வெள்ளி, நவம்பர் 27, 2009
மனதை ஆய்வு செய்தல்
அதுபற்றி தமிழ்மணக் கட்டுரை ஒன்று.
மனதை ஆய்வு செய்தல் -நல்ல எண்ணங்களை மனதில் விதைப்போம்
Krishnakumar
மனதை ஆய்வு செய்தல்
மனதை பற்றி பலதரப்பட்ட ஆராய்சிகள் நடந்துள்ளன .ஒரு மனிதன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக வளர்வதும் அவனுடைய வளர்க்கப்படும் சூழ்நிலையே என்பது மனவியல் நிபுணர்கள் கருத்து.ஒரு மனிதனுக்குள் வன்முறை என்பது எப்போதும் தூங்கி கொண்டு இருக்கும்.அது எதாவது ஒரு ரூபத்தில் வார்த்தைகளாக அல்லது தாக்குதலாக வெளிவருகிறது என்பதும் அவர்கள் ஆராய்ச்சி முடிவு .ஆனால் அப்படிப்பட்ட மனதையும் மிகவும் அழகான நறுமணம் வீசும் தோட்டமாக ஆன்மிகத்தின் மூலவும் யோக போன்ற பயிற்சிகளின் மூலவும் மாற்ற முடியும் என்பது ஆன்மிகவாதிகளின் கருத்து .
மனதை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஏசலன் என்ற நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி வன்முறையைய் மிகவும் விரும்பும் மனம் கொண்டவரின் கண்களை கட்டி விட்டு, எதிரில் தலையணையைய் வைத்து இதை எதிரி என்று நினைத்து குத்தச் செய்தது. முதலில் குத்த நினைத்த மனிதர் பிறகு சற்று யோசித்து சிரித்தார்… தலையணையைய் எப்படி குத்துவது? என்று. இந்த தலையணைக்கும், ரத்தத்தில் உருவான மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறியவுடன் அந்த மனிதன் தலையணையைத் தாக்க முற்பட்டான். அதைக் கண்டு அவரைச் சுற்றி நிற்பவர்களே ஆச்சிரியப்படும் வண்ணம் அவன் அடிக்கும் வேகம், அடிக்கும் விதம், தலையணையைக் கிழித்தல் போன்ற செயல்கள் வியப்பை உண்டு பண்ணின. பரிசோதனையின் பின் அவ்வாறு அடித்தவரின் மனம் மிக இலேசாகிவிடுவதை உணர்ந்தார்கள். அவர்களது மனம் இதற்கு முன் இவ்வளவு இலேசாக ஒரு போதும் இருந்ததில்லை.
வன்முறை தோன்றும் போது அதை யாரை நோக்கியாவது வெளிவிடச் செய்யலாம். அப்போது அது முழுதும் தீர்ந்துபோகும். உதாரணமாக, வன்முறையைய் காற்றிடம் காற்றலாம். ஏனெனில் அது எதிர்க்காது. அதுவே மனிதரை நோக்கி வெளிபடுத்தினால் பதிலடி பெற நேரிடும். என்னால் குத்தப்படுபவனே என்னை நோக்கி குத்துவான். அவன் இன்றோ, நாளையோ அல்லது எதிர்காலத்திலோ தாக்கலாம். அவன் காத்திருக்கலாம். கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக திருப்பித்தாக்கலாம்.ஒருவரை அடிக்கும் போது, பின்னால் அதற்காக வருத்துதல் மட்டுமின்று இன்னொரு தாக்குதலுக்கு பதிலடி தரவும் தயாராகிறோம். இவ்வாறு வன்முறை ஒரு விஷ மட்டத்தை உருவாக்குகிறது.
“நமது பகைமையைய் காற்றிடம் காட்டலாம். தலையணையிடம் காட்டலாம்.
அவை நம்மை எதிர்க்காது. நமக்கு மற்றொருவரின் பகைமையைய் உருவாக்காது”.
நமது மனதை திடபடுதுவோம் .நல்ல எண்ணங்களை விதைப்போம் ....விதைகள் நறுமணம் வீசும் பூக்களாக மலரட்டும் ...வாழ்த்துக்கள்
***
புதன், நவம்பர் 11, 2009
இலங்கைத் தமிழர் நிலை -ஜோசியம்
ஆனால் ஒரே ஒருவர் அந் நாடு சுதந்திரம் அடைந்த தேதி , நேரம் கேட்டுள்ளார்.
முடிந்தால் தாருங்கள் , இவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
தெரிஞ்சவங்க நமக்கு அனுப்புங்க. நாங்க அவருக்கு அனுப்பறோம். அவரு என்ன சொல்லறாரு பாப்போம்.
(https://www.blogger.com/comment.g?blogID=367219321741694695&postID=266450498675938093)
அவருடன் நடந்த தொடர்பு பற்றி கீழே :
-
வாய்ப்பாடி குமார் said...
நல்லாத்தான் எழுதறீங்க. கொஞ்சம் படிக்க செரமாயிருந்தது ஆரம்பத்தில.இப்பப் பரவாயில்லை.
நமக்கு ஒரு சந்தேகம். இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா ?
மேற்படி கேள்விகளூக்கு நெறயா ஜோசியருங்க கழண்டுட்டாங்க . நீங்க எப்படி ?November 10, 2009 3:36 AM
-
சித்தூர்.எஸ்.முருகேசன் said...
வாய்ப்பாடி குமார் அவர்களே,
இலங்கை தமிழர்களுக்கு விடிவு கிடைக்குமா என்ற கேள்விக்கு சோதிடத்தில் பதிலை தேடுவது கோழைத்தனம். ஏற்கெனவே நான் சொன்னேன் எல்லாரும் ராஜபக்ஸே படத்தை ஏ4 சைஸ்ல பிரிண்ட் எடுத்துவச்சுக்கங்க அப்புறமா சொல்றேனு.. நிறைய பேர் கூட தேவையில்லை. ஓரளவு கான்சன்ட்ரேட் பண்ணக்கூடிய 1000 பேர் இருந்தால் போதும்.
நிற்க உங்கள் கேள்விக்கு பதில் தர இலங்கை தனி நாடாக அறிவிக்கப்பட்ட தேதி,மாதம்,வருடம் , நேரம் தேவை. கொடுத்தால் நான் முயற்சி செய்கிறேன்பாராட்டுக்கு நன்றி. அதென்ன ஆரம்பத்துல செரமமா இருந்ததுங்கறிங்க.. ஒரு வேளை சமீபத்துல பேச்சுதமிழ் அதிகமானதாலயோ ?November 10, 2009 6:32 AM
-
வாய்ப்பாடி குமார் said...
ஆம் அப்படித்தான். பேச்சுத்தமிழ் வரவே படிக்கவும் சற்று எளிதாய் உள்ளது.
மற்றபடி இலங்கை தனி நாடாக அறிவிக்கப்பட்ட தேதி,மாதம்,வருடம் , நேரம் நமக்கு தெரியவில்லை. முயற்சி செய்கிறேன் முடிந்தால் தருகிறேன்.November 10, 2009 8:35 PM
திங்கள், நவம்பர் 09, 2009








ரெயில்வே தொடர்பாக நீங்கள் விவாதிக்க தொடர்புகொள்ள வேண்டிய
தளம்.
http://indianrailways.informe.com/forum/
...
சனி, நவம்பர் 07, 2009
நாலு ஹெட்லைட்டும் , ஏர் ஹாரனும்
இருந்தம். பஸ் ஸ்டாண்ட்க்குள்ள போயி ஈரோடு ரேக்குக்கு பஸ் போகும் போது வழக்கமா எப்பவும் டிராபிக் இருக்கும்.
எப்பவுமே திருப்பூர்க்குள்ள நுழையும்போதே டிராபிக்கில சலிச்சுப்போயித்தான்
டிரைவருங்க பஸ் ஸ்டாண்டுக்குள்ள வருவாங்க. இன்னைக்கும் அதேதான் நடந்தது.
இதுல காலைல ஒன்பது மணிங்கறதால சன நெரிசல் வேற. எல்லாருக்கும்
வேலைக்கு போற அவசரம். நம்ம டிரைவருக்கு ரேக்குல போட்டுட்டு உச்சா
போற அவசரம். மழை வேற.
போட்டாரு ஒரு ஹாரன, அட சும்மா போயிட்டுருந்த பெண் போலிஸ் , 2 ஆண் போலிஸ் , அப்புறம் ஒரு 40 வயசு மதிக்கதக்க ஒருத்தர் திரும்பி பார்த்தாங்க. வயசானவர் டிரைவர பாத்து "தம்பி ஹாரன ஒருக்கா அடி"
அப்படின்னாரு. நம்மாளும் புரியாம அடிச்சாரு.
அதுக்குள்ள ஒரு நாலு பேரு பஸ்ஸுக்கு முன்னாடி வந்து அட ஹெட்லைட்
நாலு இருக்கு அப்படின்னு கழட்ட ஆரம்பிச்சாங்க. ஒரு ஆளு உள்ள புகுந்து ஹாரன கழட்ட "அப்புறந்தான் தெரிஞ்சது "ஆர்டிஓ" ரெய்டு அப்படின்னு".
கவர்ன்மென்டு பஸ்ஸுதான் எரியுதா, இல்லையானுகூட பாக்காம இதென்ன
வெளையாட்டு அப்படின்னு கண்டக்டர் ஓடியோடி ஆர்டிஒ கிட்ட சார் ரெண்டு
பல்பு எரியாதுங்க, ஒண்ணாச்சும் குடுங்க அப்படின்னு கெஞ்ச
அந்த நேரம் பாத்து இன்னொரு பஸ்காரரு "பாம் பாம்" ஹாரன அடிக்க
எல்லோரும் அந்த வண்டிய நோக்கி ஓட அங்கிருந்த ஹாரன பிடுங்கி
கீழ போட்டு கால்ல போட்டு ஒருத்தரு மிதிக்க ஹாரனு ரெண்டாப் போச்சு.
அப்ப பாத்து ரெண்டு பஸ்ஸு இன்னொரு சந்துல புகுந்து நாலு ஹெட்லைட்டோட போக நம்ம கண்டக்டர்க்கு வயிரெல்லாம் ஒரெ எரிச்சல்.
அவனுத பிடுங்கல , நம்மளுது மட்டும் போச்சேனு.
ஏன்னா ஹாரனும் போச்சு, லைட்டும் போச்சு ,ரெண்டுமே வாங்குனதுல்ல
அவருக்கும் பங்குத்தொகை உண்டு,
"ஆமாமா ,கவர்ன்மெண்ட் பஸ்ஸுல ஏதாவது ஸ்பெசலா வேணுமின்னா டிரைவரும், கண்டக்டரும் கைக்காசு போட்டுக்க வேண்டியதுதான்."
இதையெல்லாம் விட இன்னொரு கூத்து,
நம்ம பிரண்டுக்கு நடந்தது.
ஒரு நாள் கம்பெனி மானேஜர் வேலையா சான்ட்ரோவில் கோவை போகும் போது அண்ணா சிலை சிக்னல்ல நம்மாளு நிக்க அப்பப்பாத்து ரெண்டு போலிஸ் ( ஒரு ஆணும் ஒரு பெண்ணும் )
"ஹலோ ஹலோ "அப்படின்னு சன்னல தட்ட, நாம்மாளு என்னமோ ஏதோனு
சன்னல நீக்க "என்ன முன்னாடி நாலு ஹெட்லைட் போட்டு வெச்சிருக்கீங்க "
அப்படின்னு சொல்ல , நம்மாளு நாலு ஹெட்லைட்டா இது என்ன வம்பாயிருக்கு , நம்ம மேனேஜரு எப்ப நாலு லைட்டு மாட்டுனாரு முழிக்க
அதுக்குள்ள அவிய ரெண்டு அய்யா கூப்புடுறாரு ,அங்க நிக்கிறாரு அப்ப்டினு
சொல்ல ,செரியாப்போச்சு அப்படின்ன்னு வண்டிய அப்படியே இன்ஸ்பெக்டரு ஓரமா கொண்டுவந்து நிறுத்தி இவரும் இறங்கிப்போக
அங்க இதுதான் நடந்தது ,
ஏய்யா அறிவிருக்கா இல்லையா உனக்கு , பார்க்கிங் லைட்டப்போயி ஹெட்லைட் அப்படின்னு கொண்டு வர்றியே அப்படின்னு இன்ஸ்பெக்டரு கான்ஸ்டபிள திட்டி நம்மாள பாத்து
" நீங்க போங்க சார் ,இந்த ஆளுக்கு எது லைட்டு, எது இண்டிகேட்டருனே தெரியாம உங்கள கூப்பிட்டு போட்டாப்புல, சாரி சார் " அப்படின்னு சொல்ல
நம்மாளு அடக்கருமமே அப்படினு விதிய நொந்து வந்துட்டாப்புல.
(இப்படித்தான் இன்னைக்கு ரெய்டு பஸ் ஸ்டாண்டுல நடந்தது. ஒரு பஸ்ஸூல நாலு லைட்டுல மூணு லைட்ட பிடுங்கிட்டாங்க. ஒரு பஸ்ஸ டிரைவர் கழட்ட வேண்டாமுன்னு சொல்ல ஆர்டிஒவே அந்த பஸ்ஸ எடுத்து சீஸ் பண்ணிட்டு அவரு ஆபிஸுக்கு போயிட்டாரு.)
....
வியாழன், அக்டோபர் 22, 2009
நொய்யல் ஆறு
http://www.viparam.com/
ஒரு நதி எப்படி ஆகக்கூடாது என்பதற்கு உதாரணமாக ஓடிக்கொண்டிருக்கிறது நொய்யல் ஆறு. சாய ஆலை ரசாயனக் கழிவு எவ்வளவு பாதித்துள்ளது என்பதற்குச் சான்றாகி உள்ளது, சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணை.
சங்க இலக்கியங்களில் "காஞ்சிமாநதி' என்று சிறப்பு பெற்ற நொய்யல் ஆறு, கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்கள் வழியே 174 கிலோ மீட்டர் பயணம் செய்து, கரூர் அருகே காவிரியில் கலக்கிறது.வற்றாத நதியாக ஓடிய நொய்யல், காலப்போக்கில் பருவமழையை நம்பி வாழ்ந்தது. இன்றோ, திருப்பூர் பகுதியில் செயல்படும் சாயப் பட்டறைகளின் சுத்திகரிக்கப்படாத, ரசாயனக் கழிவுகளைச் சுமக்கும் சாக்கடையாக மாறிவிட்டது. நொய்யலில் வெள்ளக்காலத்தில் மிகுதியாக ஓடி, கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில், 1981ம் ஆண்டு 9,000 ஏக்கர் புஞ்சை நிலங்களுக்குப் பாசனமளிக்க வசதியாக சின்னமுத்தூர் அருகே தடுப்பு அணை கட்டி பாசனத்துக்கு வழிவகை செய்தனர்.
அடுத்த நிலையாக, 1984ம் ஆண்டு சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையத்தில் 17 கோடி ரூபாய் செலவில் 1,050 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ஒரத்துப்பாளையம் அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 1992ம் ஆண்டில் அணை கட்டி முடிக்கப்பட்டது. 1996ம் ஆண்டு வரை ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் விடப்பட்டது. அதன்பின், அணையின் மேற்பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் நகரம் பின்னலாடைத் தொழிலில் பெரும் வளர்ச்சியடைந்து வந்தது. அங்கு பனியன்களுக்குச் சாயம் தோய்க்கும் சாயப்பட்டறைகள் 200க்கும் மேற்பட்டவை நொய்யல் கரையிலேயே அமைக்கப்பட்டன. திருப்பூர் நகரம் வளர வளர, சாயப்பட்டறைகளின் கழிவுநீர் வரத்தும் அதிகமாகி, நொய்யல் ஆறு வழியாக ஒரத்துப்பாளையம் அணையில் பாசனத்துக்காகத் தேக்கி வைக்கப்பட்ட நீரை மாசுபடுத்தி விட்டது.
ரசாயனக் கழிவு அணையின் அடிமட்டத்தில் படிந்து, அணையின் நீரை பாசனத்துக்குப் பயன்படுத்த முடியாத அளவுக்குத் தள்ளப்பட்டது. அணை மாசுபட்டதன் தாக்கம் சுற்றுப்புறப் பகுதி கிராமங்களிலும் உடனடியாக எதிரொலித்தது. நிலத்தடி நீர்மட்டம் சாயக்கழிவாக மாறியதால் குடிநீர்க் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் பாழாகின. விவசாய நிலங்கள் மலடாகின. இதைப் பார்த்துப் பரிதவித்த விவசாயிகள், அரசு உயர் மட்ட அதிகாரிகளுக்குப் புகார் மனுக்கள் கொடுத்தும் பயனில்லை. . விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அப்போது தான், சில வழிமுறைகளைக் கையாள நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. சாயப்பட்டறைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற வேண்டும். நொய்யல் ஒரத்துப்பாளைம் நீர்த் தேக்கத்தில் படிந்துள்ள ரசாயனக் கழிவுகளை முற்றிலும் அகற்றுவதற்கு திருப்பூர் பகுதிகளில் சாயபட்டறை அதிபர்களிடம் பணம் வசூல் செய்து, திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டது. அணையில் தேங்கியிருந்த சாயக் கழிவுநீர், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டது. நொய்யல் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சபையினரால் மீண்டும் 2003ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
அதில், அணையைச் சுத்தப்படுத்த 12.50 கோடி ரூபாய் உடனடியாக திருப்பூர் சாயபட்டறை சங்கங்கள் செலுத்த வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. தற்போது 90 சதவீதம் அளவுக்கு தூர் வாரும் பணி நிறைவு பெற்றுள்ளது. உப்புத்தன்மை கொண்ட ரசாயன நீர் தேங்கியதில் அணையின் தடுப்புச் சுவர் பெரும் சேதமடைந்து விட்டது. ஷட்டர் மாற்றுதல், கைப்பிடிச் சுவர் அமைத்தல், சுவரின் உட்பகுதியில் ரிபிட் மண் கல் பதித்தல், அணையின் மேல்பகுதியில் தார்சாலைப் பணிகள் ஆகியவை நடந்துள்ளன. அணையிலிருந்து, காவிரியாறு வரை நொய்யலாற்றைச் சுத்தப்படுத்தும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. இப்பணிகளுக்கு ஐந்து கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.இவையெல்லாவற்றையும் விட முக்கியமாக, அணைக்கு மீண்டும் சாயக் கழிவுநீர் வராமல் தடுக்க வேண்டும். அதற்கு, "திருப்பூர் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகளில் "ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ்' (ஆர்.ஓ.,) முறையில் கழிவுநீரை முழுமையாகச் சுத்திகரிப்பு செய்யும் இயந்திரங்கள் பொருத்த வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. . இதனால், இன்று வரை அணைக்குச் சாயக்கழிவு வரத் தான் செய்கிறது. இதைக் கண்காணிக்க முடியாத அரசு, சாயக்கழிவுகளை குழாய் மூலம் கொண்டு சென்று கடலில் கலக்கும் திட்டம் 750 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும் என அறிவித்தது. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வியாழன், அக்டோபர் 15, 2009
சைனா, பாகிஸ்தான் , இலங்கை என்ன செய்யலாம்.
அப்ப ஒண்ணு பண்ணலாம். பேசாம அருணாச்சலப் பிரதேசம், காஷ்மீர் இன்னம் என்ன என்ன கேட்டாலும் கொடுத்துரலாம்.
அப்புறம் என்னங்க பண்றது ? நாட்டுக்குள்ள ஊழல் , வெளியிலே கரச்சல்.
என்ன நாஞ்சொல்றது ?
..
சனி, அக்டோபர் 10, 2009
ஜெயா மேக்ஸ் இப்போது ஏர்டெல்லில்
ஆனால் இந்த சேவையில் தன் சேனல்களையே முன்னிறுத்தி வருவதிலேயே சன் குறியாய் உள்ளது.
ஏனென்றால் டிஸ் டிவி நிறுவனம் ராஜ் டிஜிட்டல்,இசைஅருவி,ஸ்போர்ட்ஸ் சேனல்களை மாதம் ரூ 115/க்கு அளிக்கையில்
சன் இவ்வாறு அளிக்காமல் ஒவ்வொரு ஸ்போர்டஸ் சேனல்களுக்கும் தனி ரேட் வைத்துள்ளது.
அதே போல இசைஅருவி சேனலை ஒருவருட காலமாக அளிப்பதாக போக்குகாட்டினர். ஆனால் கடைசி வரை வெறும் பெயரையும் ,என்ன புரோகிராம் என்ற இபிஜீ யை மட்டும் காட்டி கடைசியில் பெயரையும் எடுத்து விட்டனர்.
ஆனால் சன்னுக்குப் பின்னர் வந்த ரிலையன்ஸ், ஏர்டெல், இவைகள் இசைஅருவி, சிரிப்பொலி சேனல்களை அளித்துவருகின்றன.
தற்போது மேலும் ஒரு சிறப்பம்சமாக ஏர்டெல் தனது சேனல் வரிசையில்
ஜெயாமேக்ஸ் சேனலையும் சேர்த்துள்ளது. இது ஒரு அருமையான, விளம்பரங்கள் குறைவாக காட்டும் ஒரு பாட்டுச்சேனல்.
இந்த சேனல் இதுவரை கேபிள் மற்றும் சி பேண்ட் டிஸ்ஸில் மட்டுமே கிடைத்து வந்தது.
ஆனால் சன் இதுமாதிரி சேனல்களை கொடுக்காமல் ஹிந்தி நியூஸ் சேனல்,ருஸ்ய நியூஸ் சேனல் எனக்கொடுத்து மக்களை ஏமாற்றமடையச் செய்கிறது.
கலைஞர் குழும சேனல்களைக் கொடுக்கும் பட்சத்தில் சன் சேனல் வியாபாரத்தில் குறையும் என்ற போட்டி மனப்பான்மைதான் இதற்கு காரணமாகக் கூட இருக்கலாம்.
அதனால் ஒரே வழி ஒரே செட்டாப் பாக்ஸ் உபயோகித்தாலே அனைத்து நிறுவனங்களின் டீடிஹெச் சேனல்களை அதற்க்குரிய கட்டணத்தை செலுத்திப்
பார்க்கலாம் என்ற நடைமுறை வந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
அதுபோல சேட்டிலைட்க்கு கட்டும் பணமும் குறையும். இதையும் கவர்ன்மெண்ட் டீடீ டைரக்ட் செய்தால் இன்னும் இந்த வசதி நிறைய மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்.
...