வெள்ளி, நவம்பர் 27, 2009

மனதை ஆய்வு செய்தல்

மனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அமைதியானவர்கள் திடீரென ஆர்ப்பாட்டம் ஆகலாம். ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் திடீரென அமைதியாகலாம். எனவே சமூகத்தில் நாம் எதையும் எதிர்பார்த்தே இருக்கவேண்டும் என்பதே நமது நிலைமை. எது நடந்தாலும் நன்மைக்கே என்ற கீதாசாரத்தை நாமும் பின்பற்றுவோம்.


அதுபற்றி தமிழ்மணக் கட்டுரை ஒன்று.

மனதை ஆய்வு செய்தல் -நல்ல எண்ணங்களை மனதில் விதைப்போம்
Krishnakumar

மனதை ஆய்வு செய்தல்

மனதை பற்றி பலதரப்பட்ட ஆராய்சிகள் நடந்துள்ளன .ஒரு மனிதன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக வளர்வதும் அவனுடைய வளர்க்கப்படும் சூழ்நிலையே என்பது மனவியல் நிபுணர்கள் கருத்து.ஒரு மனிதனுக்குள் வன்முறை என்பது எப்போதும் தூங்கி கொண்டு இருக்கும்.அது எதாவது ஒரு ரூபத்தில் வார்த்தைகளாக அல்லது தாக்குதலாக வெளிவருகிறது என்பதும் அவர்கள் ஆராய்ச்சி முடிவு .ஆனால் அப்படிப்பட்ட மனதையும் மிகவும் அழகான நறுமணம் வீசும் தோட்டமாக ஆன்மிகத்தின் மூலவும் யோக போன்ற பயிற்சிகளின் மூலவும் மாற்ற முடியும் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து .

மனதை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஏசலன் என்ற நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி வன்முறையைய் மிகவும் விரும்பும் மனம் கொண்டவரின் கண்களை கட்டி விட்டு, எதிரில் தலையணையைய் வைத்து இதை எதிரி என்று நினைத்து குத்தச் செய்தது. முதலில் குத்த நினைத்த மனிதர் பிறகு சற்று யோசித்து சிரித்தார்… தலையணையைய் எப்படி குத்துவது? என்று. இந்த தலையணைக்கும், ரத்தத்தில் உருவான மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியவுடன் அந்த மனிதன் தலையணையைத் தாக்க முற்பட்டான். அதைக் கண்டு அவரைச் சுற்றி நிற்பவர்களே ஆச்சிரியப்படும் வண்ணம் அவன் அடிக்கும் வேகம், அடிக்கும் விதம், தலையணையைக் கிழித்தல் போன்ற செயல்கள் வியப்பை உண்டு பண்ணின. பரிசோதனையின் பின் அவ்வாறு அடித்தவரின் மனம் மிக இலேசாகிவிடுவதை உணர்ந்தார்கள். அவர்களது மனம் இதற்கு முன் இவ்வளவு இலேசாக ஒரு போதும் இருந்ததில்லை.

வன்முறை தோன்றும் போது அதை யாரை நோக்கியாவது வெளிவிடச் செய்யலாம். அப்போது அது முழுதும் தீர்ந்துபோகும். உதாரணமாக, வன்முறையைய் காற்றிடம் காற்றலாம். ஏனெனில் அது எதிர்க்காது. அதுவே மனிதரை நோக்கி வெளிபடுத்தினால் பதிலடி பெற நேரிடும். என்னால் குத்தப்படுபவனே என்னை நோக்கி குத்துவான். அவன் இன்றோ, நாளையோ அல்லது எதிர்காலத்திலோ தாக்கலாம். அவன் காத்திருக்கலாம். கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக திருப்பித்தாக்கலாம்.ஒருவரை அடிக்கும் போது, பின்னால் அதற்காக வருத்துதல் மட்டுமின்று இன்னொரு தாக்குதலுக்கு பதிலடி தரவும் தயாராகிறோம். இவ்வாறு வன்முறை ஒரு விஷ மட்டத்தை உருவாக்குகிறது.

“நமது பகைமையைய் காற்றிடம் காட்டலாம். தலையணையிடம் காட்டலாம்.
அவை நம்மை எதிர்க்காது. நமக்கு மற்றொருவரின் பகைமையைய் உருவாக்காது”.

நமது மனதை திடபடுதுவோம் .நல்ல எண்ணங்களை விதைப்போம் ....விதைகள் நறுமணம் வீசும் பூக்களாக மலரட்டும் ...வாழ்த்துக்கள்

***

புதன், நவம்பர் 11, 2009

இலங்கைத் தமிழர் நிலை ‍-ஜோசியம்

நான் இது நாள் வரை உலகம் 2010 ல் இப்படி இருக்கும், குரு பெயர்ச்சி ஒரு நாட்டுக்கு நல்லதை நடத்தும். சுனாமி வரும். சனிப்பெயர்ச்சி ஆள்பவர்க்கு ஆகாது என்று சொல்லும் ஜோதிடர்களீடம் கேட்ட ஒரு கேள்வி " இலங்கைத்தமிழர்களூக்கு விடு கிடைக்குமா என்று , அதாவது கிடைக்கும் என்றால் நாம் மனதால் சற்று கவலைப்படாமல் இருக்கலாம் என்று நினைத்துக் கேட்டால் அவர்கள் அதில் முடிந்தவரை கழன்று கொண்டார்கள்.

ஆனால் ஒரே ஒருவர் அந் நாடு சுதந்திரம் அடைந்த தேதி , நேரம் கேட்டுள்ளார்.
முடிந்தால் தாருங்கள் , இவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

தெரிஞ்சவங்க நமக்கு அனுப்புங்க. நாங்க அவருக்கு அனுப்பறோம். அவரு என்ன சொல்லறாரு பாப்போம்.

(https://www.blogger.com/comment.g?blogID=367219321741694695&postID=266450498675938093)







அவருடன் நடந்த தொடர்பு பற்றி கீழே :
Blogger வாய்ப்பாடி குமார் said...

நல்லாத்தான் எழுதறீங்க. கொஞ்சம் படிக்க செரமாயிருந்தது ஆரம்பத்தில.இப்பப் பரவாயில்லை.

நமக்கு ஒரு சந்தேகம். இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா ?

மேற்படி கேள்விகளூக்கு நெறயா ஜோசியருங்க கழண்டுட்டாங்க . நீங்க எப்படி ?

November 10, 2009 3:36 AM

Delete
Blogger சித்தூர்.எஸ்.முருகேசன் said...

வாய்ப்பாடி குமார் அவர்களே,
இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா என்ற கேள்விக்கு சோதிடத்தில் பதிலை தேடுவது கோழைத்தனம். ஏற்கெனவே நான் சொன்னேன் எல்லாரும் ராஜபக்ஸே படத்தை ஏ4 சைஸ்ல பிரிண்ட் எடுத்துவச்சுக்கங்க அப்புறமா சொல்றேனு.. நிறைய பேர் கூட தேவையில்லை. ஓரளவு கான்சன்ட்ரேட் பண்ணக்கூடிய 1000 பேர் இருந்தால் போதும்.

நிற்க உங்கள் கேள்விக்கு பதில் தர இலங்கை தனி நாடாக அறிவிக்கப்பட்ட தேதி,மாதம்,வருடம் , நேரம் தேவை. கொடுத்தால் நான் முயற்சி செய்கிறேன்பாராட்டுக்கு நன்றி. அதென்ன ஆரம்பத்துல செரமமா இருந்ததுங்கறிங்க.. ஒரு வேளை சமீபத்துல பேச்சுதமிழ் அதிகமானதாலயோ ?

November 10, 2009 6:32 AM

Blogger வாய்ப்பாடி குமார் said...

ஆம் அப்படித்தான். பேச்சுத்தமிழ் வரவே படிக்கவும் சற்று எளிதாய் உள்ளது.

மற்றபடி இலங்கை தனி நாடாக அறிவிக்கப்பட்ட தேதி,மாதம்,வருடம் , நேரம் நமக்கு தெரியவில்லை. முயற்சி செய்கிறேன் முடிந்தால் தருகிறேன்.

November 10, 2009 8:35 PM

திங்கள், நவம்பர் 09, 2009











ரெயில்வே தொடர்பாக நீங்கள் விவாதிக்க தொடர்புகொள்ள வேண்டிய
தளம்.

http://indianrailways.informe.com/forum/


...

சனி, நவம்பர் 07, 2009

நாலு ஹெட்லைட்டும் , ஏர் ஹாரனும்

இன்னிக்கு வழக்கம் போல திருப்பூர்க்கு கவர்ன்மென்ட் பஸ்ஸுல வந்துட்டு
இருந்தம். பஸ் ஸ்டாண்ட்க்குள்ள போயி ஈரோடு ரேக்குக்கு பஸ் போகும் போது வழக்கமா எப்பவும் டிராபிக் இருக்கும்.

எப்பவுமே திருப்பூர்க்குள்ள நுழையும்போதே டிராபிக்கில சலிச்சுப்போயித்தான்
டிரைவருங்க பஸ் ஸ்டாண்டுக்குள்ள வருவாங்க. இன்னைக்கும் அதேதான் நடந்தது.

இதுல காலைல ஒன்பது மணிங்கறதால சன நெரிசல் வேற. எல்லாருக்கும்
வேலைக்கு போற அவசரம். நம்ம டிரைவருக்கு ரேக்குல போட்டுட்டு உச்சா
போற அவசரம். மழை வேற.

போட்டாரு ஒரு ஹாரன, அட சும்மா போயிட்டுருந்த பெண் போலிஸ் , 2 ஆண் போலிஸ் , அப்புறம் ஒரு 40 வயசு மதிக்கதக்க ஒருத்தர் திரும்பி பார்த்தாங்க. வயசானவர் டிரைவர பாத்து "தம்பி ஹாரன ஒருக்கா அடி"
அப்படின்னாரு. நம்மாளும் புரியாம அடிச்சாரு.

அதுக்குள்ள ஒரு நாலு பேரு பஸ்ஸுக்கு முன்னாடி வந்து அட ஹெட்லைட்
நாலு இருக்கு அப்படின்னு கழட்ட ஆரம்பிச்சாங்க. ஒரு ஆளு உள்ள புகுந்து ஹாரன கழட்ட "அப்புறந்தான் தெரிஞ்சது "ஆர்டிஓ" ரெய்டு அப்படின்னு".


கவர்ன்மென்டு பஸ்ஸுதான் எரியுதா, இல்லையானுகூட பாக்காம இதென்ன
வெளையாட்டு அப்படின்னு கண்டக்டர் ஓடியோடி ஆர்டிஒ கிட்ட சார் ரெண்டு
பல்பு எரியாதுங்க, ஒண்ணாச்சும் குடுங்க அப்படின்னு கெஞ்ச‌

அந்த நேரம் பாத்து இன்னொரு பஸ்காரரு "பாம் பாம்" ஹாரன அடிக்க‌
எல்லோரும் அந்த வண்டிய நோக்கி ஓட அங்கிருந்த ஹாரன பிடுங்கி
கீழ போட்டு கால்ல போட்டு ஒருத்தரு மிதிக்க ஹாரனு ரெண்டாப் போச்சு.

அப்ப பாத்து ரெண்டு பஸ்ஸு இன்னொரு சந்துல புகுந்து நாலு ஹெட்லைட்டோட போக நம்ம கண்டக்டர்க்கு வயிரெல்லாம் ஒரெ எரிச்சல்.
அவனுத பிடுங்கல , நம்மளுது மட்டும் போச்சேனு.

ஏன்னா ஹாரனும் போச்சு, லைட்டும் போச்சு ,ரெண்டுமே வாங்குனதுல்ல
அவருக்கும் பங்குத்தொகை உண்டு,

"ஆமாமா ,கவர்ன்மெண்ட் பஸ்ஸுல ஏதாவது ஸ்பெசலா வேணுமின்னா டிரைவரும், கண்டக்டரும் கைக்காசு போட்டுக்க வேண்டியதுதான்."

இதையெல்லாம் விட இன்னொரு கூத்து,

நம்ம பிரண்டுக்கு நடந்தது.

ஒரு நாள் கம்பெனி மானேஜர் வேலையா சான்ட்ரோவில் கோவை போகும் போது அண்ணா சிலை சிக்னல்ல நம்மாளு நிக்க அப்பப்பாத்து ரெண்டு போலிஸ் ( ஒரு ஆணும் ஒரு பெண்ணும் )
"ஹலோ ஹலோ "அப்படின்னு சன்னல தட்ட, நாம்மாளு என்னமோ ஏதோனு
சன்னல நீக்க "என்ன முன்னாடி நாலு ஹெட்லைட் போட்டு வெச்சிருக்கீங்க "
அப்படின்னு சொல்ல , நம்மாளு நாலு ஹெட்லைட்டா இது என்ன வம்பாயிருக்கு , நம்ம மேனேஜரு எப்ப நாலு லைட்டு மாட்டுனாரு முழிக்க‌

அதுக்குள்ள அவிய ரெண்டு அய்யா கூப்புடுறாரு ,அங்க நிக்கிறாரு அப்ப்டினு
சொல்ல ,செரியாப்போச்சு அப்படின்ன்னு வண்டிய அப்படியே இன்ஸ்பெக்டரு ஓரமா கொண்டுவந்து நிறுத்தி இவரும் இறங்கிப்போக

அங்க இதுதான் நடந்தது ,

ஏய்யா அறிவிருக்கா இல்லையா உனக்கு , பார்க்கிங் லைட்டப்போயி ஹெட்லைட் அப்படின்னு கொண்டு வர்றியே அப்படின்னு இன்ஸ்பெக்டரு கான்ஸ்டபிள திட்டி நம்மாள பாத்து
" நீங்க போங்க சார் ,இந்த ஆளுக்கு எது லைட்டு, எது இண்டிகேட்டருனே தெரியாம உங்கள கூப்பிட்டு போட்டாப்புல, சாரி சார் " அப்படின்னு சொல்ல
நம்மாளு அடக்கருமமே அப்படினு விதிய நொந்து வந்துட்டாப்புல.



(இப்படித்தான் இன்னைக்கு ரெய்டு பஸ் ஸ்டாண்டுல நடந்தது. ஒரு பஸ்ஸூல நாலு லைட்டுல மூணு லைட்ட பிடுங்கிட்டாங்க. ஒரு பஸ்ஸ டிரைவர் கழட்ட வேண்டாமுன்னு சொல்ல ஆர்டிஒவே அந்த பஸ்ஸ எடுத்து சீஸ் பண்ணிட்டு அவரு ஆபிஸுக்கு போயிட்டாரு.)

....