பதிவு யாருடையது என்பது தெரியவில்லை. ஆனால் எனக்கு மெயிலில் நண்பர் சதீஷ் தாய்லாந்து நாட்டில் இருந்து அனுப்பியிருந்தார்.(இப்படிக்கூட காப்பி அடிக்கலாமோ?) அதனை நான் நம் வலையில் பதிவிடுகிறோம்.
|
வியாழன், ஆகஸ்ட் 26, 2010
மரங்களை வெட்டுங்கள்
வியாழன், ஆகஸ்ட் 05, 2010
வெள்ளியங்கிரியும் ஈஷா யோகமும்


ஆடிப் பதினெட்டை முன்னிட்டு ஒரு சிறிய பயணமாக வெள்ளியங்கிரிக்கும் அருகிருக்கும் ஈஷா மையத்துக்கும் செல்லலாம் என கிளம்பி பேமிலியாக சென்றோம். கோவையின் போக்குவரத்து நெருக்கடி பேரூர் வரை தொடர்கிறது.
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் அருகில் இன்னும் அதிக நெருக்கடி . அரைமணீ நேரமாகிறது கோயிலைக்கடக்க.
கடந்து செம்மேடு அடையும் போதே சற்றுக்குளிர் எடுக்க ஆரம்பிக்கிறது. வெள்ளியங்கிரியை அடிவாரம் எட்டும் போது சற்றே மழைச்சாரல் பொழிய ஆரம்பமாகியது. மழைச்சாரலின் குழுமையுடன் கோயிலில் வெள்ளியங்கிரி ஆண்டவரின் தரிசனம் மிக அருமை. சுற்றிலும் பசுமை.
சிறிது காற்று அடிக்கும் போது கூட வானுயர்ந்து நிற்கும் மரங்களின் இலைகளில் இருந்து விழும் மழைத்துளி மிகவும் குளுமையுடன் நம்மீது படுகிறது.
மலை ஏறும் படிக்கட்டை அண்ணாந்து பார்க்கும் போதே சற்று பிரமிப்பு நமக்கு. இந்த படிக்கட்டில் எப்படி ஏறி மலை உச்சி வரை கடந்த இருவருடங்களாக சென்றோம். ஒரு வேளை இரவு நேரங்களில் ஏறத்துவங்குவதால் ஒன்றும் தெரிவதில்லையோ?
அன்னதான மண்டபத்தில் இருந்து அனைவரையும் அழைத்து சாப்பாடு போடுகின்றனர். கூட்டமும் சற்றே குறைவுதான். கோயிலுக்கு வரும் அரசுப்பஸ்கள் அனைத்தும் சொகுசுப்பேருந்துதான். அதனால் பயணமும் அலுப்படையச் செய்யாது. அப்படியே செய்தாலும் கோயில் அமைந்திருக்கும் இடத்தின் அமைதி நம்மை அப்படியே ரிலாக்ஸ் செய்துவிடும்.
இங்கு இருந்து 1 கிமீக்கு அருகில்தான் ஈஷா யோகமையமும் உள்ளது. இங்கு இருக்கும் தியானலிங்கம் மிகவும் பெரியது. அமைதிதான் இங்கும் . அதனால் பெண்களை கொலுசுகளைக் கழட்டிவரச் சொல்கிறார்கள். மேலும் குழந்தைகளை தியான லிங்க மண்டபத்தினுள் அனுமதிப்பதில்லை.
இங்கும் அதே மழைச்சாரல்தான் . அதுவுமில்லாமல் குளிர் காற்று மலைஅடிவாரத்திலிருந்து வந்து செல்கிறது. ஆனால் இங்கும் ஏசி வைத்த குடில்களை காணமுடிகிறது. கேண்டீன் ஒன்றும் இங்கு உள்ளது .விலைகள் வழக்கமான சரவணபவன் தான்.
இந்த யோகமையம் சார்பாக பல ஊர்களில் மரங்களை நட்டு வைத்து பராமரித்து வருகிறார்கள். திருப்பூரிலும் நட்டுவைத்துள்ளனர். அவற்றில் சில நல்ல நிலையில் உள்ளது.
ஆனால் இவர்கள் மையம் அருகே மற்றும் செல்லும் வழியில் எங்கும் பார்த்தால் வேலிமுள் மரம்தான் அதிகம் காணப்படுகிறது. புளியமரங்களும் காணப்பட்டாலும் மிகுதி வேலிமுள்தான். இவை சூடும் கூட.
அதுவல்லாமல் வெள்ளியங்கிரி பாதையில் இருந்து இவர்கள் மையத்திற்க்கு செல்லும் பாதை மண்பாதைதான். இவர்களுக்கு இருக்கும் வசதிக்கு வந்து செல்லும் பார்வையாளர்களுக்காக நல்லதரமான சாலையை கோவையிலிருந்தே சொந்தமாகச் செய்யலாம்.
அதேபோல வேலிமுள்களை வெட்டிவிட்டு அல்லது ஊடாக நல்ல தரமான மரங்களை நட்டு பராமரிக்கலாம். வனத்துறை இடமாக இருந்தாலும் மையம் அருகே இருப்பதால் அவர்கள் உதவியுடனே இதைச் செய்யலாம்.
வேலிமுட்களையும்,பாதையையும் பார்த்தவுடன் நம்மனம் சற்றே உள்ளே செல்ல யோசித்தது. இன்னும் சற்று அவர்கள் முயற்சித்தால் யோக மையம் இன்னும் சிறப்படையலாம்.
..
புதன், ஆகஸ்ட் 04, 2010
இந்தக் கொடுமைக்கு கோர்ட்க்கே போயிருக்கலாம்
கோர்ட் நடவடிக்கைகளை மதிக்காமல் நடக்கும் ஜெயலலிதாவைக் கண்டித்து மாவட்டந்தோறும் நடைபெறும் திமுக இளைஞர் அணியினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களால் திருப்பூர் காலை 10 மணீ முதல் போக்குவரத்து நெருக்கடியால் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
இவர்கள் ஆர்ப்பாட்டம் மாநகராட்சிக் கட்டிடம் அருகே நடைபெறுவதாலும் , மாநகராட்சி நகரின் மையப்பகுதியில் இருப்பதாலும் திருப்பூர் ரோடுகள் அனைத்தும் நகரின் மையப்பகுதியினூடாகவே அமைந்திருப்பதாலும் , வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த சிரமத்தினூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது.
இவ்வளவு போக்குவரத்து நெருக்கடியில் அம்மையாரை ரெயில்வே ஸ்டேசனில் இருந்து ரமணா ஓட்டல் வரை , காரில் பயணிக்க வைத்தால் போதும் , இந்தக் கொடுமைக்கு கோர்ட்க்கே போயிருக்கலாம் என்று நினைத்து விடுவார்.
அடிக்கடி ஆர்ப்பாட்டங்களை நடத்திய கட்சிக்கே , நாமும் சளைத்தவரல்ல என்று திராவிட முன்னேற்றக் கழகம் பதிலளித்துக் கொண்டிருக்கிறது.
..
இவர்கள் ஆர்ப்பாட்டம் மாநகராட்சிக் கட்டிடம் அருகே நடைபெறுவதாலும் , மாநகராட்சி நகரின் மையப்பகுதியில் இருப்பதாலும் திருப்பூர் ரோடுகள் அனைத்தும் நகரின் மையப்பகுதியினூடாகவே அமைந்திருப்பதாலும் , வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த சிரமத்தினூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது.
இவ்வளவு போக்குவரத்து நெருக்கடியில் அம்மையாரை ரெயில்வே ஸ்டேசனில் இருந்து ரமணா ஓட்டல் வரை , காரில் பயணிக்க வைத்தால் போதும் , இந்தக் கொடுமைக்கு கோர்ட்க்கே போயிருக்கலாம் என்று நினைத்து விடுவார்.
அடிக்கடி ஆர்ப்பாட்டங்களை நடத்திய கட்சிக்கே , நாமும் சளைத்தவரல்ல என்று திராவிட முன்னேற்றக் கழகம் பதிலளித்துக் கொண்டிருக்கிறது.
..
புதன், ஜூலை 14, 2010
பிறந்த நாளைச் சொல்லுங்கள்
உங்கள் பிறந்த நாளைச் சொல்லுங்கள்.உங்கள் எதிர்காலம் கணிக்கமுடியும். ஆனால் உங்களுக்கு தெரிந்த ஒருவரின் பிறந்த நாளை முடிந்தால் சொல்லுங்கள். தமிழ் கூறும் நல்லுலகுக்கு நம் நண்பர் ஒருவர் நல்லதைச் சொல்வார்.
ஏற்கனவே இதே மாதிரி ஒரு நண்பரின் கேள்வியை எனது வலைப்பதிவில் கேட்டதுதான். ஆனால் பலனில்லை. ஆனால் இந்த முறை தயவு செய்து இவர்
கேட்கும் பிறந்த நாளை முடிந்தால் கொடுங்கள்.
முகவரி : சித்தூர் முருகேசன்.
இணைப்பு :
செவ்வாய், ஜூலை 13, 2010
நித்தியானந்தாவும், சன் தொலைக்காட்சியும்
ஒரு விசயத்தை எப்படி வேண்டுமானாலும் திரிக்கலாம் , அதுக்கு உதாரணமாத்தான் ஒரு மேட்டரை நான் இப்ப திரிக்கப்போறேன்.
பொதுவா நம்ம ஊருல ஒரு வழக்கு மொழி உண்டு, அது என்னன்னா நல்லதனமாகவோ , கள்ளத்தனமாகவோ ஒரு ஜோடி இணைந்து இருக்கும்போது அவங்கள டிஸ்டர்ப் செய்யக்கூடாது , செஞ்சா செஞ்சவனுக்கு கொஞ்ச நாளுக்கு நடக்கறதெல்லாம் கொஞ்சம் மோசமாகத் தானிருக்கும். அது மாதிரித்தான் நம்ம சன் டிவிக்கதையும்.
நித்தியானந்தாவைப்போட்டு ஒரு நாள்ப்பூராவும் திருப்பித்திருப்பி காட்டி , நித்தியோட சாபத்தையும் , கூட இருந்த அம்மிணியோட சாபத்தையும் நல்லா வாங்கிக் கட்டிக்கிச்சு சன் டிவி. சாமியாருங்க எல்லாருமே அந்தக் காலத்திலிருந்து இந்தக்காலம் வரைக்கும் ஒரே மாதிரித்தான். கோபப்பட்டா சாபம்தான்.
அப்புறம் அதோட கொஞ்சம் மக்கள் கோபம் வேற.
அதாவது சன் டைரக்ட் அப்படிங்கற டீடிஹெச் சேவையை ஆரம்பிச்சது முதல்
ரூ 500 க்கு 300 சேனல் அப்படின்னு சொல்லி சரி வாங்கலாமுன்னு கேட்டா கூட ரூ 1200 நிர்மாணக்கட்டணம் அப்படின்னு கொள்ளை லாபம் அடிக்கிறது. 300 சேனல் வந்தாலும் நமக்கு கெடைக்கிறது சன் சேனல் , கலைஞர் சேனல், விஜய் சேனல், மட்டுமே, இதில இசை அருவி, ஜெயா மேக்ஸ், சிரிப்பொலி கிடையாது. ஏன்னா அது வந்தா இவங்க சன் மியூசிக் படுத்துக்கும் . ஆனா ஜெயா நியூஸ் , கலைஞர் நியூஸ் வரும் .
இதெ ஏர்டெல்,ரிலையன்ஸ் , டிஸ் டிவி , டாடா ஸ்கை இவங்க இதெல்லாம் கொடுப்பாங்க. அவங்களுக்கு இவங்க கொடுக்கற சன்டிவி குருப் சேனல் ஆடியொ எல்லாம் ஒரு நார்மல் லெவல்லதான் வரும் , கேபிள் டிவியில் கூட நல்லா வரும்.
புதுசா வந்த வீடியோகான் மாசம் ரூ 150 க்கு தமிழ்ல் எல்லா சேனலும் , கூடவே டிஸ்கவரி , அனிமல் பிளானட், நேசனல் ஜியோ, நியோ, ஸ்டார், ஈஎஸ்பின், ஜீ, என 7 ஸ்போட்ஸ் , எம்ஜிஎம் உட்பட சில ஹிந்தி திரைப்பட சேனல்களையும் கொடுக்கும். இது மட்டுமல்லாமல் எந்த சேனல் தமிழ்ல் டிராண்ஸ்லேட் பண்ணீ வந்தாலும் ஆட்டோமேடிக்கா வரமாதிரியும், தமிழ் மெனுவையும் கூட வச்சுக்கற மாதிரி ஆப்சன் தந்திருப்பது இன்னும் விசேசம்.
இதானால் மட்டுமல்லாமல் அதிக விலைக்கு குறைந்த சேனல்களை அளிப்பதால் மக்களுக்கு சற்றே சன்னின் மீது கோபம் இருந்தது.
இந்த இரண்டு விசயங்களும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது , விண்ணீல்
இருந்த இன்சாட் 4பி சேட்டிலைட்டில் இருந்த சூரியசக்தி தகடு ஒண்ணு பொகைஞ்சு போச்சு , கூடவே வந்திட்டு இருந்த தூர்தர்சன் தப்பிச்சுகிருச்சு. சன் டைரக்ட் ஊத்திக்கிச்சு. இன்னும் ரெடியாகலை.
எப்பவுமே குவாலிட்டியிலதான் ஜெயிக்கணும் , அடுத்தவனப்போட்டு அமுக்கறதுல இல்லைன்னு எப்பத்தான் சன் புரிஞ்சுக்குமோ ?
நல்லா யோசனை பண்ணிப்பாருங்க. தூர்தர்சனும் , சன்னும் ஒரே சேட்டிலைட்டில வந்திட்டு இருந்தது. சன் மட்டும்தான் ஊத்திகிருச்சு . இப்ப தெரியுதுங்களா !
ஆண்பாவம் பொல்லாது அப்படிங்கறதை !
..
திங்கள், ஜூலை 05, 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)