வெள்ளி, பிப்ரவரி 13, 2015

எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை :-


எண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை :-
சுத்தமான நல்லெண்ணெய் 10 ml அளவு எடுத்து, வாயில் விட்டுக் கொண்டு அதை வாய் முழுவதும் படும்படியாக கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். பற்களின் இடைவெளிகளுக்குள் எண்ணெய் போகும்படி செய்ய வேண்டும். 15 நிமிடத்தில் எண்ணெய் நுரைத்து, வெண்மையாகி நீர்த்துப் போகும். அப்போது அதை உமிழ்ந்து விட வேண்டும். அதன் பிறகு வாயை நன்கு கழுவிக் கொள்ளவும்.
எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?
இந்த எண்ணெய் மருத்துவம் செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை.
எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
நல்ல பசி, ஆழ்ந்த அமைதியான உறக்கம், நல்ல மனநிலை ஆகியவை வரும்வரைக்கும் எண்ணெய்க் கொப்பளிப்பு தொடர்ந்து செய்ய வேண்டும். ஆனால் 9 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை எண்ணெய்க் கொப்பளிப்பு செய்வதை தொடர்ந்தால் உடலுக்கு நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.
நன்மைகள்
தோலின் மீது குழிகளும் வெடிப்புகளும் மறைந்து தோல் பளபளப்பாகிறது.
கை, கால், விரல்கள் மெருகுற்று இரத்த ஓட்டம் பெருகியதற்கான அறிகுறிகள் தெரியும்.
தோல் அரிப்புகள் படிப்படியாக குறைந்து 3 மாதங்களில் மறையும்.
Migraine எனப்படும் ஒற்றைத் தலைவலி தீரும்.
பொடுகு தொல்லை தீரும்.
பருக்கள் அனைத்தும் மறைந்து முகம் பொலிவு பெறும்.
பல் கூச்சம் நின்று பல்வலி மறையும்.
உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவதை நீங்கள் உணர முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக