வியாழன், ஏப்ரல் 25, 2013

யார் கலாசார தீவிரவாதி?


20130425_132743.jpg

நமது கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தை தடை கோரிய தமிழ்நாட்டு முஸ்ஸீம் அமைப்புகளை பார்த்து"இவர்கள் கலாசார தீவிரவாதிகள்" என்று கூறினார்.ஆனால் இன்று தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் பார்க்கக்கூடிய விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சியில் தொகுப்பாளரான நடிகர் பிரகாஷ்ராஜ் கமலை பார்த்து உங்களுக்கும் கௌதமிக்கும் உள்ள உறவு என்ன என்று கேட்டதற்க்கு நமது உலக நாயகன் அளித்த பதில் ' இவர் எனக்கு மனைவி அல்ல,பார்ட்னர்,அதில் உடலுறவு போன்ற விசயங்களும் உண்டு'என்று கூறியுள்ளார்.
இப்போழுது கூறுங்கள்.இவர் கலாசார தீவிரவாதியா,இல்லை அவர்களா?
மேலும் சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியின் போது ஒரு பத்திரிக்கை நிருபர் அவருடனான பெண்கள் உறவு பற்றி கேட்டதற்க்கு இவர் முகம் சிவந்து அளித்த பதில்"எனது வீட்டு பாத்ரூமை எட்டிப்பார்க்காதீர்கள்,அதற்கு உங்களுக்கு உரிமை இல்லை" என்று கூறிய கமலஹாசன் இந்நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட இவருக்கு மகள் போல் உள்ள ஒரு பெண் கொடுத்த முத்தத்தை அளவு கடந்த மகிழ்ச்சியில் ஏற்றுக் கொண்டார்,அந்த பெண் இவருக்கு முத்தம் கொடுக்கும்போது அவரது கணவரை வெளியே அனுப்பிவிட்டதாகவும் பீற்றிக்கொண்டனர்.
இப்படிப்பட்ட கலாசார கதாநாயகன் தான் தனது பட பிரச்சினையில் கடனாளியாகிவிடுவோமா என்று பயந்து மற்றவர்களை கலாசார தீவிரவாதி என்றார்.

இந்த மாதிரியான சம்பவங்கள் நமது தமிழ்ப்பெண்கள் மனதில் ஒரு இழிவான இச்சையை ஏற்படுத்திவிடும்.அதனால் கமல் சார்! உங்க வீட்டு பாத்ரூமை எட்டிப்பார்க்காதே என்று சொல்லிவிட்டு தமிழகத்தின் ஒட்டு மொத்த வீட்டின் பாத்ரூமையும் எட்டிப்பார்த்து விட்டீர்கள்.

தமிழக மக்களே சிந்தியுங்கள்..அட்லீஸ்ட் நிகழ்ச்சியில் வெளியேறிய முத்தமிட்ட பெண்ணின் கணவனே நீயாவது சிந்தி! ஒருவேளை கமல் போனமாதம் சொன்னதுபோல் வெளிநாட்டில் குடியேறியிருக்கலாமோ?

எங்களைப்போன்றோர்களைப் பொறுத்தவரையில் கமல் ஓர் உலக நாயகன் அல்ல..அவர் ஓர்.........நாயகன்.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக