வெள்ளி, பிப்ரவரி 13, 2015

கருப்பட்டி

கருப்பட்டி என்றாலே உடன்குடி ஊரு தான் நினைவிற்கு வரும்.அந்தளவிற்கு பனைமரங்களும் பனை பொருள்களும் மிகுதியாக உள்ள ஊர்இது.. ஆனால் திருநெல்வேலி சுற்றுப்புறங்களில் உள்ள நாட்டு கருப்பட்டியின் சுவை அலாதியானது.
காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும். சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் . இருப்பதுடன்,அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்
கருப்பட்டி பணியாரம் சாப்பிட அற்புதமாக இருக்கும்..பாவூர் சத்திரம் . பஸ் ஸ்டாண்டில் ஒரு டீ க்கடையில் கருப்பட்டி பணியாரம் சாப்பிட்டேன்.சூப்பராக இருந்தது.
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுப்பெருவது டன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்குபசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டி-யுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத்தொல்லை நீங்கும்.குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக