமும் அன்னதானம் செய்து வந்தார். கணவருக்கு உதவியாக சிவசாமி இருந்தான். சிறுவனான கந்தனுக்கு பெற்றோர் தினமும் இப்படி தானம் செய்கிறார்களே இது எதற்காக என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. தந்தையிடம் இதுபற்றி கேட்டான்.
மகனே ஒரு பங்குனி உத்திரத்தன்று என் தாத்தா எந்த தானத்தை ஆரம்பிக்க அதை உன் தாத்தாவும் கடைப்பிடித்தார். நானும் அதையே பின்பற்றுகிறேன். முன்னோர் செயலுக்கு காரணம் இருக்கும். ஆனால் நான் எந்த பலனையும் எதிர்பார்த்து இதைச் செய்யவில்லை என்பதால் அதை அறிய முயற்சிக்கவில்லை. வேண்டுமானால் நீ முயற்சித்துப்பார் என்றார்.
அப்பா நான் காட்டிற்குப் போய் தவமிருந்து அன்னதானத்தின் பலன் பற்றி அறிந்து வருகிறேன் நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்றான். சிவசாமியும் அனுமதி தர கந்தன் காட்டுக்கு புறப்பட்டான். அவனது அம்மா கட்டுச்சோறு கட்டிக் கொடுத்தாள். வழியில் ஒரு துறவி அவனைச் சந்தித்து பசிக்கிறது என்றார். கட்டுச்சோற்றை அவரிடம் கொடுத்துவிட்டு கந்தன் நடந்தான். காட்டை அடைந்த வேளையில் இருள் சூழ ஆரம்பித்தது. அவனைக் கண்ட ஒரு வேடன் தம்பி காட்டில் இருளில் நடமாடுவது நல்லதல்ல மிருகங்கள் உன்னைக் கொன்றுவிட வாய்ப்புள்ளது. நீ எனது வீட்டுக்கு வா என்னோடு தங்கி விட்டு காலையில் செல் என்றான்
கந்தனும் உடன் சென்றான் வேடன் தன் மனைவியிடம் இருவருக்கும் உணவு கொடு என்றான். அவள் ஒரு கொடுமைக்காரி நீயே தண்டச்சோறு கூட ஒருவனை கூட்டி வந்திருக்கிறாயா? என்று திட்டினாள். நீ அவனுக்கு தனியாக எதுவும் கொடுக்க வேண்டாம் எனக்கு தரும் சோற்றை தா அதை நான் பகிர்ந்து கொள்கிறேன் என்றான். அதன்படியே கந்தனுக்கு உணவு அளித்தான்.
இரவில் அவர்கள் பரணில் ஏறி படுத்தனர். தனக்குரிய இடத்தை சிறுவனுக்குக் கொடுத்துவிட்டு வேடன் விழித்திருந்தான். ஒரு கட்டத்தில் கண் அசந்தான். அங்கு வந்த புலி அவனைக் கொன்றது. மறு நாள் வேடனின் மனைவி அந்த அதிர்ச்சியில் இறந்துவிட்டாள்.
வருத்தமடைந்த கந்தன் தவம் செய்ய காட்டுக்கு சென்றான். அப்போது ஒரு ஆண் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தவமுயற்சியை விட்டுவிட்டு அரண்மனையில் ஒப்படைத்தான். அது அந்த நாட்டு ராஜாவின் குழந்தை ராஜாவுக்கு வேண்டாத சிலர் அது பிறந்தவுடன் காட்டில் போட்டிருந்தனர். குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் ராஜா கந்தனைப் பாராட்டினார். அப்போது குழந்தை பேசியது.
நான் நேற்று இரவு இறந்து போன வேடன் தான் இந்த சிறுவனுக்கு உணவளித்ததால் ராஜா வீட்டு குழந்தையாகப் பிறந்தேன். இவனுக்கு உணவளிக்க மறுத்த என் மனைவி காட்டில் பன்றியாகப் பிறந்திருக்கிறாள். அன்னதானத்தின் பலன் பற்றி அறிய இந்தச் சிறுவன் காட்டுக்கு வந்தான். அவனுக்கு அதை உணர்த்தவே இறைவன் மூலம் இந்த நாடகம் நடந்தது. என்றது. தானத்தின் பெருமை உணர்ந்த கந்தன் வீட்டுக்கு வந்து பெற்றோர்களிடம் சொல்ல அவர்கள் தானத்தைத் தொடர்ந்தனர்,
https://chinnuadhithya.wordpress.com/

பஞ்சபூத எண் கணிதம்(தமிழ் முறை எண் கணிதம்}

Siddhayogi Sivadasanravi's photo.
ல் 'அ ' என்ற உயிர் எழுத்தை மட்டும் எடுத்துக்கொள்கிறார். எழுத்துக்களுக்கு அவர் கொடுத்திருக்கும் எண் மதிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
அ-1
ஆ-2
இ-2
ஈ-3
உ-3
ஊ-4
எ-4
ஏ-5
ஒ-5
ஓ-6
ஐ-1
ஔ-1
புள்ளி வைத்த எழுத்துக்கள் -2
பஞ்ச பூத எண்கள்
நிலம்-1
நீர்-2
நெருப்பு-3
காற்று-4
ஆகாயம்-5
பலன்கள்
1-அரசியல் ஆர்வம், பூமிலாபம்
2-பணம்
3-அழிவு
4-வியாபாரம்,உலகப்புகழ்
5-ஞானம்
உதாரணம்
சிவா
ச்+இ- 2
வ்+ஆ-2
சிவா என்ற பெயரின் கூட்டு எண் 2+2=4 இதன் பலன் வியாபாரம்,உலகப்புகழ்
கூட்டு எண் 5க்கு மேல் வந்தால் 5ன் மடங்குகளை கழித்துவிட்டு மிச்சமுள்ள எண்ணுக்கு பலன் பார்க்கவேண்டும்.

செவ்வாய், ஜூலை 07, 2015

திருமணத்திற்கு

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்
1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)
2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.
4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.
…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்
5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது
6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.
7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.
8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.
9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.
10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.
11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.
- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.