சனி, ஜனவரி 30, 2010

திருப்பூர் புத்தக கண்காட்சி 2010


படங்களை கிளுக்கினால் தெளிவாக கிடைக்கும்
















சென்னையைப் போன்று உடனடியாக புத்தக கண்காட்சியைப் பற்றி பதிவர்கள் விமர்சிக்கவில்லை என்றாலும் பதிவர்கள் திருப்பூரின் பல்வேறுபட்ட தொழில்களில் மூழ்கி விடுவதும் ஒரு காரணம் எனலாம்.

நானே கூட காலையிலிருந்து வசூல், வசூல் என்று திருப்பூரைச் சுற்றிவிட்டு மாலையின் ஒரு சிறிய இடைவேளையில் சென்ற போது சற்றே கூட்டம் கூட சென்னையை விடக் குறைவாகத்தான் இருந்தது.

டாஸ்மாக்க்குகளில் கூட கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது ,இம்மாதிரியான இடங்களில் கூட்டம் சற்று குறைவாகத்தான் உள்ளது. காரணம் நேரமின்மையே.

புத்தகம் வாங்கினாலும் படிக்க இயலாது. காலை முதல் இரவு வரை தொழில் சார்ந்தே செல்ல வேண்டியுள்ளதும் ஒரு காரணமே.

அதே போன்று குழந்தைகள் ,பெண்களின் சார்பான சமையல் குறிப்பு, தன்னம்பிக்கை புத்தகங்கள், ஆன்மிகம் சார்ந்தவை, ஆனந்தவிகடன் மற்றும்
இங்கிலீஸ் சினிமா டிவிடி கடைகளில் மட்டும் குடும்ப பெண்கள்,கல்லூரி பெண்கள் கூட்டம் காணப்படுகிறது.

அதே போன்று உயிர்மை ஸ்டாலில் ,வாமுகோமுவின் " சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்" நாவல் உள்ளது. அவரின் இன்ன பிற படைப்புகளான "கள்ளி" ,"மண்பூதம்" ," சொல்லக்கூசும் கவிதைகளும்" விற்பனைக்கு உள்ளது.

சில புகைப்படங்களையும் நாம் அளித்துள்ளோம். அது இன்னும் தெளிவாக
இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பதிப்பக விபரங்களை அளிக்கும்.


........

3 கருத்துகள்: