புதன், ஜனவரி 30, 2013

திருமலை திருப்பதி வரலாறு


அருள்மிகு திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில்
நன்றி : தினமலர்....

யார் பொறுமைசாலி: ஒரு முறை நாரதர் தனது தந்தையான பிரம்மனைப் பார்க்க வந்தார். அப்போது, பூலோகத்தில் மக்களுக்கு இழைக்கப்படும் நடக்கும் அநியாயத்தை தட்டிக்கேட்க ஏதாவது வழி செய்ய வேண்டும், என பிரம்மனிடம் காசியபர் என்ற முனிவரின் தலைமையில் தேவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். யாகம் செய்தால் மக்களுக்கு நல்வழி பிறக்கும் என பிரம்மன் கூறினார். யாருக்கு யாகத்தின் பலனை கொடுத்தால் பூலோகத்தில் நடக்கும் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த முடியும்? என சிக்கலான கேள்வி கேட்டார் நாரதர்.... இது பற்றி பிருகு முனிவர் என்பவரிடம் மற்றவர்கள் கருத்து கேட்டனர்.

முனிவரின் சோதனை : பிருகு முனிவர் இயற்கையிலேயே கர்வம் மிக்கவர். அவரது கர்வத்தை அடக்க, ஸ்ரீமன் நாராயணன் நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். பிருகு முனிவருக்கு பாதத்தில் ஞானக்கண் உண்டு. எதிர்காலத்தை உணர்ந்து கொள்ளும் சக்தி உண்டு. இதை பயன்படுத்தி மற்றவர்களை மட்டம் தட்டுவதில் அவருக்கு அலாதி இன்பம். பிருகு முனிவர் நான் நேரடியாக அனைத்து லோகங்களுக்கும் சென்று, எந்தக்கடவுள் பொறுமைமிக்கவர் என்பதை பார்த்து வருகிறேன். அவருக்கே யாகம் செய்வோம் என்று கூறினார். அதன்படி அவர் முதலில் பிரம்மனிடம் சென்றார். அங்கு சரஸ்வதியும் பிரம்மனும் தனித்திருந்தனர். பிருகு அனுமதி பெறாமல் உள்ளே நுழைந்து விட்டார். பிரம்மா இதைக் கண்டித்தார்.பக்தனை வரவேற்கான பிரம்மனுக்கு இனி உலகில் பூஜையே நடக்காது என சாபம் இட்டு விட்டு,சிலோகம் சென்றார்.சிவலோகத்தில் சிவபெருமான் பார்வதியுடன் தனித்திருந்தார். பிருகு முனிவர் அங்கு இருந்தவர்கள் தடுத்தும் கேளாமல் நேரடியாக இருவரும் இருந்த இடத்திற்கு சென்றுவிட்டார். சிவபெருமானுக்கும் கோபம் ஏற்பட்டது. அவர் பிருகு முனிவரை கண்டித்தார். உடனே பிருகு முனிவர், பூலோகத்தில் உனக்கு இனி லிங்க ரூபமே கிடைக்கும். அதற்கே பூஜை நடக்கும் என சாபமிட்டார்.அடுத்து ஸ்ரீவைகுண்டத்திற்கு சென்றார். அங்கு விஷ்ணு சயனகோலத்தில் இருந்தார். அருகில் லட்சுமி தேவி இருந்தார். பிருகு வந்ததை கவனித்தாலும், வேண்டு மென்றே கவனிக்காதது போல விஷ்ணு தூக்கத்திலேயே இருந்தார். உடனே பிருகு முனிவர் கோபத்துடன் மார்பில் உட்டி உதைத்தார். அந்த நேரத்தில் பிருகுவின் பாரத்திலிருந்த ஞானக்கண்ணை அவருக்குத் தெரியாமலேயே பெருமான் பிடுங்கி எறிந்து விட்டார். தன்னை உதைத்ததற்காக பெருமாள் கோபப்படவில்லை. உடனே உலகத்திலேயே பொறுமைமிக்க கடவுள் விஷ்ணுதான் என்பதை உணர்ந்து அவருக்கே யாகத்தின் பயனை கொடுப்பது என முனிவர்கள் முடிவு செய்தனர்.

பத்மாவதி பிறப்பு : பெருமாளின் மார்பில் தான் குடிகொண்டிருப்பது தெரிந்தும் எட்டி உதைத்த முனிவரை கண்டிக்காத கணவன் மீது லட்சுமி கோபம் கொண்டாள். உடனே பெருமாளை விட்டு பிரிந்து பூலோகம் செல்வதாக கூறிவிட்டு பூலோகத்திற்கு வந்தாள்.லட்சுமிதேவி தங்கியிருந்த இடம் நாராயணவனம் என அழைக்கப்பட்டது. இந்த பகுதியை ஆகாசராஜன் என்பவர் ஆண்டு வந்தார். அவரது மனைவி தரணிதேவி. இவர்கள் குழந்தைவரம் கேட்டு யாகம் செய்வதற்காக பொன் கலப்பையால் மண்ணை உழுதுக் கொண்டிருக்கும்போது கலப்பையில் ஏதோ ஒரு பொருள் தட்டியது. அந்த இடத்தில் தோண்டி பார்த்தபோது, உள்ளே பெட்டிக்குள் இருந்த தாமரையின் நடுவே ஒரு பெண் குழந்தை இருந்தது. தாமரைக்கு பத்மம் என்ற பெயர் உண்டு. பத்மத்தில் வீற்றிருந்ததால், அந்த குழந்தைக்கு பத்மாவதி என பெயரிட்டனர்.

வேடனாக வந்த சீனிவாசன் : பத்மாவதி விஷ்ணு பக்தை. ஒருமுறை வேதாசல மலை பகுதியில் தோழிகளோடு சுற்றி வந்தாள். அங்கே வேட்டைக்கு சீனிவாசன் என்ற வேடன் வந்தான். பத்மாவதியை பார்த்ததும் அவளை திருமணம் செய்ய ஆசைப்பட, பத்மாவதி மறுத்துவிட்டாள். பின்னர் வேடனாக வந்தது ஸ்ரீமன் நாராயணன் என்பது தெரிந்ததும், பத்மாவதி சீனிவாசனை திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் சீனிவாசனிடம் திருமணத்திற்கான பணம் இல்லை. ஏற்கனவே லட்சுமி தேவி பிரிந்து போய் விட்டதால் பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார் நாராயணன். இந்த சமயத்தில் நாரதர், குபேரனிடம் பணம் பெற்று திருமணத்தை நடத்தலாம் என யோசனை கூறினார். உடனே பெருமாள் குபேரனை அழைத்து, ஒரு லட்சத்து 14 ஆயிரம் பொன் கடன் வாங்கி கொண்டு பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டார். தன்னை வழிபட வரும் பக்தர்கள் தரும் பணத்தை கலியுகம் முழுவதும் வட்டியாக தந்து விட்டு, கலியுகம் முடியும் போது அசலை தந்து விடுவதாக குபேரனிடம் தெரிவித்தார் நாராயணன். திருமணம் சிறப்பாக முடிந்தது. திருமணத்திற்கு பிறகு பெருமாள் திருமலையில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவருக்கு ஆகாசராஜனின் தம்பியான தொண்டைமான் என்பவர் கோயில் கட்டினார். கோயிலில் வழிபட தேவாதி தேவர்கள் எல்லாம் வந்தனர். பிரம்மனும் அங்கு வந்தார். அவர் பெருமாளிடம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் உற்சவம் நடத்த அனுமதி கேட்டார். அதன்படி பிரம்மோற்சவம் நடந்தது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கணர் என்ற சித்தரின் பீடம் இங்கு உள்ளது. பக்தர்கள் தரும் காணிக்கையை கணக்கு பார்த்து குபேரனிடம் கொடுப்பதில் பெருமாளுக்கு சிக்கல் ஏற்பட்டது. எனவே தனது சகோதரனான கோவிந்தராஜனை அழைத்து, இந்த பணத்தை குபரேனிடம் கொண்டு சேர்ப்பது உனது பொறுப்பு என்றார். அதன்படி கோவிந்தராஜன் கீழ்திருப்பதியில் தங்கியிருந்து வெங்கடாசலபதிக்கு சேரும் காணிக்கையை மரக்கால் மூலம் அளந்து குபேரனிடம் கொடுத்து வருகிறார்.

தொடரும்...........******************************************************************************

வெள்ளி, ஜூலை 13, 2012

மூலிகைப்பெட்ரோல்‍ -இராம ரகசியம்



எப்பெல்லாம் பெட்ரோல் விலை ஏறுதோ அப்ப எல்லாம் மாற்று எரிபொருள் தேவை என மக்கள் மனதில்(நன்றாக‌ கவனிக்கவும் மக்கள் மனதில்)மட்டும் தோன்றுகிறது. ஆள்பவர்கள் இதில் எல்லாம் கவனம் கொள்வதில்லை,ஆளுங்கட்சி ஏற்றுவதும்,அதை உடனே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதும் பாகிஸ்தானில் இவ்வளவு,ஈரானில் இவ்வளவு என வரைபடத்தில் கூட காணமுடியாத சில நாடுகளையும் சேர்த்து ஒப்பிடுவதிலேயே மக்களை மாற்று எரிபொருள் பற்றிச் சிந்திக்கவிடாமல் மழுங்கடித்துவிடுகின்றனர்.

இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் யாரேனும் ஒருவர் நாட்டின் நலனை வேண்டாமே,மக்களின் நலனை வேண்டாம்,சொந்த நலனை முன்னிட்டு மாற்று எரிபொருள் பற்றி ஏதேனும் செய்தால் அவர்களை கேள்வி கேட்டே கொன்றுவிடுவதில் நம் விஞ்ஞானிகளை விட வில்லன்கள் வேறு யாரும் இருந்துவிட முடியாது.

அதையும் மீறி நிரூபித்தால் அரசியல்வாதிகள் விடுவதில்லை,இரகசியத்தை தெரிந்து கொண்டு நாம் சம்பாரித்துக் கொள்ளலாம் என மிரட்டல்கள் வேறு,சொல்லவில்லை எனில் அவர்கள் மீது வழக்குகள்,மோசடிக் குற்றச்சாட்டுகள் என பல வழிகளில் நோகவைத்துவிடுகின்றனர்..

இந்த வழியில் மூலிகைப்பெட்ரோல் என அறிவித்து அதை நிரூபித்தாலும் இவர்களிடம் தப்ப முடியாமல் வழக்குகளில் சிக்கி சில காலம் காணாமல் இருந்த நமது மூலிகை இராமர் மீண்டும் தனது பணியைச் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார்.கடந்தமுறை மூலிகைப்பெட்ரோல் என்று அறிவித்துதான் சிக்கல் ஏற்பட்டது எனவும் இந்த முறை மாற்று எரிபொருள் என அறிவித்து தனது தயாரிப்பை சந்தைப்படுத்த தயாராக அறிவித்து உள்ளார்.

இவரது தயாரிப்பை உலகின் உயர்ந்த ஆய்வுக்கூடமான டென்மார்க் ஆய்வு மையம் சிறந்த மாற்று எரிபொருள் என அறிவித்து உள்ளது.கூடவே மலேசிய,சிங்கை ஆய்வுக்கூடங்களும் அங்கீகரித்து உள்ளது.

இதுவரை இவரின் தயாரிப்பை பயன்படுத்தி ஓடிய பைக்குகளும்,எந்த வித பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை.

தண்ணீரைப் பயன்படுத்தி இவர் எப்படி மூலிகை பெட்ரோலை எப்படி தயாரிக்கிறார் என்பது பற்றிய ஒரு விளக்கத்தை இராமரே கூறியதை நாம் காண்போம்..

தண்ணீரின் மூலக்கூறுகளான ஹைட்ரஜனையும்,ஆக்சிஜனையும் தனித்தனியாக பிரித்து ஹைட்ரஜனை எரிக்க உறுதுணையாக தண்ணீரில் உள்ள ஆக்சிஜனையே பயன்படுத்துவதே இவர் கண்டுபித்துள்ள மூலிகை கலவையின் சாமர்த்தியம்.

எப்படிக்கண்டுபிடித்தார் இந்த விசயத்தை.9வகுப்பு வரை படித்த இவரால் எப்படி சாத்தியம்..அவரே அதையும் கூறுகிறார்,சிறுவயதில் கல்விச் சுற்றுலா சென்ற இடத்தில் சமையல் செய்யும் போது அங்கிருந்த ஒரு பசுந்தழை ஒன்று குபுக் கென்று தீப்பிடித்து எரிந்ததை வைத்து மண்டையை உடைத்து இந்த விசயத்தை கண்டுபிடித்து உள்ளார்.ஆம் பசுந்தழையும் ,வெங்கச்சாம் கல் எனப்படும் நெருப்பை உண்டாக்கப்பயன்படும் சிக்கி முக்கி கல்லையும் உடைத்து சரிவிகிதக்கலவை உண்டாக்கி பவுடராக்கி,சிட்ரிக் உப்பையும்,தண்ணீரில் கலந்து அதை சூடுபடுத்தி அந்த தண்ணீரை சிறிது நேரம் ஆறவைக்கும் போது தண்ணீர் பிரிந்து பெட்ரோலாக மாறி வருவதை காணலாம்.

மேலே உள்ள நீர்மத்தை பைக்கில் ஊற்றி வண்டியை ஓட்டும் போதோ,அல்லது அந்த தண்ணீர் கலவையில் நெருப்பை வைக்கும் போதோ அதன் எரிபொருள் தன்மை நமக்கு நன்கு தெரிகிறது,,

இந்த விசயங்கள் சாத்தியமா என பழம்பொருள் ஆய்வாளர்களிடம் கேட்டபோது ஆம் மலைக்காடுகள் சில நேரங்களில் தீப்பிடிப்பதும் இது போன்ற நிகழ்வுதான் என்று கூறுகின்றனர்.அந்த வகையில் அவர்கள் சொன்ன அரிய வகை மூலிகைகள் பற்றி புறநானூறு பாடல்களில் வருவதாக கூறியுள்ளனர்.

அந்தவகையான மூலிகைகளில் ஒன்றுதான் விராலிச்செடி.இதன் இலை இரண்டு மூன்றை சேர்த்து வைத்து நெருப்பை வைக்கும்போது உடனடியாக தீப்பிடிக்கிறது.இதனுடன் அரச மர இலை சேர்த்து இராமர் மூலிகை பெட்ரோல் தயாரிப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது..

மேலும் பிரத்தேயகமான மெசின் ஒன்றையும் தயாரித்துள்ளார்,இதற்கு காப்புரிமை மட்டும் அரசிடம் இருந்து கேட்டுள்ளார்,அவ்வாறு கிடைக்கும்பட்சத்தில் இந்த மாற்று எரிபொருளை ரூ5/க்கு தன்னால் அளிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.,இது மட்டும் சாத்தியமானால் இந்தியாவை உலக நாடுகள் திரும்பிபார்க்க வைப்பதில் இராமர் பெருமைப்படலாம்;;

அதெல்லாம் கிடக்கட்டுமுங்க என்னவோ நாதஸ்வரத்துல எல்லோரும் சேந்துட்டாங்களாமே,எல்லாத்துக்கும் மயிலுதான் காரணமாமே?பெட்ரோல் ஏறுனா என்ன? எறங்குனா என்ன? மூக்கைச்சிந்துங்க முதல்ல......

திங்கள், ஜூலை 02, 2012

போக்குவரத்து துறை-மாறலாமே?





தமிழகத்தின் தலைநகரத்தில் ஒரு பேருந்து விபத்து ஏற்பட்டதும்,அதை ஒட்டி ஊடகங்கள் ஒவ்வொரு போக்குவரத்துக்கோட்ட வாசலில் நின்று கொண்டு போக்குவரத்து ஊழியர்சங்க நிர்வாகிகளை பேட்டி கேட்க அவர்கள் இங்கு இத்தனை பேருந்துகள் உள்ளது,பராமரிப்பு ஊழியர்கள் பற்றாக்குறை,பேருந்துகளின் தரம் சரியில்லை,அத்தனையும் மோசமான பஸ்கள் எனவும்,நிர்வாகிகள் கலெக்சன் விட டீசல் மைலேஜ் அதிகமாக கேட்பதாக புலம்பினர்.அதேபோல நிர்வாகிகளுக்கு ஊக்கத்தொகை,பேருந்துகள் ஓடிய கிமீ' அடிப்படையில் கொடுப்பதால் அவர்கள் அனைத்துப் பேருந்துகளையும் ரெஸ்ட்டே கொடுக்காமல் இயக்குகின்றனர்.
இதையே நிர்வாகிகளிடம் கேட்டால் வசூல் குறைவு,அனைத்து கழகப்பேருந்துகளும் நட்டத்தில் இயங்குகின்றது என்கின்றனர்.

நமக்குத்தெரிந்த டிரைவர்,கண்டக்டர்களும் கொத்தடிமை மாதிரி வேலை வாங்கறாங்க,தினமும் ஷிப்ட் மாத்தும்போது,5லிட்டர் டீசல் அதிகம் பிடித்தாலும் அதற்கு என்ன காரணம் என என்ஜினியர்,மேனேஜர்களிடம் கட்டாயம் சொல்லவேண்டும் என்கின்றனர்.

ஆனால் தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் ஓடும் அனைத்து தனியார் பேருந்துகளும் மிக நல்ல நிலைமையில் நல்ல முறையில் கல்லா கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி என்று பார்க்கலாம். ஒவ்வொருதனியார் பேருந்தும் பேருந்துநிலையத்தில் கிளம்பும் முன் முழுமையாக 10 நிமிடம் வரை டைமிங் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கும்.அதற்கு முன்பாகவும்,பின்னதாகவும் கிளம்பும் அரசுப்பேருந்து சரியாகப் பராமரிக்காத பஸ்களாகவும்,நல்ல கலர்கூட அடிக்காத பேருந்தாகவும் இருக்கும். இவர்கள் முன்னும் பின்னும் கிளம்பும் பஸ்களின் டிரைவர்,கண்டக்டர்களுக்கு மாமூல் வேறு அளிப்பதுடன்,போக்குவரத்து கோட்ட நிர்வாகிகளுக்கும் கொடுத்துவிடுவதால் அவர்களும் அரதப் பழைய பேருந்துகளையே அந்த நேரத்தில் இயக்குகின்றனர்.அப்புறம் எப்படி கலெக்சன் கல்லா கட்டும்!.

ஒரு சில ஊர்களுக்குச் செல்லும் பஸ்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் நமக்கு மயக்கம்தான் வரும்.உதாரணத்திற்கு கோவையிலிருந்து சேலம் 3 நிமிடத்திற்கு ஒன்றும்,ஈரோட்டிற்கு 5 நிமிடத்திற்கு ஒன்றும் கிளம்புகிறது.பெரும்பாலும் பஸ்கள் காலியாகத்தான் செல்கிறது.இவ்வாறு செல்லும் பஸ்களும் பைபாஸ் உபயத்தால்,வழித்தட ஊர்களுக்கு வராமல் நேரே சென்றுவிடுகிறது.வழித்தட ஊர்க்களுக்கு கட்டாயம் செல்லவேண்டுமென கோட்ட மேலாளர்கள் சொன்னாலும் டிரைவர்கள்,கண்டக்டர்கள் இயக்குவதில்லை.கேட்டால் டீசல் மிச்சம்பிடிக்க பைபாஸ்வழியே இயக்குவதாக சொல்கின்றனர்.அப்படியே வழித்தட ஊர்களுக்கு சென்றாலும் மக்கள் ஏறுவதில்லை என்கின்றனர்.ஒரு சீட்,ரெண்டு சீட்களுக்காக செல்லும் போது டீசல் விரயம்தான் ஆகிறது,நாங்க பதில் சொல்லமுடிவதில்லை என்கின்றனர். இவர்கள் எண்ணம் பேருந்து நிலையத்தில் பஸ் எடுத்தால் வேறு எங்கும் நிற்க கூடாது.அங்கேயே கூட்டம் நிரம்பணும்..

அப்படி என்றால் பேருந்துகளின் எண்ணிக்கையை குறைக்கலாமே,அப்படிக்குறைத்தால் பேருந்துகளும் நிரம்பும்.மேற்சொன்ன வழித்த‌டங்களில் கால் மணிக்கு ஒரு பஸ்ஸூம்,அரைமணீக்கு ஒரு தொடர் பஸ்ஸூம் இயக்கினாலே போதும்.எந்தப் பேருந்தும் நட்டத்தில் ஓடாது.இல்லையா இருக்கும் 55 சீட்களில் 45 சீட் நிரம்பிய பின்னர் வண்டியை எடுத்தால் கூட போதுமே! இது போன்றே மற்ற வழித்தடங்களும் உள்ளது,.மேற்சொன்னது ஒரு உதாரணம் மட்டுமே.

இவர்கள் கவர்ன்மெண்ட் ஊழியர்கள்தானே,பணிக்குதானே வந்துள்ளனர்.சும்மா இருந்தால் சம்பளம் யார் தருவார்கள்.லாபம் வருவதற்கு யார் முயற்சி எடுக்கவேண்டும்,போக்குவரத்து சங்கங்கள், துறைக்கு ஐடியா கொடுத்தால் என்ன? குறைந்தா போய்விடுவார்கள். 

புதிது புதிதாக பேருந்துகளை இயக்கினாலும் தேவை அறிந்து தேவைகேற்ப பேருந்துகளை இயக்கினாலே போதும்.. அதை விடுத்து வெறும் பேருந்தை பைபாஸ் வழியாக இயக்கும் ஊழியர்களும்,கிமீ இன்சென்டிவ்க்காக வேண்டி கண்டபடி பேருந்துகளை இயக்கும் நிர்வாகிகளும் கொஞ்சம் மனசு வைத்தால் மட்டுமே போக்குவரத்துதுறை எதிர்காலத்தில் இயங்கும்.இல்லையெனில் மொத்தமும் நட்டத்தில் காணாமல்போய்விடும் என்பதில் ஐயமேயில்லை...


வியாழன், மே 24, 2012

வாய்ப்பாடி மாகாளியம்மன் கோவில்

அண்மையில் 2012ல் நடைபெற்ற வாய்ப்பாடி மாகாளியம்மன் கோவில் பொங்கல் விழாவின் ஒரு தொகுப்புக்காட்சிகள்



திங்கள், மே 07, 2012

மேட்டுபாளையம் வனபத்திரகாளியம்மன் ‍பட தொகுப்பு...2ஆம் பாகம்

நமது அன்பு நண்பர் சதீஷ் அவர்களின் கிடாவெட்டுக்கு மே6‍ ல் அங்கு நாம் சென்றபோது எடுத்த சில காட்சிகளின் தொகுப்பு....





















மேட்டுபாளையம் வனபத்திரகாளியம்மன் ‍பட தொகுப்பு...1ஆம் பாகம்

நமது அன்பு நண்பர் சதீஷ் அவர்களின் கிடாவெட்டுக்கு மே6‍ ல் அங்கு நாம் சென்றபோது எடுத்த சில காட்சிகளின் தொகுப்பு....