திங்கள், பிப்ரவரி 14, 2011

சூரிய ராகங்கள் 97.9 தமிழகத்தில்

இன்று காலை காதலர் தினத்தில் நமது பண்பலைகள் எந்த மாதிரியான நிகழ்ச்சிகளை அளிக்கின்றன என்று வானலைகளில் நமது எப்.எம் வானொலியைக்கொண்டு தேடும் போது என்றைக்கும் இல்லாமல் இன்று இலங்கையின் வானொலிகள் அனைத்தும் என்று சொல்வதை விட அரசு வானொலிகளான தேசிய சேவை,தென்றல் ,சிங்களம்,ஆங்கில சேவைகள் மற்றும் சூரியன் பண்பலை ஆகியன எடுத்தன.

நமது ஈரோடு மாவட்டத்தில் இதுமாதிரியான காலகட்டங்களில் பின்பனிக்காலங்களிலும்,வானிலை மிக தெளிவான காலகட்டகளிலும் நாம் இலங்கை வானொலிகளை பண்பலைகளில் கேட்டதுண்டு(எப்.எம்).இது மாதிரியான காலங்களில் இவர்களின் வானொலிகள் நமது லோக்கல் வானொலிகளான மிர்ச்சி,கோவை,சூரியன்,ஹலோ பண்பலைகளை அமுக்கிவிட்டு ஒலிக்க ஆரம்பித்துவிடும்,அத்தனையும் மிகத்தெளீவாக அதுவும் ஸ்டீரியோவில்.

புதிதாக கேட்பவர்கள் புதுசா ஆரம்பிச்சிட்டாங்களோனு எண்ணத் தோன்றும் அளவிற்கு தெளிவாக கேட்கும். இது கடலைகளினாலும்,வளிமண்டலத்தில் ஏற்படும் ஒரு வித காந்தகோடுகளினால் ஏற்படும் ஒரு மாற்றமே என சுஜாதாவும்,மதனும் ஒரு சில விகடன் கேள்விபதில் பக்களிலும் பதில் அளித்துள்ளனர்,இவர்களும் இவற்றை கேட்டிருக்கக்கூடும்.இல்லையெனில் பதிலளிக்க வாய்ப்பிருக்காது.

ஆனால் நான் இன்று கேட்ட சூரிய பண்பலையின் இடையே அவர்கள் அறிவித்ததுதான் நம்மை கொஞ்சம் ஆச்சரியத்திற்கு உள்ளடக்கியது. பொதுவாக கண்டி,யாழ்,கொழும்பு,ஊவா என,தீவு முழுக்க என சில அலைவரிசைகளை சொல்லும் இவர்கள் கூடவே தமிழகத்தில் 97.9 என சொன்னதுதான் நம்மை வியப்பிற்க்கு உள்ளடக்கியது.

எனக்குத் தெரிந்து இன்னும் ஒரு சில மாதங்களில் இலங்கை அரசு வானொலி,மற்றும் தொலைக்காட்சி ஆனது இலங்கையின் மிக உயர்ந்த மலையின் மீது அமைத்து இருக்கும் டவரிலிருந்து ஒலி,ஒளிபரப்பை துவக்குவதாகவும் அது தமிழகம் முழுக்க தெளிவாக இருக்கும் வகையில் இருக்கும் என கேள்விப்பட்டு உள்ளோம், ஆனால் சூரியன் அதற்கு முன்பே முந்தி விட்டதோ எனத் தோன்றுகிறது. அவர்களின் அறிவிப்பு அப்படித்தான் தோன்றுகிறது.

ஆனாலும் இன்றைய காதலர்தின நிகழ்ச்சிகளில் தமிழக வானொலிகளை விட இலங்கை வானொலிகளீன் நிகழ்ச்சி நன்றாகவே இருந்தது. அவர்களின் புரோகிராமைத்தானே நமது வானொலிகளும் காப்பி அடிக்கிறது. .

இவர்களின் தாக்கத்தால் நாங்களும் கூட எங்களூர் கிரிக்கெட் கமெண்டிரிகளை 94 ஆண்டு காலகட்டங்களில் சாதாரண எப்.எம் மைக்கை கொஞ்சம் ஆல்டர் செய்து 3 கிமீ சுற்றளவுக்கு கேட்கும்படி ஒலிபரப்பினோம்.

இவர்களும் தமிழகத்தில் போட்டிக்கு வந்துவிட்டால் நமது வானொலிகளின் தரம் இன்னும் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக