வெள்ளி, மே 28, 2010

கவர்ன்மெண்ட் பஸ் ஓனர்கள்



நாம எழுதோணுமின்னு நெனைச்ச ஒரு மேட்டரு நம்ம நண்பரு ஒருத்தரு பழனி -மணப்பாறை அப்படின்னு எழுதியிருக்கிறாரு. எல்லா ஊரிலயும் இதே பிரச்சினைதான் இருக்குமாட்டத்தோணுது. (http://sirippupolice.blogspot.com/2010/05/blog-post_27.html)

நம்ம ஊரிலயும் அப்படித்தான் கோயமுத்தூரு ‍ஈரோடு போற கவர்ன்மெண்ட் பஸ்ஸில செங்கப்பள்ளி, விஜயமங்கலம் , பல்லகவுண்டன்பாளையம் அப்படின்னு கேட்டா கண்டக்டர் நம்மளப்பாத்து "என்னமோ அவரு சொத்த எழுதிக்கேட்ட மாதிரி அப்படியே ஒரு பார்வையை நம்ம மேல விசிறிப்போட்டு , இது பைபாஸ் ரைடர் போகாது அப்படின்னு படக்குன்னு சொல்லமாட்டாரு , ரெண்டு, மூணு டைம் நாம கேட்டதுக்கு அப்புறம்தான் சொல்வாங்க"

அதுல பாருங்க ஒரு வருசத்துக்கு முன்னாடி பெரிய பிரச்சினை எல்லாம் பண்ணி பஸ்ஸ நிறுத்தி , மறிச்சு போலிஸ் ஸ்டேசனுக்கு எல்லாம் போயி பஞ்சாயத்து ஆகி அப்புறம் எல்லா கவர்ன்மெண்ட் பஸ்ஸிலயும் செங்கப்பள்ளி, விஜயமங்கலம் , பல்லகவுண்டன்பாளையம் அப்படின்னு ஊர்ப்பேர கண்ணாடியில் ஒட்டச் சொல்லி ஒட்டி உட்டாங்க.இப்ப பாத்தா ஒரு ஸ்டிக்கரயும் காணோம் ,

இதுல வேற நாலு ரோடு(பைபாஸ்) ஊருக்கு வெளியில போட்டுட்டாங்களா , நைட்டு 6 மணீக்கு ஆரம்பிச்சா காலைல 6 மணீ வரைக்கும், ஒரு பஸ்காரன் கூட ஊருக்குள்ள வாரது இல்ல.எல்லாரும் அவனவன் அப்பிச்சி ஊட்டு பஸ் மாதிரி ஒரே புடுங்காப்புடுங்கிட்டு பைப்பாஸ்ல போயிரது.

நம்ம எங்காவது போலாமுன்னுட்டு பஸ் ஸ்டாப்புக்கு போயி , கெத்து கெத்துனு நின்னுட்டு இருந்தா ஒரு பஸ் கூட வராது. இதுல வேற அவினாசியிலயோ, பெருமானல்லூரிலயோ நின்னு விஜயமங்கலம் அப்படின்னு ஈரோடு போற பஸ்ஸில கேட்டமுன்னா , இந்த கறிக்கடையில நாய் கறித்துண்டுக்கு கெஸ் வாங்கீட்டு நிக்கும் பாருங்க, அப்படித்தான் நிக்கோணும். இந்த கவர்ன்மெண்ட் பஸ் ஓனருங்க யாராவது நாலு வண்டிக்கு ஒரு மவராசன் மனசு மாறி ஏறு அப்படின்னாத்தான் உண்டு. இல்லைன்னா பத்து வண்டிக்கப்புறம் ஏதாவது ஒரு வண்டியில ஊர்ப்பேரைச் சொல்லாம பத்தோட பதின்னொன்னா ஏறி டிக்கட் வாங்கும் போது பஸ் ஓனருங்ககிட்ட நல்ல வார்த்தை நாலு வாங்கிக்க வேண்டியதுதான்.

என்ன செய்ய ? அவங்க காட்டுல மழை.

இதுக்கெல்லாம் விடிவு காலம் உண்டா ? அல்லது மக்கள் உரிமைகள் கழகத்தில் மனுப்போடலாமா ? ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்களேன்.

இந்தப் பதிவை மற்றவருக்கும் சொல்லுங்கள், யாராவது ஒருவரேனும் வழி சொல்வார்கள். இல்லையென்றால் முந்தைய எமது பதிவொன்றின் முடிவைப் போன்று நான் முதல்வராக வேண்டும்.

..........

திங்கள், மே 17, 2010

செம்மொழி மாநாடும், சுற்றும் வதந்திகளும்

செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளால் கோவை தற்போது குறுகிய ஒரு கால இடைவெளியில் பல வசதிகளை பெற ஆயத்தமாகிக் கொண்டு வருகிறது.
துணை முதல்வர் பல நேரங்களில், பல முறை கோவை வந்துள்ளார். அவரது நேரடி மேற்பார்வையில் கோவை மாநாடு நிகழ்வுகள் நடந்து வருகிறது. மாநாடு நடக்கும் கோவைக்கென வழங்கப்பட்ட மாநகர பேருந்துகள் சேலம் , பொள்ளாச்சி , மேட்டுப்பாளையம், கோபி , திருப்பூர் , மதுரை , உடுமலை என சுற்றி வருகின்றன. பேருந்தைப் போலவே இன்னொரு வதந்தியும் சுற்றி வருவதை நாம் அவதானிக்க முடிந்தது.

கோவை புரூக் பாண்ட் ரோட்டில் நேற்று நடந்த ஆரெம்கேவி துணீக்கடைக்கட்டிடம் ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் வசம் கைமாறியுள்ளதாகவும் , பல கல்வி நிறுவனங்கள் , ஸ்பின்னிங் மில்கள் கைமாறியுள்ளதாகவும் தகவல்.

மேலும் தமிழக முதன்மை அரசியல்வாதி ஒருவர் வடவள்ளியில் நிரந்தரமாக தங்குவதாகவும் ஒரு வதந்தி உலவி வருகிறது.

ஏதோ ஒன்று, கோவை தமிழ் மாநாட்டால் பல சிக்கல் நிறைந்த கல்லூரிகள், நிறுவனங்கள் சிக்கல் விலகி நலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

..

வெள்ளி, மே 14, 2010

அரசுப் பஸ்களும் , அலற வைக்கும் ஆடியோக்களும்


நீங்கள் தினமும் அலுவலகம் செல்ல அரசுப்பஸ்களைப் பயன்படுத்துபவர்களாயின் இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

புதிதாக விடப்பட்ட ஏர்பஸ் ரூ 30 இலட்சம், ரூட் பஸ் 16 இலட்சம் இது தோராயமான மதிப்பீடு மட்டுமே . கமிசன் கவலையில்லை.

இவ்வளவு செலவு செய்து விடப்பட்ட புதிய பஸ்ஸைக்கண்டால் எவர் ஒருவருக்கும் ஏறத்தோணும். அப்படித்தான் நானும் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நின்றிருந்த ஒரு சிகப்புக்கலரு பஸ்ஸில் ஏறீ அமர்ந்தேன். பஸ் நகர்ந்ததும் டீவி ஆன் செய்யப்பட்டது . ஆடியோ ஒலி ஸ்பீக்கர் வழியாக கர்ண கடூரமாக ஒலிக்க ஆரம்பித்தது. அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஒண்ணும் விளங்கவில்லை. இது எனக்கு மட்டுமல்ல , பயணிகள் அனைவருக்கும் .

கண்டக்டரிடம் கேட்டால் நான் என்ன செய்வது வரதே அவ்வளவுதான் என சலித்துக் கொண்டார். டிவி கண்டிப்பாக ஓடியே ஆகவேண்டும் என்பது ரூல்ஸ் என்றார்.

இதுதான் கொடுமை என்றால் இதை விடக்கொடுமை ஒன்று உள்ளது.

பொள்ளாச்சி- திருப்பூர் பஸ் ரூட்டில் பயண நேரம் 60 கிமீட்டருக்கு 2.10 மணி நேரம். இதில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். பாட்டெல்லாம் கண்டக்டர் டிக்கெட் கொடுத்து முடிக்கிற வரைக்கும் போட மாட்டாங்க. அதுக்குள்ள‌
நம்ம மக்கள் வெச்சிருக்கற சைனா செட் மொபைல்ல இருந்து பாட்டப்போட்டு கேக்க ஆரம்பிச்சிருவாங்க.

அங்கங்கே பல மொபைல்ல ஒலிக்க ஆரம்பிக்கறதால நம்ம காது பழுத்துப்போயிரும். கொடுமை !

இதே இப்படின்னா இன்னும் மதுரை, தேனி ருட் ? ஐயோ !

அதே மாதிரி இப்ப புதுசா பூம் டீவி அப்படின்னு ஒரு சைடு மட்டும் ஒரு எல்.சி.டி டிவியை வைத்து படம் போட ஆரம்பிச்சிருக்காங்க, கூட்டம் நெறைய இருந்தா டீவி இருக்கற சைடுக்கு எதிர்ப்புறம் இருக்கற மக்கள் பாவப்பட்டவங்க . அவங்களுக்கு வெறும் ஆடியோ மட்டும் கேக்கும்.

இதுக்கெல்லாம் ஒரே தீர்வு ,

பல இலட்சம் செலவு செய்து புதிய பஸ் விடும் போது மீறி மீறிப்போனால் ஒரு 20 ஆயிரம் செலவு செய்தால் நல்ல ஆடியோ சிஸ்டம் பிரைவேட் வண்டிக்கு நிகரா மாட்ட முடியும். டிவிடி பிளேயர் கூட தேவையில்லை. வெறும் எப். எம் கொடைக்கானல் வைத்தால் கூட நல்ல படியா பாடும்.

இதெல்லாம் நடக்க இன்னுமொரு எளிய வழி, நினைக்க மட்டுமே முடியும்

நான் போக்குவரத்து அமைச்சராக வேண்டும்.

கனவு காணுங்கள் , நடக்கும் என யாரோ சொன்னார்கள், கனவு காணுகிறேன் நடக்குமா என எதிர்பார்ப்போம்.

..

வெள்ளி, மே 07, 2010

வழியிருந்தும் செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்!

நீண்ட நாட்களாக எப்போதாவது கனரக வாகனம் வந்தால் மட்டுமே அதுவும் டிரைவரும் கிளினரும் சென்று ரெயில் நிலையத்தில் சொன்னால் மட்டுமே வந்து ரெயில்வே கேட் பற்றி பல புகார்களை எம்.எல்.ஏ , எம்.பி அனைவரிடமும் சொல்லியும் ஒரு பயனுமில்லை. மேலும் சுற்று வட்டார மக்களும் வேறு வழியின்றி அருகிலுள்ள ஒரு சிறிய நுழைவு பாலத்தை உபயோகித்து வந்தனர்.
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று வாகனங்கள் செல்லமுடியாதபடி சேறு நிரம்பியதாக இந்த பாலம் காணப்படும் , இந்த பாலத்தைப் பற்றி சென்ற 05.05.10 தினமணி பேப்பரில் (ஈரோடு)வந்துள்ளது .

இதன் பிறகாவது ஒரு வழி பிறக்கும் என எதிர்பார்ப்போம்.

இணைப்பு : http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Edition-Coimbatore&artid=237558&SectionID=136&MainSectionID=136&SEO=&Title=%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!

கோயம்புத்தூர்
வழியிருந்தும் செல்ல முடியாமல் தவிக்கும் மக்கள்!

First Published : 05 May 2010 11:44:46 AM IST


சென்னிமலை, மே 4: சென்னிமலையிலிருந்து விஜயமங்கலம் செல்லும் சாலையில் விஜயமங்கலம் ரயில்நிலையம் அருகே ஒரு ரயில்வே கேட் உள்ளது. ரயில்வே கேட்டிலிருந்து சுமார் 100 மீட்டருக்கு அருகாமையில் குறுகிய பாலம் ஒன்றும் உள்ளது. இந்தப் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ரயில் பாதையை கடக்க இந்த இரண்டு வழிகளில் மட்டுமே செல்ல முடியும்.÷கடந்த பல ஆண்டுகளாக இந்த ரயில்வே கேட்டை ரயில்வே நிர்வாகம் மூடி வைத்துள்ளது. இந்த வழியாக செல்லும் அரசுப் பேருந்துகள், லாரிகள், கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் ரயில்வே கேட் மூடியே இருப்பதால் சிறிய பாலத்தையே பயன்படுத்தி வந்தன. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பெய்த மழையால் பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பாதை சேறும், சகதியுமாக உள்ளது. மழைக்காலம் தொடங்கி விட்டாலே போக்குவரத்திற்கு பெரும் பிரச்சனையாகி விடுகிறது. குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் கூட ரயில்வே நிர்வாகம் ரயில்வே கேட்டை திறக்காமல் பூட்டியே வைத்துள்ளது. போக்குவரத்திற்காக இரண்டு வழிகள் இருந்தும் இரண்டையும் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். பாலத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிற நேரங்களில் மட்டுமாவது பொதுமக்களின் வசதிக்காக ரயில்வே கேட்டை திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செவ்வாய், மே 04, 2010

குறைந்த செலவு நிறைந்த மனசு
















வனப்பத்திரகாளியம்மன் மேட்டுப்பாளையம்

மே 1 விடுமுறையமக்கள் ஊட்டி , கொடைக்கானல் , மூணாறு , ஏற்க்காடு , ஒகேனக்கல் அப்படின்னு கொண்டாடிக்கிட்டு இருக்க நமக்கு திடீருன்னு 30 தேதிநைட்டு நம்ம திருப்பூர் நண்பர்கள் போன் பண்ணி நாளை காலையிலமேட்டுப்பாளையம் வனப்பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வந்திருங்க , கெடாவெட்டு இருக்குதுன்னு சொன்னாங்க.

சரின்னுட்டு காலையில 7 மணிக்கு துடியலூரில் இருந்துமேட்டுப்பாளையத்திற்கு பஸ் பிடிச்சு போனாமுன்ன அங்க அந்தக்காலைநேரத்திலேயே சரியான டிராபிக் .

பஸ் உட்டு இறங்கி நண்பர்களுக்கு போனப்போட்டமுன்னா அவங்க பஸ்ஸ்டாண்ட் கிட்ட வாங்க , ஆம்னி நிக்குதுன்னு கூப்பிட்டாங்க.

சரின்னு அதில போயி ஏறி கோயிலுக்கு ஒரு 7 அல்லது 8 கிமீ தோராயமாகஇருக்கும் அப்படின்னு நெனைக்கிறேன்.

வழியில யுனைடெட் பிளீச்சர்ஸ், சாராதா டெரி பிராடக்ஸ் தாண்டிப்போனா
அப்படியே பாக்குத்தோப்பு கண்ணுக்கு குளுமையா தெரிய , கொஞ்சம்தொலைவில குன்னூர் , ஊட்டி மலைகளெல்லாம் மேகமூட்டத்துடன் தெரிய
மனம் சற்றே ரிலாக்ஸ் ஆகத் தொடங்கியது.

தேக்கம்பட்டி பிரிவுலதான் கோயில் இருக்குது.

கோயிலோட சிறப்பு

வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடாவெட்டுதல் தான் நினைவிற்கு வரும். அம்மனுக்கு உகந்த ஆடு பலியிடுதல் ஞாயிறு செவ்வாய் புதன் ஆகிய நாட்களில்நடக்கும். ஒரு வாரத்திற்கு சுமார் 300 லிருந்து 400 கிடா வரைவெட்டப்படுகிறது.ஒரு ஆண்டிற்கு சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிடாய்வெட்டுகின்றனர். . அதும் போக புதுசா வாகனம் , எப்.சி காட்டுனவங்க , இறைநம்பிக்கை உள்ளவங்க இங்கே வராங்க.


புதிதாக தொழில் துவங்கும் நபர்கள், திருமணம் பற்றி கேட்கும் நபர்கள் சுவாமிமுன்பு பூ போட்டு கேட்பது வழக்கம். சிவப்பு, வெள்ளை பூக்களை தனித் தனிபொட்டலங்களில் போட்டு அவற்றை அமபாளின் காலடியில் வைத்து எடுத்துப்பார்க்கும்போது மனதில் எந்த பூவை நினைக்கிறோமோ அந்த பூ வந்து விட்டால்அம்பாள் உத்தரவு தந்து விட்டதாக ஐதீகம். இது இக்கோயிலில் மிகவும் சிறப்புபெற்ற ஒன்று.

அம்மனை நாம் வழிபட்டு விட்டு நம் நண்பர்கள் சேர்ந்து எடுத்திருந்தமண்டபத்திற்கு சென்றால் மொத்தம் 4 குரூப் சீட்டாட்டம் ஜோராக நடந்துகொண்டு இருந்தது. காலை இட்லி டிபனாக குடல் கறி குழம்புடன் சூடாகவழங்கப்பட்டு கொண்டு இருந்தது.

கொஞ்ச நேரத்திலேயே நண்பர்கள் மேட்டுப்பாளையம் சென்று வந்து கூல்டிரிங்ஸ் , ஹாட் டிரிங்ஸ் என தாராளமாய் சப்ளை செய்தனர்.

மப்பு ஏறின பார்ட்டிங்க அருகிலேயே சென்று கொண்டிருந்த பவானி ஆற்றில்சென்று குளிக்க தொடங்கினார்கள்.


ஆத்துத்தண்ணி நல்ல குளிர்ச்சியா இருந்தது. ஆத்துக்குள்ள ஆண்கள், பெண்கள் , குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாக குளிக்கறத பாக்கும் போதுஊட்டி , கொடை, மூணாறு போன மக்கள் கூட இந்த மகிழ்ச்சியாஇருந்துருப்பாங்களா அப்படிங்கறது டவுட்தான்.

ரூம் வாடகை ரூ 1500/௫00 மண்டபம்
கெடாய் 40 பேருக்கு 2500
மளிகை 1000
வாகன செலவு 1500
மாஸ்டர் 600

மொத்தம் 7000

சரக்கு தனி‍‍‍‍‍ **********

பத்துப்பேரு சேர்ந்தா ஒரு நபருக்கு எவ்வளவு ஆகுமுன்னு கணக்குபோட்டுக்கோங்க.

ஊட்டியெல்லாம் போறத விட இந்த அருகாமையில் உள்ள பிக்னிக் ஸ்பாட்டுக்குபோங்க , நல்லா தண்ணியில என்ஜாய் பண்ணீட்டு வாங்க.

நமக்கு மனசும் வயிறும் நெறஞ்சு போச்சு .

********