திங்கள், மார்ச் 29, 2010

மூன்று மணி நேரம் கரண்ட் கட்

இலவசம், இலவசம், தமிழ் நாட்டின் பெரும்பகுதி இலவசங்களால் நிரம்பி வழிகிறது.

விவசாயிகளுக்கு கரண்ட் இலவசம், நெசவாளர்களுக்கு 600 யூனிட் கரண்ட் இலவசம், குடிசைகளூக்கும், ஏழைகளுக்கும் கரண்ட் இலவசம்.

அப்புறம் கரண்ட் எங்கே பத்தும்? எப்படின்னு கேக்கறீங்களா ? இலவசம் இல்லைன்னா விலைவாசியெல்லாம் ஏறிப்போயிரும் அப்படினு சொல்லறீங்களா ?

அது எல்லாம் ஒண்ணும் இல்லைங்க , எல்லாமே முடியாதவனோட பேச்சு.

நல்லா கேட்டுக்கோங்க!

இலவச மின்சாரம் கிணத்துக்கு கொடுத்ததுக்கு அப்புறம் தான் மக்கள் நிறைய போர் போட்டு தண்ணீர் எடுக்க ஆரம்பிச்சாங்க. கம்பரஸர போட்டா கொஞ்ச நாளுக்கு தண்ணி மள மளனு வந்தது. அப்புறம் பக்கத்து தோட்டக்காரனோட கெணறு வத்த ஆரம்பிச்சுது. பாத்தான் அவன்,அவனும் ஒரு போரப்போட்டான்.

உடனே முதல்ல போட்டவன் போருல தண்ணி குறைய ஆரம்பிச்சுது. மறுபடியும் வேற போர் உன்னொருத்தன் போட ரெண்டு பேருக்கும் தண்ணி குறைய அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்கா தண்ணி சிணுங்குன்னு வந்து ஊத்தும். ஆனா கம்பரஸன மட்டும் நிறுத்தவே மாட்டானுங்க நம்ம ஆளுங்க.

இது எவனோ ஒருத்தன் கெணத்துல, தோட்டத்துல அல்ல , எங்க அப்பிச்சி ஊட்டுத் தோட்டத்துலேயே இதுதான் நடக்குது. இதே கரண்ட் பில்லு யூனிட்டுக்கு 50 பைசான்னு குறைஞ்ச கட்டணமா இருக்கட்டும், எவனாவது வெறும் போர ஓட்டுவானா ?

மேல சொன்னது வானம் பாத்த பூமியில. இதே வாய்க்கால் பாத்த பூமியில எப்படித்தெரியுமா ?

அதையும் சொல்றன் கேளுங்க.

வாய்க்கால்ல தண்ணி பவானிசாகர்ல்ல இருந்து தொறந்து உட்டுட்டாங்க, தண்ணியும் வயலுக்கு பக்கத்துல வருது , வந்தா என்ன ஆகும் , கிணறு பதமாகும், இதே வாய்க்கால் மேலேயும் , கிணறு கீழேயும் இருந்தா என்ன ஆகும் , கெணறு நெம்ப தண்ணி சீக்கிரம் ஊறும்,அப்ப என்ன பண்ணோனும் ?

உடனே பம்ப் செட்ட மேல தூக்கோணும், இல்லைன்னா மோட்டரு தண்ணியில மூழ்கிரும், நம்மாளு மோட்டர தூக்க மொடை, உடனே என்ன பண்றாரு ? பம்ப ஆன் பண்ணி தண்ணீ வாய்க்கால்ல உடறாரு. அது தண்ணி வெட்டியா போகுது , போனாப் பரவாயில்லை , ஆனா வெடியவெடிய மோட்டரு ஓடுது , கரண்ட் தண்ணியா மூயுது. கரண்ட் யாருது , இவங்க அப்பிச்சி ஊட்டுதா ? இதே யூனிட்டுக்கு 50 பைசான்னா ஓட்டுவானா ?.... சில்லிப்பசங்க !

இதுல வேற கரண்ட் பில்ல வெவசாயத்துக்கு போட்டா காய்கறி வெலையெல்லாம் ஏறீப்போயிரும்முன்னு கதை வேற உடறாங்க. ஒரு மண்ணும் ஏறாது.

நெசவாளர்களூக்கு அதே கதைதான், 600 யூனிட் விசைத்தறீகளுக்கு இலவசம் அப்படின்னு , ரெண்டு தறீ போட்டுட்டு இருக்கறவனுக்கு ஓகே. ஒரே தறி போட்டுட்டு இருக்கறவன், மிச்சமான கரண்ட எப்படி செலவு செய்யலாம் , அப்படின்னு யோசிக்கறான் !.

சோறாக்குறதுக்கு கேஸ் எதுக்கு செலவு செஞ்சுட்டு , பேசமா கரண்ட் அடுப்ப போட்டா செலவு மிச்சமுன்னு எகத்தாளமா யோசிக்கறாங்க.

இதுல நேத்து இருந்து மூணு மணீ நேர கரண்ட் கட்டுன்னு வேற அறிவிச்சுட்டாங்க ! அரசாங்கம் கொடுத்த இலவச டீவியை ஞாயித்துக்கிழமையிலாவது பாக்கலாமுன்னு, மத்தியானம் போட்டா போட்டப்ப போன கரண்ட் படம் முடிஞ்சுதான் வந்தது.

நீங்களே சொல்லுங்க ! இலவசம் வேணுமா , வேண்டாமா?

இன்னும் நெறயா சொல்லலாம், ஒட்டுக்கா சொன்னா எதுவுமே வெளங்காது!

...

சனி, மார்ச் 20, 2010

ஹெச்டி ஒலிபரப்பும், சன் டைரக்ட்டின் ஏமாற்றுதலும்.

முன்பு ரேடியோ மட்டுமே இருந்த காலத்தில் ஸ்டீரியோ என்பது தியேட்டர்களில் பாடல்களின் இடையில் தியேட்டர் சுவற்றில் உள்ள ஸ்பீக்கர்கள் மூலமாக வரும் ஒலி என்பது மட்டுமே நமக்கு தெரியும். அதுவும் 85 வரை பிறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு அப்போது வந்த சோனி, நேஷனல் பானசோனிக் டேப் ரிகார்டர்கள் மூலம் தெரிந்திருப்பார்கள்.

அந்த கால கட்டத்தில் நான் இலங்கை ரேடியோவின் தீவிர ரசிகன். சார்ட் வேவில் எடுக்கும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டு ஸ்தாபனத்தின் வர்த்தக சேவையின் ஞாயிறு தின நிகழ்ச்சிகளில் மூழ்கிக் கிடப்பதுண்டு.

பக்கத்தில் உள்ள தறிக்குடோனில் எப்போதும் இலங்கை வர்த்தக ஒலிபரப்பு " விரும்பிக்கேட்டது அப்பா, அம்மா , அப்பம்மா, மாமா , பாட்டி என வரிசையாக உறவு முறைகளைக் கூறுவது காதில் விழுந்து கொண்டே இருக்கும்.

அந்த காலகட்டத்தில் மத்திய அலைவரிசையில் புதிதாக கொழும்பு சர்வதேச வானொலி என மாலை நேரத்தில் மட்டும் ஆரம்பிக்கப்பட்டது. அது ஆரம்பித்து சில நாட்களிலேயே தமிழ் நாடு முழுக்க விளம்பரங்களைப் பெற ஆரம்பித்து புகழ் பெற ஆரம்பித்தது.

மேலும் அந்த நேரத்தில் நமது இந்திய வானொலிகள் புதிய திரைப்பட பாடல்களை ஒலிபரப்பாததும் கூட ஒரு காரணமே.

மேலும் சில நாட்களிலேயே காலை ஒலிபரப்பையும் , ஞாயிறு முழு நேர ஒலிபரப்பையும் ஆரம்பித்தது , மட்டுமல்லாமல் தினமலர், லலிதா ஜுவல்லரியின் "பாட்டுக்குப்பாட்டு" என ஒரே நேரத்தில் சன் டிவியிலும், தனது வானொலியிலும் ஒலிபரப்பியது.

ஆனால் இந்த வானொலியின் ஒலிபரப்பின் தெளிவு விசயத்தில்
இந்திய வானொலிகள் இதன் கிட்டே கூட நெருங்க முடியாது.

அப்போதுதான் திடிரென இலங்கை வானொலியின் சார்ட்வேவ் அலைவரிசையில் தொடர்ச்சியாக எப். எம் க்கு மாறுங்கள் , ஸ்டீரியோ ஒலிபரப்பை பெற்று ரசித்து மகிழுங்கள் என்று அறிவிக்கப்பட்டது.

வீடு வீட்டுக்கு டிவி பரவ ஆரம்பித்த கால கட்டம், ஊரில் உள்ள ஒரு சாலிடர் டிவி அல்லது டயனோரா டிவி ஓட ஆரம்பித்தால் அந்த
லைனில் உள்ள அனைத்து ரேடியோக்கள் மாவு அரைப்பது போன்ற ஒரு சத்தத்தை அளீக்க ஆரம்பித்தன. இதனால் மத்திய அலைவரிசை,சார்ட் வேவ் அலைவரிசை நிகழ்ச்சிகளை கேட்க எரிச்சல் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் சென்னையில் மட்டுமே இரண்டு எப்.எம் ரேடியோ நிலையங்கள் சாயந்திர வேளையில் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது. நாங்கள் இதை இந்து அல்லது ஏதேனும் ஒரு ஆங்கில நாளீதழின் வானொலி நிகழ்ச்சி அட்டவணைகளைப் பார்த்து தெரிந்து கொள்வோம்.

சரி எப். எம் வானொலி ஒன்றை நாம் வாங்கினால் இலங்கை நிகழ்ச்சிகளை கேட்கலாமோ என்னவோ என்று 96 ல் ஒரு பிலிப்ஸ் டூ இன் ஒன் ரூ 4000/ க்கு வாங்கினோம். வீட்டுக்கு வந்த பிறகு சரியான ரேடியோவில் உள்ள எப்.எம் பட்டனை ஆன் செய்தால் பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. ஒரே சொய்ங் சத்தமே கேட்டது.

அப்புறம்தான் அந்த நேரத்தில் டெல்லி டூர் போகும்போது ஒரு எப்.எம், டிவி, 10 பேண்ட் சார்ட்வேவ் என உள்ள ஒரு சிறிய ரேடியோ,எப்.எம் மைக் என ரூ 350/ க்கு வாங்கினோம்.

ஆனா டெல்லியில் சூப்பரா எப்.எம் மில் பாட்டுப்போட்டாஙக.

அப்புறம் அந்த ரேடியோவை வைத்து தூர்தர்ஷன் படங்களை வானொலியில் கேட்டுட்டு இருந்தோம். எப்.எம் மைக்க வைத்து ஊர்ல நடக்குற கிரிக்கெட் நிகழ்ச்சியில் கமெண்ட்ரிய ஒலிபரப்பினோம். மைக்கோட சின்ன ஒயரில கொஞ்சம் நிளமாக ஒயர் இணைத்து கொஞ்சம் உயரமா டிவி ஆண்டெனா அளவுக்கு வைத்து ஒலிபரப்பினா சுத்துவட்டம் 4 கிமீக்கு தெளீவாக் கேட்கும்.

ஆனா என்ன குறை , அப்ப இந்த மாதிரி எப்.எம் எல்லார் வீட்டிலும் இல்லை. அதனால் தெரிஞ்சவங்க அதாவது சோனி ரேடியோ வெச்சிருக்கிறவங்கிட்ட முந்தியே சொல்லி கேக்க சொல்வோம்.

அப்புறம் இதே முறையில ஆம்ப் வெச்சு சன்டிவியக் கூட 5 கிமீக்கு டிவியில எடுக்கறாப்புல ஒளிபரப்பியிருக்கோம்.

அதுக்கப்புறம் கொடைக்கானல் ஆரம்பிச்சு , அதே நேரத்துல சூரியன் எப்.எம் ஆரம்பிச்சதுக்கப்புறந்தான் பரணில் தூங்கீட்டு இருந்த ரேடியோப்பொட்டியெல்லாம் தூசு தட்டப்பட்டது.

அதே வேளையில் எப். எம் போர்டு ரூ 150/ க்கு எல்லா ரேடியோவிலும் மாட்ட மறுபடியும் ரேடியோ கேக்கறது அதிகமாயிருச்சு.

ஆனா அதிலயும் ஒரு வித்தியாசம் என்னன்னா ஸ்டீரியோ போர்டு மாட்டி , ஆம்ப் வெச்சா ரெண்டு சைடு ஸ்பீக்கர்லயும் மாறி , மாறி இசை வரும் போது தான் " ஆகா ரேடியோ கேட்பது இன்னைக்குத்தான் முழுமையானது "அப்படின்னு ஒரு நெனப்பு நமக்கு வந்தது.

அந்த நேரத்தில நமக்கு வில்லேஜ் பக்கத்தில ஏதோ ஒரு வீட்டில் இருந்து சன் டிவிய பெரிய கொடை வெச்சு பாப்பாங்க.

நான் ஹாஸ்டல் சேந்தப்ப புதுசா "சி" பேண்ட் - டிஸ் மாட்டி வீடியோ ரெப் அப்படின்னு மூன்று வருட மாணவர்களீல் ஒரு இயர்க்கு ஒரு ஆளா , அதில முதலாம் ஆண்டுக்கு ஒரு ரெப் அப்படின்னு நானும் செலக்ட் ஆனதால நமக்கு ஜென்ம பலன் கிட்டிய ஒரு சந்தோசம்.

பின்ன அந்த காலத்துல எல்லா வீட்டிலயும் டிவி கிடையாது. அதுதான் காரணம்.

வார்டன் என்னை ரெப்பாக எடுத்ததிலயும் ஒரு குற்றமுமில்லை. நடுச்சாமத்துல எழுப்பி " ஸ்டார் ஸ்போர்ட்ஸ்" அல்லது " கோல்டன் ஈகிள் " டைரக்சனுக்கு டிஸ் மாத்தச் சொன்னாலும் கரைக்டா எந்த அளவுமில்லாமல் மாற்றும் ஒரே ஆள் நாந்தான்ங்கிறது நமக்கு பெருமை.

அப்புறம் காலேஜ் முடிச்சப்புறம் கொஞ்ச நாள் அல்ல பல வருடம் கழித்துதான் டீடீ டைரக்ட் என்று கேயு பேண்ட் மூலமாக சன்டீவிய ஒளிபரப்பினாங்க. அது கொஞ்சம் பேமஸ் ஆக, நம்ம சன்காரங்ககொஞ்சம் வித்தியாசமான ஆளுங்க தானே.

உடனே சன்டைரக்ட் அப்படின்னு ஆரம்பிச்சு கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. டிஸ் டிவி அப்ப நம்பர் ஒன்னா இருந்தது. ஆனா கொஞ்சம் மாதத்திலேயே சன்டைரக்ட் நம்பர் ஒன் ஆயிருச்சு.

இப்ப அதுக்கும் போட்டியா டாடா ஸ்கை, ரிலையன்ஸ் , வீடியோகான், ஏர்டெல் அப்படின்னு பல பேர் போட்டியா வரவும் உடனே சன் டைரக்ட ஹெச்டீ அப்படின்னு ஆரம்பிச்சு அதில ஸ்டிரியோ, 5.1 அப்படின்னு நம்ம காதுல பூச்சுத்துறாங்க.

அது வேற ஒண்ணுமில்ல , இப்ப வந்த சன் டீடீஹெச் பாக்ஸ்ஸில பின்னாடி கோ ஆக்ஸில் ,ஆப்டிகல் அப்படின்னு ஒரு சிலதுல இருக்கும். அதுல அவுட்புட் எடுத்து அதை ஹோம் தியெட்டரில் இணைத்து கேட்டுப்பாருங்க ,அவங்க சொல்ற குவாலிட்டி நமக்கு நம்ம பாக்ஸில கிடைக்கும்.ஆனா அவங்க இதுக்காக குடுக்குற பாக்ஸ் விலை ரூ 10000/. ஏமாறாதீங்க. நண்பர்களே.

ஆனா சன் டைரக்ட வாங்க விரும்புறங்க அதுக்கு பதிலா வீடியோகான் வாங்கலாம் , ஏன்னா இதுல மாசம் ரூ 150/க்கு டிஸ்கவரி, அனிமல் பிளானட், நெஷனல் ஜியோகிராபிக், நியோ உட்பட அனைத்து ஸ்போர்ட்ஸ் , எம்ஜிஎம், சன் குரூப் ஆதித்தியா தவிர,கலைஞர் ,இசை அருவி, சிரிப்பொலி, ஜெயா மேக்ஸ், செட்மேக்ஸ் என பல சேனல்கள். ஆனா சன் டைரக்ட்டில செட் மேக்ஸ்க்கு தனி கட்டணம்,ஸ்போர்ட்ஸ்க்கு தனி கட்டணம்.

ஒரெ ஒரு குறை வீடியோகானில ஸ்டிரியோ சவுண்ட் குவாலிட்டி தமிழ் சேனல்களில் கொஞ்சம் கம்மி .


விளம்பரத்த பாக்காதீங்க , உள்ள பாருங்க .

..

மூன்று புத்தகங்கள்

The lost Symbol - author Dan brown,

The teaser of two States - Chetan bhaget

Bloodline - Sidney
Shelton


இந்த மூன்று புத்தகங்கள் எங்கயாவது பழைய புத்தக கடையில் கிடைக்கும் அப்படின்னா நமக்கு கொஞ்சம் சொல்லுங்க . ஒரு நண்பர் உடைய காதல் நிறைவேற கொஞ்சம் வழி செய்யுங்களேன் .


...

திங்கள், மார்ச் 15, 2010

கருப்பராயன் ,முனி படங்கள்

வாய்ப்பாடியும் அதைச் சார்ந்த சில இடங்களும்.



மான் மேயற அரசன்னாமலைக்காடு.


நம்ம ஊர்க்கோயில்

இப்பத்தான் கொஞ்ச வருசமா பழைய கோயிலை புதுப்பித்துக் கட்டிட்டு வராங்க.






இந்த குதிரை ரெண்டும் நாங்க கட்டுனது.




வியாழன், மார்ச் 11, 2010

வன உயிரினங்களுக்கு உதவுங்கள்

வன உயிரினங்களுக்கு உதவுங்கள் என்ற நமது ஒரு இடுகைக்கு உடனடியாக ஒரு பதிலுரையும் ,உதவும் எண்ணத்துடன் கூடிய ஒரு விசாரிப்பும் நமக்கு நண்பர் பிரதீப் அவர்களிடம் இருந்து கிடைத்தது.

வாமுகோமு அவர்களும் நம்மை அழைத்து " மான்களின் எண்ணிக்கையையும் நண்பர் பிரதீப் அவர்கள்" விசாரித்தாக கூறினார்.

மேலும் இது பற்றிய தகவல்களை உடனடியாக நாம் விசாரித்து இன்னும் தெளிவாக நண்பர் பிரதீப் அவர்களிடமும் , நமது வலையிலும் பிரசுரிக்கவுள்ளோம்.

இதுபோன்ற உதவும் எண்ணம் கொண்ட நண்பர்கள் உள்ள வரையில் மயில்களும், மான்களும் வனங்களில் கவலைகளற்று வாழலாம் என்பது நமக்கு தெளிவாகிறது.

வனம் வளர்ப்போம் , மழை பெறுவோம் , வார்த்தைகளில் அல்ல வாழ்க்கையில்.

...

செவ்வாய், மார்ச் 09, 2010

வன உயிரினங்களுக்கு உதவி செய்யுங்கள்.








வணக்கம் அன்பு வலைப்பதிவர்களே ! எமது ஊரின் மிக அருகாமையில் இரண்டு மலைகள் உள்ளது. ஒன்றின் பெயர் அரசன்னாமலை, மற்றொன்று கொமரமலை. இந்த இரண்டு மலைகளிலும் இருவது வருடங்களுக்கு முன்பு நரி மட்டுமே இருந்து வந்தது, ஆனால் தற்போது மான்களும் , ம்யில்களும் அதிக அள்வில் பெருகி விட்டது. மான்கள் வந்தது எப்படி என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை.


ஏனென்றால் மலை என்பதை விட அதை ஒரு கரடு என்றே சொல்லலாம். மே மாதத்தில் வறண்டு போய் தீப்பிடித்து விடும் அளவுக்கு காய்ந்து விடும் ஒரு கரடு.

வனத்துறையும் அவ்வப்போது செடிகளை வைத்து பசுமையாக்கலாம் என்று முயற்சி செய்கிறார்கள் . ஆனால் அது என்ன நேரமோ தெரியவில்லை ,செடி வைத்தால் மழை அந்த வருடஙகளில் பொய்த்து விடுகிறது. இந்த இரு மலைகளுக்கும் இடையில் தான் ஈரோடு -கோவை- திருப்பூர் இரயில்வே பாதை செல்கிறது.




அப்ப மான்கள் தண்ணீருக்கு என்ன செய்கின்றன? . கரட்டை ஒட்டி உள்ள தோட்டங்களில் உள்ள தண்ணீர் தொட்டி , ஆடு, மாடுகளுக்கு என உள்ள தொட்டிகளில் தாகத்தைத் தணிக்கக்கூடும் என்று தெரிகிறது. மயில்களுக்கும் அதே கதைதான்.


இதைப்படிக்கும் நண்பர்கள் ஏதேனும் தொண்டு அமைப்பை தெரிந்திருந்தால்
அவர்களுக்கு இவ்விசயத்தை கூறுங்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதால் ஏதேனும் சில நல்ல உள்ளங்கள் ஒன்று சேர்ந்து இந்த மலையை ஒட்டி தண்ணீர்த்தொட்டி வைக்க ஏற்பாடு செய்யுங்களேன்.‌


மரம் வளர்ப்போம் என்பதை விட காய்ந்து கிடக்கும் உயிரினங்களுக்கு தண்ணீர் அளிக்க முன் வாருங்களேன் !


....

திங்கள், மார்ச் 08, 2010

கல்யாணபந்தியில் கல்லூரி மாணவர்கள்

சென்ற வாரம் உறவினர் வீட்டுத்திருமணத்திற்க்காக கோவையில் இரு நாள்தங்கவேண்டியிருந்தது. அங்கு நடைபெற்ற விருந்து வைபவத்தில் மூன்றுவேளை பந்தியையும் பரிமாறியவர்களைக் கண்டால் சற்றே சந்தேகம் எழுந்தது.
ஏனெனில் ஒரே வயது, முகத்தில் ஒரு தெளிவு , உடை நயம் அனைத்தையும்பார்த்தால் கல்லூரி மாணவர்கள் போன்று தோன்றியது.

அவர்களில் ஒருவரை அழைத்து கேட்ட போதுதான் ஆம் கல்லூரி மாணவர்கள் என்று கூறினார்கள். எந்தக்கல்லூரி என்ற போது அவர்கள் கோவைபொள்ளாச்சி ரோட்டில் உள்ள என்ஜினியரிங் கல்லூரி ஒன்றை சொன்னார்கள்.

இதற்கு என்ன தருகிறார்கள் என்ற போது ரூ 500 முதல் 600 வரை ரகங்களைபொறுத்துக்கிடைக்கும் என்றார்கள்.

பரவாயில்லை, படிக்கிற வயதில் சம்பாதிக்கிறார்கள் என்று நினைத்தால் இரவு
11.00 மணி அளவில் அனைவரும் தண்ணியில் மிதந்தார்கள். மறு நாள்விடுமுறையாக இல்லாமல் வேலை நாளாக இருந்தால் கல்லூரிக்கு லீவுபோட்டு விடுகிறார்கள்.

இவர்களின் பெற்றோர்களின் நிலை :

பையன் காலேஜ்ஜில் என் ஜினியரிங் படித்துக்கொண்டு இருப்பான் என்றுநினைத்துக்கொண்டு அவர்கள் தன் வாயைக்கட்டி ,வவுத்தைக்கட்டி பணம்அனுப்பினால் இவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் கல்யாண மண்டபங்களுக்குச் சென்று சர்வர் வேலை பார்ப்பது என்ன நியாயம் ? இது தெரிந்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும் ?

கல்லூரி நிர்வாகம் தூங்குகிறதா? கல்லூரியின் பெயர் கெடாதா ?

அவர்களுக்கு பணம் ஒன்றே குறியா ?


கல்யாண மண்டபத்தாரும் , கல்யாணசமையல்காரரும் , கல்யாணக்காரரும், கல்லூரிக்காரரும் சற்றே யோசியுங்கள்.

கல்லூரி மாணவனைக் கெடுக்காதீர்கள் !


...

செவ்வாய், மார்ச் 02, 2010

பரிசல்காரன், கேபிள்சங்கர் தொகுதிகளை முன்வைத்து ஒரு டான்ஸ்

நாளை புதன் அன்று உங்கள் வாமுகோமு ப்ளாக்கில்

"ஒரு நண்பரிடம் என்னதான் நடக்கிறது ஸ்பாட்டுகளுக்குள் என்ற கேள்வியை வைத்தேன். காலையில எழுந்து இன்ன சமையல் செஞ்சேன். புளியம்பிஞ்சு தொக்கு செய்தேன். சாப்பிட்டேன் , காய்ச்சல் வந்தமாதிரி இருக்குது என்று ஸ்பாட்டில் எழுதிவிட்டார் என்றால் பின்னூட்டங்கள் சரமாரியாய் பறக்குமாம்!
உடம்பை பத்திரமாய் பாத்துக்க‌ங்க ! டேபிளெட்ஸ் எடுத்துக்கஙக ! தொக்கு சாப்பிட்டா காய்ச்சல் .. டாக்டரை சீக்கிரம் பாருங்க! இப்படி ஐம்பது, அறுபது
பின்னூட்டங்கள் பறக்குமாம் !"


மறக்காமல் படிக்கவும்.

...........