வெள்ளி, ஜனவரி 01, 2010

மலையாளத்தில் தமிழ்

புத்தாண்டு நிகழ்ச்சிகளை தமிழ் சேனல்களில் இரவு 9.00 மணீக்கு மேல் பார்க்க ஆரம்பித்தால் திரைப்படங்களை போட்டு ஒளிபரப்பிக்கொண்டு இருந்தனர்.

சரி அண்டை மாநில சேனல்கள் என்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்புகின்றன என்று ஒரு பார்வை பார்க்கலாம் என்று கேரள சேனல்கள் பக்கம் சென்றால் ஏசியா நெட்டில் விஜய் ஏசுதாஸ் "சேவற் கொடி பறக்குதே "என்று குட்டிபையனை மேடைக்கு அழைத்து பாடியபடியே ஆடிக்கொண்டிருந்தார்.

அதேபோல் கைரளி டிவிக்கு சென்றால் " நாக்கமுக்கு" போட்டு நாலைந்து பெண்டுகள், இளைஞர்கள் ஆடிக்கொண்டு இருந்தனர்.

ஜெய்ஹிந்த் போனால் சுசித்ரா "கந்தசாமி" பாடிக்கொண்டு இருந்தார்.

அமிர்தா சேனலிலும் இதே கதைதான்.

ஆக இன்று நேற்றல்ல , சனி , ஞாயிறு இரவுகளில் கேரள சேனல்கள் தங்கள் புரோகிராம்களில் பெரும்பகுதி தமிழ் பாட்டுகள் இடம்பெற செய்கின்றன.

இப்படி தமிழ் தங்களது டிவி நிகழ்ச்சிகளில் இடம்பெறுவதை விரும்பும் கேரள மக்கள் இதே போன்று தமிழ் பண்பலை நிகழ்ச்சிகளிலும் அதிகளவில் பங்கு பெறுவதை கோடை பண்பலை, கோவை ரெயின்போ கேட்போர்க்கு தெரிந்து இருக்கும்.

அதே மாதிரி கோவையையும்,திருப்பூரையும் அதிகம் மலையாளிகள் பேக்கரி வைத்தே அபகரித்து விட்டனர்.

அப்புறம் என்ன தமிழ் நாட்டை அரைவாசி ஆக்கிரமிச்சாச்சு , இன்னம் போயி தண்ணி தரமாட்டேன் , முல்லைப்பெரியார் அணைகட்டியே தீருவேன்னு சபதம் போட்டுட்டு.

இந்த புத்தாண்டுலயாவது நாமல்லாம் "ஒண்ணுக்குள்ள ஒண்ணுன்னு" உணர்ந்துகிட்டு மொறைக்காம இருக்கலாமுன்னு டிரை பண்ணுங்க சாரே !

...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக