திங்கள், ஆகஸ்ட் 17, 2009

பாவம் முதுமலை,மசினகுடி,தலைகுந்தா ,ஊட்டி மக்கள்.

முதுமலை,மசினகுடி,தலைகுந்தா ,ஊட்டியில் உள்ள பெரும்பான்மையான
ஏரியாக்களில் தமிழ் (FM )பண்பலைகள் எடுப்பதில்லை.மாறாக மலையாளம், கன்னடம் பண்பலைகள் அதிகம் எடுக்கின்றன.

அதேபோல் ஊட்டியில் சில இடங்களில் சூரியனின் தமிழ் மற்றும் மலையாள ரேடியோக்கள் மாறி மாறி வருகின்றன.

அதேபோல ஊட்டியிலேயே உள்ள எப்.எம் ரெயின்போ 101.8 சென்னை வானொலி எப்.எம் 101.4 ஐ அஞ்சல் செய்கிறது.அதுவும் மிகக்குறைந்த சக்தியில் ஊட்டியில் மட்டுமே எடுக்கிறது. குன்னூரில் கூட எடுப்பதில்லை.
சென்னைக்குப்பதிலாக கோடை எப்.எம் அல்லது கோவை ரெயின்போவை அஞ்சல் செய்தால் கூட ஊட்டி மக்களுக்கு பயனாக இருக்கும்.

என்ன செய்கிறார்கள் வானொலி அதிகாரிகள் ?


முதுமலை,மசினகுடி,தலைகுந்தா மக்களும் தமிழர்கள் தானே ,அவர்களுக்கும்
தமிழ் எப்.எம் கேட்கும் ஆசை இருக்கும் அல்லவா!

நிறைவேறுமா ?



..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக