திங்கள், ஜூன் 27, 2011

நாடார் வரலாறு 2


இந்த கட்டுரை விக்கிப்பீடியா,தேவியர் இல்லம்,கொடுக்கி,மற்றும் பல இணைய தளங்களில் இருந்தே தொகுக்கப்பட்டது.எனவே கருத்துகள் அனைத்தும் சொந்தகருத்தல்ல என்பதையும் தொகுப்பின் முன் பதிவிலேயே தெரிவித்துக்கொள்கிறோம்.


குல வரலாறு

இவர்களின் தொடக்க வாழ்க்கை பாலைவனத்தில் வாழ்பவர்களை விட சற்று மேம்பபட்ட வாழ்க்கை என்பதாகத் தான் தொடங்கியது. இந்த வெப்ப பூமியில் வாழ்ந்து கொண்டு இந்த பனை மரங்களை நம்பியே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இன்று சமூகத்தில் ஜெயித்தும் காட்டியுள்ளனர். தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் ஆட்சி புரிய தொடங்கிய போது வாழ்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மன்னர்களும் தங்களின் குலப்பெருமையை மேம்படுத்திக் காட்ட ஒவ்வொருவிதமான புரூடா கதைகளை எடுத்துவிடத் தொடங்கினர். இதன் காரணமாகவே பலருடைய பரம்பரை புண்ணாக்கு கதைகள் இன்று வரைக்கும் நம் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது. இதைப்போலவே நாடர்களின் தொடக்க பாரம்பரிய கதைகளிலும் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள்.

ஏழு தேவகன்னிகைகள் பூமியில் வந்து குளித்துக் கொண்டிருக்கும் போது இந்திரன் ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் "எல்லாமே" சுபமங்களமாக முடிய ஏழு ஆண் குழந்தைகள் உருவானது. இந்த குழந்தைகளை பூமியில் விட்டு விட்டு கன்னிகையர்கள் தேவலோகத்திற்கு சென்றுவிட பெண் தெய்வமான பத்ரகாளி இந்த குழந்தையை வளர்த்து வந்தாள். மதுரை நகரில் வைகைநதி பெருக்கெடுத்து ஓட பாண்டிய மன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நாள் வந்து கூடையில் மண் சுமந்து வர வேண்டும் என்று உத்திரவிட ஏழு பயபுள்ளைங்களும் "நாங்கள் ஆளப் பிறந்தவர்கள். கூடை சுமக்கமாட்டோம்" என்று எதிர்த்து நின்றனர். மன்னர் கோபமடைந்து ஏழு பேர்களையும் தலைமட்டும் மண்ணுக்கு வெளியே தெரியும்படி புதைத்து யானையை விட்டு தலையை இடறச் செய்தார். யானை கால் கொண்டு எத்தித்தள்ள முதலாவரின் தலை உருண்ட போது விடாதும் கோஷம் போட்டுக் கொண்டே நகர்ந்தது. இரண்டாவது தலையும் அதே போல் பேச பேசியதைக் கண்ட மன்னன் மற்ற ஐந்து இளைஞர்களை விடுவித்து மரியாதை செய்தான், இந்த ஐந்தில் தொடங்கியது தான் நாடார் இனம் என்று கதை திரைக்கதை வசனம் ஒன்று சரித்திரங்களில் இருக்கிறது

பெயர் மாற்றம்

நாடான் (நாடார்) என்னும் சொல் நாடாள்வார் என்னும் பொருளுடைத்தது. ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கிலும், ஆங்கிலேயரின் பிற ஆவணங்களிலும் சான்றோர் சமுதாயத்தினர் சாணார் (Shanar/Chanar) என்று குறிக்கப்பட்டுள்ளனர். சாணார் என்ற வழக்கு இழிவாகக் கருதப்பட்டதால் நாடார் என்ற பட்டத்தையே சாதிப் பட்டமாகவும் சாதிப் பெயராகவும் இச்சாதியினரின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தத் தொடங்கினர். சான்றோர் சாதியில் பின்வரும் ஐந்து உட்பிரிவுகள் உள்ளன: 1. நாடாள்வான், நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலைமைக்காரர், 2. முக்கந்தர் அல்லது முக்கந்த நாடார், 3. சிறுகுடிச் சாணார் அல்லது நட்டாத்திகள், (4) பனையேறிச் சாணார், (5) மேனாட்டார், கள்ளச் சாணார், சேதிராயர், புழுக்கை ஆகிய பெயர்களைக் கொண்ட சேர்வைக்காரர். [2] ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து (1910) இச்சமுதாயத்தின் கீழ்மட்டப் பிரிவினர் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறைக்கு மனுக் கொடுத்து, தங்கள் பெயரை நாடார் என மாற்றிக் கொண்டனர். ஆயினும், 2001இல் எடுக்கப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தொகைப் பட்டியலில் எண் 74இன் கீழ் நாடார், சாணார், கிராமணி என்னும் மூன்று பெயர்கள் இணைத்தே காட்டப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் என உள்ளனர். மேலும், தமிழ் நாடு அரசு வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் அவ்வாறே உள்ளது. [3]

இலங்கைக் குடியேற்றம்:

ஆனால் அங்கு தமிழர்கள் குடியேறத் தொடங்கிய காலத்தில் இலங்கைத் தீவில் வேட்டுவர் மக்கள் அரசு ஏதுமின்றி ( PRIMITIVE) வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலும் இலங்கைத் தீவினை பாண்டியத் தேசத்தின் நிழலில் இருந்து வந்துள்ளது. இலங்கையின் வடக்குக் கரைப் பகுதிகள் தவிரே ஏனையப் பகுதிகள் மிகுந்தக் காடுகளாகவும், வேடுவர் உட்பட காட்டு மிராண்டிகள் வாழ்ந்தும் வந்திருக்கக் கூடும். ஆகவே பாண்டிய நாட்டின் தாமிரபரணி நதியின் எதிரே இருந்த இன்றைய புத்தளம் பகுதியில் குடியேறியப் பாண்டி நாட்டு பரதவர்கள் தாமிரபரணி என்னும் சிறுக் குடியேற்றத்தை அமைத்து குடியேறினார்கள். இலங்கையின் வடமேற்குப் பகுதியே தமிழர்கள் குடியேறிய முதல் பகுதியாக இருந்திருக்கக் கூடும்.

தாமிரபரணி அரசு:

தாமிரபரணி குடியேற்றம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாக மாறி தாமிரபரணி என்னும் சிற்றரசாக மாறி இருக்க வேண்டும். அந்த சிற்றரசு பாண்டியப் பேரரசின் கீழ் இருந்து வந்திருக்க வேண்டும். இந்தக் குடியேற்றம் விரிவடைந்து செல்லும் போது ஏற்கனவே வாழ்ந்து வந்த வேட்டுவர்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சனைகள் வந்திருக்க வேண்டும். இந்த குடியேற்றத்தை அண்மைக் காலங்களில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய வெள்ளை குடியேற்றங்களுக்கு ஒப்பானவையாக இருந்திருக்க வேண்டும். தாமிரபரணி குடியேற்றத்தின் சிற்றரசுகளும், மக்களும் தமிழகத்தில் இருந்து சென்றிருக்க வேண்டும். தாமிரபரணிக்கும் பாண்டிய நாட்டுக்குமான தொடர்பினை மகாவம்சமே உறுதி செய்கின்றது.

ஆரம்பக் கால சிங்கள் மன்னர்களின் பெயர்கள் அனைத்துமே பாண்டு என்ற பெயரினைத் தாங்கி வருதலையும், விஜயன் பாண்டியன் நாட்டு இளவரசியை மணந்தத்தாக கூறும் கதைகளே இவற்றை உறுதி செய்கின்றன. அதே போல நாடார் இன மக்கள் இன்றளவும் ஈழவர் என கேரளத்தில் அழைக்கப்படுவதும். ஈழவரின் குலப் புராணத்தில் நாடார் மன்னனான நரசிம்மன் அல்லி என்னும் பாண்டிய இராணியோடு இலங்கைக்கு குடியேறியதாகவும், அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமிழகம் திரும்பியதாகவும், பின்னர் அல்லியின் தம்பி முறையிலானவன் இலங்கை சென்று நாடாண்டதாகவும் கூறப்படும் கதையும் மகாவம்சத்தின் விஜயன் கதையும் ஒன்றே போல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தாமிரபரணியை கிரேக்க அறிஞர்கள் பண்டையக் காலத்தில் தாப்ரோபனே என அழைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தொழில்கள்

நாடார் சமூகத்தினருள் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் வடமாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்குமிடையே பழக்க வழக்கங்கள் மாறுபட்டுள்ளன. சிலர் விவசாயம், கட்டிடத்தொழில் செய்தனர். சிலருக்குச் சொந்த நிலம் இருந்தது. ஆனால் பலர் பனையேற்றுத் தொழில் செய்தனர். அவர்கள் பனை மரங்களிலிருந்து பதனீர், கள் இறக்குதல் மற்றும் அவைகளை விற்பனை செய்தல் போன்றவைகளுடன் பனை மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தனர். இன்று நாடார் சமூகத்தினர் தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் வணிகர்களாக உள்ளனர். சிலர் நிலக்கிழார்களாகவும் வேறு சிலர் தொழிலதிபர்களாகவும் உள்ளனர். பிற சாதியினரைப் போலவே நாடார்களும் கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, தகவல்துறை போன்ற பல தொழில்களில் ஈடுபட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

சமுதாயத்தினர் அன்றைய நிலை

தென்மாவட்டங்களில், குறிப்பாக முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி">கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடாருக்கு எதிரான சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும்; அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது; செருப்புப் போடக் கூடாது; தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது; மாடி வைத்து வீடு கட்டக் கூடாது; பசுக்களை வளர்க்கலாம்; ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்க வேண்டும்.

அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850கள் வரை தொடர்ந்தன. [4] இத்தகைய அடக்குமுறைகள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் (அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும்) இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாடார் சமுதாயத்தினரும், கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப்பிள்ளைமார்">இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தினரும்தான். இந்தியக் குடிமக்கள் அனைவரும் சம நிலையினரே என சட்டத்தில் இருந்தாலும் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சமத்துவம் பிறக்கவில்லைதான். ஆனால் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது.

சமுதாயத்தினர் போராட்ட வரலாறு

இன்றைய கேரளா அன்று திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியாக இருந்தது. அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், நாடார் போன்ற சில சமூகத்தினருக்கும் உயர்சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்ட கோயில்களுக்குள் சென்று கடவுளை வணங்கும் உரிமை மறுக்கப்பட்டது. இந்த அடக்கு முறையைக் கண்டு மனம் வெறுத்த இச்சமூகத்தினர் சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறித்தவம்">கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். இதற்கும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாடார் இன மக்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். உதாரணமாக, 1680இல் திருநெல்வேலி மாவட்ட ஊராகிய வடக்கன்குளத்தில் கிறித்தவ நாடார் இருந்தனர். அவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள். 1685இல் அவர்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்பட்டது. 1701இல் அங்கு சுமார் 4000 கிறித்தவர் இருந்தனர்.

திருவிதாங்கூர் பகுதியில் நாடார் மக்கள் நடுவே புராட்டஸ்டாண்டு சபையினர் பணிசெய்தனர். 1780இல் பலர் கிறித்தவர் ஆயினர். ரிங்கல்டவுபே இன்னமும் எழுதப்படவில்லை)">Ringeltaube என்னும் பெல்ஜிய நாட்டு போதகர் திருவிதாங்கூர் பகுதியில் அமைந்த மயிலாடி என்னும் ஊரில் நாடார் கிறித்தவப் பிள்ளைகளுக்கென்று முதல் பள்ளிக்கூடத்தை 1806இல் நிறுவினார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1819இல் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தைக் கிறித்தவ போதகர்கள் நாகர்கோவிலில் தொடங்கினார்கள். நாடார் சமுதாய மக்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடினர். ஒரு சமூகப் புரட்சியே வெடித்தது.

நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியக் கூடாது என்ற கொடிய பழக்கம் நிலவிய காலம் அது. நாயர் போன்ற சூத்திர சாதியினருக்கும் கீழே, ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு சிறிது மேலே என்னும் சமூக நிலை அது. தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான உயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் சமூகத்து ஆண்கள் சித்ரவதை மற்றும் கொலை போன்ற இன்னல்களுக்கு ஆளானார்கள். நெய்யாற்றின் கரை, இரணியல்">இரணியல், பத்மனாபபுரம்">பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் திருவிதாங்கூர்">திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815-1829) "நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது" என்று பிரகடனம் செய்தார். இப்பிரகடனம் நாடார் குலமக்கள் பலத்த கோபமடையச் செய்தது. இதனால் பல இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. அரசு ஆணையை எதிர்த்து நாடார் சமுதாயத்தினர் போராடத் தொடங்கினர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த சமூக நீதிப் போராட்டம் 1859 ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தை எட்டியது. நெய்யாற்றின் கரை, நெய்யூர், கோட்டாறு போன்ற இடங்களில் கடும் மோதல்கள் நிகழ்ந்தன.

ஆனால் மக்கள் சக்திக்கு முன்னால் அரசு பணியவேண்டியதாயிற்று. சென்னை மாகாண கவர்னர் தலையிட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் மகாராஜா, நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1859, ஜுலை மாதம் 26ஆம் நாள் பிரகடனம் செய்தார். ஆயினும் நாடார் பெண்கள் மேல்சாதிப் பெண்களைப்போல உடுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. சமத்துவம் கோரி எழுந்த மக்கள் எழுச்சி சமுதாய சீர்திருத்தத்திற்கு வித்திட்டது.

பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வீறுகொண்டு எழுந்து போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது.
இப்படி நாடார் சமூகத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்த போராட்டமும் அதில் அவர்கள் வெற்றியடைந்து மீண்டு வந்ததும் இங்கு கவனிக்கத் தக்கது.


(முதல் பகுதிக்கு)
.


மூன்றாவது பகுதிக்கு


...

நாடார் வரலாறு 1


இந்த கட்டுரை விக்கிப்பீடியா,தேவியர் இல்லம்,கொடுக்கி,மற்றும் பல இணைய தளங்களில் இருந்தே தொகுக்கப்பட்டது.எனவே கருத்துகள் அனைத்தும் சொந்தகருத்தல்ல என்பதையும் தொகுப்பின் முன் பதிவிலேயே தெரிவித்துக்கொள்கிறோம்.
நாடார்

நமது பாரத நாட்டின் தொன்று தொட்ட குடிமக்களில் நாடார் வகுப்பினர்களும் ஒரு சாரார். பாரதம், பழைய காலத்தில் "அல்ஹின்ட்", என்று அராபியர்களால் அழைக்கப்பட்டது, பைபிள் தோன்றிய காலத்தில், அவர்கள், நான்கு ஆறுகளின் மக்கள் என்று அறியப்பட்டனர். ஆனால், அவர்கள் தோற்றம், தெற்குப்பகுதியாம் "குமரிக்கண்டம்" என்பதாகும்.

தமிழ்நாட்டில் நாடார் என்ற சாதிப் பட்டம் கொண்ட சான்றோர் சமுதாயத்தினர் குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் உள்ளனர். திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் இவர்கள் பெரும்பான்மையினர். மேலும், மதுரை, தேனி,சேலம், கோவை, தஞ்சாவூர், ஆற்காடு, செங்கல்பட்டு, சென்னை போன்ற மாவட்டங்களிலும் இவர்கள் பல தொழில்களிலும் துறைகளிலும் ஈடுபட்டுள்ளனர். வட மாவட்டங்கள் மற்றும் புதுவையைப் பூர்விகமாகக் கொண்ட சான்றோர் சமுதாயத்தவர் கிராமணி என்ற பட்டம் கொள்வர். நாடார் சமுதாயத்தில் சுமார் 60% இந்துக்கள், எஞ்சியோர் கிறித்தவர்கள். ஆங்காங்கே ஒருசிலர் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாகக் கூறப்படுகிறது. இந்து சமயத்தோடு பல விதங்களில் இணைந்திருந்தாலும் அதிலிருந்து சில கொள்கைகளில் மாறுபடுகின்ற அய்யாவழி சமயத்தைப் பின்பற்றுவோர் பெரும்பாலும் நாடார் சமூகத்தவரே.திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்துவ சமயத்தைப் பின்பற்றும் நாடார்கள் அதிகம் உள்ளனர்.

வரலாறு

நாடாள்வார் போன்ற பட்டங்களைக் கொண்ட சான்றோர் சமூகத்தினர் பூர்விகத் தென்னிந்திய அரச குலத்தவர் ஆவர். இதற்கு ஏராளமான கல்வெட்டு, செப்பேடு மற்றும் இலக்கியச் சான்றுகள் உண்டு. சால்பு என்ற பண்பின் அடிப்படையில் தோன்றிய சான்றோர், சான்றார் என்ற சொற்களே சாணார் என்ற வழக்குச் சொல்லின் மூல வடிவங்களாம்.

சோழநாட்டிலுள்ள காவேரிப்குதி, மதுரை, தென் திருவாங்கூர் ஆகிய பகுதிகளில் இந்த நாடார் இன மக்கள் உருவானதாக கூறப்படுகிறது. ஈழத்து வரலாற்றில் தென்னிந்திய கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் எளிதாக புலம் பெயர்ந்து ஈழத்தை நோக்கி நகரத் தொடங்கினர். ஆனால் 'உள்ளே வெளியே' என்பதாக ஈழத்துக்குள் சென்றவர்களும் திரும்பவும் இங்கேயே வந்தவர்களும் உண்டு. அது போல ஈழத்தில் வடக்கு கடற்கரையோரத்தில் வாழ்ந்து வந்தவர்களின் ஒரு பகுதியினர் தான் இவர்கள் என்றும் கூறப்படுகிறது. தொடக்கத்தில் சான்றார் என்று அழைக்கப்பட்டு பிறகு சாணார் என்று மருவியது. யாழ்பாணத்தில் இருந்து வந்தவர்கள் இந்த பனைவிதைகளை கொண்டு வந்து இங்கே பனை மரங்களை உருவாக்கினார்கள் என்று நம்புகிறார்கள்.

நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் போதே நம் கண்களுக்கு பனைமரம் ஏராளமாகத் தெரியும். கேரளாவைப் போலவே கண்களுக்கு குளிர்ச்சி தரும் பச்சைபசேலுக்குத் தேவையான சீதோஷ்ண நிலை எங்கும் நிலவும். இராமநாத புரத்தை வறப்பட்டிக்காடு என்பது போல மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் உள்ள தென்மாவட்டங்கள் குறிப்பாக நாங்குனேரி, ஸ்ரீவைகுண்டம்,திருச்செந்தூர் போன்றவைகள் வறண்ட பூமியாக கண்ணுக்கு எட்டியவரையில் பொட்டல்காடாகவே தெரியும்.

மக்கள் வசிப்பதற்கு தகுதியற்றதாக, கருங்கற்கள் நிறைந்த, செம்மண் நிறைய மொத்தத்தில் பனைமரங்கள் வளர்வதற்கு ஏற்ற பூமியாக இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள பூமியில் ஆழத்தில் சிவந்த களிமண் இருந்த போதிலும் மேல்மட்டத்தில் உள்ள தளர்ச்சியான மணல் ஒவ்வொரு காற்று வீசும் பருவத்திலும். தென் மேற்கு சுழற்சி காற்றால் கிழக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது. இந்த காற்றும், நகரும் மணல் துகள்களும் மக்களுக்கு ஒவ்வொரு சமயத்திலும் ஏராளமான பிரச்சனைகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில் வயல்வெளிகள், கிராமங்கள் கூட அமிழ்ந்து போயுள்ளன. இது போன்ற பூமியில் தான் இங்கு நாம் பார்க்கப்போகும் நாடார்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.

இந்தியாவில் உள்ள மொத்த சாதிகள் உருவான கதைக்கு ஆயிரத்தெட்டு புராண இதிகாச சம்பவங்களைக் கூறினால் இந்த சாதி என்ற மூலக்கூறு இன்று வரைக்கும் வளர்ந்து கொண்டு இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. பொருளாதாரம் மற்றும் அவரவர் செய்து கொண்டிருந்த தொழிலை அடிப்படையாக வைத்து தான் இந்த சாதி ஒவ்வொரு காலகட்டத்திலும் விடாப்பிடியாக நகர்ந்து கொண்டு வந்தது. நாடார் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் இதற்குள்ளும் ஏராளமான கிளைநதிகள் உண்டு. குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டும் பார்க்கலாம்,

சேரநாடு, வில்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு அவர்கள் நாடார்கள் அல்லது சாணார்கள் என்று அறியப்பட்டனர். அவர்களது சின்னம், பனைமரத்தின் பூ விக்ரம சோழ உலாவில், ஒட்டக்கூத்தன் சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை என்பவரை வில்லவன் அல்லது நாடார், என்ற குறிப்பிடுகின்றார்.

துரதிர்ஷ்டவசமாக பண்டைத்தமிழர்களின் வரலாறு, வரலாற்றுக்கால நாடார்களை, அன்னார் தம் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தி, திருத்தி, புனைந்து, படை எடுத்து வந்த ஆரியர்களின் பெயருக்குப்புகழ் சேர்த்திட, ஏற்படுத்திவிட்டது. இத்தகைய மாற்றங்கள், பெரும்பகுதியும், முகலாய படையெடுப்பிற்கும் பின்னர், ஆரியப் பார்ப்பனர்களின் துணை கொண்டு செய்யப்பட்டவை ஆகும். அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, ஆதியில் நாட்டை ஆட்சி செய்து வந்த வகுப்பினரை- நாடார்களை அவர்தம் பெயர்க்கு இருந்த பெருமையைக் குறி வைத்து அழித்து, ஒழித்து விட்டனர்.

12-ஆம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் இங்கே வாழ்ந்த நாடார்கள் தங்களின் இந்துக் கோயில்களுக்கு இருந்த மிகப்பெரும் சொத்துக்கள் அனைத்தும். பார்ப்பனர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டுவிட்டன. நாடார்களின் வீழ்ச்சி தொடங்கியது. பாரத பூமியில் முழுவதும் பன்மொழிப் புரட்சிகள் ஏற்பட்ட போது, தமிழ் நேர்மையற்ற முறையில் பின்னடைவுக் கொணரப்பட்டு, சமஸ்கிருதம், வலுவான இடத்தைப் பெற்றுவிட்டது. இவ்வாறாக, தஞ்சாவூர் - தமிழ் நாடார்களின் முக்கியப் குதியின் புகழ் மங்கச் செய்யப்பட்டுள்ளது. வலங்கைமாலை, நாடார்களின் ஓலைச்சுவடிகள் ஒன்று. அவர்களது வரலாற்றினைப் பேசுகிறது.


15-ஆம் நூற்றாண்டு வாக்கில் நாடார்கள், நாயக்கர்களால், வலிமை குறைக்கப்பட்டனர். ஏனெனில், நாடார்களிடையே உட்பூசல்களும் ஒற்றுமையின்ையும் மேலோங்கி இருந்தன. 1664-ஆம் ஆண்டு, நாடார்கள் அவர்தம் கோயில்களினின்றும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். நாடார்களுக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமற்ற கொடுமைகளால், 13 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில், கிறித்துவ சமய ஞானிகள், நாடார் ஆதித்தம் செலுத்திய பகுதிகளில், சிறந்த மதமாற்றம் செய்வதற்கு தகுதியான இடமாகக் கண்டனர். இந்த கிறிஸ்தவ ஞானிகள் இல்லா திருப்பின், நாடார் இனம் முற்றிலுமே, ஆரிய ஏஜென்டுகளின் திட்டப்படி அழிக்கப்பட்டிருக்கும். ,

தமிழ் மரபுவழி சாதியினர் என்பது மட்டுமில்லாமல், நாடார்களின் புறத்தோற்றம் அவர்கள் கலப்பு குறைந்த தமிழ் சாதி என அடையாளம் காட்டுகிறது. நாடார்கள் தமிழகத்தின் தெற்கிலும், கேரளாவிலும் இலங்கையிலும் வாழ்கிறார்கள். நாடார்கள் கேரளாவின் ஈழவரும் ஒரே சாதியினர் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆதிக் காலங்களில் இலங்கையில் குடியேறிய தமிழ் சாதியும் இவர்களே ! வேடுவர்களுக்கு அடுத்து இலங்கையில் குடியேறிவர் மீனவரும், நாடாருமே ஆகும். காலப் போக்கில் அவர்கள் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து கேரளம் வந்தததால் என்னவோ அவர்கள் ஈழவர் எனவும் தீயார், தீவார் என அழைக்கலாயினர். அது மட்டுமில்லாமல் இலங்கையின் நழவர் என்னும் பிரிவும் நாடார் இனமாக இருக்கக் கூடும். இலங்கையின் உணமை வரலாறாய் ஆய்வு செய்ய நாடார்களின் இன ஆராய்சி மிக அவசியமாகும்.

நாடார்கள் தான் தென் தமிழ்நாட்டின் நிலத்தின் சொந்தக் காரர்கள் ஆவார்கள் ! பின்னாளில் அங்கு குடியேறிய வேற்று சாதி வேளாளர், நாயர், நாயக்கர் போன்றோர் அவர்களின் நிலங்களை பறித்துக் கொண்டு அவர்களை இழி நிலைக்கு தள்ளியது. இருப்பினும் இன்று அவர்கள் முன்னேற்றம் அடைந்து சமூக அந்தஸ்தைப் பெற்று இருக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்களில் பலர் கிருத்துவத்தை தழுவியதும், அதனால் அவர்கள் பெற்ற ஆங்கில கல்வியும், உழைப்பும் ஒரு காரணம்.

சமஸ்கிருத அகராதி நாடார்களை, அரச இனம் (Royal race) எனக்காட்டுகிறது. சமயப்பரப்புக் குழுக்களைச் சேர்ந்த ஞானிகள் நாடார்களுக்கு, பொருளாதார ரீதியில் உதவி அளித்து வாழ்வித்த போதிலும் அவை மதுரை, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலுள்ள நாடார்களின் உயர்ந்த குணநலன்களையும், விலை மதிப்பில்லா "சாஸ்திரங்கள்". அவர்களிடம் இருந்ததைப்பற்றி எதுவுமே கூறவில்லை. குறிப்பாக குமரி மாவட்ட நாடார்களின் உயர்ந்த குணநலன்களையும். விலைமதிப்பில்லா சாஸ்திரங்கள் அவர்களிடம் இருந்ததைப்பற்றியும் எதுவுமே கூறவில்லை. குறிப்பாக, குமரி மாவட்ட நாடார்களின் அரிய ஆவணங்களாம், வர்ம சாஸ்திரம், காலரி வைத்யம், வானியல் மற்றும் தர்க்க சாஸ்திரம் போன்றவை ஆகும். இவற்றை, சமஸ்கிருத மொழியிலும் காண இயலாது, சிறப்பாக கன்னியாகுமரி வாழ் நாடார்களிடமுள்ள வர்மசாஸ்திரம் போன்றவற்றை வேறு எங்கிலும் காண முடியாது.

தொடரும்..


(இரண்டாவது பகுதிக்கு).

...





வெள்ளி, ஜூன் 10, 2011

கனிமொழி ஜாமின் வழக்கும்,அம்மாவின் ஆட்சியும்

ஜாமின் வழக்குகள் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது பலருக்கு ஆனந்தம், என்னவோ அவங்க வீட்டுச்சொத்தில் ஏமாற்றி பங்கெடுத்த மாதிரி,

சரி ஜாமின் நிராகரிப்புக்கு நீதிமன்றம் சொல்லும் கருத்து 'வெளியே இருந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள்' என்று,கனிமொழி கலைத்து விட வில்லையெனில் அவங்க வீட்டில் இருக்கும் அனைவரும் லேசுப்பட்டவர்களா,அவர்களால் கலைக்க முடியாதா?என்ன வியாக்கியானம் சொல்லிக்கொண்டு இருக்கிறது நீதிமன்றம்.

கனிமொழியை உள்ளே வைத்து மனதளவில் திமுக தலைவர்களை காயப்படுத்துவதே அவர்களின் நோக்கம்,இதனோடு மட்டுமல்லாமல் தங்களால் ஏதும் செய்யமுடியாது,வழக்குகள் சிபிஐ வசமும் நீதிமன்றமும் கவனித்து கொண்டுள்ளதால் ஏதும் செய்யமுடியாது என்று சொல்லிவேறு காட்டுகிறார்கள்.

இன்றைய 10/06/2001தினமலரில் ஒரு வாசகர் பெண் பாவம் சும்மா விடாது என்று வேறு எழுதி அம்மாவை எந்த குற்றமும் செய்யாமல் கொசுக்கடியில் வைத்த பாவத்தின் பலன் கனிமொழி கைது என்று உளரியுள்ளார்.

ஊழல்கள் செய்யப்பட்ட விதங்களை பார்க்கும் போது நம்மை கண்டுபிடிக்க முடியாது என்றே விஞ்ஞான பூர்வமாக செய்திருக்கிறார்கள்.அவர்கள் மக்களை உயர்த்த வேண்டிய வழிகளை செய்யாமல் தம்மை வளப்படுத்த தமது பதவிகளை பயன்படுத்திக் கொண்டனர் என்பது நன்றாக ஊர்ஜிதமாகிறது.

தமிழன் அனைவருக்கும் அப்போதைய மன நிலையில் பெட்ரோல் விலை,கரண்ட் பிரச்சினை,தொழில்நசிவு,ஊடகங்களின் ஏமாற்றுப் பிரச்சாரம் இவற்றை மையமாக வைத்தே சுலபமாக அம்மாவை ஜெயிக்க வைத்துவிட்டனர்,

அம்மாவும் ஆட்சிக்கு வந்ததும் ஏதாவது உருப்படியாக செய்யும் என்றால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டு உள்ளார்,இதே கடிதத்தை கலைஞர் எழுதும் போது கடிதங்கள் குப்பைக்குத்தான் போகும் என்று இவரே கூறியதை அவ்வளவு சுலபமாக மறந்து இருக்கமாட்டார்.

இலங்கைப்பிரச்சினைக்கு இவர்கள் சட்டசபையில் தீர்மானம் போட்டால் இலங்கை எங்களுக்கு மாநில அரசுகளுடன் எந்த உறவும் இல்லை,மத்திய அரசுடன் மட்டுமே உறவுகள் அப்படின்னு நக்கல் அடிக்கின்றனர்.

மெட்ரோ இரயில் திட்டம் ரத்து என்றதும் அதற்கு செலவு அதிகம் மட்டுமல்லாமல் உலகின் சில நாடுகளில் 200கிமீட்டருக்கும் குறைவாக ஓடும் நிலையில் தமிழகத்தில் 333 கிமீ சாத்தியமே படாது என்று எல்லோரும் பரவலாக சொல்ல ஆரம்பித்தவுடன் மெட்ரோ ரெயில் திட்டம் கைவிடப்படவில்லை,அதனுடன் இந்த திட்டமும் இருக்கும் என்று அமைச்சர் கூறுகிறார்.

கொங்கு பெல்ட் என்று கூறப்படும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களின் தாகம் தீர்க்க பல குடிநீர்த்திட்டங்கள் இருந்தாலும்,விவசாயத்தேவைகளை நிறைவேற்ற பல காலங்களாக கேட்டுக்கொண்டு இருக்கும் 'அவினாசி அத்திக்கடவு" திட்டத்தைப்பற்றி இந்த ஏரியாவின் முக்கியமான தொழிலாக இருக்கும் விவசாயத்தை துறையாக கொண்ட இதே பகுதி விவசாய அமைச்சர் இருந்தும் அம்மா கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் அம்மாவின் சிறப்பான ஆட்சி என எதிர்காலத்தில் நாம் படிக்கப்போகிறோம்.

மேற்கண்ட நிகழ்வுகளை பார்க்கும் சராசரி தமிழன் வாழ்க்கையில் வளம்பெற உண்மையுடன் உழைக்க வேண்டும் என்பதை மறந்து இவர்களைப்போல ஏதாவது ஒரு அதிர்ஸடம் நம்மையும் மந்திரியாக்காதா என்று நினைக்க ஆரம்பித்து விடுவான்.


..

வியாழன், ஜூன் 02, 2011

தென்மேற்கு பருவ காற்றும்,சாயபட்டறை பிரச்சினையும்





அனைவரும் எதிர்பார்த்த மாற்றம் தமிழ்நாட்டில் வந்தே வந்து விட்டது.
ஆமாம் சுட்டெரிந்த வெயில் தணீந்து இரண்டு நாளாக தென்மேற்கு பருவக்காற்றுடன் சாரல் மழை திருப்பூரை நனைத்து வருகிறது.இனி தமிழ்நாடு வளர்ந்து விடும்,என்பதை மக்கள் நம்பியே கடந்த தேர்தலில் மாற்றத்தை கொண்டு வந்து விட்டனர்.

10 இலட்சம் மக்களின் வாழ்க்கை வெறும் கனவாகி விடும் என்பதையே காரணமாக வைத்து திருப்பூரின் அனைத்து பிரச்சினைகளையும் அம்மா தீர்த்து வைத்து விடும் என்பதை நம்பியே டையிங் உரிமையாளர்களும் இலவு காத்த கிளி போல இருந்தாலும், அசோசியேசன் தலைவர் 2100 டிடிஎஸ் அளவுள்ள கழிவுநீரை காவிரியில் கலக்க அல்லது கடலில் கலக்க அனுமதி வேண்டும் என்று கேட்கும் போதே நமக்கு பிரச்சினையின் தீவிரம் தெளிவாக தெரிய ஆரம்பிக்கிறது.

2100 டிடிஎஸ் என்பது எதை வைத்து அளவீடூ செய்வார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்,இதை நாம் சொல்லவில்லை, கரூர் அமைச்சர் செந்தில் பாலாஜி சொல்கிறார்.முந்தைய காலங்களை நாம் நினைவு கூறும்போது இது தெளிவாகும்.

பிரச்சினை இழுத்துக்கொண்டெதான் போகும்,ஆகையால் விவசாயிகளும் இதில் வாபஸ் வாங்கினால் இனி எந்த காலத்திலும் கழிவு நீர் பிரச்சினைகளை பேச முடியாது என்பது அவர்களுக்கும் தெளிவாக தெரிவதால் கொஞ்சம் சிரமம்தான் 100% கழிவுநீரை சுத்தம் செய்வதை விட வேறு வழியில்லை.

எது எப்படியோ ஈரோடு,குமாரபாளையம்,பவானி,நாமக்கல்,கரூர் ஏரியாக்களில் இயங்கும் டையிங் பட்டறைகளையும் கட்டுப்படுத்தும் போதுதான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பது நாம் கண்ட உண்மை,

காலம் கனியுமா? பொறுத்து இருந்து பார்ப்போம்.

.