திங்கள், செப்டம்பர் 21, 2009

தமிழர்களுக்கு அறிவுண்டா ?

தமிழர்களுக்கு அறிவுண்டா இல்லை ,இருந்தும் இல்லையென்று மறதியா ?

நான் இத்தனை நாளா கார், கவர்ன்மெண்ட் பஸ் ஓட்டறவங்கள் எல்லாம் புத்திசாலி நெனைச்சு இருந்தேன் . ஆனா பாருங்க , கொமரபாளையத்திலிருந்து செங்கப்பள்ளி வரைக்கும் நாலு ரோடு போட்டப்பிறகு மொத்தம் நாலு டிராக் அதில போறதுக்கு 2, வாரதுக்கு 2 அப்படினு தனித்தனியா இருக்கு, ஆனா பாத்தீங்கன்னா என்ன நடக்குது ?

லெப்ட் சைட் டிராக்கில திடீருன்னு ரைட் சைடு போகவேண்டிய வாகனங்கள் ஹெட்லைட்ட போட்டுட்டு எதுக்கால வாரது.இதுனால என்னாகுதுன்னா எதோ ஒரு வாகனத்த ஓவர் டேக் எடுத்துட்டு வர கார் தீடீருன்னு வார பஸ்ஸையோ, அல்லது காரையோ பார்த்து ஒண்ணும் செய்ய முடியாம மொத்தமா கொண்டு போயீ ஒரே சாத்தா சாத்தி போகவேண்டிய நெலமை.

இப்படித்தான் போனவாரம் குறுக்க வேற ரோட்டில போன பஸ்ஸ பொதுமக்கள் குறுக்காட்டி கேட்டா ? டிரைவர் எகத்தாளம் பேச , ஒரே ரகளையாயி , கன்னாபின்னானு வார்த்தை பேசி பஸ்ஸ ஓரம் கட்டி ஒரு மணீ நேரத்திற்க்கு மேல பஞ்சாயத்து, ஹைவே பெடரோலுனு வந்து அப்புறந்தான் உட்டாங்க.

அதே மாதிரி கார்க்காரங்களும் கன்னாபின்னானு டிராக்கில குறுக்க வாரது . அதனாலதான் கேக்கறேன் , தமிழர்கள் முட்டாள்களா இல்லை அறிவாளிகளா ?

நம்ம உயிர நாமதான காப்பாத்திக்கணூம்.அதுக்குத்தானே 2 டிராக் ரோட்டை 4 டிராக் ரோடா போட்டது. அப்புறம் ஏம்பா வீணா குறுக்க போயி மண்டைய போடறீங்க.


..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக