வியாழன், செப்டம்பர் 23, 2010

திருப்பூர் 24,25 பந்த்.

திருப்பூர் டீமா எனப்படும் எக்ஸ்போர்ட் அசோஷியேசன்,உற்பத்தியாளர் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கங்களும் சேர்ந்து நடத்தும் இரண்டு நாள் 48 மணீ நேர வேலை நிறுத்தப் போராட்டம் , அதிகரித்து வரும் பஞ்சு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தக் கோரி நடைபெறுகிறது.

ஆனால் இதை தீபாவளி ஆர்டர்களை காரணம் காட்டி டீ எனப்படும் திருப்பூர் எக்ஸ்போர்ட் சங்கம் "தற்போதைய நிலையில் இந்த போராட்டம் திருப்பூருக்கு உகந்ததல்ல " எனவே எங்கள் சங்கத்தின் கம்பெனிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவித்துள்ளது.

வரும் 27 ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை வைத்து பிற்பாடு ஒரு போராட்டம் அல்லது ஏதேனும் மாற்று வழியினை மேற்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது.

முதல் குழுவான டீமாவுக்கு ஆதரவு தெரிவித்து பேப்பரில் வந்திருக்கும் விளம்பரத்தில் திருப்பூரில் இத்தனை சங்கங்களா ? என தோன்றுகிறது.

இரண்டாவது குழுவான "டீ"க்கு 5 சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதிலும் சாயப்பட்டறை சங்கம் " வெள்ளீ, சனிக்கிழமைகளில் " எப்போதும் இயங்குவதில்லை. இருந்தாலும் "டீ"க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சில விஷயங்களில் எத்தனை சங்கங்கள் இருந்தாலும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் ,இல்லையெனில் எந்தவிதமான முன்னேற்றமோ, நல்ல விஷயங்களோ கண்டிப்பாக நடைபெறாது என்பது கடந்த கால அனுபவங்களிலிருந்தே திருப்பூருக்கு நன்றாகத் தெரியும் , இருப்பினும் இந்த முரண்பாடு ஏன் என்பது நமக்கு விளங்கவில்லை.

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக